குபேரர் ஆன குசேலர்
நண்பர்கள் ஒருவருக்காக இன்னொருவர் உதவி செய்வதும், அதே இன்னொருவர் ஒரு சில சமயங்களில் சுயநலமாய் நடந்து கொள்வதும் நாம் காணக்கூடியதே. அப்படிப்பட்ட ஒருவர்தான் சுதாமா. யார் அந்த சுதாமா என்று கேட்கிறீர்களா? அவர்தான் கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர். சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக்கல்வி முறையில் கிருஷ்ணருடன் பயின்றவர். குசேலனான அவர் எப்படிக் குபேரன் ஆனார் என்று பார்ப்போம்
உஜ்ஜினியில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் கிருஷ்ணரும் குசேலரும் பயின்று வந்தார்கள் அக்காலங்களில் குருகுலங்களில் பயில்பவர்கள் குருசேவை செய்ய வேண்டும். குருபத்தினி கூறும் பணிகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறாக ஒருமுறை குருவின் வயலில் நீர்வரத்து அதிகம் இருந்ததால் பயிர் அழிந்துவிடும் என்று வரப்பில் மண்ணை வெட்டிப்போட்டு அடைக்க கிருஷ்ணர் செல்லவேண்டிய முறை வந்தது.


