எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 டிசம்பர், 2019

கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

2441. டெக்ஸ்டர் மாதிரி கீரை.. கீரை.. க்ரீன்ஸ்ஸ்

2442. துபாய் டால்ஃபின் ஷோ. மை க்ளிக்ஸ்

2443.ஒட்டகத்தைக் கட்டிக்கோ @புர்ஜ் கலீஃபா, மை க்ளிக்ஸ்.

வெனிஸும் விக்டர் இம்மானுவேலும்.

வெனிஸும் விக்டர் இம்மானுவேலும்

வெனிஸின் சான்/செயிண்ட் மார்க் ஸ்கொயரில் இருக்கும் விக்டர் இம்மானுவேல் 2, நினைவுச் சின்னத்தைக் கடந்துதான் கொண்டோலா படகுச் சவாரிக்குப் போனோம். வெனிஸே நீர் சூழ் உலகுதான். அதிலும் நன்னீர் ஏரி போல் கடல்நீர் சூழந்த கட்டிடங்கள் வெகு அழகு. வெய்யில்தான் கொளுத்தி எடுக்கிறது. வேர்த்து விறுவிறுத்து மட்டுமல்ல மயக்கம் வரும் அளவுக்கு வெய்யில் வாட்டுகிறது. ( நீர் நிலைகள் இருந்தாலும் கேரளா , சிங்கப்பூர் போல ஒரு மாதிரி வறட்சியான தட்பவெப்பம். )

செவ்வாய், 24 டிசம்பர், 2019

மழையில் நனையும் வெய்யில் - ஒரு பார்வை.


மழையில் நனையும் வெய்யில் – ஒரு பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

2421. இந்த உப்பரிகையைப் பார்த்ததும் நீண்ட கூந்தலை உலர்த்தும் ஒரு அழகான ராணியைக் கண் தேடுதே

2422. ஜோசியத்தையும் டிவி சீரியலையும் அளவுக்கதிகமாக நம்பி அழிந்து போய்க் கொண்டிருக்கின்றன இந்தியக் குடும்பங்கள்

2423. னா, ணா, லை என்ன அழகான எழுத்துக்கள்.
# 1962 ஆம் வருட பேப்பர். !

2424. வாவ்.. அட்டகாசம் தங்கமே. மறக்க முடியுமா வித்யாசமா இருக்கு. உக்கார்ந்துகிட்டே ஒரு ஆட்டமும் கும்பிடும்  எத்தனை முறை ரசிச்சிருப்பேன்  உம்மா



திங்கள், 23 டிசம்பர், 2019

வளையாபதிக்கு எதிராக சாட்சி சொன்ன நாளி. தினமலர் சிறுவர்மலர் - 46.

வளையாபதிக்கு எதிராக சாட்சி சொன்ன நாளி.
எந்தக் காலத்திலும் நீதியைத் தம்பக்கம் வளைத்துவிடலாம் என்பது பணம் படைத்தவர்களின் எண்ணமாய் இருக்கிறது. ஆனால் எவ்வளவு பணம் படைத்தாலும் தெய்வத்தை வளைக்க முடியாது அது உண்மையையே தாங்கிப் பிடிக்கும். ஒரு வைர வாணிகன் தன் செல்வாக்கால் உண்மையைத் திசை திருப்பப் பார்த்தான். அவனுக்கு எதிராக சாட்சி சொல்லி உண்மையை நிலைநாட்டியது நாளி என்ற காளி தெய்வம். அது பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கடலும் அலையும் கைகோர்த்துத் திரியும் இடம் புகார் நகரம். கடற்துறைமுகத்தில் மரக்கலங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்று நவகோடி நாராயணன் என்ற வைர வியாபாரி உடையது. இவர்தான் வைர வாணிகன் வளையாபதி என்றும் அழைக்கப்பட்டார். அவர் வீட்டில் செல்வம் மலைபோல் குவிந்திருந்தது. வீடு நிறைய உறவினர்களும் அவர்களுக்குப் பணிபுரிய வேலையாட்களும் நிரம்பி இருப்பார்கள்.
நவகோடி நாராயணன் மிகுந்த சிவபக்தி கொண்டவர். நாள்தோறும் சிவனைப் பூசித்துத்தான் தன் வேலையைத் தொடங்குவார். நவரத்தினங்களும் வைரமும் விற்றுத் திரைகடல் ஓடித் திரவியம் சேர்த்து வந்தார்.

