ஆளுமைத்தன்மைமிக்க
அட்டிங்கலின் ராணி உமையம்மா
800 ஆண்டு
பழமையான அட்டிங்கல் நகரத்தைச் சுற்றி வாமனபுரம் ஆறும் மாமம் ஆறும் ஒடிக் கொண்டிருந்தன.
திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தின் வேணாடு அரச குடும்பத்தைச் சார்ந்த
பெண்களே அட்டிங்கலில் ராணியாகும் பாத்யதை பெற்றிருந்தார்கள். இந்நிலையில் 13 ஆம் நூற்றாண்டிலேயே
போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களுடன் வணிகம் ஆரம்பித்தது. வியாபாரம்
செய்ய வந்தவர்கள் நாட்டின் வரிவிதிப்பிலும் அரசு நிர்வாகத்திலும் தலையிடத் தொடங்கினார்கள்.
அஸ்வதி திருநாள் உமையம்மா ராணி அட்டிங்கலின் பேரரசியானார். வாய்ப்புக் கிடைத்தால் பெண்ணாக இருந்தாலும் அரசாங்க நிர்வாகத்தையும் சீராகக் கவனிக்கமுடியும் என நிரூபித்தவர். துணிச்சலுக்கும் ஆளுமைத்தன்மைக்கும் பேர் போனவர்.