தேனம்மை லெக்ஷ்மணனின் #சோகி சிவா – இரண்டாம் பதிப்பு
சும்மா
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026
புதன், 12 ஆகஸ்ட், 2026
இரண்டாவது நாவல் - அத்யாயம் - 8
8
கல்யாணப் படைப்பு படைக்க வேண்டிக்கொண்டு அக்கினியாத்தா வீட்டில்
படைச்சிக்கினு இருந்தாக ஆவுடையப்பன் குடும்பத்தார். ”இது கோழிப்படைப்புன்ன. ராத்திரி
வெகு நேரமாகும். இந்த ரொட்டியத் தின்னுட்டு நீ போய் ஒறங்கப்பச்சி. சாமி கும்பிடும்போது
எழுப்பிவிடுறேன்” என்று சாஞ்சாடிக் கொண்டிருந்த பேரனைச் சீராட்டிக் கொண்டிருந்தாக பங்காளி
வீட்டு வள்ளியாச்சி.
சிவகாமிக்கும் சொக்கலிங்கத்துக்கும் கல்யாணமாகி மறுவீடு, மூணாம் வீடு வந்து போய் ஒருவாரம் கழிச்சு வீட்டுப் படைப்பு. எடயில பால்பழம் வைச்சுக் கும்பிடவும் பால்பழம் சாப்பிடவும் ஆத்தாவீடு வந்து போனாக. ”பாட்டையா பாட்டியாயா ஆத்தா எல்லாரையும் நெனைச்சுக் கும்பிட்டுக்காத்தா.” கல்கண்டுபோட்டுப் பாலைக்காய்ச்சி வெள்ளைப் பணியாரம் சுட்டு வைத்திருந்தார் கருப்பையாண்ணன். கருப்பஞ்செட்டி வகைப்பழங்களும் பூமாலைகளும் பூச்சரமும் வாங்கி வைத்து இருந்தாக. புதுமணத் தம்பதிகள் பேழையின் முன் விழுந்து வணங்கி ஆவுடையப்பன், கருப்பஞ்செட்டி கையால் விபூதி பூசிக்கினாக.
திங்கள், 10 ஆகஸ்ட், 2026
சக்கரவர்த்தினி ரஸியா சுல்தானா.. மக்களின் ராணி
சக்கரவர்த்தினி ரஸியா சுல்தானா.. மக்களின் ராணி
கிபி 1206 – 1290 வரை இந்தியா துருக்கியிலிருந்து வந்த அடிமை
வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. அடிமை வம்சத்தின் முதல் அரசர் குத்புதீன் ஐபக். இவர்
டெல்லியில் சுல்தானகத்தை நிறுவினார். அவருக்குப் பின் அவரது மருமகன் இல்துமிஷ் பதவி
ஏற்றார். அடுத்துப் பதவி ஏற்ற ரசியா இல்துமிஷின் மகளாவார்.
பதிமூன்றாம் நூற்றாண்டிலேயே ஆளும் தகுதிபெற்ற சகோதரர்கள் இருக்கும்போது அடிமை வம்ச சக்கரவர்த்தியான தனது தந்தை சம்சுதீன் இல்துமிஷிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்றாள். 1236 முதல் 1240 வரை நான்கே ஆண்டுகள்தான் ஆட்சி செய்தார். ஆனால் டெல்லியை ஆண்ட ஒரே பெண் சுல்தான் என்ற வரலாற்றைப் படைத்துச் சென்றார்.
சனி, 8 ஆகஸ்ட், 2026
வசந்த மாளிகை வாணிஸ்ரீ
வசந்த மாளிகை வாணிஸ்ரீ
"இனியவளே என்று பாடி வந்தேன், மயக்கம் என்ன மௌனம் என்ன, பால் போலவே வான்மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்,கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம், முல்லைப்பூ பல்லக்குப் போவதெங்கே, ஓ மைனா ஓ மைனா, ஜனகனின் மகளை மணமகளாக, மேளதாளம் கேட்கும் காலம், என் ராஜாவின் ரோஜா முகம்" இப்பாடல்களில் நடித்த வாணிஸ்ரீக்கு 77 வயதாகிவிட்டதாம். இத்தனைக்கும் தமிழில் 39 படங்களே நடித்திருக்கிறாராம்.
அழகு பொழியும் முக லாவண்யம், ஓங்குதாங்கான உருவம் , பளிச்சென்று பெரிய கண்கள், வில் போன்ற புருவங்கள், தீர்க்கமான நாசி, பளபள கன்னங்கள், மலர்ச்சியான புன்சிரிப்பு, உயரத் தூக்கிப் போட்ட பன் கொண்டை, லிப் க்ளாஸ் போட்ட ரோஜா உதடுகள், மாடர்ன் உடைகளிலும் புடவையிலும் கூடக் கவர்ச்சிகரமாக இருப்பார், பரிபூரண அழகி. சிவாஜியின் ஜோடிகளில் மிகப் பொருத்தமானவர். இவர் நடித்ததில் எனக்கு பிடித்த படங்கள் சிவகாமியின் செல்வன், வாணி ராணி, வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன்.
புதன், 5 ஆகஸ்ட், 2026
சிம்மவர்மன் இரண்யவர்மன் ஆன கதை
சிம்மவர்மன் இரண்யவர்மன் ஆன கதை