வெள்ளி, 20 டிசம்பர், 2019

தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மையக்குழுவில் அங்கத்தினராக..

மகிழ்வுடன் பகிர்கிறேன் :)

////*தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் மையக்குழு..*

*நிறுவுனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்..*
*பாரதிசுகுமாரன்*

*அமைப்புக் குழுவினர்..*

*ஈ.ராமதாஸ்*
திரைப்பட இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, கவிஞர், எழுத்தாளர்.

*முனைவர்.பாலரமனி*
எழுத்தாளர், கவிஞர், மேனாள்.தொலைக்காட்சி இயக்குநர், தமிழக அரசின் கம்பன் விருதாளர்

*குடந்தை.கீதப்பிரியன்*
பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர்

*எம்.இராமலிங்கம்*
எழுத்தாளர், கவிஞர், நிவேதிதா பதிப்பக உரிமையாளர்.

*எஸ்.ஜெயக்குமாரி*
எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர்

*கவிஞர்.தியாரூ*
எழுத்தாளர், கவிஞர், தமிழக அரசின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விருதாளர்

*உதயை.மு.வீரையன்*
பிரபல கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர்

*எஸ்.ஆர்.சுப்ரமணியம்*
எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், சிந்தனையாளர்,

*டி.எஸ்.ஆர்.சுபாஷ்*
எழுத்தாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர், திரைப்பட எடிட்டர்.

டேப்ரெக்கார்டர், கேஸட்ஸ், சிடி, ட்ரான்சிஸ்டர், வாக்மென்.

தொழில் நுட்பங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. அன்றைக்கு உபயோகப்படுத்திய அநேகப் பொருட்களை இன்று செல்ஃபோன் இடமாற்றம் செய்துவிட்டது.

பேஜர், ஃபேக்ஸ், ரேடியோ , டேப்ரெக்கார்டர், கம்ப்யூட்டர், லாப்டாப், ஐ பாட், டிவி, சினிமா, காமிரா, ஆடியோ கேஸட்ஸ்,வீடியோ கேஸட்ஸ், கம்ப்யூட்டர் ஹேண்ட் கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன், கடிகாரம், கால்குலேட்டர்,டிக்கெட் புக்கிங், லாண்ட்லைன் தொலைபேசி, அஞ்சல் சேவை, கொரியர் , திசைகாட்டி, நியூஸ் பேப்பர்கள், மேகஸீன்கள் போன்றவற்றை செல்ஃபோன் ஒரே வீச்சில் தூக்கிக் கடாசிவிட்டது.

அதுவும் செல்ஃபோனில் ஆன்லைன் பார்க்க ஆரம்பித்தபிறது எல்லாமே ஒரு சொடக்கில்.உடனே இண்டர்நேஷனல் கால் பேசுவது என்பதை அன்றைக்கெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. நாள் கணக்கில் ஆகும். இன்றைக்கு நினைத்தவுடன் வாட்ஸப்பில் ( முன்பு ஸ்கைப், மெசஞ்சர், ) பேச முடிகிறது. அதுவும் வீடியோ கால் !

இந்த ரேடியோ, ரேப்ரெக்கார்டர் எல்லாம் இப்போதும் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவோர் குறைவுதான். 85 களில் அனைவர் வீட்டிலும் ரேடியோ இருக்கும் . காலை ஏழேகால் , மதியம் பன்னிரெண்டேமுக்கால், மாலை 6 மணிச் செய்திகளும், சிலோன் பாடல்களும், ஞாயிறு மதியம் அகிலபாரத நாடகம், இரவில் சில நாடகங்களும் மதியம் பழைய & ஹிந்திப் பாடல்களும் கேட்க வாய்க்கும்.

டேப்ரெக்கார்டர் வந்த புதிதில் ஆராதனா, பாபி ஆகிய கேஸட்டுகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். அம்மாவிடம் சில சினிமாக்களும் கேஸட்டுகளாக இருந்தன. சங்கே முழங்கு, திருவிளையாடல் போன்றவை.

