முடிசூடா இராணி மங்கம்மாள்
ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த திருமலை நாயக்கர் வம்ச வரலாற்றில்
மதுரையை ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகள் அரசாட்சி செய்த மிகக் கம்பீரமான பெண்மணி இராணி
மங்கம்மாள். தளபதியின் மகளாக இருந்தும் மிகச் சிறந்த அரசியல் ராஜதந்திரி. மதிநுட்பம்
மிகுந்தவர். முகலாயர்கள், மராத்தியர்கள், கேரளத்தவர், மறவர்கள் ஆகியோரின் பகைகளையும்
திறமையாக முறியடித்தவர். எல்லா மதத்தினரோடும் சமரச மனப்பான்மை கொண்டு அரவணைத்தவர்.
அரசியல் ஞானம், உலகியல் அறிவு, நெஞ்சில் உரம், நேர்மைத்திறம் கொண்டவர்.
ராணி மங்கம்மாள் என்றவுடன் மதுரையை அவர் ஆண்டு வந்ததாகவே நினைப்போம். ஆனால் நாயக்கர் பரம்பரையில் திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் சொக்கநாத நாயக்கர், ராணி மங்கம்மாள், விஜயரங்க சொக்கநாதர், ராணி மீனாட்சி ஆகியோர். மன்னனுக்குப் பட்டத்தரசியாகப் பட்டம் சூட்டப்படாமலிருந்தும் தனது மகனுக்கும் பேரனுக்கும் காப்பாட்சியாளராக இருந்து பேரரசியாகக் கோலோச்சியவர்.








































