ஒப்பிட முடியா வீராங்கனை ஒனகே ஓபவ்வா
கர்நாடக
மாநிலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டதால் கொண்டாடப்படும்
இராணிகளுடன் ஒனகே ஓபவ்வா என்ற வீரதீரமிக்க பெண்மணியும் கொண்டாடப்படுகிறார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மீதும் முகலாயர்கள், ஆங்கிலேயர்கள்
ஆகியோரின் ஆக்கிரமிப்பு தொடங்கியது.
கர்நாடகாவின் சித்ரதுர்கா இராஜ்ஜியத்தினைப் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் ஆண்டுவந்தவர் மதகரி நாயக்கர். வலிமையாகக் கட்டப்பட்ட சித்ரதுர்கா கோட்டை ஒரு குன்றின் மீது அமைந்திருந்தது. சித்ரதுர்கா கோட்டைக்கு எலுசுட்டினா கோட் என்ற பெயரும் உண்டு. அதாவது ஏழு வட்டங்களின் கோட்டை என்று பொருள்படும் . தற்போதைய பெங்களூருவில் இருந்து வடமேற்கே 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