பாக்யராஜின் புதிய வார்ப்புகளின் “ வான் மேகங்களே வாழ்த்துங்கள் “ என்ற பாடலை ரதி அக்னிஹோத்ரிக்காகப் பலமுறை கேட்டிருப்போம். ”சுராலியா ஹை தூ மேரே தில் கோ “ “ ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த் ஹோ “ ” மேரே சப்னோங்கி ராணி கப் ஆயே கீ தூ “ எல்லாம் அப்போதைய தேசிய கீதம்.

ப்ரொஃபஸர் அழகர்சாமி அவர்களின் மகள் ராணி, சுதா ஆகியோர் எங்கள் காலனியில் வசித்து வந்தார்கள். அவர்கள் மாமா மலேஷியாவிலிருந்து அவர்களுக்கு ஒரு டேப்ரெக்கார்டர் அனுப்பினார். அதில் தாமரைப்பூ போட்டிருக்கும் . பக்கவாட்டில் ஸ்விச்சுகள் இருக்கும். அதில் வார் இருப்பதால் அதை ராணி தோளில் போட்டுக் கொள்வார். “ தாமரைப்பூ டேப்ரெக்கார்டர் “ என அவள் சொல்வது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. :)

இந்த டேப்ரெக்கார்டர் என் திருமணத்தில் மாப்பிள்ளைக்குச் ( மாப்பிள்ளைக்கு வைக்கும் சாமான்கள் ) சீராக வைத்தது. டேபிள்ஃபேன், டேபிள் , சேர், உடைகள், உள்ளாடைகள், துவாலைகள், சூட்கேஸ், ஷேவிங் செட், செண்ட், பாடிஸ்ப்ரே இன்னபிற


இந்த ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர்/ரேடியோவை நான் கிச்சனில் பாட்டுக் கேட்க என் கணவர் வாங்கிக் கொடுத்தார் :)

இந்த கேஸட்டுக்களெலாம் திருமணம் செய்தபின் வாங்கியது. அம்மா , மாமா, தம்பி ஆகியோர் கொடுத்ததும் உள்ளது . அழகன் பாட்டுக்கள் ரொம்பப் பிடிக்கும்.

வியாழன், 19 டிசம்பர், 2019

இனிய நந்தவனம் – ஒரு பார்வை.


இனிய நந்தவனம் – ஒரு பார்வை.

இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

திங்கள், 16 டிசம்பர், 2019

நிலையாமையை உணர்ந்த குண்டலகேசி. தினமலர் சிறுவர்மலர் - 45.

நிலையாமையை உணர்ந்த குண்டலகேசி
ஒரு பொருளின் மேல் ஆசைப்படுவதும் அது கிடைத்ததும் சலித்துப் போவதும் மனித இயல்பு. ஆனால் ஆசைப்பட்ட ஒரு பொருள் கிடைத்ததும் அடுத்த பொருளின்மேல் ஆசைப்படுவதும் அதை அடையப் போராடுவதும் அது கிடைத்ததும் அதை விட்டுவிட்டுக் கள்ளமாக இன்னொன்றை நாடுவதுமாகத் திரிந்தான் ஒருவன். அவன் செயல் தவறு என்று நீதி புகட்டினாள் ஒருத்தி. அந்தக் கள்வன் பற்றியும் அவனைத் திருத்தி நீதி புகட்டியவள் பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.

வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஜபத்தால் உயர்ந்த ஜபேஸ்வரன். தினமலர் சிறுவர்மலர் - 44.


ஜபத்தால் உயர்ந்த ஜபேஸ்வரன்.

நாம் ஆசைப்படும் ஒரு விஷயம் கிடைக்க நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்தோர் யாரும் இகழ்ச்சி அடைந்ததில்லை. உயர்வே அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு ஜபேஸ்வரனின் உயர்வே சாட்சி. மேலும் அவர் கருடனையே தன் மூச்சுக் காற்றால் வீழ்த்தியவர். யார் அந்த ஜபேஸ்வரன் எப்படி உயர்வடைந்தார் அவர் என்று பார்ப்போம் குழந்தைகளே.

வியாழன், 12 டிசம்பர், 2019

மலை வளமும் மழை வளமும்.

