எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 மார்ச், 2022

யாகக் குதிரையால் விமோசனம் பெற்றவன்.

யாகக் குதிரையால் விமோசனம் பெற்றவன்

ல்வேறு பாவங்கள் செய்தவர்கள் பேய் பிசாசாகவோ ராட்சசனாகவோ மாறி அலைவார்கள். கதி மோட்சம் கிடைக்காமல் அப்படி ராட்சசனாக அலைந்த ஒருவனது கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கவுடதேசத்தில் அந்தணன் ஒருவன் வசித்து வந்தான். அவன் தபம் ஜபம் செய்து வாழ்ந்து வந்ததால் தேவதூதர்கள் வந்து அவனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் என்னதான் ஜபம் தபம் செய்திருந்தாலும் அவனும் உலக மாயைகளில் இருந்து விடுபடவில்லை. தேவதூதர்களுடன் சொர்க்கத்துச் செல்லும்போது வழியில் சில முனிவர்கள் தவம் செய்வதைப் பார்த்தான். அவர்கள் அருகில் அப்சரஸ் போன்ற தேவலோக கன்னிகைகள் பணிவிடைகள் செய்து நின்றார்கள்.

வெள்ளி, 18 மார்ச், 2022

எனது 42, 43, 44 வது மின்னூல்கள்.

 1. எனது நாற்பத்தி இரண்டாவது மின்னூல் “ நம்ம பெங்களூரு & மைசூரு “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே.



நம்ம பெங்களூரு & மைசூரு

https://www.amazon.in/dp/B0984ZSLC8


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

திங்கள், 14 மார்ச், 2022

அந்தாதியும் அனுபூதியும்

இன்று காலை காரைக்குடியில் நடைபெற்ற ஏகன் அநேகன் தொடர் நிகழ்வில் நாச்சி ரெஸிடென்சியில் "அந்தாதியும் அனுபூதியும்" என்ற தலைப்பில் பேசினேன். அதற்காக எடுத்த குறிப்புகளை இங்கே பதிவிட்டேன் . நன்றி

அந்தாதியும் அனுபூதியும்

ஏகன் அநேகன் குழுவினருக்கும் நாச்சி ரெஸிடென்ஸிக்கும், நாச்சம்மை அண்ணாமலை அவர்களுக்கும் மற்றுமுள்ள ஆன்றோருக்கும் சான்றோருக்கும் பக்தப் பெருமக்களுக்கும் என் அன்பு வணக்கம்.

1.அவள் அருளாலே அவள்தாள் வணங்கி ஆரம்பிக்கின்றேன். ஆதியந்தம் அற்றவனின் இடப்பாகம் கொண்டவள், அவனின் சரிபாதி ஆனவள் அம்மை. எனவே அவளும் ஆதி அந்தம் அற்றவள். அதனால் அவள் அந்தாதிக்கு உரியவள்.

2.புவி ஏழையும் பூத்தவள் , புவனம் பதினான்கையும் காத்தவள், அண்டமெல்லா பூத்தவள், புவி அடங்கக் காத்தவள். அபிராமிப் பட்டர்போன்ற மெய்ஞானிகள் கண்ட இப்பேருண்மையை இன்றைய விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது. பிக் பாங்க் தியரி என்று. 

ஒன்றிலிருந்து வெடித்துப் பலவாய்ப் பெருகி ஒன்றிலேயே அடங்குதல் என்பதை. ஒன்றாய் இருந்து பலவாய் விரிந்து ஒன்றுள் ஒடுங்கும் உலகை உபநிஷதங்கள் மட்டுமல்ல அபிராமி அந்தாதியும் அழகாய் விளக்குகின்றது.

வெள்ளி, 11 மார்ச், 2022

பொறாமையால் அழிந்தவன்.

பொறாமையால் அழிந்தவன்.

ஒருவருக்குப் பொறாமை வந்தால் அவரை மட்டும் அழிக்காமல் அவரைச் சார்ந்தவர்களையும் அழித்துவிடும். அதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தவன் துரியோதனன். அவனது பொறாமை அவனை மட்டுமல்ல. அவனது தொண்ணூற்று ஒன்பது தம்பியரையும் சேர்த்தே அழித்தது. பொறாமை ஏன் கூடாது எனப் பார்ப்போம் குழந்தைகளே.
குருவம்சத்தின் மூத்த அரசன் திருதராஷ்டினன். அவர் பிறக்கும்போதே கண்ணில்லாமல் பிறந்ததால் அவரது தம்பி பாண்டுவுக்கு அரசாட்சியை விட்டுத் தரவேண்டியதாயிற்று. பாண்டுவும் தான் ஆள விரும்பாமல் தங்கள் தம்பியான விதுரரைப் பொறுப்பாளராக நியமித்து ஆட்சியை ஒப்படைத்துவிட்டுத் தம் மனைவியருடன் கானகம் சென்றார்.
பாண்டு கானகம் சென்றதும் ஆட்சியின் ருசியை அனுபவித்த திருதராஷ்டிரனும் அவரது புத்திரர்களும் பாண்டவர்கள் திரும்பி வந்ததும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டி வந்தது. ஆனால் அதை துரியோதனன் விரும்பவில்லை. அவர்களை மொத்தமாக அழித்துவிடத் துடிக்கிறான்.

ஞாயிறு, 6 மார்ச், 2022

யூ ட்யூபில் 71 - 80 வீடியோக்கள்.

71.கோவை கடற்கரை - நூல் பார்வை, தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=8QgNdtlvEXA

#கோவைகடற்கரை  #நூல்பார்வை  #தேனம்மைலெக்ஷ்மணன் #தகிதா #மணிவண்ணன் #அசோக்குமார்

#KOVAIKADARKARAI #BOOKINTRO #THEBAMMAILAKSHMANAN #DAKITA #MANIVANNAN #ASHOKKUMAR


72. பெண்களுக்கு - நூல் பார்வை, தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=CN7tUoxwgmM

#பெண்களுக்கு #நூல்பார்வை #தேனம்மைலெக்ஷ்மணன் #பாரதிபதிப்பகம்

#PENGALUKKU #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN #BHARATHIPATHIPPAGAM


வியாழன், 3 மார்ச், 2022

உலகம்பட்டி கோவில் கும்பாபிஷேக விழா மலர்.

 உலகம்பட்டி உலகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 2017 மலர்  தொகுத்த விதம் மிக அருமை.



ஆன்மீக மடங்கள், தலைவர்களின் அருளுரைகள், நகரத்தார் வாழ்த்து, அரசியல் பிரபலங்களின் வாழ்த்து, மலர்க்குழு, கும்பாபிஷேகக் கமிட்டி, நிதியும் விளம்பரங்களும் தந்த நல் உள்ளங்கள், கோவில் வாரியாகப் புள்ளிகள், திருப்பணி செய்தவர்கள், பிரபலங்கள் அறிமுகம், சென்னை வாழ் உலகம்பட்டி நகரத்தார்களின் சேவைகள் என நல்ல கட்டுக்கோப்பு.
Related Posts Plugin for WordPress, Blogger...