8.கட்டுரை நூல்கள்
நூல் - ஆசிரியர் – பக்கம் – வருடம் – விலை – பதிப்பகம்
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
6271.திருமந்திரம் - 601 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/t5GILsFz1qo
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
6272.திருமந்திரம் - 602 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/eXvmVan9TIM
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
புனிதப் போராளி மாய் பாகோ
நாட்டிற்காகப் போராடியவர்களைப் பார்த்திருக்கிறோம். அந்நியர்கள்
வசப்படலாகாது என்று ஆத்மஹத்தி செய்து கொண்டவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தன்னுடைய
சீக்கிய மதத்தைக் காக்கவும் அதன் குருவான குரு கோவிந்த் சிங் ஜிக்குக் காவலாக இருக்கவும்
மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்துடன் தைரியமாக மோதியவர் மாய் பாகோ. சீக்கியர்களின் மீட்பர்
இந்த மாய் பாகோ எனப்படும் மாதா பாக் கவுர் என்ற பெண்மணி என்று சொன்னால் மிகையாகாது.
17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வடமேற்கு
இந்தியாவில் வாழ்ந்தவர். துணிச்சல் மிக்கவர். சமத்துவ சமூகத்தைப் பாதுகாக்க விரும்பியவர்.
கவுர் என்றால் இளவரசி. மாய் மற்றும் மாதா என்றால் அம்மா என்று பொருள்படும்
மாய் பாகோ 1705 இல் முகலாயர்களுக்கு எதிரான முக்த்சார் போரில் முகலாயர்களின் 10,000 வீரர்கள் கொண்ட படையுடன் 40 சீக்கிய வீரர்களை மட்டுமே கொண்டு போரிட்ட, அசாத்தியத் துணிச்சல் கொண்ட பெண் துறவி. ஆனந்த்பூர் சாஹிப்பின் முற்றுகையின் போது 40 சீக்கியர்கள் சாலி முக்தே) குரு கோவிந்த் சிங்கைக் கைவிடும்படி நேர்ந்தது. ஒரு பெண்ணாய் இருந்தும் ஆண்போல் துணிவு கொண்டு அவர்களை குருவுக்கு ஆதரவாக ஒன்று திரட்டி மீண்டும் முகலாயர்களுக்கு எதிராகச் சண்டையிடும்படிக் கொண்டு வந்தார்.
6251.விநாயகர் துதி 2 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/P45qoiNm82A
#கணபதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#GANAPATHI, #THENAMMAILAKSHMANAN,
6252.ஐயப்ப மாலா மந்திரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/rd7tueFZn6E
#ஐயப்பமாலாமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AIYYAPPA, #THENAMMAILAKSHMANAN,
பிடிமண்
ரோட்டை
ஒட்டிய பாலத்தின் அடியில் இருந்தது அந்தப் பெட்டிக் கடை. அந்த ரோட்டின் மேலேயே பாலத்தின்
கைப்பிடிச் சுவரில் ஒரு பிள்ளையார் கோவிலும் இருந்தது. பெட்டிக்கடைக்காரரே பிள்ளையார்
கோவிலையும் பூசாரி போல் பார்த்துக் கொண்டு இருந்தார். இன்னோவாவை விட்டு இறங்கிக் கடைக்கருகே
சென்று விசாரித்தார் பழனி, “இங்கே ராஜநாயகம்கிறது யாரு ?” ”நாந்தான்” என்று பெட்டிக்
கடை ஓலையைப் பிடித்தபடி எழுந்து சரிவான பாதையில் மேலேறி வந்தார் கடைக்காரர்.
”இங்க ஜாதகம் எல்லாம் பார்க்கிறதுன்னு சொன்னாங்களே”,ஐயத்தோடு கேட்டார் பழனி. “ஆமா நாந்தான் பார்ப்பேன். இருங்க வரேன். என்றவர் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு இவருக்கும் நீட்டினார். ”இல்லங்க வேண்டாம். ஒரு ஜாதகம் பார்க்கணும்”