எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 நவம்பர், 2019

அமேஸானில் எனது நூல்கள் 21 - 24.

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்
https://www.amazon.in/dp/B07SBH9ZK4

எனது இருபத்தி ஒன்றாவது மின்னூல்,”ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 49/- மட்டுமே

https://www.amazon.in/dp/B07SBH9ZK4

வெள்ளி, 29 நவம்பர், 2019

வியாழன், 28 நவம்பர், 2019

லோஜா டி இலான்ஸி சிற்பங்கள் - ரோம்.

ஃப்ளாரன்ஸில் நெப்டியூன் ஃபவுண்டனுக்கு அருகில் பல்லாஸோ வெக்கியோ ( டவுன் ஹால் ) வுக்கு எதிரில் இருக்கிறது இந்த ஸ்கொயர், இதற்குப் பியாஸா டெல்லா சின்யோரா என்று பெயர். அதன் அருகில் சிற்பங்கள் நிறைந்த இந்தக்கூடத்துக்கு லோஜா டி இலான்ஸி என்று பெயர்.

ஃப்ளாரன்ஸ் கதீட்ரலில் இருந்து இங்கே வந்து அதன் பின்  உஃபிஸி கேலரிக்கும் வஸாரி கேரிடாருக்கும் இங்கிருந்தான் சென்றோம். இங்கே இருக்கும் சிற்பத் தொகுப்பைக் காணக் கண்கோடி வேண்டும். இதன் ஒவ்வொன்றின் பின்னணியிலும் நெடிய சரித்திரக் கதைகள் பொதிந்துள்ளன.

சிதறிக் கிடக்கும் ரோமின் ஒவ்வொரு கல்லிலும் சரித்திரம் கொட்டிக் கிடப்பதாக எங்கள் டூர் மேனேஜர் ராகவனும், கைட் மைக்கேலும் சொன்னார்கள்.

கைட் மைக்கேல் சொன்னவற்றில் அனைத்தையும் அப்போது உள்வாங்க முடியவில்லை. ஆனால் இந்தச் சிற்பங்களைத் திரும்பப் பார்க்கும்போது அவற்றின் வீரியமும் வலிமையும்  தெரிகிறது.


பல்லாஸோ வெக்கியோ என்ற இந்த டவுன்ஹால் பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். ! ”வீரர்களை வரிசைப்படுத்தும் வெளிவிதான நிலை ”என்பதுதான் லோஜா டி இலான்ஸி என்பதன் அர்த்தமாக இருக்கக்கூடும்.

புதன், 27 நவம்பர், 2019

உஃபிஸி காலரியும் வஸாரி காரிடாரும்.

ரோமின் டஸ்கனியில்தான் ( ஃப்ளாரன்ஸ் , இத்தாலி ) அமைந்துள்ளது இந்த உஃபிஸி காலரி. பலாஸ்ஸோ வெக்கியொவிலிருந்து உஃபிஸி காலரிக்குச் செல்ல முடியும். இது சரித்திரப் பிரசித்திபெற்ற சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அடங்கிய இடம்.

ஓபன் கேலரியான இது வஸாரி காரிடாரில் இருந்து ஆர்னோ நதி தாண்டி பிட்டி பேலஸ் வரை நீள்கிறது. இந்த உஃபிஸி தாழ்வாரம் மற்றும் சிலைகளை மெடிசி குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் நிறுவிப் பாதுகாத்து வருகிறார்கள்.

பலாஸ்ஸோ வெக்கி என்ற டவுன்ஹாலையும் அரசாங்க அலுவலகங்களையும் ( உஃபிஸி = ஆஃபீஸ் ) இணைக்கும் இந்த காலரி மெடிஸி என்ற குடும்பத்தினருக்குச் சொந்தமான  தனியார் இடத்தில் அமைந்துள்ளது வித்யாசம்.

லோரேய்ன் ஹப்ஸ்பர்க் பிரியடின் போது தனியாருக்கு மட்டுமான பாதையாகப் பயன்பட்டது தற்போது பொதுமக்கள் பார்வைக்காகவும் திறந்துவிடப்படுகிறது . ஆனால் அவ்வப்போது கேட்டை இழுத்து மூடிவிடுவார்கள். அதாவது பார்க்கத் தடா விதித்து விடுவார்கள்.

மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நேரத்தில் ( அதாவது  குறிப்பிட்ட முக்கால்மணி நேரம் - 9. 30 - 10.15, 11 - 11. 45 இதுபோல்  ) 25 பேர்தான் அதிகபட்சம் செல்லமுடியும்

இது கேலரியா டெக்லி உஃபிஸி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைஞர்களின் சிலைகள் லாகியேட்டோ எனப்படும் குவிமாடத்திற்குள் செதுக்கி நிறுத்தப்பட்டுள்ளன. இவை காலரியின் வெளிப்புறத்தில் காணப்படுபவை.

