எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

அரனே பரமென்றுணர்த்திய சுதர்சனர்

அரனே பரமென்றுணர்த்திய சுதர்சனர்


பரம வைணவக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அரனே பரமென்று சொல்ல முடியுமா. அப்படிச் சொல்ல மட்டுமல்ல அது உண்மை என்றும் நிரூபித்தார் ஒருவர். அவர்தான் சுதர்சனர் என்னும் அரதத்தர். சிவனே அவருக்கு அரதத்தர் என்னும் இப்பெயரைச் சூட்டினார் என்பதெல்லாம் இறைச் செயல்தானே.

கஞ்சனூர் என்னும் ஊரில் பதினான்கு கோத்திரத்தில் உதித்த வைணவர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுக்குத் திருமாலே முழு முதல் தெய்வம். எனவே மாற்று சமயமான சைவத்தை நிந்தித்து வந்தார்கள். அவர்களுள் காசியப கோத்திரத்தைச் சேர்ந்த வாசுதேவர் என்ற பஞ்சாத்திர வைணவரும் இருந்தார். அவரது மகனாகப் பிறந்தவர்தான் சுதர்சனர்.

முன்பொரு சமயம் நடந்த தேவாசுர யுத்தத்தில் விஷ்ணுவின் சக்ராயுதம் அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மனைவி சுகீர்த்தியையும் வீழ்த்தியது. அப்போது அங்கு வந்த சுக்ராச்சாரியார் அமிர்தசஞ்சீவினி மந்திரத்தை ஜெபித்து மனைவியை உயிர்ப்பித்ததோடு தன் மனைவியைக் கொன்ற விஷ்ணு பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கும் படி சபித்தார். அதனால்தான் விஷ்ணுவின் அம்சமான சுதர்சனர் வாசுதேவரின் மகனாகப் பிறந்தார்.

யூ ட்யூபில் 3801 - 3810 வீடியோக்கள்.

3801.கோட்டூர் மகாகாளர் l ரங்கநாதன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/m5Vc1aZ05_w


#கருப்பர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#karuppar, #thenammailakshmanan,



3802.கோட்டைக் கருப்பர் புகழ் l தமிழண்ணல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/h4hluTegfro


#கருப்பர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#karuppar, #thenammailakshmanan,

புதன், 5 பிப்ரவரி, 2025

முதியவனும் கடலும்

முதியவனும் கடலும்

தன்னுடைய சிறு படகில் வளைகுடா நீரோடை என்னும் இடத்தில் தனியாகச் சென்று மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் முதியவன் அவன். அன்று வரை ஒரு மீனைக் கூடப் பிடிக்காமல் கிட்டத்தட்ட 84 நாட்கள் கடந்துவிட்டன. முதல் நாற்பது நாட்கள் வரை அவனுடன் ஒரு சிறுவனும் வந்து கொண்டிருந்தான். ஆனால் அந்த நாற்பது நாட்களும் ஒரு மீனைக்கூட பிடிக்காததால் சிறுவனின் பெற்றோர் அந்த முதியவனை அதிர்ஷ்டக் கட்டை என்று கூறிச் சிறுவனை அவனோடு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க மறுத்தனர். முதியவனுக்கும் அது ஒரு துரதிர்ஷ்டமான நிலைதான்.

சிறுவன் தன் பெற்றோரின் சொற்படி மற்றையோரின் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றான். முதல் வாரத்திலேயே மூன்று நல்ல மீன்களைப் பிடித்து விட்டார்கள் அவனது படகுக்காரர்கள். ஒவ்வொரு நாளும் அந்த முதியவன் தன்னுடைய வெற்றுப் படகோடு திரும்புவதைக் காண்பது அந்தச் சிறுவனுக்கு வருத்தமளிக்கத்தான் செய்தது. சுருட்டி வைக்கப்பட்ட நூல் வலைகளையோ அல்லது மீன் குத்தும் ஈட்டிகள், திமிங்கில வேட்டைக் கருவிகள் மற்றும் சுருட்டி வைக்கப்பட்ட பாய்மரம் ஆகியவற்றையோ தூக்கிச் செல்ல அவன் முதியவனுக்கு எப்போதுமே உதவுவான். மாவுச் சாக்குகளைக் கொண்டு ஒட்டுப் போடப்பட்ட அந்தப் பாய்மரம் நிரந்தரத் தோல்வியினை அறிவிக்கும் கொடி போலத் தோற்றமளித்தது.

யூ ட்யூபில் 3791 - 3800 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

3791.திருமந்திரம்  - 11 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/kuApqU1WK9k


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



3792.திருமந்திரம்  - 12 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/IMe0Axm53kg


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 31 ஜனவரி, 2025

புஸ்தகா & அமேஸானில் என் மின்னூல்கள் ( 62 - 66 )

*** என் பதிமூன்றாவது மின் நூல் “ ஆழ்வார்களின் கதைகள் “ இந்த ஆன்லைன் / ஈ புக் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

(அமேஸானில் 62 வது நூல்)

புஸ்தகா டிஜிட்டல் மீடியா

https://www.pustaka.co.in/.../tamil/aazhwargalin-kathaigal


Related Posts Plugin for WordPress, Blogger...