எதிர்நீச்சல் சௌகார் ஜானகி
கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் கோலோச்சி வரும் சௌகார் ஜானகிக்கு வயது 94. எப்போதும் இளமையாக உணரும் அவர் இந்த வயதிலும் டிவி தொடர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு ஜெயித்த பெண்மணிகளில் இவரை முதல் இடத்தில் வைக்கலாம்.
டிசம்பர் 12, 1931 ல் அப்போதைய மெட்ராஸ் ராஜமுந்திரியில் பிறந்தார். பெற்றோர் வெங்கோஜி ராவ், சசி தேவி. இவரது தங்கை கிருஷ்ணகுமாரியும் பிரபல நடிகைதான். 1947 இல் சங்கரமாஞ்சி ஸ்ரீனிவாசராவ் என்பவரை மணந்தார். மூன்று குழந்தைகள். 1949ல் இருந்து தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனக் கிட்டத்தட்ட 400 படங்கள்.
இவர் மட்டுமல்ல இவருடைய பேத்தி வைஷ்ணவியும் மிகச் சிறந்த நடிகைதான். இவர் முதலில் நாடக நடிகையாகத்தான் அறிமுகமானார். ஒரு பேட்டியில் குழந்தைகளுக்குப் பால் வாங்க வேண்டியே தான் நடிக்க வந்ததாகக் குறிப்பிட்டு இருப்பார். அவ்வளவு போராட்டம் நிறைந்த மணவாழ்க்கையில் இருந்து வெளியேறி இவர் எதிர்நீச்சல் போட்டுத் தனியாகக் குழந்தைகளை வளர்த்து இன்றும் தன்னம்பிக்கைப் பெண்ணாக மிளிர்கிறார்.



.jpg)