9
”அக்கினியாத்தா எங்கள ஏன்தா இப்பிடிச் சோதிக்கிறே. ” மனமுருகிக்
கையேந்திக் கேட்டுக் கொண்டிருந்தாக ஆவுடையப்பன். உங்கிட்ட உத்தரவு வாங்கித்தானே இந்தப்
புள்ளைக்குக் கலியாணம் பண்ணினேன். ஆத்தா இல்லாத புள்ள மனக்கொறை இருக்கப்புடாதுன்னு
புள்ளைகிட்டயும் கேட்டுத்தானே செஞ்சோம். மாப்பிள்ளைக்கு ரத்தப் புத்தாமே. என்ன செய்வேன்
ஆத்தா?”
அவுகளை விட அதிகமாகக் கலங்கிக் கொண்டிருந்தாக கருப்பஞ்செட்டி.
”எங்க ஆத்தா போல உன்னயத்தானே நம்புனோம். எங்கள ஏன் கைவிட்டே.”
”சரி தம்பி கிளம்புங்க ஆறுமாசமா வைத்தியம் பார்க்குறோம். சரியாயிரும்னு நம்புவோம். வேலுவோட போய் பொங்கச்சீரைக் கொடுத்துட்டு வாங்க”.

