சுயராஜ்ஜியத்தைப் போதித்த ராஜமாதா ஜீஜாபாய் போன்ஸ்லே
மராட்டியப் பேரரசர் என்றாலே நமக்கு சத்ரபதி சிவாஜிதான் ஞாபகத்துக்கு வருவார். அத்தகைய மாவீரனை உருவாக்கி அவருக்கு சுயராஜ்ஜியத்தின் பெருமையைப் போதித்த அவரின் தாய் ராஜமாதா ஜீஜாபாயின் வீரமும் விவேகமும் வியக்கத்தக்கது.
பதினாறாம் நூற்றாண்டில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் பல்வேறு இந்து சாம்ராஜ்யங்களும் அடிமைப்பட்டுக் கிடந்தன. அக்காலத்தில் யாதவர்கள் மராத்திய க்ஷத்திரியர்களாகஇருந்தார்கள். அந்த வம்சாவளியில் வந்த ஜீஜாபாய் மாபெரும் வீரத்தோடு விளங்கினாள். முகலாயர்களுக்கு அடிமைப்பட்டு வாழும் வாழ்வை அவள் விரும்பவில்லை.