பின்வரும் கிரானைட் சிலைகள் அனைத்தும் ரோமின் ஒரு வீதியில் அமைந்துள்ளன. சாக்ரடீஸ், ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில் ஆகிய சிலைகள் காணப்பட்டன.


தத்துவ அறிஞர்களைக் கலைப்படைப்பில் முன்னிலைப்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது ரோம்.

செவ்வாய், 26 நவம்பர், 2019

மீனாக்ஷி முதியோர் இல்லத்தில் ஒரு நாள்.

காரைக்குடியில் வனா யினா வீதியில் ( ஆலங்குடியார் வீதிக்குப் பாரலல், சந்தைப்பேட்டைக்குச் செல்லும் வழி/சந்தைப்பேட்டைக்கு அருகில் ) இருக்கிறது. மீனாக்ஷி முதியோர் இல்லம். இதை காந்திமதி அறக்கட்டளையைச் சேர்ந்த திரு கணேசனும் அவரது மனைவி திருமதி தனலெக்ஷ்மியும் நடத்தி வருகிறார்கள்.

இங்கே முதியவர்கள் மாதம் ரூபாய் 5,000/- வீதம் பணம் கொடுத்துத் தங்குகிறார்கள். இவர்களை திரு. கணேசன் அவர்களும் அவரது மனைவி திருமதி. தனலெக்ஷ்மி அவர்களும் தொண்டுள்ளத்துடன் கவனித்துப் பராமரித்து வருகிறார்கள். மூன்று வேளையும் சுடச்சுட உணவளித்துத் தங்கும் வசதியுடன் கூடியது இந்த இல்லம் ( தண்ணீர், மின்சாரம், படுக்கை, கழிவறை வசதிகள் உள்ளன )


நாள் கிழமைகளில் நம்மைப் போன்ற சிலர் உணவளிக்க விரும்பினால் அதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கே கிட்டத்தட்டப் பதினைந்து முதியவர்கள் தங்கி இருக்கிறார்கள்.

திங்கள், 25 நவம்பர், 2019

ஃப்ளாரன்ஸில் தாவீதும் மைக்கலாஞ்சலோவும்.

யூரோப் டூரில் ஒரு நாள் இத்தாலிக்குச் சென்றபோது வாடிகனுக்கும் சென்றோம். வாடிகன் சர்ச்சிலும் மாபெரும் ஓவியங்களும் சிற்பங்களும் காட்சி அளித்தன.

ரோமில் பெயர் பெற்ற ஓவியர் மற்றும் சிற்பியான ( கட்டிடக் கலைஞர் & கவிஞர் ) மைக்கலாஞ்சலோவின் கலைப் படைப்புக்களைக் கண்டு களிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவரது படைப்புகள் சிருஷ்டியின் உன்னதத்தை விளக்கும் வகையில் ஆன்மநிர்வாணத்தோடு காட்சி அளிப்பவை.இவர் பதினான்காம் நூற்றாண்டில் பிறந்தவர். 1475 இல் டஸ்கனியில் பிறந்து 89 ஆண்டுகள் வாழ்ந்து 1564 இல் மறைந்தார். இவரது படைப்புகளில் பியட்டா ( ஏசுவைத் தாங்கி நிற்கும் மரியன்னை ) , தாவீது ஆகிய சிலைகள் சிறப்பானவை என்று போற்றப்படுகின்றன. சிஸ்டைன் தேவாலயத்தில் உள்ள கடைசித் தீர்ப்பு என்னும் ஓவியம் இவருக்குப் பேர் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இன்னமும்.

நிர்வாணச் சிற்பங்கள் இவரது ஸ்பெஷல். கோலியாத்தும் தாவீதும் பற்றி அறிந்திருப்போம். அதில் கோலியாத்தைத் தோற்கடித்த தாவீதை  மிக அழகான சிற்பமாக்கி இருக்கிறார் இவர். வலிமையான கைகள், கூர்மையான பார்வை, கால்களை முன்னெடுத்து நிற்கும் நிலையில் தாவீதின் சிற்பம் ஃப்ளோரன்ஸில் உள்ள கேலேரியா டெல் அகாடமியா என்ற அரங்கில் 1873 இல் வடித்து வைக்கப்பட்டுள்ளது.



இவரது படைப்புகள் 13 ஆம் நூற்றாண்டுக்கும் 17 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்தவை.

லூடோன் கவுண்டி தமிழ்ப் பள்ளி நூலகத்தில் எனது நூல்கள்.

