எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 டிசம்பர், 2021

ஓங்காரத்தால் ஜெயித்தவள்.

ஓங்காரத்தால் ஜெயித்தவள்.

தேவர்கள் அடைய முடியாத வெற்றியை ஒரு பெண் அடைந்தாள். அதுவும் ஒரு ஒலியின் மூலம். அப்படி ஒரு ஒலியினால் வெற்றியை அடைய முடியுமா ? அது என்ன ஒலி ? எப்படி அவள் அவ்வெற்றியை அடைந்தாள், அதனால் அவள் பெற்ற பெருமை என்னென்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
முற்காலத்தில் முரன் என்னும் அரக்கன் இருந்தான். அவன் முனிவர்கள் , தேவர்கள் ஆகியோர் இயற்றும் யாகங்களை அழித்து அவர்களைத் துரத்தி அடித்தான். மனிதர்களைத் துன்புறுத்தியதோடு அல்லாமல் தேவர்களையும் வாட்டித் தேவலோகத்தையும் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்தான். தேவர்கள் முறையிட்டதால் இந்திரன் அவர்களைக் காக்க முரனுடன் போர் செய்தான்.
முரனோ தன் தாறுமாறான போர்முறைகளால் இந்திரனைத் தோற்கடித்து ஓட ஓட விரட்டினான். அமராவதிப் பட்டினத்தை இந்திரனிடமிருந்து அபகரித்துத் தான் கோலோச்சத் தொடங்கினான். தோல்வியுற்ற இந்திரன் கைலாயம் நோக்கி ஈசனைத் தேடி ஓடினான். தன் கஷ்டங்களை முறையிட்டு தேவலோகத்தை மீட்டுத் தன்னைக் காக்கும்படி வேண்டினான்.
அவரோ மகாவிஷ்ணுவைச் சரணடையும்படிக் கூறினார். “பெருமாளே.. அபயம், அபயம் “ என்று அலறியவாறு வைகுந்தம் ஓடியவன் விஷ்ணுவின் பாதகமலங்களைச் சரணடந்தான் இந்திரன். அவன் பின்னேயே தேவர்களும் ஓடி வந்து சரணடைந்தனர்.

திங்கள், 20 டிசம்பர், 2021

காக்கைச் சிறகினிலே.. காலத்தால் மறக்க முடியாத கலைஞன் ரகுவரன்.

எத்தனையோ பேர் நடிப்புலகில் இருக்கிறார்கள். எத்தனையோ போராட்டங்கள், பிரயத்தனங்கள், ஆசைகள், நிராகரிப்புகள் தாண்டி சிலரே ஜெயிக்கிறார்கள். வாய்ப்புக் கிடைப்பதும் முகம் காட்டுவதுமே அதிர்ஷ்டத்தின் பாற்பட்டிருக்கக் கிடைத்த வாய்ப்பில் தன்னை அடையாளப்படுத்துவது சிலருக்கே வாய்க்கிறது. காக்கைச் சிறகினிலே என்று கலைந்து பறந்த இறகாய்ப் பாடலில் அறிமுகமான நாயகன் இன்று நினைக்கும்போதும் எதிர்நாயகனாக மட்டுமில்லாமல் குணசித்திரராகவும் பதிந்து போயிருக்கிறார்.



ஹீராவாகவும் வில்லனாகவும் சாதித்தவர்களைப் பட்டியலிட்டு விடலாம், எம் ஆர் ராதா, சத்யராஜ், ரகுவரன், அரவிந்தசாமி, ரகுமான் என்று. அதிலும் குணச்சித்திரப் பாத்திரத்திலும் பரிணமித்தவர் ரகுவரன். மென்மையும் வன்மையும் வில்லத்தனமும் ஒருங்கே குடி கொண்ட அதிசயம் அவர். இவ்வளவையும் சாதிப்பது ஒரு சிலருக்கே சாத்தியம்.

நானா படேகர் போல் நடிப்பின் பல பரிமாணங்களில் என்னை அசத்தியவர் ரகுவரன். அந்தத் தீவிரமான பார்வை, கரகரப்போடு கூடிய மெருகான ஆண்குரல், தீர்க்கமான நாசி, பளிச்சென்ற உயரமான உருவம், மெஜஸ்டிக்கான தோற்றம், எளிய ஹீரோ தோற்றம், பணக்கார வில்லத் தோற்றம், குணச்சித்திர தந்தைத் தோற்றம் எல்லாமே அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்ஸ்.

திங்கள், 13 டிசம்பர், 2021

யூ ட்யூபில் 61 - 70 வீடியோக்கள்.

61.  #மஞ்சளும்குங்குமமும்#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=CNglsMf1_Q8

#மஞ்சளும்குங்குமமும்#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

#MANCHALUMKUNGUMAMUM#BOOKINTRO#THENAMMAILAKSHMANAN

அமேஸானில் என் இருபத்தியைந்தாவது மின்னூல் “ மஞ்சளும் குங்குமமும்” வெளியாகி உள்ளது.

விலை ரூ. 100/-

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.

https://www.amazon.in/dp/B07PRPLMPH

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

///நமது பாரம்பர்ய விஷயங்களை அதன் மூலத்திலிருந்து அறியும் முயற்சியாகவும் தற்கால அறிவியலோடு ஒப்பு நோக்கியும் அதன் பயன்பாட்டுக் கூறுகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக எழுதப்பட்டது இந்நூல்.///


62. #பெண்அறம் #நூல்அறிமுகம் #தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0DPsy2_sp94

#பெண்அறம் #நூல்அறிமுகம் #தேனம்மைலெக்ஷ்மணன்

#PENARAM #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN

எனது இருபதாவது மின்னூல்.”பெண் அறம்” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/-

பெண் அறம்

https://www.amazon.in/dp/B0881NQHLM

///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெ ஜெயலலிதா அம்மாவுக்கும், மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்///

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

வியாழன், 9 டிசம்பர், 2021

மன்னார்குடி அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில்

 மன்னார்குடி - இராஜ மன்னார்குடி ஒற்றைத் தெருவில் இருக்கும் ஆனந்த விநாயகரை கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பின் தரிசித்தேன். 

கணவருக்கு மன்னார்குடியில் அலுவலக வேலையாகச் செல்ல வேண்டி இருந்தது. உடனே நானும் பையனும் கூடக் கிளம்பி விட்டோம். முக்கிய காரணம்  அங்கே என் தோழி ப்ரேமலதா தியாகராஜன் இருப்பதால்தான்.

முகநூலில் என்னைத் தேடி இணைந்து வாட்ஸப்பில் நான்கைந்து வருடங்களாகத் தொடர்பு கொண்டு வந்தே ஆக வேண்டும் என அன்புப்பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள் அவ்வப்போது. எனக்கும் போக ஆசைதான் . ஆனால் நேரம் ஒத்துழைக்கவில்லை. 

கணவர் மன்னார்குடி என்றதும் உடனே கிளம்பி அவளையும் அவளின் அன்பு முயற்சியால் இன்னும் சில தோழியரையும் ( வஹிதா, அமுதா, வசந்தி ) சந்தித்துவிட்டு வந்தேன். 

அந்தப் பயணத்தின் போது நான் மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படித்த கணபதி விலாஸ் பள்ளி, இரண்டாம் வகுப்பு & எட்டு முதல் ப்ளஸ்டூ வரை படித்த செயிண்ட் ஜோசப் பள்ளி ஆகியவற்றையும் நாங்கள் குடியிருந்த 18, சிங்காரவேலு உடையார் தெரு, லெக்ஷ்மி காலனி வீட்டையும், ஆனந்த விநாயகர் & இராஜகோபால சுவாமியையும் தரிசித்துவிட்டு வந்தோம்.

பிரேமலதாவின் அன்பில் தோய்ந்த நிறைவான பயணம். ( ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ வரை இருவரும் படித்தோம். அவளுக்குத் திருமணமாகிவிட நான் கல்லூரிக்குச் சென்றேன். நாங்கள் இருவரும் அன்பு மடல்களாக வரைந்து தள்ளி இருந்திருக்கிறோம். அதை எல்லாம் பத்திரமாக வைத்துள்ளாள். அவளது மருமகள் அன்பும் அழகும் அறிவும் வாய்ந்த பாசமான பெண். அவளின் முயற்சி மூலமே நாங்கள் சந்தித்தோம். ) 


மன்னை சென்றதும் பூர்ணா லாட்ஜில் தங்கினோம். ஏன் வீட்டிற்கு வந்து தங்கவில்லை என்று லதாவும் அமுதாவும் வருத்தப்பட்டார்கள். :) 

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

கல்வி அமைச்சரிடம் சாதனை விருது வாங்கிய பார்வதி சிவகுமார்

 கல்வி அமைச்சரிடம் சாதனை விருது வாங்கிய பார்வதி சிவகுமார்





காரைக்குடியில் ஆவுடையான் செட்டியார் வீட்டில் பிறந்த பார்வதி தமிழ்த்துறை & தொல்லியல் துறை அமைச்சர் திருமிகு மாஃபா.க. பாண்டியராஜன் அவர்களிடம் தம் கல்விப்பணிக்காகச் சாதனைப் பெண் விருது வாங்கி இருக்கிறார். மழலையர்க்கான கல்விக் கூடத்தைத் தொடங்கிச் சிறப்பாக நடத்தி வருவதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மதிப்புமிகு அவ்விருதுக்குப் பொருத்தமானவர் அவர். இவ்வாறு சிறப்புப் பெற்றவரிடம் அவரது பள்ளி குறித்துக் கேட்டு அறிந்ததை இங்கே கொடுத்துள்ளேன்.

