மால்வாவின் ராணி தாமரைப் பெண்மணி ரூப்மதி
மால்வா.. பஞ்சாபின் தென்கிழக்கில்
மத்தியப்பிரதேசத்தில் உள்ள, விந்திய மலைத்தொடருக்கு அப்பால் உள்ள அழகிய நாடு அதன்
தலைநகரம் மாண்டு. ரூப்மதி.. பேரைப்போலவே சுந்தரமான நிலவு. சௌந்தர்ய ரூபவதி.
மால்வாவின் வசீகரமிக்க பேரழகி, தாமரைப் பெண்மணி. பாஸ் பகதூர். மால்வாவின் மன்னன்.
ஆண்களில் வசீகரமான பேரழகன். அந்தத் தாமரைப் பெண்ணின் மனங்கவர்ந்த
மணாளன்.
பதினாறாம் நூற்றாண்டில் இங்கே புகழ்பெற்ற காதல் ஜோடியாக வாழ்ந்தவர்கள் பாஸ் பகதூரும் ரூப்மதியும். “இங்கே ஒவ்வொரு காதலனும் சர்தார் மற்றும் ஒவ்வொரு காதலியும் சுல்தானா.” என்று அலி சர்தார் ஜாஃப்ரி என்ற கவிஞர் பாஸ்பகதூர் , ரூப்மதிபோல் ஆத்மார்த்தமாகக் காதலிப்பவர்களைப் பற்றித் தனது கவிதைகளில் குறிப்பிடுகிறார். திருமணத்தில் முடிந்தது இவர்கள் இனிய காதல் வாழ்வு. மதங்களைத் தாண்டிய காதலுக்கு இவர்கள் வாழ்வுதான் எடுத்துக்காட்டு. ஆனால் அதன் பின் அக்பரின் தளபதி ஆதம்கானின் படையெடுப்பால் அது பூரணமாய்ச் சிதைந்துபோய் துயரம் சூழ முடிவுக்கும் வந்தது.