எனது அன்பிற்குரிய உறவினரான ( சின்னாயா மகன் வீட்டுப் பேத்தி ) சீதா என்னுடைய நூல்களை அவர் வாழும் நாடான அமெரிக்காவின் நூலகங்களுக்குக் கொடுக்க விரும்பினார். சென்ற சில மாதங்களுக்கு முன்னால் இங்கே தனது தந்தையின் சஷ்டியப்தபூர்த்திக்கு வந்திருந்தபோது ( எனது மாமா திரு. சங்கரன் அவர்களின் மகள்தான் சீதா ) எனது நூல்களைக் கேட்டிருந்தார். அவரைச் சந்திக்க அவகாசமில்லாத காரணத்தால் எனது அம்மாவிடம் நூல்களைக் கொடுத்துவிட்டு ஜெர்மனிக்குச் சென்றுவிட்டேன். அவர் என் அம்மாவிடம் இருந்து பெற்றுச் சென்று வர்ஜினியாவில் உள்ள தமிழ்ப் பள்ளி நூலகத்துக்கு வழங்கி உள்ளார். இங்கே உள்ள நூலகத்தில் 1000 க்குமேல் தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன என்ற தகவலையும் கொடுத்தார்.

அமெரிக்க வாழ் தமிழ்மக்களே. வெர்ஜினியா வாழ் நாட்டுத் தமிழர்களே.. எனது நூல்களை நீங்கள் இருக்குமிடத்திலேயே படித்திடலாம். எனவே லூடோன் கவுண்டி நூலகத்துக்கு வருகை தாருங்கள். 






இந்நூல்  வெர்ஜினியாவில் உள்ள தமிழ்ப் பள்ளி நூலகத்தில் இந்நூல் வரிசை எண் கொடுத்து அடுக்கப்பட்டவுடன் அதையும் புகைப்படம் எடுத்து அனுப்புவதாகக் கூறி இருக்கிறார். 

வெள்ளி, 22 நவம்பர், 2019

இருகூறாய்ப் பிறந்த ஜராசந்தன். தினமலர். சிறுவர்மலர் - 42.

இருகூறாய்ப் பிறந்த ஜராசந்தன்
ஒருவரே இரு பாதி உருவங்களாகப் பிறக்கமுடியுமா. அப்படிப் பிறந்து ஒன்றான ஒருவன்தான் ஜராசந்தன். இவன் ஏன் இருகூறு உருவமாய்ப் பிறந்தான் எப்படி ஒன்றானான் என்பதை எல்லாம் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
மகத நாட்டை பிரகத்ரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் காசி மன்னரின் இரு புதல்வியரையும் மணந்துகொண்டான். ஆனால் இருவருக்குமே பல்லாண்டுகளாகப் புத்திரப் பாக்கியம் வாய்க்கவில்லை. மன்னனோ மனம் ஒடிந்து காட்டுக்குச் சென்று அங்கே சந்திர கௌசிகர் என்ற முனிவரைக் கண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தான்.
அவனுக்குப் பிள்ளையில்லாப் பெருங்குறையை அறிந்திருந்த அம்முனிவர் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து அதை மகாராணியிடம் உண்ணக் கொடுக்குமாறு கூறினார். அவனுக்கோ இரு பட்டமகிஷிகள். அதனால் அக்கனியை இருபாதியாக்கி இருவருக்கும் உண்ணக் கொடுத்தான்.
இருவரும் சூலுற்றனர். குழந்தை பிறக்கும் நேரமும் வந்தது. மன்னனோ ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் ஐயகோ ஈதென்ன இரு மகாராணியருக்கும் பாதிப் பாதியாகப் பிள்ளைகள் இறந்தே பிறந்திருக்கின்றனவே. மன்னன் அடைந்த துயருக்கு அளவே இல்லை.

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 5.

தினமலர் சிறுவர் மலரில் இதுவரை 50 வாசகர் கடிதங்கள் வரை இதிகாச புராணக்கதைகளைப் பாராட்டி வெளியாகி உள்ளன. படித்ததோடு நின்றுவிடாமல் சிரத்தை எடுத்து அதைப் பாராட்டிக் கடிதம் எழுதித் தெரிவித்த வாசகர்களின் அன்புக்கு நன்றி.



எறிபத்தரின் கதையைப் பாராட்டிய ஸ்ரீரங்கம் வாசகர் திரு. ப. சரவணன் அவர்களுக்கு நன்றி.

புதன், 20 நவம்பர், 2019

தீச்செயலால் அழிந்த தாடகை. தினமலர் சிறுவர்மலர் - 41.