இவரது கணவர் பெயர் சிவகுமார் இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.  மிரா கண்ணாத்தாள், ஐஸ்வர்யா.  இவரது மாமியார் வீடு நாட்டரசன்கோட்டை.

வெள்ளி, 3 டிசம்பர், 2021

ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும் !

 2941. Today released a children book by Udaishankar at Karaikudi M A M  Mahal Book Fair.



2942. My book was released by Kalaivani , headmistress of Sirugappatti govt school and received by  Jeeva Sinthan Sir, சிவகங்கைக் கிளைத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம். உடன இருப்பவர் என்னை உதயசங்கரின் நூலை வெளியிட அழைத்த காரைக்குடி பாரதி புத்தகாலயத்தின் ஜீவாநந்தன் சார்

புதன், 24 நவம்பர், 2021

யார் முதலில் ?

யார் முதலில் ?

எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும் பதறாமல் செய்தால் நிச்சயம் அதை முழுமையாய்ச் செய்யலாம். அதன் மூலம் பல்வேறு நன்மைகளையும் அடையலாம். நமக்கெல்லாம் தெரிந்த ஔவைப்பிராட்டி இப்படி ஒருமுறை ஒரு காரியத்தைப் பதற்றத்தோடு செய்து அதன் பின் நிதானமாக அதைப் பூர்த்தி செய்து கைலாயமே சென்றாராம். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கொன்றை வேந்தன் ஆத்திச்சூடி ஆகியன எழுதியவர் ஔவைப்பிராட்டி. பழம்நீயப்பா ஞானப் பழம்நீ அப்பா இந்த சாதாரண மாம்பழம் உனக்கு கிட்டவில்லையே என்று எதற்குக் கோபம் நீயே ஒரு ஞானப் பழம்தானே என்று முருகனை ஆற்றுப்படுத்தியவள். அதே முருகன் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டபோது சுடாதபழம் வேண்டும் எனச் சொல்லி முருகன் உலுக்கிய நாவல் பழத்தைப் பொறுக்கி ஊதித்தின்றவர். என்ன பாட்டி பழம் சுடுதா என்று முருகன் சிரித்தபடி கேட்ட கேள்வியில் முருகனின் தமிழ்ப் புலமை கண்டு வியந்தவள்.

திங்கள், 22 நவம்பர், 2021

”பெண்”களை இயக்கிய சுகாசினி மணிரத்னம்

 ”பெண்”களை இயக்கிய சுகாசினி மணிரத்னம்

”பருவமே புதிய பாடல் பாடு..” நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் விஜியாக சுகாசினி மோகனுடன் மெல்லிய பனி படர்ந்த சோலையில் ட்ராக்சூட் அணிந்து குதிரைவால் கொண்டை ஆட ஒரு ஜாகிங் செல்வார். குதிரையின் லாடச் சத்தம் போல் மனதைத் தாளமிட வைக்கும் சந்தம்.

’பூந்தோட்டத்தில் ஹோ காதல் கண்ணம்மா’ ,’தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ’ என்று மனதையும் அசைத்த காதல். சோலை, சாலை என்று இப்படி ஓடிக் கொண்டே இருக்கமாட்டோமா என்று தோன்ற வைத்த பாடல்

ஷூக்கள் சப்திக்கும் மியூசிக்கில் என் பதின்பருவத்தில் கேட்ட லயமான பாடல் இது.. இப்போது கேட்டாலும் தண்ணென்று இருளும் குளிரும் பனியும் சூழ்ந்த மரங்களின்மேல் வெள்ளிக்கீற்றாய் சூரியன் கோலமிடும் பூஞ்சோலை என் நினைவுகளில் பூத்தெழும். சிறுபிள்ளையாய் ஆக்கும் என் மனமும் அதோடு சேர்ந்து பாடத் துவங்கிவிடும்.



இப்படி எண்பதுகளில் பள்ளிப்பருவத்தைக் கடந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் சுகாசினியோடு ஒரு ஒட்டுறவு உண்டு. எளிய பக்கத்து வீட்டுப் பெண் தோற்றம். நிறையப் பேருக்கு அவர் அறிவுஜீவி அக்கா மாதிரி. என் நாத்தனார், பெரியம்மா பெண் போன்ற சிலருக்கு அவர்களேதான் சுகாசினி 
J

ஞாயிறு, 14 நவம்பர், 2021

ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள்.

ஆண்கள் எதிர்கொள்ளும் அக நெருக்கடிகள்.

பெண்கள் தினம் என்றால் மார்ச் 8 என்று கூறிவிடுவோம். அதென்ன ஆண்கள் தினம் ? அப்படி ஒரு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது ? பெண்களுக்கான அக புற நெருக்கடிகளே அவர்களை முன்னேறவிடாமல் இன்னும் தடுக்கும்போது ஆண்களுக்கும் அக நெருக்கடியா?

சொல்லப்போனால் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆண்களுக்கும் அக புற நெருக்கடிகள் நிறைந்த சூழல்தான் நிலவுகிறது. முன்புபோல் ஆண் வேலை செய்துவிட்டு வர பெண் வீட்டைக் கவனித்துக் கணவனையும் குடும்பத்தையும் மட்டுமே போஷித்துக் கொண்டிருந்த காலம் மாறி விட்டது. இன்றைய காலகட்டத்தில் பெண்ணும் வேலைக்குச் செல்வதால் ஆண் வீட்டில் சரிபங்கு வேலைகளையும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியதாகிறது.

சிறு வயதிலிருந்தே ஆண் என்றால் அழக்கூடாது. குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டும். தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சகோதரிக்குச் சீர் செய்ய வேண்டும். நன்கு படித்துப் பெரிய வேலைக்குப் போக வேண்டும். உத்யோகம் புருஷ


லட்சணம் என்றெல்லாம் சொல்லிச் சுமையை ஏற்றி விடுகிறோம்.

வியாழன், 11 நவம்பர், 2021

காலங்களைக் கடந்து ஒளிரும் கமலா சினிமாஸ்.

காலங்களைக் கடந்து ஒளிரும் கமலா சினிமாஸ்


 

நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் ஆகிய தளங்களில் இன்று சினிமா பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள். சினிமா தியேட்டர்கள் எல்லாம் மால் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் தனது தனித்துவத்துடன் மக்கள் சேவை ஆற்றிவரும் கமலா சினிமாஸ் என்னை ஆச்சர்யப்பட வைத்துவிட்டது. டிக்கெட் விலை 95 ரூபாய்தான். உயர்தரமான ஸ்நாக்ஸும் ரீஸனபிள் விலையில். ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் அசத்தலாக இருக்கிறது. மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் இருக்கும் அத்தனை நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன்  சும்மா அதிர வைக்கிறது. 

 

ஐம்பது வருடங்களை எட்டப் போகும், மூன்று தலைமுறைகளாகப் பேரோடும் புகழோடும் இருக்கும், சென்னை வடபழனி கமலா சினிமாஸ் அதிபர் மீனாட்சி மைந்தர் திரு வி என் சிடி அவர்களின் மகன், திரு வி என் சிடி வள்ளியப்பன் அவர்களிடம் நமது ஸ்டார்ட் அப் & பிஸினஸின் ஐம்பதாவது இதழுக்காக ஒரு பேட்டி கேட்டிருந்தேன். 

வெள்ளி, 5 நவம்பர், 2021

யூ ட்யூபில் 51 - 60 வீடியோக்கள்.

 எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக என் நூல்கள் பற்றி நானே அறிமுகம் கொடுத்துள்ளேன். :)


51. ங்கா#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0JBfSGXOB5A&t=4s


அமேஸானில் என் பதினான்காவது மின்னூல் “ ங்கா” வெளியாகி உள்ளது.


விலை ரூ. 50/-


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.


