எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

மூலம்

மூலம்

சிறிது நடுக்கமாகத்தான் இருந்தது மெச்சிக்கு அந்த ஜாதக விபரங்களைப் பார்த்ததும். மகனுக்குக் கல்யாணத்துக்கு வரன் தேடிக் கொண்டிருந்தார்கள் மெச்சியும் அவள் கணவர் அழகப்பனும்.

பையனுக்கு ஆறு நட்சத்திரங்கள் ஆகாது என்று கீழச்சீவல்பட்டி ஜோசியர் குறித்து கொடுத்திருந்தார். ஆனால் வச்சு அடிப்பது போல அந்த ஆறு நட்சத்திரங்களும் மாறிமாறிப் பெண் ஜாதகங்களில் வந்து கொண்டிருந்தன, எல்லாம் பொருந்தி இருந்தால் மெச்சி வீடு சார்ந்த அதே கோயிலையும், அதே பிரிவையும் சேர்ந்த பெண்களாகவே வந்தனர். அப்படி என்றால் சகோதரி முறையாச்சே பண்ணக் கூடாதே என விலக்க வேண்டியதாயிற்று. 

பத்தும் பத்தாததற்கு மகன் வயதில் உள்ள பெண்களுக்கு பத்துப் பதினைந்து வயதுக்குள் உள்ள குழந்தைகள் வேறு இருந்தார்கள். சில சமயம் மகனை விடப் பத்து வயது சிறிய பெண்களும் விவாகரத்தாகி இருந்தார்கள். திருமண மேட்ரிமோனிகளைச் சுற்றிச் சுற்றி வந்தும் மகனைப் போல பத்தாண்டுகளாக மறு திருமணம் ஆகாமல் அன்று கண்ட அதே இருபது முப்பது பெண்களே எஞ்சி இருந்தார்கள். அவர்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை இவனுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதுதான் ஒரே பொருத்தம்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

வியாழன், 3 செப்டம்பர், 2026

யூ ட்யூபில் 6271 - 6280 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6271.திருமந்திரம்  - 601 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/t5GILsFz1qo


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6272.திருமந்திரம்  - 602 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/eXvmVan9TIM


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 2 செப்டம்பர், 2026

புனிதப் போராளி மாய் பாகோ

புனிதப் போராளி மாய் பாகோ

நாட்டிற்காகப் போராடியவர்களைப் பார்த்திருக்கிறோம். அந்நியர்கள் வசப்படலாகாது என்று ஆத்மஹத்தி செய்து கொண்டவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தன்னுடைய சீக்கிய மதத்தைக் காக்கவும் அதன் குருவான குரு கோவிந்த் சிங் ஜிக்குக் காவலாக இருக்கவும் மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்துடன் தைரியமாக மோதியவர் மாய் பாகோ. சீக்கியர்களின் மீட்பர் இந்த மாய் பாகோ எனப்படும் மாதா பாக் கவுர் என்ற பெண்மணி என்று சொன்னால் மிகையாகாது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்தவர். துணிச்சல் மிக்கவர். சமத்துவ சமூகத்தைப் பாதுகாக்க விரும்பியவர். கவுர் என்றால் இளவரசி. மாய் மற்றும் மாதா என்றால் அம்மா என்று பொருள்படும்

மாய் பாகோ 1705 இல் முகலாயர்களுக்கு எதிரான முக்த்சார் போரில் முகலாயர்களின் 10,000 வீரர்கள் கொண்ட படையுடன் 40 சீக்கிய வீரர்களை மட்டுமே கொண்டு போரிட்ட, அசாத்தியத் துணிச்சல் கொண்ட பெண் துறவி. ஆனந்த்பூர் சாஹிப்பின் முற்றுகையின் போது 40 சீக்கியர்கள்  சாலி முக்தே) குரு கோவிந்த் சிங்கைக் கைவிடும்படி நேர்ந்தது. ஒரு பெண்ணாய் இருந்தும் ஆண்போல் துணிவு கொண்டு அவர்களை குருவுக்கு ஆதரவாக ஒன்று திரட்டி மீண்டும் முகலாயர்களுக்கு எதிராகச் சண்டையிடும்படிக் கொண்டு வந்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...