தீச்செயலால் அழிந்த தாடகை
அழகானவர்களாக வலிமை உள்ளவர்களாகப் பிறந்தும் சிலர் தீச்செயல்கள் செய்வதால் அழிந்து படுகிறார்கள். அவர்களுக்கு உதாரணமாகத் தாடகை என்ற இயக்கர்குலப் பெண்ணைச் சொல்லலாம். தாடகை யார், அவளை ஏன் அழித்தார்கள், அவளை அழித்தவர்கள் யார் எனப் பார்க்கலாம் வாருங்கள் குழந்தைகளே.
அரக்கர் குலத்திலும் மிகவும் நற்பண்புகள் கொண்டவன் சுகேது. இவனுக்குக் குழந்தைப்பேறு இல்லாமையால் பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தான். பல்லாண்டுகளாய் இவன் செய்த கடுந்தவத்தால் மகிழ்ந்த பிரம்மா மயில்போன்ற அழகும் மதயானையை ஒத்த வலிமையும் உள்ள மகள் பிறப்பாள் என்று வரம் அளிக்கிறார். அதன்படிப் பிறந்தவள்தான் தாடகை.
இவள் திருமணப் பருவம் எய்தியதும் இவளது தந்தை சுகேது இவலை சுந்தன் என்ற இயக்கனுக்கு மணம் புரிந்துவைத்தான். இவர்களுக்கு மாரீசன், சுவாகு என்ற இருமகன்கள் பிறந்தனர்.
எல்லாம் சுமுகமாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஒரு முறை சுந்தன் அகத்தியரின் ஆசிரமத்துக்கு வந்து அங்கேயிருந்த மரங்களை எல்லாம் பிடுங்கி எறிந்தான். அகத்தியர் கோபம் கொண்டு அவனை நோக்க அவன் சாம்பலானான். இதைப் பார்த்து வெகுண்டாள் தாடகை

செவ்வாய், 19 நவம்பர், 2019

டூயிஸ்பர்க்கில் ரோடு துடைக்கும் ட்ரக்ஸ்.

ஃப்ளைட் ஏறிப் போயாச்சு , போய் சுத்தமான ரோடப் பார்த்தாச்சு  என்று பாடத்தான் ஆசை.

விடிகாலையில் அதாவது ஆறு மணிக்கே ரோட்டில் மெல்லிசாக தினமும் கடகடவென சத்தம் கேட்கும். கார்பேஜ் கலெக்‌ஷன் மற்றும் ரோடு துடைக்கத்தான் இந்த மினி சத்தம் எனக் கண்டு கொள்ள நாளாயிற்று.

ஒருநாள் கிச்சன் கதவைத் திறந்து பார்த்தால் தூரத்தில் குட்டியானை போன ஒன்று தும்பிக்கையைத் தரையில் தடவிக் கொண்டு தட தடவெனத் தாறுமாறாக ஓடி வந்தது.

சுவாரசியம் அதிகப்பட அது என்ன என்று நின்று நிதானித்துக் கவனித்தேன். சீராக இல்லாமல் அதகளம் செய்யும் யானை போல் ரோடு முழுவதும் குறுக்கும் நெடுக்கும் எட்டுப் போட்டுக் கொண்டிருந்தது அது. நீங்களே புகைப்படங்களில் அதன் அதகளத்தைப் பாருங்களேன்.

குப்பை மட்டுமில்லாமல் சாலையில் ஒட்டும் பிசுக்குகளையும் நீக்குகிறது இது. ஆர்கானிக் வேஸ்ட், இன்னார்கானிக் வேஸ்ட் ப்ளாஸ்டிக் என இது தரம் பிரித்துச் சேர்த்தும் விடுமாம். ரோட்டில் குண்டூசி கூடக் கிடக்க முடியாது . அப்படி சுத்தம் செய்கிறது.

குளிர்காலத்தில் பயன்படுவது மேன் ட்ரக் மெஷின்ஸ். அது கொட்டிக் கிடக்கும் பனியை எல்லாம் வாரி வழித்து எறிந்து விடுமாம். வீடுகளின் அமைப்பையே பாருங்களேன். கூம்பு வடிவக் கூரைகள். அதிலும் ஓடுகள் பதித்தது. இந்த அமைப்பினால்தான் கூரைகளில் படியும் பனி அனைத்தும் கீழே வழியும். சூரியனைக் கண்டதும் உருகி இறங்கவும் வசதி. ஆனால் ரோட்டில் விழும் பனியை இந்த மாதிரி ட்ரக்ஸ் மூலம்தான் சுத்தம் செய்ய முடியும். அதன் பெயர்தான் மேன் ட்ரக் மெஷின்ஸ்.

பாரம்பரிய ஓடுகள் பதிக்கும் முறை அனைத்துக் கட்டிடங்களிலும் உண்டு. இப்படி வைத்தால்தான் அரசாங்கம் வீடு கட்டும் ப்ளானையே அப்ரூவ் செய்யும். இல்லாட்டி பனித்தங்கி தண்ணியா உருகித் தேங்கி வீடே நாஸ்தியாகிரும்ல.


