எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 ஆகஸ்ட், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 9

 

9

”அக்கினியாத்தா எங்கள ஏன்தா இப்பிடிச் சோதிக்கிறே. ” மனமுருகிக் கையேந்திக் கேட்டுக் கொண்டிருந்தாக ஆவுடையப்பன். உங்கிட்ட உத்தரவு வாங்கித்தானே இந்தப் புள்ளைக்குக் கலியாணம் பண்ணினேன். ஆத்தா இல்லாத புள்ள மனக்கொறை இருக்கப்புடாதுன்னு புள்ளைகிட்டயும் கேட்டுத்தானே செஞ்சோம். மாப்பிள்ளைக்கு ரத்தப் புத்தாமே. என்ன செய்வேன் ஆத்தா?”

அவுகளை விட அதிகமாகக் கலங்கிக் கொண்டிருந்தாக கருப்பஞ்செட்டி. ”எங்க ஆத்தா போல உன்னயத்தானே நம்புனோம். எங்கள ஏன் கைவிட்டே.”

”சரி தம்பி கிளம்புங்க ஆறுமாசமா வைத்தியம் பார்க்குறோம். சரியாயிரும்னு நம்புவோம். வேலுவோட போய் பொங்கச்சீரைக் கொடுத்துட்டு வாங்க”.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6201 - 6210 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6201.திருமந்திரம்  - 591 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/q_ZWvQFIv6M


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6202.திருமந்திரம்  - 592 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/aOa2p8VYBRA


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

பந்த பாசங்களைச் சீர்ப்படுத்தும் ஸ்ரீதேவி மந்திரம்


உலகில் உள்ள பெண் வடிவங்கள் எல்லாம் நம் தாயின் வடிவங்களே என்று கூறும் மந்திரம் ஒன்று உள்ளது. மேலும் நம் மனக்கவலையை நீக்கவும், பந்தபாசங்களை அறுக்கவும், அதே சமயம் ஞானம் கிட்டவும் அம் மந்திரம் உதவுகிறது என்று அறியும்போது வியப்பு மேலிடுகிறதுதானே. அது என்ன மந்திரம் என்று அறிய ஆவலாய் இருக்கிறது அல்லவா!  மேலும் அந்த மந்திரம் எப்படி ஒரு மன்னனுக்கும் மனிதனுக்கும் உதவியது என்றும் பார்ப்போம்.


முன்னொரு காலத்தில் சுரதன் என்னும் அரசன் தன்னுடைய நாட்டை ஆண்டு வந்தான். திடீரென அவனுடைய அண்டை நாட்டு மன்னர்கள் அவன் மீது படையெடுத்தனர். அவனுடைய நாட்டை சூழ்ந்து வளைத்து முற்றுகையிட்டனர். எதிர்பாராத அந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மன்னன் அதற்குத் தயாராக தன்னுடைய படையை வைத்து இல்லாததால் தோல்வி அடைந்தான். எனவே நாட்டை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. மனம் நொந்து அவன் காட்டை அடைந்தான். மரங்கள் சூழ்ந்த அந்த அடர்வனத்துக்குள் மனம் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6191 - 6200 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6191.திருமந்திரம்  - 581 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/nTxAa8VGlUk


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6192.திருமந்திரம்  - 582 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/_oXjNT2Zs2E


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 22 ஆகஸ்ட், 2026

மக்கள் திலகம் எம்ஜிஆர்

 மக்கள் திலகம் எம்ஜிஆர்


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.. உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்.. கடமை அது கடமை.. எத்தனை எத்தனையோ நூறு பாடல்கள் இருந்தும் இப்பாடல்தான் மக்கள் திலகம் எம்ஜியாரை மக்கள் தலைவனாக வடிவமைத்த பாடல். நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் என்பதோடு முதன்மையாகத் தாயைத் தெய்வமாகப் போற்றியவர், மக்களிடம் பரிவு கொண்டவர், மனிதாபிமானம் மிக்கவர், விருந்தோம்பல் மற்றும் கொடைக்குணம் கொண்டவர் எம்ஜியார்.

கொடுத்துச் சிவந்த கரம்,  கலியுகக் கடவுள்,  பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர்,  இதய தெய்வம்,  வாத்தியார்,  இதயக்கனி என்றெல்லாம் புகழப்படும் திரு எம் ஜி ராமச்சந்திரன் தமிழகத் திரைப்பட உலகையும் தமிழக அரசியலையும் ஒருசேரக் கலக்கியவர். இவருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் திரு.தமிழ்வாணன் அவர்கள் வழங்கிய மக்கள் திலகம் என்ற பட்டமே மிகப் பொருத்தமானதாக தோன்றுகிறது. நடிகர்களில் ஆலயம் கட்டப்பட்டது என்றால் அது முதலில் எம்ஜிஆருக்கு என்றே சொல்ல வேண்டும். இன்றும் இருக்கும் அந்த ஆலயம் திருநின்றவூர் நத்தம்மேடு கிராமத்தில் உள்ளது. கலைவாணன் சாந்தி தம்பதியினர் எம்ஜிஆருக்காகக் கோவிலை அமைத்துக் கும்பாபிஷேகம் செய்து உள்ளார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...