4
”சமத்தி என்ன பெத்தா தலைச்சன் பொண்ணு பெத்தா” என்ற சொலவடைக்கு
ஏற்ப ஒமையா பொண்ணைப் பெத்துட்டா. பதினாறாம் நாள் அன்னிக்குப் புண்யாசனம் பண்ணிக் காது
குத்தியாச்சு. தொப்புள் கொடியைத் தாயத்துல போட்டு ஆயாவீட்டு ஐயா கொடுத்த சங்கிலியில
மாட்டிப் போட்டு விட்டாச்சு. நெத்தியிலயும் கன்னத்துலயும் கறுப்புப் பொட்டு வச்ச சின்னச்
சிலை மாதிரி இருந்தா சோகி.
ஆயாவீட்டிலிருந்து வெள்ளித் தொட்டில் கொண்டாந்திருந்தாக. மகன் கருப்பன்செட்டி கப்பல்ல ஏறிட்டானாம். வர இன்னும் நாலு நாள் இருந்தது. ஆனாலும் வீட்டுக்கு அழைக்கணும்கிற சாங்கியப்படி அன்னிக்கு ஒமையாளையும் புள்ளையையும் மாமியா வீட்டுக்கு அழைச்சிக்கினு வந்திருந்தாக அவுக ஆத்தாவீடு.