தூரத்தில் கடகடவென ஓடிவந்து எங்கோ கடைப்பக்கம் திரும்புகிறது இந்த ட்ரக்.

ஞாயிறு, 17 நவம்பர், 2019

பஸ், ட்ராம், சிட்டி ட்ரெயின் , மெட்ரோ, மோனோ ரயில்.

ஜெர்மனி சென்றதும் அங்கே உலாவந்த பஸ், ட்ராம், மெட்ரோ மற்றும் சிட்டி, ஸ்டேட் ட்ரெயின்களில் பயணித்தோம் . சாலையின் நடுவில் ட்ராம் ட்ராக் அமைக்கப்பட்டிருக்கிறது.  இருபுறமும் பேருந்துத் தடம். வித்யாசமான அமைப்பு !. புல்லட் ட்ரெயின்கள் கூட ஓடுவதாகச் சொல்கிறார்கள். பொதுவாகவே மணிக்கு 200 மைல் வேகத்தில் பறக்கும் ட்ரெயின்கள் இவை. 

ரயில் டிக்கட்டை பேரம் பேசி வாங்கமுடியாது என்று ஜோக்கெல்லாம் இங்கேதான் செல்லுபடியாகும். ஆனால் ஜெர்மனியிலும் யூரோப் முழுமையும் டிக்கெட் பாஸ் வாங்கலாம். மேலும் முன்பே பாஸ் வாங்கிவிட்டு மூன்று மாதங்களுக்கு ஸ்டேட் விட்டு ஸ்டேட் குறைந்த விலையில் முன்பே டிக்கெட் புக் செய்து சென்று வரும் வசதியும் உண்டு. 

லீவு நாளில் கார்டுக்கு ரெண்டு பேர் ஏழு மணிக்கு மேல் சிட்டிக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். ஃப்ளைட் போல் முன்பே புக் செய்தால் ரயில் டிக்கெட் ஃபேர் குறைவு.

நம்மூரு போல இங்கேயும் பஸ் ட்ரெயின் பாஸ் உண்டு. பஸ்ஸிலும் ட்ரெயினிலும் எல்லாரும் டிக்கெட்டை ஸ்வைப் செய்தபின்தான் போய் அமரவேண்டும். இல்லாவிட்டால் டிக்கெட் செக்கிங் வரும்போது பிரச்சனையாகிவிடும்.

தனித்தனி ட்ராம் ஸ்டாப் , பஸ் ஸ்டேஷன்களில் பரவாயில்லை.  ஆனால் சிட்டி, ஸ்டேட் ஸ்டேஷன்களில் ட்ரயின் எங்கே சென்று எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டு கொள்ள கொஞ்சம் மொழிப்பயிற்சியும் ஞானதிருஷ்டியும் அதீத புத்திசாலித்தனமும் வேண்டும். இல்லாவிட்டால் எதிர்திசையில் எங்கேயோ போய் விடுவோம் அர்த்த ராத்திரியில்.

இங்கே பயில வரும் மாணவர்களுக்கு ஃப்ரீ பாஸ் உண்டு. தினமும் மாலை ஏழுமணியிலிருந்தும் வார இறுதியில் இரண்டு நாட்களும் சிட்டிக்குள் ட்ராம், பஸ், ட்ரயினில் சென்று வர நூறு யூரோ டிக்கெட் பாஸ் யதேஷ்டம். இதிலேயே இன்னும் ஒருவரையும் இதே நேரத்தில் மட்டுமே கூட்டிச் செல்லலாம்.

காலை பத்துமணிக்கு மேல் செல்லவேண்டும் என்றால் பணம் கூடுதலாகக் கட்ட வேண்டும்.

இது டூயிஸ்பர்க்கில் வரும் ட்ராம்.

சனி, 16 நவம்பர், 2019

சிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி. தினமலர் சிறுவர்மலர் - 40.

சிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி
பெண்கள் சாத்வீகமானவர்கள். அதிலும் கண்ணகி என்ற பெண் மிகவும் சாதுவானவள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். நீதி தவறிய பாண்டிய மன்னனின் மேல் கோபம் கொண்டு சிலம்பை உடைத்தது மட்டுமல்ல அவள் சாபமிட்டதும் மதுரை மாநகரமே தீப்பற்றி எரிந்தது. அத்தகைய சக்தி வாய்ந்த கண்ணகி பற்றியும் அவளுக்குப் பாண்டிய மன்னன் இழைத்த அநீதி பற்றியும் அறிந்து கொள்ளுவோம் வாருங்கள் குழந்தைகளே.
காவிரிப் பூம்பட்டினத்தில் இரு பெரும் வணிகர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுள் மாசாத்துவான் என்ற வணிகனுக்குக் கோவலன் என்ற மகனும், மாநாயகன் என்ற வணிகனுக்குக் கண்ணகி என்ற மகளும் இருந்தார்கள். இருவருக்கும் அவர்கள் பெற்றோர் திருமணம் செய்துவைத்தார்கள். இருவரும் இனிதே இல்லறம் நடத்தி வந்தனர்.
ஒருமுறை சோழன் அவையில் மாதவி என்ற நடனமங்கை அற்புதமாக நடனமாடினாள். தலைக்கோல் அரிவை என்று பட்டம்பெற்று நாளொன்றுக்கு ஆயிரத்தெட்டுக்கழஞ்சுப் பொன் பெறும் சிறப்புப் பெற்றவள். கோவலன் அவள்பால் கவரப்பட்டுக் கண்ணகியை மறந்து மாதவியுடன் இல்லறம் நடத்தலானான். அவர்கட்கு மணிமேகலை என்ற புனிதமகள் பிறந்தாள்.

வெள்ளி, 15 நவம்பர், 2019

வாசிப்பை வளர்க்கும் ஷாப்பிங் மால்கள் - இன்ஃபர்மேஷன் லைப்ரரி.

ஜெர்மனியிலும் சரி, யூரோப் முழுவதும் சரி. ரயில் நிலையங்களில் ப்ரஸ் & புக்ஸ் என்னும் புத்தகக் கடைகளும், ரெவே, கொடி, அல்டி, லிடில், ரியல், நெட்டோ, போகோ போன்ற ஷாப்பிங் மால்களிலும் பயணப் பாதையில் மோட்டல்களிலுமே  புத்தகக் கடைகளைப் பார்க்கலாம். பாதிக்குப் பாதி ஆஃபரிலும் கூட புத்தகங்கள் கிடைக்கின்றன ! முக்காலே மூணு சதம் அந்தந்த தேசத்தின் மொழிகளில்தான் கிடைக்கின்றன. ஆங்கிலப் புத்தகங்கள் ரொம்பக் கம்மி. ( ஆங்கிலம் மாதிரியே இருக்கும். ஆனால் அது ஜெர்மன், ஃப்ரெஞ்ச், இத்தாலி :) . கட்டுரைகள், த்ரில்லர்கள், ரொமாண்டிக் நாவல்களோடு இங்கே சமையல் புத்தகங்களும் , குழந்தைகளுக்கான நூல்களும் கூட கொட்டிக் கிடக்கின்றன.

ரயிலில் நின்று கொண்டோ உட்காந்து கொண்டோ வாசிப்பவர்களை இந்நாடுகளில் அதிகமும் பார்க்கலாம். இவர்கள் என்னைக் கவர்ந்ததால் அங்கே எடுத்த புத்தகசாலைப் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறேன். வாசிப்பவர்களை எடுக்க என் கூட வரும் என் மகன் தடா போட்டுவிடுவார்.

இவை அனைத்தும் ஸ்விஸ், இத்தாலி, வெனிஸ், ரோம், போன்ற நகரங்களைக் கடந்து செல்லும்போது இருக்கும் மோட்டல்களில் எடுத்தவை.


இது டிட்லிஸ்ஸிலிருந்து வெனிஸ் செல்லும் வழியில் எடுத்தது.

50 முதல் 70 சதம் வரை ஆஃபர் ! ஆண்ட்ரியா கேமில்லரி  கலெக்‌ஷன்ஸ் அதிகம்.

வியாழன், 14 நவம்பர், 2019

கணக்கில் பிசகாத விசாரசருமர். தினமலர் சிறுவர்மலர் - 39.