இந்த இணைப்பில் சென்று வாங்கலாம். 


https://www.amazon.in/dp/B07PP4M44G


வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )


”ங்கா” எந்த மொழியிலும் இல்லாத வார்த்தை. எல்லா மொழியினருக்கும் புரிந்த வார்த்தை. குட்டிக் கவிதைகளில் தேனம்மை லெக்ஷ்மணனின் குழந்தைக் கவிதைகளும் ஆராதனா என்னும் கவிதைக் குழந்தையும் உங்களைச் சந்திக்க வருகிறார்கள். பேரன்போடு இருகைகளிலும் ஏந்தி மகிழுங்கள்.



52. #செவ்வரத்தை#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NX_AwgcJmMU&t=8s


#செவ்வரத்தை#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்#ஜெர்மனிதமிழ்ச்சங்கம்

திங்கள், 25 அக்டோபர், 2021

தாய்போல் காத்த தாரை.

தாய்போல் காத்த தாரை


நம்மைச் சார்ந்த ஒருவருக்கு ஒரு இக்கட்டு நேரும்போது காப்பது நம் கடமை. அதையும் ஒருத்தி வெகு இலகுவாகச் செய்தாள். தனக்காக மட்டுமல்ல தன் நாட்டையும் வீட்டையும் தாய்போல் தீர்க்கமான மதியுடன் செயல்பட்டுக் காத்த அந்தப் பெண்ணைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
வானர அரசன் வாலியின் மனைவி தாரை. இவள் வானரர்களின் மருத்துவர் சுசேனரின் மகள். வாலி தேவர்களுக்குத் துணையாகப் பாற்கடலைக் கடைந்தபோது அவதரித்தவள் என்றும் சொல்கிறார்கள். அவள் தன் கணவன் வாலியின்மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தாள். இவர்கள் மகன் அங்கதன்.
ஒரு சமயம் சுக்ரீவனும் வாலியும் ஒரு மாயாவி அரக்கனுடன் போர் செய்யச் சென்றபோது வாலியும் அந்த அரக்கனும் ஒரு குகைக்குள் சென்றனர். போர் தொடர்ந்தது. ஆனால் இதை அறியாத சுக்ரீவன் தனயன் திரும்பவில்லை எனவே அவனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று சொல்லி நாடு திரும்பி அரசாட்சியை எடுத்துக் கொண்டான்.

திங்கள், 18 அக்டோபர், 2021

வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

 2921. வாசிப்பும் எழுத்தும்தான் நம்மை உயிர்ப்பிக்கின்றன. இல்லாவிட்டால் என்றோ சருகாய்ச் சுண்ணாம்பாய் ஆகியிருப்போம்..

2922. https://youtu.be/sVKS-gZ_zGc இன்றைய (29/08/2021)  நிகழ்வின் பதிவு

என்னுடன் பள்ளியில் பயின்றவர். இன்று அரசு வங்கியொன்றில் ஜி எம். கல்யாண்ஜி பற்றிய உரையில் நெகிழ்வு மிளிர்கின்றது. 

2923. https://reutersdigitaljournalism.com/?e=create_account&l=en

பரிட்சையில் தேறிட்டேன் !!!



2924. நாம் எழுந்தவுடன் வேலைகளும் விழித்தெழுந்து விடுகின்றன.

சனி, 16 அக்டோபர், 2021

சாட்டர்டே போஸ்ட். இதிகாச புராணப் பாத்திரங்களை ஓவியத்தால் உயிர்ப்பித்த திரு பிரபாகரன்.

ஓராண்டுக்கு முன் தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்த இதிகாச புராணக் கதைகள் கொரோனா காரணத்தால் சிறுவர் மலர் வெளிவராததால் நின்றுபோயின. 


அச்சமயம் மதிப்பிற்குரிய நண்பர் திரு சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் ( இவர் பற்றி மூன்று கட்டுரைகள் என் வலைத்தளத்தில் முன்பே எழுதி உள்ளேன். 2011 அக்டோபரில் வெளியான இக்கட்டுரைக்கு 17500 பார்வைகள் !. 

ஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.




இவை இரண்டுக்குமே ஆயிரக்கணக்கில் பார்வைகள். ஆச்சி வந்தாச்சு இதழில் நகரத்தார் எழுத்தாளர்களில் ஒருவராக என்னை அறிமுகம் செய்வதற்காக 2010 களில் தொடர்பு கொண்டார் திரு சாத்தப்பன் சார். அதன்பின் மும்பை நகரவிடுதி, காரைக்குடியில் பாரதி ஆகிய கட்டுரைகளுக்காகத் தொடர்பு கொண்டேன். 

புதன், 13 அக்டோபர், 2021

சரத்குமார் ராதிகா.. எஸ் ராதிகா !

 சரத்குமார் ராதிகா..  எஸ் ராதிகா !


தன்னம்பிக்கை, தைரியம், உற்சாகம், உத்வேகம், விடாமுயற்சி, தொடர் உழைப்பு, ஆளுமைத் தன்மை, வெற்றி  இவற்றுக்கெல்லாம் வாழும் எடுத்துக்காட்டு ராதிகா. முதன் முதலில் வந்த படம் கிழக்கே போகும் ரயில் என்றாலும் நான் பார்த்து ரசித்தது ”அப்பவும் நான் சுதாகர் ராதிகா எஸ் ராதிகா” என்று ராதிகா தைரியமாகத் தந்தையிடமே தன் காதலைக் கூறும் நிறம் மாறாத பூக்கள்தான். 

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

வயிற்றிடை வாயனை வென்ற வீரர்கள்.

வயிற்றிடை வாயனை வென்ற வீரர்கள்.

ரொம்பப் பேசுறவங்களை உனக்கு காது வரைக்கும் வாய் என்பார்கள். அதிகம் சாப்பிடுபவர்களையும் வயித்துல என்ன மிஷினா ஓடுது அரைச்சுக்கிட்டு இருக்கியே என்பார்கள். ஆனால் நிஜமாகவே ஒரு அரக்கனுக்கு வயிற்றில் வாய் இருந்தது. அப்படிப்பட்டவனிடம் இரண்டு வீரர்கள் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் எப்படித் தப்பித்தார்கள்னு பார்ப்போம் குழந்தைகளே.
தண்டகாரண்யத்தில் ராமரும் இலக்குவனும் சீதையைத் தேடி வருகிறார்கள். அப்போது கவந்தவனம் என்ற இடத்தைக் கடக்க நேர்கிறது. வனமா அது கொடிய பாலை போல் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பயிர் பச்சை ஏதுமில்லை. விலங்கினங்கள் கூட அறவே காணோம். என்னாயிற்று இங்கே எனப் பார்த்தபடி வந்தனர் ராமனும் இலக்குவனும்.

வியாழன், 7 அக்டோபர், 2021

பயறு வகைகளில் பல்சுவை சமையல்.

குமுதம் சிநேகிதியில் பயறு வகைகளில் பல்சுவை சமையல். 




7.10.2021 குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ”பயறு வகைகளில் பல்சுவை சமையல்”  என்னும் தலைப்பில் எனது 20 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.

புதன், 6 அக்டோபர், 2021

டூயிஸ்பர்க்கில் நடைப்பயிற்சி. HEALTHY LIVING AT DUISBURG

 ஜெர்மனியின் டூயிஸ்பர்க் நகரில் இரு மாதங்கள் மகனோடு வசித்து விட்டு வந்தோம். மிக அருமையான நகரம். ஜெர்மனியின் மேற்கில் ரைன் நதிக்கரையின் வடக்கில் அமைந்த நகரம். ஜெர்மனியின் பெரிய நகரங்களில் 15 ஆவது இடம் வகிக்கிறது. ரைன், ரூர் என இரு நதிகள் பாய்கின்றன. ரைன் நதிக்கரையோரம் இண்டஸ்ட்ரியல் ஏரியா. இரும்பு, எஃகு, ரசாயனத் தொழிற்சாலைகள் அதிகம். இங்கே நதி வழி சரக்குப் போக்குவரத்து முக்கியமானது. இப்போது இந்தத் தொழிற்சாலைகளில் பாதிக்குமேல் செயல்படாமல் பூட்டிக் கிடக்கின்றன. 

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படைகளால் அதிகம் குண்டு போடப்பட்டு அழிக்கப்பட்ட ஊர்தான் டூயிஸ்பர்க். காரணம் இங்கே உள்ள தொழிற்சாலைகளும் அதனால் நாட்டின் முன்னேற்றமும்  வசதிகளும் அவர்களின் கண்ணை உறுத்தியதுதான். இருந்தும் தனது 1100 வது பிறந்தநாளை 1983 இல் கொண்டாடியதாம் சரித்திரப் புகழ் வாய்ந்த டூயிஸ்பர்க். ( இதற்கு அரண்போல் மதிற்சுவரின் எச்சங்கள் எல்லாம் இருக்கு !) 

