எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

பதிமூன்றாம் அத்யாயம் எட்டாவது ஸ்லோகம்

பதிமூன்றாம் அத்யாயம் எட்டாவது ஸ்லோகம்


    ராஞி தர்மிணி தர்மிஷ்டா:

பாபே பாபா: ஸமே ஸமா: l

    ராஜானம் அனுவர்(த்)தன்தே

யதா ராஜா ததா ப்ரஜா: ll

சனி, 15 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6151 - 6160 வீடியோக்கள்.

6151.நாச்சியாரம்மன் l  ரெ.முத்துக்கணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/il04qgiQCAI


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



6152.நிலாவின் ஒளி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/L80qvthmOrs


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

புதன், 12 ஆகஸ்ட், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 8

 

8

கல்யாணப் படைப்பு படைக்க வேண்டிக்கொண்டு அக்கினியாத்தா வீட்டில் படைச்சிக்கினு இருந்தாக ஆவுடையப்பன் குடும்பத்தார். ”இது கோழிப்படைப்புன்ன. ராத்திரி வெகு நேரமாகும். இந்த ரொட்டியத் தின்னுட்டு நீ போய் ஒறங்கப்பச்சி. சாமி கும்பிடும்போது எழுப்பிவிடுறேன்” என்று சாஞ்சாடிக் கொண்டிருந்த பேரனைச் சீராட்டிக் கொண்டிருந்தாக பங்காளி வீட்டு வள்ளியாச்சி.

சிவகாமிக்கும் சொக்கலிங்கத்துக்கும் கல்யாணமாகி மறுவீடு, மூணாம் வீடு வந்து போய் ஒருவாரம் கழிச்சு வீட்டுப் படைப்பு. எடயில பால்பழம் வைச்சுக் கும்பிடவும் பால்பழம் சாப்பிடவும் ஆத்தாவீடு வந்து போனாக. ”பாட்டையா பாட்டியாயா ஆத்தா எல்லாரையும் நெனைச்சுக் கும்பிட்டுக்காத்தா.” கல்கண்டுபோட்டுப் பாலைக்காய்ச்சி வெள்ளைப் பணியாரம் சுட்டு வைத்திருந்தார் கருப்பையாண்ணன்.  கருப்பஞ்செட்டி வகைப்பழங்களும் பூமாலைகளும் பூச்சரமும் வாங்கி வைத்து இருந்தாக. புதுமணத் தம்பதிகள் பேழையின் முன் விழுந்து வணங்கி ஆவுடையப்பன், கருப்பஞ்செட்டி கையால் விபூதி பூசிக்கினாக.

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சக்கரவர்த்தினி ரஸியா சுல்தானா.. மக்களின் ராணி

சக்கரவர்த்தினி ரஸியா சுல்தானா.. மக்களின் ராணி

கிபி 1206 – 1290 வரை இந்தியா துருக்கியிலிருந்து வந்த அடிமை வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. அடிமை வம்சத்தின் முதல் அரசர் குத்புதீன் ஐபக். இவர் டெல்லியில் சுல்தானகத்தை நிறுவினார். அவருக்குப் பின் அவரது மருமகன் இல்துமிஷ் பதவி ஏற்றார். அடுத்துப் பதவி ஏற்ற ரசியா இல்துமிஷின் மகளாவார்.

பதிமூன்றாம் நூற்றாண்டிலேயே ஆளும் தகுதிபெற்ற சகோதரர்கள் இருக்கும்போது அடிமை வம்ச சக்கரவர்த்தியான தனது தந்தை சம்சுதீன் இல்துமிஷிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்றாள். 1236 முதல் 1240 வரை நான்கே ஆண்டுகள்தான் ஆட்சி செய்தார். ஆனால் டெல்லியை ஆண்ட ஒரே பெண் சுல்தான் என்ற வரலாற்றைப் படைத்துச் சென்றார்.

Related Posts Plugin for WordPress, Blogger...