கணக்கில் பிசகாத விசாரசருமர்.
இருவர் அல்லது மூவர் கொண்ட ஒரு குடும்பத்தின் கணக்கு வழக்கை நிர்வகிக்கவே சிரமமாய் இருக்கிறது. யாரும் வரவு செலவைக் கணக்கெழுதி வைப்பதில்லை. ஆனால் ஆலயத்தின் அதுவும் ஈரேழு பதினான்கு லோகத்தையும் படைத்துக் காக்கும் சிவபெருமானின் ஆலயத்தின் வரவு செலவுக் கணக்குகளையும், சிவனுக்கு அளிக்கப்படும் உணவு, உடை ஆகியற்றையும் பல்லாயிரம் ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார் ஒருவர். நித்யதியானத்தில் இருந்தாலும் அவரின் கணக்கு பிசகாது. அவர் யார், அவருக்கு சிவாலயத்தின் கணக்கை நிர்வகிக்கும் வேலை எப்படிக் கிடைத்தது என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழநாட்டின் மணியாற்றின் கரையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நீரில் துளைந்தும் நிலத்தில் குதித்தும் மர விழுதுகளில் ஊஞ்சலாடியும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.  அவர்களில் ஒரு ஞானக் குழந்தையும் இருந்தது. சேய்ஞலூர் என்ற ஊரில் வாழ்ந்த எச்சதத்தன், பவித்திரை ஆகிய தம்பதிகளின் மகன்தான் அவன். விசார சருமன் என்ற பெயர் கொண்ட அச்சிறுவனுக்கு அப்போது ஏழு வயது.
குழந்தைகள் விளையாடும் இடத்தில் சில இடையர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது அவை இடையர்கள் ஓட்டிச் செல்லும் தடத்தை விட்டுப் பெயர்ந்து போய்க் கொண்டிருந்தன. அவற்றை அவர்கள் ஒன்றாக நடக்கும்படி விரட்டி மரக்கொம்பால் அடித்தனர். வாயில்லா ஜீவன்களான அவற்றின் துன்பம் கண்டு துடித்த விசாரசருமர் தானே அப்பசுக்களை மேய்ப்பதாகவும் அவற்றை அடிக்க வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார். இடையர்களும் ஒப்புக் கொண்டனர்.

புதன், 13 நவம்பர், 2019

கனவுதாசன் என்றொரு கவி ஆளுமை

கனவுதாசன் என்றொரு கவி ஆளுமை



கனவுதாசனின் நினைவு முற்றமெங்கும் கவிதைப்பூக்கள். அவை போதவிழ்ந்து நறுமணம் பரப்பும்போது முகிழ்க்கும் தேனில் உமர்கய்யாம் கவிதைகள் போல் நம்மையும் போதைக்குள்ளாக்குகின்றன, சில தெளியவும் வைக்கின்றன. ஆகாசவீதியில் சூரியனைப் பந்தாடுவதும் புதை சேறைச் சுனைநீராக்குவதும் இவருக்கே சாத்தியம்.
இவரின் கவிதைகள் ஹைக்கூ, க்ளரிஹ்யூ வகையிலும் பூத்துள்ளன. முருகன், மானகிரி, காரைக்குடி, கம்பன் கழகம், கண்ணதாசன், சென்னை, பாரதி , இளங்குடி மேடைக்காளி, கொல்லங்காளி , பிள்ளையார், இளங்கோவடிகள், சுந்தரர் பரவை நாச்சியார் , பட்டுக்கோட்டையார் , கொப்புடையம்மன், தளக்காவூர் அதளநாயகி, கருப்பர் , வர்ஷா கல்யாணி , பாலமுரளி கிருஷ்ணா, முத்துக்குமார், மனோரமா, நா. காமராசன், கவிக்கோ, ஆண்டாள், ஸ்ரீதேவி, பாலகுமாரன் என்று தொடர்ந்து பூக்கின்றன இவரது கவிதைகள்.

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 4.

தினமலர் சிறுவர் மலரில் இதுவரை 50 வாசகர் கடிதங்கள் வரை இதிகாச புராணக்கதைகளைப் பாராட்டி வெளியாகி உள்ளன. படித்ததோடு நின்றுவிடாமல் சிரத்தை எடுத்து அதைப் பாராட்டிக் கடிதம் எழுதித் தெரிவித்த வாசகர்களின் அன்புக்கு நன்றி.


புராணக் கதைகளைப் பாராட்டிய திருவையாறு வாசகர் திரு. கா. தரணிவேலன் அவர்களுக்கு நன்றி.

திங்கள், 11 நவம்பர், 2019

விஞ்ஞானி ரகுபதி விருது.

காரைக்குடியில் இருக்கும் சிக்ரியுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த ஆண்டும் ( 2 வது ஆண்டு ) காரைக்குடி பெரியார் சிலையின் அருகில் இருக்கும் ஹோட்டல் சுபலெக்ஷ்மியில் புத்தகக் கண்காட்சி நடத்தியது.

அந்தக் கண்காட்சியின் கடைசி நாளன்று சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களைச் சிறப்பித்து விஞ்ஞானி விருது கொடுத்துக் கௌரவப்படுத்தினார்கள். சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களில் ஒருவராக நானும் கௌரவிக்கப்பட்டேன்.

