எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 மார்ச், 2024

எனது 25 ஆவது நூல் “செட்டிநாட்டுக் கதை”களின் முன்னுரை

 முன்னுரை:- 



இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வர்க்க, இன பேதமின்றி மத்தியர தர குடும்பப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் செட்டிநாட்டின் மொழி வழக்கிலும், செட்டிநாட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் ப்ரத்யேகப் பிரச்சனைகளைப்  பற்றியுமாய் ஆக்கப்பட்டுள்ளது இந்நூல். இது எனது இருபத்தி ஐந்தாவது நூல். 

செட்டிநாட்டுக் கோட்டை வீடுகள், உணவுவகைகள், உறவு முறைகள், சுவீகாரம், திருமண நடைமுறைகள், கணவனை இழந்த முதிய பெண்களின் தனிமை, உடல்நலிவு, எச்சூழலிலும் தன்னை இழந்துவிடாத மாண்பு, செட்டிநாட்டுச் சொல்வழக்கின் சிறப்பு, கணவன் மனைவி பந்தம், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான பிணைப்பு, தங்களிடம் பணிபுரிபவரையும் தங்களைப் போல எண்ணும், நடத்தும் குணம்,  அத்தோடு அந்தக்கால ஆண்களின் செயல்பாடுகள், திருமணம் தாண்டிய உறவுகள், சமயத்தில் பெண்களே பெண்களுக்குப் பிரச்சனை ஆகுதல், எப்போதும் தங்களிடம் பணிபுரிவோரிடம் கொள்ளும் நம்பகத்தன்மையும், அதிலும் ஓரிரு சிலர் திடீரெனக் கொள்ளும் நம்பிக்கையின்மையும் எனக் கடந்த இரு நூற்றாண்டு காலச் செட்டிநாட்டின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்தச் சிறுகதைகளைப் படைத்துள்ளேன்.  

யூ ட்யூபில் 2621 - 2630 வீடியோக்கள்.

2621.தித்திக்கும் திருப்புகழ் - 8 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VBl3XTRFBgo


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



2622.கருப்புச்சாமியைத் துதிப்போம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=YFV1766AAcg


#கருப்புச்சாமியைத்துதிப்போம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUPPUSAMY, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 11 மார்ச், 2024

கஜேந்திரனைக் காத்த கருடவாகனன்

 கஜேந்திரனைக் காத்த கருடவாகனன்


முனிவர்களின் சாபம் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரியாமல் ஒரு மன்னனும், ஒருகந்தர்வனும் விளையாட்டாக நடந்துகொண்டார்கள். அதன் கொடுமையான விளைவுகளையும் அனுபவித்தார்கள். ஆனால் தன் பூரண சரணாகதியின் மூலம் மோட்சம் பெற்றான் அம்மன்னன்.

பாண்டிநாட்டை ஆண்டுவந்தான் இந்திரத்துய்மன் என்னும் மன்னன். மிகச் சிறந்த பெருமாள் பக்தன். பெருமாளுக்குப் பூசை செய்யாமல் அன்னம் தண்ணீர் அருந்தமாட்டான். அப்பேர்ப்பட்ட பக்தனுக்கும் ஒரு முனிவர் மூலமாக சோதனை வந்தது. ஒருநாள் அவன் விஷ்ணு பூசை செய்து கொண்டிருந்தபோது அகஸ்திய முனிவர் அங்கே வந்தார். இந்திரத்துய்மனின் பூசையோ முடிவதாயில்லை. தொடர்ந்து கொண்டேயிருந்தது. பார்த்தார் அகஸ்திய முனிவர். வேண்டுமென்றே மதியாமல் நடக்கிறானோ மன்னன் என்ற கோபம் உண்டானது அவருக்கு.

ஒருவழியாகக் கடைசியில் பூசையை முடித்துவிட்டு நடந்து வந்தான் மன்னன் முனிவரை வரவேற்க. பார்த்துக் கொண்டிருந்த முனிவருக்கோ அவன் மதர்த்த யானைபோல் அமர்த்தலாக வந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது. உடனே தன் கமண்டலத்திலிருந்து நீரை எடுத்து வீசினார் ”பிடிசாபம்! மதிக்காமல் மதங்கொண்ட நீ யானையாகக் கடவது” விதிர்த்து வணங்கினான் மன்னன்.

யூ ட்யூபில் 2611 - 2620 வீடியோக்கள்

2611.ஃப்ளாட் வாங்குவது என்பது புத்திசாலித்தனமான முதலீடா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=wfHenXBimck


#ஃப்ளாட், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#FLAT, #INVESTMENT, #THENAMMAILAKSHMANAN,



2612.சிறகு முளைக்கும் சிட்டுகள் பள்ளி செல்லும் பறவைகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=WLaZuMfp4uI


#சிறகுமுளைக்கும்சிட்டுகள்பள்ளிசெல்லும்பறவைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KIDS, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 8 மார்ச், 2024

முள்ளும் மலரும் ரஜினிகாந்த்

முள்ளும் மலரும் ரஜினிகாந்த்


ஸ்டைல் மற்றும் மேனரிஸங்களால், வசீகரமான பாடிலைன் மற்றும் ஹேர்ஸ்டைலால், கன்னடத் தமிழ் உச்சரிப்பால், அஸால்டான நடிப்பால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் ரஜினி. மஸ்குலைன் இல்லையென்றாலும் ஒரு ஆல்ஃபா மேல் ஆகவே காட்சி தருபவர் ரஜினி. எம்ஜியார் சிவாஜி, ரஜனி கமல் போன்ற உச்ச நடிகர்கள் பற்றி ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியாது. பத்துப் பன்னிரெண்டு படங்களை மட்டுமே குறிப்பிடலாம். முழுசாக சொல்லணும்னா ரெண்டு வால்யூம் புக்தான் போடணும்.  

சிவாஜிராவ் கெய்க்வாடா இருந்து சிவாஜியா நடிச்சவரின் வாழ்க்கைச் சரித்திரம் மற்றும் அவர் பெற்ற விருதுகள் பற்றி எல்லாம் உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். அதுனால இந்தக்கட்டுரை நான் ரசித்த அவரோட நடிப்பின் பல்பரிமாணங்களையும் திரும்ப ரீவைண்ட் பண்ணிப் பார்க்கத்தான். 1975 இலிருந்து 2023 வரை அவர் நடித்த 170 சொச்சம் படங்களில் 100 படங்களுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...