மழை வளமும் மழை வளமும்
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள் போல்
என்று சிவந்தமண் படத்தில் வரும் பாடல்போல் ஹனிமூன் என்றாலே நமக்கு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிம்லா, குலு, மணாலி, டார்ஜிலிங், ஸ்விட்சர்லாந்து ( ஆல்ப்ஸ், டிட்லிஸ்) ஆகியவற்றின் பனிபடர்ந்த மலைப்பிரதேங்கள் ஞாபகத்தில் முகிழ்க்கும். மலையை அடிப்படையாக வைத்து தங்கமலை ரகசியம், மெக்கன்னாஸ் கோல்ட் ஆகிய படங்கள் வந்துள்ளன.
சரித்திரப் பிரசித்திபெற்ற கோட்டைகளுடன் கூடிய மலைகளை  ( கோல்கொண்டா, குல்பர்கா, குவாலியர் , பிதார் ) அறிந்திருக்கலாம்.  ஆனால் பூகோளத்தில் ஒரு காலத்தில் இடம்பெற்றிருந்தும் கடல் விழுங்காமல் காற்றுக் குடிக்காமல் சிதறிச் சரிந்த மலைகள் மதுரை செல்லும் வழியிலும் திருச்சி செல்லும் வழியிலும் உண்டு.ஆட்டுக்கிடாய்களின் உப்புக்கண்டக் கவிச்சியைப் போல வெய்யிலில் காயும் வெண் துண்டங்களைக் கண்டு மனம் பதறியதுண்டுவெட்டிச்சாய்க்கப்பட்ட மரங்களைப் போல வீழ்ந்து கிடக்கும் மலைகளைக் கண்டு கண்கசிந்ததுண்டு.

புதன், 4 டிசம்பர், 2019

டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

2401. கிணற்றுப் பொந்தில், மரக்கிளைகளில் அமர்ந்து, வயலோரப் பாறைக்குப் பின்னால் என்று வினோதமான குடிக் கதைகளும், ஐந்து பெண்களை மணந்து கொள்வது பத்தும் பத்தாதற்குப் பண்ணையப் பெண்களிடம் வல்லுறவு கொள்ளும் கதைகள்தான் சிறந்த நாவலென்று சிலாகிக்கப்படுகின்றன

2402. டிவி சீரியல் டயலாக்குகள் போல இருக்கின்றன சில முகநூல் நிலைத்தகவல்கள்.

#காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்கிறார்கள்.

2403. மெலடீஸ்தான் பிடிக்கும்னாலும் அப்பப்போ இந்த டப்பாங்குத்துக்களையும் பார்க்க வேண்டியிருக்கு. ஹாஹாஹா

http://lyricsdhool.blogspot.com/2016/09/yaar-yaaru-ennannudhaan-solrendaa-muthu.html

2404. என் ஃபோட்டோவுக்கு ஹார்ட்டின் விடாதவுங்க கனவுல எல்லாம் இந்த டைனோசர் வந்து கடிச்சு வைக்கும். சொல்லிட்டேன் ஆமா


2405. கலகலக்கும் முகமூடிகள்

செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஓவியத்திலிருந்து உயிர்பெற்ற குழந்தை. தினமலர். சிறுவர்மலர் - 43.

ஓவியத்திலிருந்து உயிர்பெற்ற குழந்தை.
குழந்தை என்றால் அன்னையர் பத்துத்திங்கள் சுமந்து பெற்று வளர்ப்பார்கள். கருவில் உருவாகும் அக்குழந்தைக்கு எந்நோவும் வரக்கூடாது என்று மருந்துண்பார்கள். நதிகள்தோறும் கடலிலும் கூடத் தீர்த்தமாடுவார்கள். புண்ணிய ஸ்தலங்களின் தீர்த்தங்களையும் அருந்துவார்கள். வளைகாப்பு, சீமந்தம் என்று தாய்வீட்டில் சீராடுவார்கள். இப்படி எந்த நிகழ்வும் இல்லாமல் ஓரிரு நொடிகளில் ஒரு குழந்தை உருவானது. அதுவும் ஒரு ஓவியத்திலிருந்து உயிர்பெற்றது. இந்த அதிசயத்தைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
Related Posts Plugin for WordPress, Blogger...