பேருந்துப் போக்குவரத்து சாலையின் இரு மருங்கும். நடுவில் எஸ்பான், டி பான், ரைன் பான் என ரயில்வே சிஸ்டம். ட்ராம் வண்டிகளும் ஓடுகின்றன. ஹாபன்ஹாஃப் என்பது ரயில்வே ஜங்க்‌ஷன். ஆட்டோ பான் என்பது சாலைப் பேருந்துப் போக்குவரத்து. 

ஒரே நாள் இரவிலேயே ட்ராக் ரிப்பேர் எல்லாம் செய்து ட்ராக்கையே மாற்றி விடும் கில்லாடிகள் ஜெர்மானியர்கள். முதல்நாள் ஒரு ட்ராக்கில் பயணித்தோம். அர்த்த ராத்திரியில் இன்னொரு ட்ராக்குக்கு தண்டவாளங்களை இணைத்து விட்டார்கள்!

சரி வாங்க ஒரு நாளைக்கு ஒரு ரோடு என நடந்து உலா வந்து ரசிப்போம். 

நாம் செல்லும் வழியில்தான் டூயிஸ்பர்க்கின் உள் துறைமுகம், ரயில் போக்குவரத்துப் பாலம், லைப்ரரி, ஜிம் செண்டர், ஓல்ட் ஏஜ் ஹோம், கடைத்தெருக்கள், வீடுகள், அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், சர்ச்சுகள், தொழிற்சாலைகள், தாவரவியல் பூங்கா ஆகியன உள்ளன. 

டூயிஸ்பர்க் ரூஹ்ராட்டர்ஹாஃபன்  என்பது உலகிலேயே மிகப் பெரிய உள்நாட்டுத் துறைமுகம். இதில் 100 கார்களுக்குமேல் ஏற்றிச் செல்லக்கூடிய சரக்குக் கப்பல்களை எல்லாம் பார்த்தோம். அது எல்லாம் இன்னொரு இடுகையில். இப்போது நடக்க ஆரம்பிப்போம்.



சாலையில் இரு மருங்கிலும் கார், பஸ் செல்ல வழிகள், நடுவில் ட்ராம்,எஸ் பான் போக்குவரத்து. 

திங்கள், 4 அக்டோபர், 2021

சில பார்வைகள்.. விமர்சனங்கள்.. பாராட்டுக்கள்.

 யூ ட்யூபில் என்னுடைய நூல் பார்வை குறித்தும், நூல் அறிமுகம் குறித்தும் மேலும் அமேஸானில் வெளியாகியுள்ள என்நூல்கள் குறித்தும் நண்பர்கள் சிலரின் பார்வைகளை இங்கே அறியத்தருவதில் மகிழ்கிறேன். 

1. செவ்வரத்தை என்ற நூல் பார்வை ஒன்றை யூ ட்யூபில் வெளியிட்டு இருந்தேன். 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அது. முழுக்க முழுக்க ஈழம் வாழ் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கியது. அதில் 15 கதைகள் பரிசு பெற்றவை.  அதற்கு பொதி என்பவர் வான் அவை குழுமத்தில் வெளியிட்ட கருத்து இது. நன்றி பொதி சார். 


#செவ்வரத்தை#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NX_AwgcJmMU&t=8s

சனி, 2 அக்டோபர், 2021

சாட்டர்டே போஸ்ட். கொரோனா கெஸ்ட்ஸ் பற்றி எழில் அருள்

 எழில் அருள். மன நல ஆலோசகர். மனமகிழ் மைண்ட் கேர்  எனும் ஆலோசனை மையம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்துகிறார். அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச ஆலோசனை வழங்கும் அகல் டிரஸ்ட் அமைப்பின் பொருளாளர். நிகழ்காலம் எனும் blog எழுதுகிறார்.  அதன் மூலம் சிறந்த பெண் பிளாக்கர் ஆக the Hindu metro plus ஆல் கவுரவிக்கப்பட்டார். 

மக்கள் தொலைக்காட்சியில் உளவியல் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசியுள்ளார். பல கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் மன நலம் சார்ந்த , வாழ்வியல் முன்னேற்ற பயிலரங்குகள் நடத்தியுள்ளார்.  

தங்க மங்கை என்னும் மாத இதழில் இரு ஆண்டுகள் மன நலம் குறித்த தொடர் கட்டுரை வெளியிட்டுள்ளார்...இவர்களுடைய மன நலம் குறித்த தொகுப்புகள் manamagizhmindcare யூடியுப் சேனலில் பார்க்கலாம்...

சுயமுன்னேற்றப் பயிற்சியாளர். தோழி அகிலாவுடன் குழந்தைகளுக்கு நிறைய கவுன்ஸிலிங் செய்கிறார். கோவையில் வசிக்கிறார். பல்லாண்டுகளாக என் முக நூல் தோழி.  லவ்லி லேடீஸ் என்ற வாட்ஸப் குழுமத்திலும் ஒருங்கிணைந்து இருக்கிறோம். 


ஒருமுறை க்ராஸ் கட் ரோடு சென்றபோது இவரைச் சந்தித்தேன். அங்கேயே ஆனந்த அறிமுகமாகி ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். 

அவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித் தரச் சொல்லிக் கேட்டபோது தான் வளர்த்த பூனைக்குட்டிகள் பற்றி எழுதிக் கொடுத்தார். 

///கொரானா கெஸ்ட்ஸ்..


   8 வருடத்திற்கு முன் வீட்டில் பூனைக்குட்டிகள் 6 வளர்த்துக் கொண்டிருந்தோம். அலுவலகம் சென்ற பின் வெளியில் இருக்கும். ஆனால் எலியைக் கொண்டு வந்து போடுவது, அங்கங்கே கக்கா போவதுன்னு என் வீட்டில் வேலை செய்பவர் மிகவும் வருத்தப்பட்டார். அதனால் அம்மா, குட்டிகள்னு எல்லோரையும் ஒன்றாக பேக் செய்து ஒரு தோட்டத்தில் கொண்டு விட்டு வந்தோம். இனி நாம் பார்ப்பதாய் இருந்தால் தான் பெட் வளர்க்கணும்னு முடிவெடுத்தோம். 

வியாழன், 30 செப்டம்பர், 2021

வால்நட் கேரமல்லும் ஃபெரேரோ ரோச்செரும்

 உலகப் புகழ்பெற்ற மியூசியங்களில் ஒன்று ஜெர்மனியில் இருக்கும் இம்ஹாஃப் சாக்லேட் மியூசியம். 1993  அக்டோபர் 31 இல் ரைன் நதியில் மேல் கட்டமைக்கப்பட்டது.  

1585 லேயே சாக்லேட்டை பானமாக அருந்தி வந்தாலும் மக்கள் அதைப் பதினேழாம் நூற்றாண்டில்தான் திடப் பொருளாக சாக்லேட்டாகப் பயன்படுத்தத் துவங்கினார்கள். அப்போது இது அரிதாகக் கிடைக்கும் விலையுயர்ந்த ஒரு அபூர்வப் பொருள். எனவே சீமான்களும் சீமாட்டிகளும் மட்டுமே சுவை பார்த்திருக்காங்க. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது பொதுமக்களுக்கும் எட்டிய கனியாயிடுச்சு. 

கொலோனில் இருக்கும் வித்யாசமான சாக்லேட் ஃபவுண்டன் எனப்படும் சாக்லேட் செடி. இதில் வேஃபர்ஸைத் தொட்டுத் தருவார் இங்கே பணிபுரியும் பெண் ஒருவர். கியூவில் நின்று அனைவருமே வாங்கிச் சுவைத்தோம். 



முதலில் இம்ஹாஃப் ஸ்டார்வெர்க் மியூசியம் என அழைக்கப்பட்ட இது பின்னர் லிண்ட் இதன் பார்ட்னரானவுடன் இம்ஹாஃப் சாக்லெடன் மியூசியம் என அழைக்கப்படுது. 

திங்கள், 27 செப்டம்பர், 2021

பூவில் பிறந்து பாவில் இணைந்தவர்கள்.

பூவில் பிறந்து பாவில் இணைந்தவர்கள்.

மனிதர்கள் பூவில் பிறக்க முடியுமா. அதுவும் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவர்கள் ஒரு பாடலில் இணைய முடியுமா. இதெல்லாம் முடியும் என நிரூபிக்கிறது திருக்கோயிலூர் என்னும் ஊர். வாங்க குழந்தைகளே அங்கே யார் வந்தார்கள், எப்படி இணைந்தார்கள், என்ன நடந்ததுன்னு பார்ப்போம்.
ஏழாம் நூற்றாண்டுக் காலம். திருக்கோவிலூர் என்னும் ஊரில் ஒரு குடிசை வீட்டின் முன்னே ஒருவர் வருகிறார். அடை மழை.. மின்னல் கண்ணைப் பறிக்கிறது. இடியோ கட்டிடங்களையே இடிப்பது போல் இடித்துத் தள்ளுகிறது. சரி அந்த வீட்டில் மழைக்கு ஒதுங்கலாம் என நினைத்துத் திண்ணையில் ஏறுகிறார். வெகுதூரம் கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்த களைப்பின் மிகுதியில் படுக்கிறார். அவர்தான் பொய்கையாழ்வார்.

