எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

பிடிமண்

 பிடிமண்

ரோட்டை ஒட்டிய பாலத்தின் அடியில் இருந்தது அந்தப் பெட்டிக் கடை. அந்த ரோட்டின் மேலேயே பாலத்தின் கைப்பிடிச் சுவரில் ஒரு பிள்ளையார் கோவிலும் இருந்தது. பெட்டிக்கடைக்காரரே பிள்ளையார் கோவிலையும் பூசாரி போல் பார்த்துக் கொண்டு இருந்தார். இன்னோவாவை விட்டு இறங்கிக் கடைக்கருகே சென்று விசாரித்தார் பழனி, “இங்கே ராஜநாயகம்கிறது யாரு ?” ”நாந்தான்” என்று பெட்டிக் கடை ஓலையைப் பிடித்தபடி எழுந்து சரிவான பாதையில் மேலேறி வந்தார் கடைக்காரர்.

”இங்க ஜாதகம் எல்லாம் பார்க்கிறதுன்னு சொன்னாங்களே”,ஐயத்தோடு கேட்டார் பழனி. “ஆமா நாந்தான் பார்ப்பேன். இருங்க வரேன். என்றவர் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு இவருக்கும் நீட்டினார். ”இல்லங்க வேண்டாம். ஒரு ஜாதகம் பார்க்கணும்”

சனி, 29 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6241 - 6250 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

6241.புகழ்க் கன்னி l சாமி பழனியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1IdRU7LDxN4


#புகழ்க்கன்னி, #சாமிபழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#pugalkanni, #samipalaniappan, #thenammailakshmanan, 



6242.நாளமில்லாச் சுரப்பிகளும் மரபுவழி மருத்துவ முறைகளும் l எஸ் கதீஜா நாச்சியார் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XD4Q9PjOZk8


#நாளமில்லாச்சுரப்பிகள், #மரபுவழிமருத்துவமுறை,  #கதீஜாநாச்சியார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#endocrineglands, #kathijanachiyar, #thenammailakshmanan,

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 9

 **ஒற்றைச் செடியாய்த்

தனித்திருப்பது பிடித்திருக்கிறது.
எவ்வுயிர்க்கும் வானமும்
மழையும் வெய்யிலும் ஒன்றுதானே.

 

**தேடுகிறாயா எனத்
தெரிந்துகொள்ளவே
காணாமல் அடிக்கிறேன் என்னை.

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6231 - 6240 வீடியோக்கள்.

6231.இருவாட்சி l  காதல் வனம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6rv9i5KZkSU


#இருவாட்சி, #காதல்வனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#iruvatchi, #jathalvanam, #thenammailakshmanan, 



6232.சாக்கோட்டை வீரசேகரர் உமையாம்பிகை கோயில் l  புதுவயல் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=eNKNgVb6wZE


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 26 ஆகஸ்ட், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 9

 

9

”அக்கினியாத்தா எங்கள ஏன்தா இப்பிடிச் சோதிக்கிறே. ” மனமுருகிக் கையேந்திக் கேட்டுக் கொண்டிருந்தாக ஆவுடையப்பன். உங்கிட்ட உத்தரவு வாங்கித்தானே இந்தப் புள்ளைக்குக் கலியாணம் பண்ணினேன். ஆத்தா இல்லாத புள்ள மனக்கொறை இருக்கப்புடாதுன்னு புள்ளைகிட்டயும் கேட்டுத்தானே செஞ்சோம். மாப்பிள்ளைக்கு ரத்தப் புத்தாமே. என்ன செய்வேன் ஆத்தா?”

அவுகளை விட அதிகமாகக் கலங்கிக் கொண்டிருந்தாக கருப்பஞ்செட்டி. ”எங்க ஆத்தா போல உன்னயத்தானே நம்புனோம். எங்கள ஏன் கைவிட்டே.”

”சரி தம்பி கிளம்புங்க ஆறுமாசமா வைத்தியம் பார்க்குறோம். சரியாயிரும்னு நம்புவோம். வேலுவோட போய் பொங்கச்சீரைக் கொடுத்துட்டு வாங்க”.

Related Posts Plugin for WordPress, Blogger...