எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

மஹிஷனை வதைத்த பராசக்தி

 மஹிஷனை வதைத்த பராசக்தி


பெண் அன்னை பெண் சக்தி என்கிறோம் ஆக்கும் சக்தியும் அவளே ரௌத்திரம் வந்தால் அழிக்கும் சக்தியும் அவளே. பெண்ணைத் துச்சமாக எண்ணி வரம் கேட்ட ஒரு அசுரன் பெண்ணால் அழிந்த கதையே மகிஷாசுரவதம்.

முன்னொரு காலத்தில் தநு என்னும் அரசனுக்கு ரம்பன், கரம்பன் என்ற இரு புதல்வர்கள் இருந்தார்கள். ஏற்கனவே பலசாலிகளாக இருந்த இருவரும் தவம் இயற்றி இன்னும் பலம் பெற விரும்பினார்கள். கரம்பன் நீரில் மூழ்கி மாபெரும் தவம் இயற்றினான்.  ரம்பன் நெருப்பின் நடுவில் நின்று தவம் செய்தான். கரம்பனுடைய தவத்தின் வேகத்தை கண்டு, எங்கே தன்னுடைய இந்திர பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ எனப் பயந்த இந்திரன் முதலை உருவில் வந்து நீருக்குள் கரம்பனை இழுத்துச் சென்று கொன்று விட்டான்.

புதன், 18 பிப்ரவரி, 2026

யூ ட்யூபில் 5381 - 5390 வீடியோக்கள்

5381.பொங்கல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/bz_CZJHBNa4


#பொங்கல், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PONGAL,  #THENAMMAILAKSHMANAN,



5382.சுயம்புவாய் உருவான பெண் மோகனா சோமசுந்தரம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=OuQwo6KOTPo


#மோகனாசோமசுந்தரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MOHANASOMASUNDARAM, #THENAMMAILAKSHMANAN,

சனி, 14 பிப்ரவரி, 2026

தந்தைக்காக வாழ்ந்து மடிந்த ஜகனாராபேகம்

 

தந்தைக்காக வாழ்ந்து மடிந்த ஜஹனாரா பேகம்

ளவரசிகளில் சக்கரவர்த்தினி, நிழல் இளவரசி, காலத்தின் எஜமானி, சிம்மாசனத்தின் எஜமானி, பாதுஷா பேகம்( பெண் பேரரசி ) , பேஹம் சாஹிப் ( இளவரசிகளின் இளவரசி)  என்றெல்லாம் புகழப்பட்ட முகலாய இளவரசி ஜகனாரா பேகம் நாட்டின் ”முதல் பெண்மணி” என்ற தகுதி பெற்றதாலேயே குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளாமல் தனித்து வாழ்ந்தவர். சொல்லப்போனால் தன் தந்தையைப் பேணிக் காக்கவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

முகலாய சாம்ராஜ்யத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பின்னால் எண்ணற்ற ராணிகளின் வாழ்வும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் முதன்மையானவர் ஜகனாரா. பதினாறாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் நுழைந்த ஆங்கிலேயர்களுடன் அவர்களின் மருத்துவ சேவைக்காக முகலாய சாம்ராஜ்யத்துடன் முதன் முதலாக இணைப்பு ஏற்படுத்தியவர்.

வியாழன், 12 பிப்ரவரி, 2026

யூ ட்யூபில் 5371 - 5380 வீடியோக்கள்.

5371.ஸ்ரீ தேவி பாகவதம் - 12 l சகல நன்மைகளையும் பெற l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/KSNLl4pjs6o


#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,



5372.இலங்குடி ஐயனார் பாடல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/qoQn0wfQ8aE


#இலங்குடிஐயனார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AIYYANAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 9 பிப்ரவரி, 2026

ஹெர் ஸ்டோரீஸ் நாவல் போட்டியில் நடுவராக..

 பெருமதிப்பிற்குரிய நிவேதிதா மேடம் வள்ளிதாசன் சார் அவர்களுக்கு வணக்கம்.


ஹெர் ஸ்டோரீஸ் சார்பாக நடத்தப்பட்ட நாவல் போட்டியில் நடுவராக இருக்கும்படி அழைத்தமைக்கு நன்றிகள்.



 இதில் 5 நாவல்கள் பங்கேற்றன. ஐந்துமே சிறப்பானவை தான். அனைத்துமே ஹெஸ்டோரிசில் நாவலாக பதிப்பாக்கம் செய்யக்கூடிய சிறப்பு பெற்றவை.


இதில் நான் எந்த வரிசையில் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்றால் பெண்ணியத்தோடு பொதுநலமும் கலந்த வகையில் தேர்ந்தெடுத்து உள்ளேன்.


அந்த வகையில் நனைந்த பாய் என்ற கதை ஒரு சுயசரிதையாக அமைந்துள்ளதால் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது. அதுவும் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று உள்ளது. அதன் மொழி நடையில் சிறிது மாற்றம் செய்து இருந்தால் அது சிறப்பு பெற்றிருக்கும்.  திரும்பத் திரும்ப வரும் செய்திகள் அதிகம். பெண்களுக்கான வாழ்வியல் துயரங்களைப் பட்டியலிட்டாலும் அது சந்திராவின் வாழ்வில் அவளை சுற்றி உள்ளவர்கள் மட்டுமல்ல அவளே வேண்டி விரும்பித் தன்னைத்தானே சிலுவையில் அடித்துக் கொள்ளும் ஒரு பரிசுத்த ஆத்மாவாக இருக்கிறாள். அந்த வகையில் அவள் என் இரக்கத்தை அதிகம் தூண்டினாள்.புள்ளி விவரங்கள் அதிகம் என்பதால் கட்டுரையாகும் அபாயம் அதிகம். எந்த வயதிலும் சாதிக்கத் துடிக்கும் பெண்களின் மாதிரியாக சந்திரா திகழ்வதால் அவளுக்கு என் வாழ்த்தும் லூர்துமேரி அவர்களுக்கு என் அன்பும்.

Related Posts Plugin for WordPress, Blogger...