சனி, 25 செப்டம்பர், 2021

சாட்டர்டே போஸ்ட். தன்னைச் செதுக்கிய சிற்பி பற்றி திரு. இரா.இரவி.

 தமிழ்நாடு அரசுச் சுற்றுலாத்துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார் திரு. இரவி. மதுரையில் தானம் அறக்கட்டளை எனது நூல்களை வெளியிட்ட நிகழ்வில் இவரைச் சந்தித்துள்ளேன். 

1992 ஆம் வருடம் குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த அரசுப் பணியாளருக்கான விருதைப் பெற்றவர். விழிப்புணர்வுப் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள் ஆகியவற்றில் முத்திரை பதித்தவர். மதுரைக் கவிஞர் பேரவையின் செயலர். 

23 நூல்கள் எழுதி உள்ளார். ஹைக்கூ திலகம், கவியருவி, கவிமுரசு கலைமாமணி விக்ரமன், எழுத்தோலை , ஹைக்கூ செம்மல், பாரதி ஆகிய  விருதுகள் பெற்றவர். இவரது ஹைக்கூ கவிதைகள் தமிழகத்தின் அநேகப் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன! இவரது ஹைக்கூ கவிதைகளை மாணவர்கள் க. செல்வகுமார், லெ. சிவசங்கர் , மாணவி ஜானு ஆகியோர் ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி  உள்ளார்கள். இன்னும் பல்வேறு சிறப்புகளும் விருதுகளும் பெற்றவர். சிறப்பு விருந்தினராகவும் சிறப்புப் பேச்சாளராகவும் அநேக அவைகளை அலங்கரித்தவர். 

இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித் தரும்படிக் கேட்டிருந்தேன்

தான் எழுத்துக்கு வரக் காரணமாயிருந்தவரும் தன்னைச் செதுக்கியவருமான முனைவர் திரு. இரா. மோகன் பற்றி எழுதிக் கொடுத்தார். நீங்களும் அவரைச் செதுக்கிய சிற்பியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். 

தமிழ்த்தேனீயும் நானும்!

கவிஞர் இரா.இரவி

 
தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவ்ர்கள் நாடறிந்த தமிழ் அறிஞர். அவரது இழப்பு உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத இழப்பு. மதுரையில் ஒரு வெற்றிடமானது. நூல் வெளியீட்டு விழாக்களை முன்நின்று நடத்தி தமிழன்னைக்கு அணிகலன்களைப் பூட்டி அழகு பார்த்தவர்.


பட்டிமன்ற நடுவராக இருந்து தனிமுத்திரை பதித்தவர். விழிப்புணர்வு பட்டிமன்றங்களை நடத்தியவர். தமிழுணர்வை விதைத்தவர். அவரது பட்டிமன்றம் கேட்டுவிட்டு, முடிந்ததும் ஐயாவை

கைகொடுத்துப் பாராட்டினேன். மடலாகவும் அனுப்புங்கள் என்றார். அப்படித்தான் தொடங்கியது எனது கட்டுரைப்பணி. மடல் அனுப்பினேன். படித்துவிட்டு உடன் அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.

அவருடைய தனிப்பேச்சு என்றாலும், தவறாமல் சென்று குறிப்பெடுத்து பாராட்டு மடல் அனுப்புவேன். இப்படித்தான் மலர்ந்தது எங்கள் நட்பு. திடீரென ஒருநாள் நீங்களும் பட்டிமன்றத்தில் பேசுங்கள் என்றார். முதலில் தயங்கினேன். ஊக்கம் தந்து, பேச அழைத்தார். முதல் பட்டுமன்றம் வெளியீரில் மகிழுந்தில் அழைத்துச் சென்றார். செல்லும் வழியிலேயே வாந்தி வந்தது எனக்கு. உடன் மனம் சோர்ந்து ஐயா, நான் பேசவில்லை என்றேன். உங்களால் முடியும் பேசுங்கள் என்று பேச வைத்தார். எத்தனை பட்டிமன்றங்கள் பேசினோம் என்று குறித்து வைக்கவில்லை. ஆனால் மோகன் ஐயா ஆவணப்படுத்துவதில் வல்லவர். உங்களுக்கு இத்தனையாவது பட்டிமன்றம் என்று எண் சொல்வார்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

அந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு

 அந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு


கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்த ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சப்ளை செய்வதாகச் சொன்னவர் இன்று இரண்டு அரங்கங்களிலும் ஆக்டிவாக இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.

தூரத்து இடி முழக்கத்தில் “உள்ளமெல்லாம் தள்ளாடுதே” என்ற பாடலைப் பார்க்கும்போதெல்லாம் இவர் வெற்றிக்குக் காரணம் இவரது பந்தா இல்லாத எளிமையே என நினைப்பேன். நல்ல திராவிட நிறம். தொப்பை இல்லாத உடல்வாகு. கிராமத்து இளைஞன் போல் தோற்றம். விசாலமான, நேர்மையாய் நோக்கும் பெரிய கண்கள். இந்தக் கண்கள் அற்புதமாக நடித்த ”சின்னமணிக் குயிலே” என்ற பாடலை என்னால் மறக்க இயலாது.

திங்கள், 20 செப்டம்பர், 2021

சினேகா பொட்டீக்கும் அன்னபூரணி நாராயணனும்.

 சினேகா பொட்டீக்கும் அன்னபூரணி நாராயணனும்


 

டிகிரி படித்துவிட்டு வீட்டில் இருக்கும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இல்லத்தரசி அன்னபூரணி நாராயணன். இவர் பிறந்தது அழகான ஆத்தங்குடியில். வாக்கப்பட்டது பாசமான பள்ளத்தூரில். இவரது அன்புக் கணவர் திரு. நாராயணன், ஆசை மகள் சினேகவல்லி, அருமை மாப்பிள்ளை சுப்பையா, தங்கப் பேத்தி யாழினி, அறிவான மகன் அவினாஷ் குமரன் என்று கட்டுசெட்டான குடும்பம் இவருடையது.

சனி, 18 செப்டம்பர், 2021

சாட்டர்டே போஸ்ட். மறக்கப்பட்ட மேதைகள் பற்றி திரு. முத்துமணி.

 ஜகர்த்தா, இந்தோனேசியாவில் வசித்து வருகிறார் நண்பர் முத்துமணி. இவர் தேவகோட்டையைச் சேர்ந்தவர். தமிழ் வான் அவை குழுமத்தில் இவரது கவிதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். கொரோனாவாகட்டும், சமூக இடைவெளியில்லாத மதுப்பழக்கத்தால் ஏற்படும் அவதி ஆகட்டும், பாரதி நூற்றாண்டாகட்டும், அறிஞர் அண்ணா பற்றியதாகட்டும், அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற சீற்றமிகு கவிதைகள் படைத்திடுவதில் வல்லவர் இவர்! 


எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பர். இவர் வணிகவியல் பட்டதாரியாக இருந்தாலும் கணக்கியலிலும்  எழுத்திலும் தன் முத்திரையைப் பதித்துக் கண்ணெனக் காத்து  வருகிறார். கவிதைகள்மேல் இவர் கொண்ட காதலால், பித்தால் கவிக்கிறுக்கனெனவும் அழைக்கப்படுகிறார்!.

வியாழன், 16 செப்டம்பர், 2021

சாக்லேட்களின் மகாத்மியம் - லிண்ட் - LINDT - ஜெர்மனி

ஜெர்மனியின் சாக்லேட் மியூசியத்தில் சாக்லேட்களின் வகைகள், தயாரிப்பு, தயாரிக்கும் மெஷின்கள், பாக்கிங், மோல்டுகள், விற்பனையகம், சாக்லேட்டின் பூர்வீகம், நூற்றாண்டுகளாக அதன் பயணம் பற்றி அறிய முடிந்தது. இவற்றை செக்‌ஷன் செக்‌ஷனாகப் பிரித்து விவரித்து எழுதியே வைத்திருக்கிறார்கள். எல்லாம் நமக்குத் தெரியாத ஜெர்மனில் இருக்கு ஹ்ம்ம்!. 

