வசந்த மாளிகை வாணிஸ்ரீ
"இனியவளே என்று பாடி வந்தேன், மயக்கம் என்ன மௌனம் என்ன, பால் போலவே வான்மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்,கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம், முல்லைப்பூ பல்லக்குப் போவதெங்கே, ஓ மைனா ஓ மைனா, ஜனகனின் மகளை மணமகளாக, மேளதாளம் கேட்கும் காலம், என் ராஜாவின் ரோஜா முகம்" இப்பாடல்களில் நடித்த வாணிஸ்ரீக்கு 77 வயதாகிவிட்டதாம். இத்தனைக்கும் தமிழில் 39 படங்களே நடித்திருக்கிறாராம்.
அழகு பொழியும் முக லாவண்யம், ஓங்குதாங்கான உருவம் , பளிச்சென்று பெரிய கண்கள், வில் போன்ற புருவங்கள், தீர்க்கமான நாசி, பளபள கன்னங்கள், மலர்ச்சியான புன்சிரிப்பு, உயரத் தூக்கிப் போட்ட பன் கொண்டை, லிப் க்ளாஸ் போட்ட ரோஜா உதடுகள், மாடர்ன் உடைகளிலும் புடவையிலும் கூடக் கவர்ச்சிகரமாக இருப்பார், பரிபூரண அழகி. சிவாஜியின் ஜோடிகளில் மிகப் பொருத்தமானவர். இவர் நடித்ததில் எனக்கு பிடித்த படங்கள் சிவகாமியின் செல்வன், வாணி ராணி, வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன்.

