எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 7

 

7

”பொறந்தோடனே ஆத்தாளைத் தூக்கிப் போட்டு முழுங்கிருச்சி இந்தக்குட்டி. ” எனப் பேசிக்கொண்டிருந்தாக பங்காளி வீட்டில் இரு ஆச்சிகள். “ எறையாமப் பேசு. அப்பச்சிக்கும் ஐயாவுக்கும் இந்தக்குட்டின்னா ஓவியம், உசுரு. ஒருத்தருக்கு ஒரு சாமானைக் கொடாது. அதுவே வச்சிக்கினு உங்கும், திங்கும். வெளையாடும். ஆரையும் சேத்துக்காது. சரியான வறளி “

”ஆமாமாம் எதுனால அந்த ஒமையா எறந்து போனாளாம்.”

“ரெத்தப் போக்கு அதிகமா இருந்துச்சாம். மேக்கொண்டு சமைஞ்சாப்புல அவ ஊரணிக்குத் தண்ணி எடுக்கப் போனாளாம். அப்ப முனி அடிச்சிருக்குன்னு வேற சொல்றாக. குலதெய்வக் கோயில்லே கொண்டே சேத்துப்புட்டாகன்னு சொன்னாக. ஆர் கண்டா “

செவ்வாய், 28 ஜூலை, 2026

தேன்தீ.. தீந்தேன்.. எனது 30 ஆவது நூல்.

எனது 30 ஆவது நூல் " தேன்தீ.. தீந்தேன்" கவிதைத் தொகுப்பு இன்று காதலர்தினத்தில் சிநேகாவின் வெளியீடாக மலர்கிறது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன்.



***தேனம்மை லெக்ஷ்மணனின் தேன்தீ*

   இது, ஆசிரியர் - கவிஞர் - கட்டுரையாளர் - நகரத்தா ரியல் ஆய்வாளர் அவர்களின் முப்பதாவது நூல் (கவிதை) சிநேகா பதிப்பகத்தாரின் வெளியீடு.

ஞாயிறு, 26 ஜூலை, 2026

மன்னர் பின்னோரும் வட்டகைகளும்

183.

 

2091.மன்னர் பின்னோர் – மன்னருக்கு ஆட்சி, நிதி மற்றும் பாதுகாப்பில்  பக்கபலமாயிருந்து கடமை ஆற்றும் வணிகக் குலத்தோர். (சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது).

2092.வட்டகை – வட்டாரப் பகுதி, குறிப்பிட்ட இன மக்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதி. செட்டிநாட்டுப் பகுதிகளையே 64 வட்டகை என்பார்கள். பகுதிவாரியாகப் பிரிக்கப்பட்டு இதுபோல் 7 வட்டகைகள் உள்ளன.

சனி, 25 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6101 - 6110 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6101.திருமந்திரம்  - 561 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/FjBGwM-tT6s


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6102.திருமந்திரம்  - 562 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Mo9exBq1XA4


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 24 ஜூலை, 2026

குபேரர் ஆன குசேலர்

 குபேரர் ஆன குசேலர்


நண்பர்கள் ஒருவருக்காக இன்னொருவர் உதவி செய்வதும்அதே இன்னொருவர் ஒரு சில சமயங்களில் சுயநலமாய் நடந்து கொள்வதும் நாம் காணக்கூடியதேஅப்படிப்பட்ட ஒருவர்தான் சுதாமாயார் அந்த சுதாமா என்று கேட்கிறீர்களாஅவர்தான் கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர்சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக்கல்வி முறையில் கிருஷ்ணருடன் பயின்றவர்குசேலனான அவர் எப்படிக் குபேரன் ஆனார் என்று பார்ப்போம்

உஜ்ஜினியில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் கிருஷ்ணரும் குசேலரும் பயின்று வந்தார்கள் அக்காலங்களில் குருகுலங்களில் பயில்பவர்கள் குருசேவை செய்ய வேண்டும்குருபத்தினி கூறும் பணிகளை நிறைவேற்ற வேண்டும்அவ்வாறாக ஒருமுறை குருவின் வயலில் நீர்வரத்து அதிகம் இருந்ததால் பயிர் அழிந்துவிடும் என்று வரப்பில் மண்ணை வெட்டிப்போட்டு அடைக்க கிருஷ்ணர் செல்லவேண்டிய முறை வந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...