படிக்காசு பெற்ற முத்துத் தாண்டவர்
பாடலே பாடத் தெரியாதவர் பல நூறு கீர்த்தனைகள் பாடியதும் அதற்குப் பரமேஸ்வரனின் திருச்சன்னதியில் தினந்தோறும் படிக்காசு பெற்றதும் வியப்பான செய்திகள் தானே? 15 ஆம் நூற்றாண்டில் பிறந்து அப்படிப் படிக்காசு பெற்ற சிறப்பான ஒருவரைப் பற்றி பார்ப்போம்.
சீர்காழியில் இசை வேளாளர் குடும்பத்தில் தோன்றியவர் தாண்டவர்.
தில்லையில் தாண்டவம் ஆடும் மூர்த்தியை எண்ணி தம் மகவுக்கு அப்பெயரை இட்டனர் பெற்றோர்.
சீரும் சிறப்புமாகக் கழிந்தது அவரது குழந்தை பருவம். என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை வளரிளம் பருவத்தில் அவர் உடம்பில் இன்னவென்று சொல்ல இயலாத ஒரு நோய் புகுந்து துன்புறுத்தியது. அதைத் தொழுநோய் என்று நினைத்த பெற்றோர் அவரை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைத்தார்கள்.