சாக்லேட், சொக்கலைட், சிக்லேட் என்று எல்லாம் என் பெரியம்மா 1950 களின் சாக்லேட்களை ஒரு முறை வகைப்படுத்தினார். டார்க் சாக்லேட், சாஃப்ட் சாக்லேட் என்றெல்லாமும் இருக்கிறது. வெள்ளை நிறம், அரக்கு நிறம், கருப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம் இன்னும் பல நிறக் கலவைகளில் சாக்லேட்டுகள் கிடைக்கின்றன. 

வாயில் போட்டால் கரையும் ஸ்விஸ் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. சில சாக்லேட்டுகள் நம்மூரு உஷ்ணத்தில் சாக்லேட் ட்ரிங்க் ஆகிவிடும் அபாயம் உள்ளவை. எனவே ரெஃப்ரிஜிரேஷன் செய்துதான் சாப்பிடணும். 

நம்மூரு டெய்ரி மில்க்கும், ஃபைவ் ஸ்டாரும், காட்பரீஸும், காஃபி பைட்டும்தான் பல்லாண்டுகளாக என் விருப்பமாக இருந்திருக்கிறது.  வான் ஹௌடன் என்று சிங்கப்பூரில் இருந்து என் மாமா கொண்டு வரும் சின்ன சிவப்பு கவர் போட்ட டார்க் சாக்லேட் எங்களுக்கு எப்போதாவது கிடைக்கும் பேரதிசயம். 

பெர்னாட்ஷாவின் போரும் காதலும் என்ற நாடகத்தில் வரும் வீரனுக்கு அதன் நாயகி சாக்லேட் சாப்பிடக் கொடுப்பாள். சர்காஸ்டிக்காக அவனை க்ரீம் வீரன் என்றும் அழைப்பாள். 

சனி, 11 செப்டம்பர், 2021

சாட்டர்டே போஸ்ட். அறம் வேரோடிய ஒளிமுத்து பற்றி திரு. துரை அறிவழகன்.

 நண்பர் திரு. துரை அறிவழகன் காரைக்குடி மரப்பாச்சி குழுவின் மூலம் அறிமுகமானவர். காரைக்குடி புத்தகத் திருவிழாவில் அவரது ஸ்டாலுக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் “தனபாக்கியத்தோட நவநேரம்” என்ற புத்தகமும் ஒன்று.இது அவர் தொகுத்த நூல். (நான் இன்னும் நூல் விமர்சனம்/அறிமுகம் செய்யவில்லை. இனிமேல்தான் செய்யவேண்டும் :) 


குழுமத்தில் அவ்வப்போது அவரின் படைப்புக்களைப் படிப்பதுண்டு.  இலங்கையில் பிறந்த இவர் கல்வி கற்றது தமிழகத்தில். “அவர்களுக்காக” ,” சிறகுக் குழந்தைகள்” என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ”ஸ்நோபாப்பாவின் அதிசயக்கடல்”, சிறார் எழுத்தாளர்களின் கதைகளைக் தொகுத்து “ ஒரு ஊர்ல ஒரு நரி” என்னும் தலைப்பில் நூல் கொணர்ந்துள்ளார். 

திங்கள், 6 செப்டம்பர், 2021

யூ ட்யூபில் 41 -50 வீடியோக்கள்.

 யூ ட்யூபில் நூல் பார்வைகளைப் பதிவேற்றி வருகிறேன். முன்னர் பதிவிட்ட நூல் பார்வைகளை எல்லாம் அமேஸானில் புத்தகமாக்கம் செய்துள்ளேன். நூல் பார்வைகளை எழுதுவதை விடப் பேசுவது எளிதாக இருப்பதால் யூ ட்யூபில் பதிவேற்றுகிறேன். பார்த்துட்டு சொல்லுங்க மக்காஸ் எப்பிடி இருக்குன்னு. 

41. கினோ - ஹருகி முரகாமி - நூல் பார்வை - தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=Z6G44DF7omE


42. சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸே - நூல் பார்வை - தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=16bhW19uYqo


43. கறுப்பழகன் - அன்னா ஸிவெல் - தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=3zmGBf397PA&t=11s


44.குலதெய்வங்களும், சேங்கை வெட்டுதலும், புரவி எடுப்பும் - தேனம்மை லெக்ஷ்மணன்.

சனி, 4 செப்டம்பர், 2021

திருவள்ளுவர் நற்பணி மன்றம் - நூறாண்டு கடந்து வாழும் மகாகவி.

 திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களாபுதூர்  கிட்டத்தட்ட ஏழு வாரங்களுக்கு மகாகவியின் விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டு நான்கு வாரங்களாகக் கொண்டாடி வருகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோபி செட்டிப்பாளையம் பங்களாபுதூரில் இலக்கிய சேவை ஆற்றி வருகிறது இவ்வமைப்பு. நூல்கள் சிலவும் வெளியிட்டு உள்ளார்கள். பல்வேறு சமூக சேவைகளும் செய்து வருகிறார்கள். 

அவர்கள் ஏழு வார நிகழ்வாக மகாகவியின் பிறந்தநாளை சிறப்பு அழைப்பாளர்கள் கொண்டு ஜூம் மீட்டில் நிகழ்த்தினார்கள். 

தலைப்பு :- நூறாண்டு கடந்தும் வாழும் மகாகவி

முதல் நிகழ்வில் நடிகர் ரமேஷ் கண்ணா கலந்து கொண்டு சினிமாவில் மகாகவின் பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசினார். ரசனையாக இருந்தது.


சாட்டர்டே ஜாலிகார்னர். அன்னு செய்த அற்புத பாதுஷா !!!

எங்களுக்கெல்லாம்  செல்லமாக அன்னு எனப்படும்  அனிதாஶ்ரீகாந்த் வசிப்பது மஹாராஷ்டிரா டோம்பிவிலி ல. மழலை பள்ளி ஆசிரியராக இருக்காங்க. இரண்டு குழந்தைகளுக்கு( பையன் மூணாவது வருஷம் கம்ப்யூட்டர் இஞ்சினியர் படிக்கிறான்..பொண்ணு பத்தாவது படிக்கிறா) அம்மா. ஆனா எனர்ஜி லெவலில் டீனேஜ் யங்ஸ்டர். அதிரடி சரவெடி எழுத்துக்குச் சொந்தக்காரர்.  என் அன்புத் தங்கைகளில் ஒருவர். 


இவருக்குப் புத்தகங்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். அதை விமர்சிக்கவும் பிடிக்கும். இவரை நான் கண்டடைந்ததே நுழைபுலம் என்ற நூல் விமர்சனக் குழுவில்தான். எல்லோருடனும் ஒத்திசைந்து செல்வார். அதே சமயம் செம குறும்புக்காரியும் கூட. 

வியாழன், 2 செப்டம்பர், 2021

குமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல்

 குமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல்


26.8.2021 குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ”நோய் தீர்க்கும் மலர் சமையல்” என்னும் தலைப்பில் எனது 19 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.

புதன், 1 செப்டம்பர், 2021

ஆச்சி தந்த சீர்

ஆச்சி தந்த சீர்


”ஆச்சி ஆச்சி “ குரல் கேட்டு இரண்டங்கட்டிலிருந்து வெளியே வந்தாள் வள்ளி.

முகப்பில் நீலவண்ண சுடிதாரில் ஒரு கல்லூரிப் பெண் தன் தாயுடன் நின்றிருந்தாள்.

சனி, 28 ஆகஸ்ட், 2021

மாயமான் ஆன மாரீசன்

மாயமான் ஆன மாரீசன்

தனக்கு உரிமையில்லாத ஒரு பொருளின்மேல் நாட்டம் வைத்தால் தனக்கு உரிமையானதையும் இழக்க நேர்ந்துவிடும் , மேலும் கெட்டவர்களோடு இணைந்தால் அழிவு வரும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது. கதைக்குள் போவோம் வாருங்கள் குழந்தைகளே.
தண்டகாரண்யத்தில் ராமன் இலக்குவன் சீதை ஆகியோர் பர்ணசாலை அமைத்து தங்கள் வனவாசத்தை மேற்கொண்டிருந்தார்கள். கானகங்களில் முனிபுங்கவர்களின் வேள்விக்கு இடையூறு செய்துவந்த அரக்கர்களின் தொல்லைகளில் இருந்து அவர்களைக் காத்ததால் அகத்தியரிடம் ஆசி பெறுமாறு கூறினார்கள் முனிவர்கள்.

சாட்டர்டே போஸ்ட். தலைமை ஆசிரியை கலைவாணி கூறும் இணையவழி வகுப்பின் இன்னொரு பக்கம்

 காரைக்குடியில் 2016 இல் த.மு.எ.க.ச கூட்டம் ஒன்று மகரிஷி வித்யா மந்திரில் நடைபெற்றது. உறவினரோ நண்பரோ ( ஞாபகமில்லை ) அது பற்றிச் சொன்னதால் அங்கே சென்றேன். அந்த நிகழ்வுக்குச் சென்றபோது கலைவாணி ஒரு நூல் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தார். அதுதான் முதல் சந்திப்பு. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பில் இருக்கிறோம், நேரிலும் முகநூலிலும். அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம். அக்கா என்று உரிமையாய்ப் பாசத்தோடு அழைப்பார். 


தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுவினரும் இணைந்து நடத்திய கண்காட்சியில் விஞ்ஞானி ரகுபதி விருது பெற என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார் . ( திரு வினைதீர்த்தான் சாரும். இருவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். ).

புதன், 25 ஆகஸ்ட், 2021

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்

 நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு  பயணங்களில் (யூரோப் டூர்)  எடுத்த வீடியோக்களையும் என் யூ ட்யூப் சேனலில் பதிவேற்றி வருகிறேன். இதற்கு முன் முப்பது வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 

இதில் முப்பத்தியொன்றாவது வீடியோவில் இருந்து நாற்பதாவது வீடியோ வரை பதிவு செய்து உள்ளேன். இவை முழுக்க முழுக்க யூரோப் ட்ரிப்பில் எடுக்கப்பட்டவை. 


31. BATEAUX MOUCHES, PARIS, EUROPE TOUR, THENAMMAI LAKSHMANAN

https://www.youtube.com/watch?v=FD7EnFWqJmI


32. BATEAUX MOUCHES, PARIS, EUROPE TOUR, THENAMMAI LAKSHMANAN

https://www.youtube.com/watch?v=s7qqOFUGqcY

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

வசந்த மாளிகையும் புதிய பறவையும் தனவணிகன் இதழில்..

வசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-





 1972 இலும் 1964 இலும் வந்த இந்த ரெண்டு படங்களையும் பார்க்காதவங்களே இருக்க முடியாது. 750 நாள் எல்லாம் ஓடின படங்கள். இன்னைக்கு தியேட்டருக்கு வந்தாலும் ஒரு வாரத்துக்கு ஹவுஸ் ஃபுல்லா கல்லா கட்டாம போகாது. 

இந்த இரண்டு படங்கள் மட்டுமில்ல இன்னும் பல படங்கள் பார்த்து சேலை முந்தானையைப் பிழிந்து தொடைச்சுக்குற அளவுக்கு ஒரே அழுகாச்சியா அழுதிருக்கேன். ஆனா இவை இரண்டும் இன்னிக்குப் பார்த்தாலும் ரொம்ப உணர்ச்சிவசப்பட வைக்கிற ஸ்பெஷல் படங்கள்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

விராதன் தும்புரு ஆன கதை

விராதன் தும்புரு ஆன கதை

காமம் குரோதம் லோபம் மதம் மாச்சர்யம் ஆகிய ஐந்து கீழ்நிலைக் குணங்களும் வந்துவிட்டால் ஒரு மனிதன் உயர முடியாதது மட்டுமல்ல. கீழான நிலைக்கும் போய்விடுவான். அப்படி ஒரு கந்தர்வன் தன் கீழ்நிலைக் குணத்தால் அரக்கனானதும் அதன்பின் சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனானதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ராமனும் சீதையும் இலக்குவனும் கைகேயி தயரதனிடம் கேட்டுப் பெற்ற வரத்தினை நிறைவேற்றப் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்யப் புறப்பட்டனர். அப்படி அவர்கள் சித்திரகூடத்தில் தங்கி அதன் பின் பத்தாண்டுகள் கழித்துத் தென்திசை நோக்கிச் சென்றார்கள்.
அத்திரி முனிவரின் ஆசிரமம் எதிர்ப்பட்டது. அங்கே அத்திரி முனிவரும் அனுசூயாதேவியும் வரவேற்று உபசரித்தனர். அனுசூயாதேவி தன் ஆபரணங்களை சீதைக்குப் பூட்டி அழகு பார்த்தார். அவர்களிடம் விடைபெற்று ராமனும் இலக்குவனும் சீதையுடன் தண்டகாரண்யம் நோக்கிப் பயணமாயினார்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

குலதெய்வ வழிபாடும் சேங்கை வெட்டுதலும் புரவி எடுப்பும்.

குலதெய்வ வழிபாடும் சேங்கை வெட்டுதலும் புரவி எடுப்பும்.

வேட்டைச் சமூகமாக இருந்த நாம் வேளாண் சமூகமாக மாறும்போது நமது தெய்வ வழிபாடுகளும் இன்னொரு பரிமாணம் அடைந்தன. நா. வானமாமலையின் மார்க்ஸிய தத்துவமும் இந்திய நாத்திகமும் என்ற நூலில் இறைமையைக் கற்பித்ததே முடியாட்சிதான் என்றும் வணிகம், மதம் பேரரசு போன்றவை மக்களின் வழிபாடுகளையும் விருப்பங்களையும் நிர்ணயிக்கின்றன என்பதும் ஓரளவு ஒப்புக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும் நாட்டார் தெய்வங்கள், குலதெய்வங்கள் போன்ற சிறுதெய்வ வழிபாட்டை மக்கள் தாங்களாகவே கைக்கொள்ளுகிறார்கள்.

யுத்தங்கள், காலனி ஆதிக்கம், ஏகாதிபத்தியம், மதமாற்றங்கள் போன்றவை நிகழ்ந்தாலும் ஓரிறை வழிபாட்டை அவை வலியுறுத்தினாலும் நம் அடிப்படையான பல தெய்வ வழிபாட்டையே கைக்கொண்டிருக்கிறோம். இனக்குழுக்களாக நாம் இடம் விட்டு இடம் பெயர்ந்தபோது நம் இறை நம்பிக்கையையும் எடுத்தே சென்றிருக்கிறோம்.

புதன், 4 ஆகஸ்ட், 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 6

அயனம், ருதுக்கள், பக்ஷ்ம், யுகம், வருஷம், ராசி, ரத்னம். 

அதாவது

தை மீ முதல் ஆனி மீ வரை க்ஷமீ ( க்ஷ - மேற்படி, மீ - மாதங்கள் ) உத்தராயணம்

ஆடி மீ முதல் மார்களி மீ வரை க்ஷமீ தக்ஷணாயனம்  


ருதுக்களாவன.

சித்திரையும் வைகாசியும் வஸந்த ருது

ஆனியும் ஆடியும் கிருஷ்ம ருது

ஆவணியும் புரட்டாசியும்  வருஷ ருது

ஐப்பசியும் கார்த்திகையும் சரத ருது

மார்கழியும் தையும் ஹேமந்த ருது

மாசியும் பங்குனியும் சசி ருது

ஆக மீயஉ க்கு ருதுக்கள் சன


பக்ஷ்மாவன

பூர்வபக்ஷ்ம் சுக்கிலபக்ஷ்ம் - தேய்பிரை

அமரபக்ஷ்ம் கிருஷ்ணபக்ஷ்ம் - வளர்பிரை

அதாவது அமாவாசை கழித்த பிரதமை முதல் பௌர்ணமை வரைக்கும் பூர்வபக்ஷ்மென்றும் சுக்லபக்ஷ்மென்றும் பெயர். 

பௌர்ணமி கழித்த பிரதமை முதல் அமாவாசை வரை அமரபக்ஷ்மென்றும் கிருஷ்ணபக்ஷ்மென்றும்பெயர்.  

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 5

 கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 5

ராசி நாழிகையாவன, ஒன்பது நவக்கிரகங்கள், தெசா வருசங்களாவன, குளிகை காலமாவன, யோகமாவன, நக்ஷத்திரமாவன, இராகுகாலமாவன, பக்ஷம், திதியாவன, கரணம், வாகனம்.


ராசி நாழிகையாவன

மேஷம் சவ

விருஷபம் சளு

மிதுனம் ருவ

கடகம் ருஇ

சிம்மம் குவ

கன்னி ரு

துலாம் ரு

விருச்சிகம் ருவ

தனுசு ருஇ

மகரம் ருவ

கும்பம் சளு

மீனம் சவ

ஆக ராசி 12 க்கு நாளிகை சுய


ஒன்பது நவக்கிரகங்கள்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்

வியாழன்

சுக்ரன்

சனி

றாகு

கேது

ஆக நவக்ரகங்கள் கூ


தெசா வருஷங்களாவன 

சூரியனுக்கு இல சூ

சந்திரனுக்கு இல ய

செவ்வாய்க்கு இல எ

புதனுக்கு இல யஎ

வியாழனுக்கு இல எசு

சுக்கிரனுக்கு இல உய

சனிக்கு இல யகூ

ராகுவுக்கு இல யஅ

கேதுவுக்கு இல எ

அக நவக்கிரகங்கள் 9 க்கு மகாதிசை இல ள உய. 

 


சனி, 31 ஜூலை, 2021

மண்ணின் மணமும் உலகின் அன்பும்.

