170
1961.சுவாமிக்குப் பணம் முடிதல் – திருமணம் போன்ற சுப நிகழ்வுகளின் போது அவரவர் குலதெய்வங்களுக்கும் பழக்கப்படிப் பணம் முடியும் சாமிகளுக்கும் பணம் எடுத்துப் பேரெழுதி முடிந்து வைக்க வேண்டும்.
1962.கோயில் மேளத்துக்கு எழுதி வைத்தல் –
திருமணத்துக்கு நாள் குறித்தவுடனேயே அவரவர் சார்ந்த கோயில்களிலோ அல்லது நகரச்
சிவன் கோயிலிலோ கோயில் மேளத்துக்கு எழுதி வைக்க வேண்டும்.
1963.கோவில் மாலை வாங்குதல் – இரு வீட்டாரின் கோயில்களில் இருந்தும் வைராவி கோயில் மாலை கொண்டு வந்து கொடுக்கும்போது விளக்கேற்றி சங்கு ஊதி மாலையை வாங்கி நடுவீட்டிற்குள் ரப்பர் வாளியில் வைக்க வேண்டும். வயிராவி அல்லது அர்ச்சகருக்கு உரிய பாக்குப் பணம், பணம், வெத்திலை பாக்கு போன்றவற்றை சில்வர் வாளியில் வைத்துக் கொடுக்க வேண்டும்.