ஞாயிறு, 10 நவம்பர், 2019

தூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்

தூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்
உணவு உடை உறையுள் ஒரு மனிதனுக்கு அத்யாவசியம் என்பார்கள். அத்தோடு சுகாதாரமான கழிப்பறையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பெண்ணிற்குமான அடிப்படைத் தேவை என்று சொல்வேன். 2019 நவம்பர் 12 இல் என் வலைத்தளத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் செம்மொழி நூலகம் ஒன்று திறக்கப்படக் காத்திருக்க அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனிதர்கள் திறந்த வெளியில் மலசலம் கழிப்பதைப் பற்றியும் நூலகத்தோடு கழிப்பிடத் தேவையின் அத்யாவசியம் பற்றியும் எழுதி இருந்தேன். அனைவருக்குமான கழிப்பறையின் தேவைகள் இப்போது நனவாகி வருவது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
வீட்டிற்குள் கழிவறை இல்லாத காரணத்தால் நகரமோ, கிராமமோ, முள்ளும் கல்லும் நிறைந்த காட்டுப்பகுதிகளில், திறந்த வெளிகளில், வயல்வெளிகளில், ரயில்வே தண்டவாளங்களுக்கருகில் , கண்மாய்க் கரைகளில் காலைக் கடன் கழிக்கும் மக்களை முன்பு பெருவாரியாகப் பார்க்க முடியும்.
இந்தியன் ரயில்வே தண்டவாளங்கள்தான் உலகத்திலேயே நீண்ட திறந்தவெளிக் கழிவறைகள். இந்தத் திறந்தவெளிக் கழிவறைகளில் இருந்து மக்களை விடுவித்து கிராமப்புறங்களை மேம்படுத்தக் கொண்டு வந்த திட்டம்தான் ஸ்வச்சபாரத் மிஷன் கிராமின் திட்டம். சில கிராமங்களில் இன்றும் சுகாதாரமான கழிப்பறைகள் கொண்ட வீடுகள் இல்லை. நிர்மல் பாரத் அப்யான் திட்டம் கழிவறை கட்ட நிதி உதவி செய்கிறது.

செவ்வாய், 5 நவம்பர், 2019

மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் – ஒரு பார்வை.


மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் – ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”மொழிபெயர்ப்பு நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்

ஷார்ஜா (2019 ) புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

என் மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம்.


38-வது சார்ஜா உலகப் புத்தகக் காட்சியில் 7வது கூடம். டிஸ்கவரி அரங்கம் ZD 16 இல் எனது மூன்று நூல்கள் விற்பனைக்கு உள்ளன.

சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு,
விடுதலை வேந்தர்கள் - கட்டுரைத் தொகுப்பு,
காதல் வனம் - நாவல் .

Writter Kavimathy, Panneerselvam Sumathi , ஃபக்ருதீன் இப்னுஹம்துன், ஷேக் முகம்மது, கலியமூர்த்தி ஆகிய சகோதரர்களும், அபுல்கலாம் ஆஸாத்ஜி, ஐயனார் ஆகிய அமீரக நண்பர்களும் டிஸ்கவரி அரங்குக்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இக்கண்காட்சி நவம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே அமீரக நண்பர்கள் பயன்பெற வேண்டுகிறேன். 

திங்கள், 4 நவம்பர், 2019

உன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லி. தினமலர் சிறுவர்மலர் - 38.

உன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லி
இனம் மதம் சாதி பார்த்து ஒருவரை உயர்ந்தவர் என்றும் இன்னொருவரைத் தாழ்ந்தவர் என்றும் கற்பித்துக் கொள்கின்றோம். ஆனால் அதுதவறு என நிரூபிக்கிறது உறங்காவில்லி என்பவரின் கதை. இயல்பிலேயே நல்ல உள்ளம் கொண்ட அவரையும் அவரைப் போலவே நல்லுள்ளம் படைத்த அவரது மனைவி பொன்னாச்சி பற்றியும் அறிந்து கொள்வோம் வாருங்கள் குழந்தைகளே.
சாலையில் வெய்யில் தகிக்கிறது. மக்கள் எல்லாம் வீடுகளில் ஒண்டிக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் திண்ணையில் அமர்ந்து விசிறியால் வீசி ஆசுவாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு காட்சியைப் பார்த்து அனைவரும் பரிகாசப் புன்னகை செய்கிறார்கள். சிலர் நமட்டுத்தனமாய்க் கிண்டலடிக்கிறார்கள்.
அச்சாலையில் அப்போது ஒரு மனிதன் தன் மனைவிமேல் வெய்யில் படாமல் குடைபிடித்தபடி செல்கிறான். அவன்தான் உறங்காவில்லி. அவனது மனைவி பெயர் பொன்னாச்சி. பொதுமக்கள் பார்க்கிறார்களே. தன்னை ஏளனம் செய்வார்களே என்ற எண்ணம் கிஞ்சித்தும் இன்றி அவன் தன் மனைவிக்குக் குடைபிடித்தபடி செல்கிறான்.
Related Posts Plugin for WordPress, Blogger...