5
நாகப்பட்டினம் கப்பலடிக்கு ஆஸ்டின் காரை எடுத்துக்கினு டிரைவர்
வேலு கருப்பஞ்செட்டியைக் கூட்டப் போயிருந்தான். கப்பலடியில் பெருவாரிக் கூட்டம்.
ஒரு வழியா வக்கூடையும் சூட்கேஸுகளையும் ட்ரங்குப் பொட்டியையும்
எடுத்துக்கினு கருப்பஞ்செட்டியோடு கார் கிளம்பியது. ”அண்ணே அங்கன கணக்கப்புள்ள கல்யாணண்ணே
நல்லா இருக்காகளா “ என்று விசாரித்துக் கொண்டான் ட்ரைவர் வேலு. அவனுக்கு பெரியத்தா
மகளைத்தான் அவருக்குக் கொடுத்திருந்தது.
“அவுகளுக்கென்ன நல்லாத்தான் இருக்காக. பொட்டியடிப் பையனும் சமையக்காரண்ணனும் நல்லாப் பார்த்துக்குவாக அவுக வீட்டு அக்காளுக்கும் அவரு சாமான் குடுத்து விட்டிருக்காரு. ஒரு பையில இருக்கு. நாளைக்குப் பிரிச்சுத் தாரேன். அத அவுக வீட்டுல சேர்த்துரு வேலு.”

.jpg)
