7
”பொறந்தோடனே ஆத்தாளைத் தூக்கிப் போட்டு முழுங்கிருச்சி இந்தக்குட்டி.
” எனப் பேசிக்கொண்டிருந்தாக பங்காளி வீட்டில் இரு ஆச்சிகள். “ எறையாமப் பேசு. அப்பச்சிக்கும்
ஐயாவுக்கும் இந்தக்குட்டின்னா ஓவியம், உசுரு. ஒருத்தருக்கு ஒரு சாமானைக் கொடாது. அதுவே
வச்சிக்கினு உங்கும், திங்கும். வெளையாடும். ஆரையும் சேத்துக்காது. சரியான வறளி “
”ஆமாமாம் எதுனால அந்த ஒமையா எறந்து போனாளாம்.”
“ரெத்தப் போக்கு அதிகமா இருந்துச்சாம். மேக்கொண்டு சமைஞ்சாப்புல அவ ஊரணிக்குத் தண்ணி எடுக்கப் போனாளாம். அப்ப முனி அடிச்சிருக்குன்னு வேற சொல்றாக. குலதெய்வக் கோயில்லே கொண்டே சேத்துப்புட்டாகன்னு சொன்னாக. ஆர் கண்டா “