 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்களுக்கு அவ்வளவு தகவல் இருக்கிறது இதில் 

இத் தருணத்தில் உங்களிடம் சொல்ல சில செய்திகள்இந்த மண்ணை மக்களை - குறிப்பாக நகரத்தார் வாழ்வியலை நீங்கள் எழுத வேண்டும். பெருமிதங்களை மட்டுமல்ல, சிறப்புகள் என்கிற போது குறைகளும் இருக்கும் தானே.. இவைகள் அடங்கிய எழுத்தாக இருக்க வேண்டும். சுஜாதா சொன்னது தான். எவருடைய மனமும் நோகாமல் என்றல்ல.வடிவம் நாவலாக இருக்கலாம். அவசரமாக செய்ய வேண்டும் என்பதில்லை.சொல்ல வந்த செய்தி, அதன் நம்பகத்தன்மைக்கான தேடல், நேர்சந்திப்பில் தகவலை திரட்டுவது என நிதானத் தோடு செய்யலாம் . ரத்தமும் சதையும் மான உண்மை மனிதர்களின் நடமாட்டம், பேச்சு இவைகளை உங்களால் சிறப்பாக கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எத்தனையோ வாழ்வியலை இலக்கிய உலகம் பதிவு செய்திருக்கிறது. இந்த வாழ்வை நீங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். வேறு வகையில் பதிவுகள் நிரம்ப இருக்கிறது.

ஆனால் நாவலாக, நான்குறிப்பிட்ட தன்மையோடு இல்லை.

என் வாசிப்பு கவனத்திற்கு வந்தவரை .

இது என்னுடைய அன்பான விருப்பம் - வேண்டுகோள்.

முடிவு உங்களுடையது.

நன்றி மேடம்.

 ஜீவ சிந்தன்.

வெள்ளி, 30 ஜூலை, 2021

யூ ட்யூப் சேனலில் 21 - 30 வீடியோக்கள்.

நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு  பயணங்களில் (யூரோப் டூர்)  எடுத்த வீடியோக்களையும் என் யூ ட்யூப் சேனலில் பதிவேற்றி வருகிறேன். இதற்கு முன் இருபது வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 

இதில் இருபத்தியொன்றாவது வீடியோவில் இருந்து முப்பதாவது வீடியோ வரை பதிவு செய்து உள்ளேன். 

21. FROM LEANING TOWER OF PISA, ITALY, EUROPE TOUR, THENAMMAI LAKSHMANAN

https://www.youtube.com/watch?v=twFGQmfhnp8

புதன், 28 ஜூலை, 2021

ஒட்டக அச்சுகளும் உப்புருசி சாக்லேட்டுகளும்.

சார்லி அண்ட் தெ சாக்லேட் ஃபேக்டரி என்றொரு படம் பார்த்திருக்கலாம்.

சாக்லேட் ஆங்காங்கே நதியாக ஓட மிக எக்ஸைடிங்காக இருக்கும். 

இங்கே கொலோனில் சாக்லேட் கப்பலில் உள்ள சாக்லேட் மியூசியத்தில் சாக்லேட் செய்யும் அச்சுக்களைக் காட்சிப்படுத்தியுள்ள இடம் இது. 

இங்கே முயலும் முட்டைகளும் அச்சுகளைப் பார்த்தேன். அத்தோடு ஒட்டக அச்சுகளையும் விதம் விதமாகப் பார்த்தேன். 

ஒட்டகத்தைக் கட்டிக்கோ என்ற பாட்டு ஞாபகம் வந்தது. அடேயப்பா எத்தனை ஒட்டகங்கள். மிகச் சிறிய சைஸிலிருந்து மிகப் பெரிய சைஸ் வரை ஒரு அரேபியப் பிரயாணி ஒட்டகச் சவாரி செய்யும் அச்சுகள்.  இதற்கு ஒரு கதை உண்டு. அது கடைசியில்.

திங்கள், 26 ஜூலை, 2021

ராமனுக்கு உதவப் புறப்பட்ட குலசேகரர்.

ராமனுக்கு உதவப் புறப்பட்ட குலசேகரர்.

தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகள் அதில் ஆழ்ந்து அதைப் போலவே வீரசாகசங்களைத் தாங்களும் செய்து பார்ப்பதுண்டு. இப்பழக்கம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஒரு அரசருக்கே அந்த நாளில் இருந்தது. யார் அந்த அரசர் அப்படி அவர் என்ன காரியம் செய்தார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
எட்டாம் நூற்றாண்டில் சேரநாட்டின் திருவஞ்சைக்களம் என்னும் இடத்தில் திடவிரதன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருக்குக் குலசேகரன் என்ற மகன் பிறந்தார்.
தன் தந்தைபோலவே சிறப்பாக ஆட்சி புரிந்த இவர் ஒரு சமயம் நாடு பிடிக்கும் ஆசையில் சோழ பாண்டிய நாடுகளின் மீதும் படையெடுத்து வென்றார். பாண்டிய மன்னன் இவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்குச் சேரகுலவல்லி என்ற மகள் பிறந்தாள்.
மகன் பிறந்ததும் தான் ஈடுபட்ட கொடுமையான போர்க்களங்களை நினைத்து வருந்திய குலசேகரர் ஒரு கட்டத்தில் கடவுளைச் சரணடைந்தார். நாளும் கிழமையும் கடவுளின் புகழ் கூறும் உபன்யாசகர் யாரையாவது அழைத்து வந்து காவியங்களின் விளக்கத்தைக் கேட்டு இன்புற்று வந்தார்.

வியாழன், 22 ஜூலை, 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 4

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 4. 

சிரஞ்சீவிகளாவன, ராசி மாசங்களாவன, பஞ்ச பூதங்களாவன, பூதலிங்கஸ்தலங்களாவன, வாரசூலமாவன, மேலோகங்களாவன, பாதாளலோகங்களாவன, அஷ்டலெக்ஷிமிகளாவன, நவகிரகங்கள் சஞ்சரிக்கும் நாள், திக்குபாலர்களாவன. 


சிரஞ்சீவிகளாவன.

அனுமார்

விபீஷணர், 

வேத வியாசர்

பரசுராமர்

மகாபலி

மார்க்கண்டேயர்

அஸ்வத்தாமா

ஆக சிரஞ்சீவிகள் எ.


ராசி மாசங்களாவன.

சித்திரை - மேஷம்

வைகாசி - ரிஷபம்

ஆனி - மிதுனம்

ஆடி - கடகம்

ஆவணி - சிம்மம்

புரட்டாசி - கன்னி

அய்ப்பிசி - துலாம்

கார்த்திகை - விருச்சிகம்

மார்களி - தனுசு

தை - மகரம்

மாசி - கும்பம்

பங்குனி - மீனம். 

ஆக மாசம்  12 க்கு ராசி மாசம் 12.


பஞ்சபூதங்களாவன.

பிரிதிவு

அப்பு

தேயு

வாயு

ஆகாசம்

ஆக பஞ்சபூதங்கள் ரு. 


பூதலிங்கஸ்தலங்களாவன.

பிரதிவு காஞ்சீபுரம்

அப்பு  திருவானைக்காவல்

தேயு  திருவண்ணாமலை

வாயு  திருக்காளாஸ்திரி

ஆகாசம் சிதம்பரம்

ஆக பூதலிங்கஸ்தலங்கள் ரு. 


செவ்வாய், 20 ஜூலை, 2021

இண்டஸ்ட்ரியல்/மருத்துவ ஆக்ஸிஜன் பற்றி வள்ளிபழனியப்பன் அவர்களுடன் ஒரு பேட்டி

 திருச்செந்தூரான் கேஸஸ் சேல்ஸ் & சர்வீசஸ் ப்ரைவேட் லிமிடெட் திருமதி வள்ளிபழனியப்பன் அவர்களுடன் ஒரு பேட்டி


கொரோனா காலத்தில் ஆக்ஸிஜனின் தேவை அதிகம். இந்த சமயத்தில் அம்பத்தூர் நகரத்தார் சங்கத்தின் மகளிர் அணித் தலைவி திருமதி வள்ளி பழனியப்பன் அவர்கள் தன் கணவரோடு இணைந்து திருச்செந்தூரான் கேஸஸ் சேல்ஸ் & சர்வீஸ் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜனை தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனம். இவரின் கணவர் திரு பழனியப்பன் சிவில் காண்ட்ராக்டராக இருக்கிறார்.  பள்ளத்தூர் இலுப்பைக்குடிக் கோயிலைச் சேர்ந்த இவர்கள் சென்னை, அம்பத்தூரில் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜனை மருத்துவத் தேவைக்குப் பயன்படுத்த முடியுமா.. வேறு என்னென்ன உபயோகங்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. 

Related Posts Plugin for WordPress, Blogger...