எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2011

வெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு .(7)

வெளிநாடுகளில் வேலை செய்யும் சகோதரர்கள் (திரு நெல்லிமூர்த்தி மற்றும் நாஞ்சில் மனோ ) தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட் தவிர எதில் எல்லாம் முதலீடு செய்யலாம். அதுவும் தாங்கள் வந்து செல்லும் ஒரு மாதகால அவகாசத்துக்குள் எனக் கேட்டிருந்தார்கள். இதற்கு, முதலீட்டு ஆலோசகர் மற்றும் சென்னை பங்குச் சந்தை இயக்குனர் திரு நாகப்பன் அவர்களிடம் குறுகிய கால அவகாசத்தில் இந்தியா வந்து செல்பவர்களின் முதலீட்டுக்கான ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டோம். அவர் கூறியவற்றைத் தொகுத்துள்ளேன்.

வியாழன், 28 ஜூலை, 2011

இணைய இதழ்கள்., பத்ரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்புவது எப்படி..?

இணைய இதழ்களுக்கும்., பத்ரிக்கைகளுக்கும் படைப்புகள் அனுப்புவது எப்படி என்பது அடிக்கடி என்னிடம் இன்பாக்ஸில் கேட்கப்படும் கேள்வி.. நம் வலைப்பதிவர்கள் நிறைய பேரின் படைப்புக்கள் இணையங்களிலும்., பத்ரிக்கைகளிலும் வலம் வருகின்றன. இந்த வகையில் என்னுடைய படைப்புகள் சிலவற்றில் வந்திருப்பதால் இதை சொல்லலாம் என நினைக்கிறேன்.

முதலில் இணையங்கள்.
திண்ணை தற்போது புது திண்ணை என்ற பெயரில் வருகின்றது. http://puthu.thinnai.com/ என்ற ஐடியில் வாசிக்கலாம். . இதற்கு படைப்புகக்களை editor@thinnai.com என்ற ஈமெயில் ஐடிக்கு அனுப்பவேண்டும்.

செவ்வாய், 26 ஜூலை, 2011

ஸ்ரீஜியுடன்.. சப்தஸ்வரங்கள்..:))

நாதமெனும் கோயிலிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் .. ஏற்றி வைத்த விளக்கினிலே என்னை விட நீ கிடைத்தாய்.. என்ற பாடல் அவ்வப்போது மனதுள் ஒலிக்கும். எங்களுக்குக் கிடைத்த முகப்புத்தக நண்பர் பூவாளூர் ஸ்ரீஜி எனப்படும் ஆத்மாநாம் அவர்களுக்கும் இந்தப் பாடல் பொருந்தும்.

திங்கள், 25 ஜூலை, 2011

கிரிஜாம்மாவுடன் சென்னை பெண் வலைப்பதிவர்கள் சந்திப்பு...




மேமாதம் சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு ஒன்றை லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நிகழ்த்த வேண்டும் என்பது கிரிஜாம்மாவின் விருப்பம். எப்போதும் தன்னைச் சுற்றிப் பெண்களாக இருக்கக்கூடியவர் அவர். பெண்களின் ப்ரச்சனைகளின் மையப்ப்புள்ளியைக் கணித்து தீர்வு சொல்பவர் அவர். அவர் அழைத்திருக்கிறார் என்றவுடன் அனைத்து பெண் பதிவர்களும் ஆர்வத்தோடு சம்மதித்தனர்.

வெள்ளி, 22 ஜூலை, 2011

வி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடிக்கும் கணவர்களும்..



கணவரின் கோபத்தை சமாளிப்பது எப்படி., மனைவியின் நச்சரிப்புக்களை சரி செய்வது எப்படி என்று ஒரு தோழி கேட்டிருந்தார். நிலையான உத்யோகங்களில் இருக்கும் குடும்பத்துக்குள்ளே சண்டை சச்சரவுகள் இருக்கும்போது வீஆர் எஸ்ஸில் வந்தவர் குடும்பம் எப்படி இருக்கும்.

வியாழன், 21 ஜூலை, 2011

காஃபி...

விஷ்..விஷ் என வடிவேலு போல சப்தமெழுப்பினார் என் கணவர்.. அட அவர் விஷ் மட்டும் தான் வடிவேலு போல .. ஆனா ஆள் அந்தக்கால பாலாஜி., அப்புறம் வந்த பாக்கியராஜ். இப்போ இருக்கும் பிருத்விராஜ்., இன்னும் இருக்கும் மம்முட்டி போல அழகன்..

அது ஒரு ஞாயிறு மாலை நேரம்.. தொலைக்காட்சியில் மொத்தக் குடும்பமும் மூழ்கி இருந்தது.. என்ன விஷ் விஷ் என்றேன் நானும் சங்கேதமாய்.. என் சின்ன மகன் இடுப்பில் அமர்ந்து எங்கள் விஷ் விஷைப் பார்த்து சிரித்தான்.. அவனுக்கு ஏதோ விளையாட்டுக் காட்டுவதாய்..

கொஞ்சம் காப்பி என்றார் என் கணவர்.. ஐயையோ இப்பவா என்றேன் நான்,, அட இது புதுமைப் பெண் படக் காப்பி இல்லைங்க.. சாதா காப்பிதான்.. ரொம்ப குடிச்சா முடி கொட்டிப் போயிரும் காஃபின்னால என்றேன்..

புதன், 20 ஜூலை, 2011

சிறகு முளைக்கும் சிட்டுக்கள். பள்ளி செல்லும் பறவைகள்.



”பள்ளிக்குச் சென்றிருக்கும் பையன்களில் சிறிய பையன் துள்ளிக் குதித்தே மான்போல் தொடர்ந்தோடி வீழ்ந்தானோ” எனக் கவலையுறுவது அம்மாக்களின் இயல்பு. உங்க வீட்டில் ஸ்கூலுக்கு போக ரெடியா குட்டிப் பொண்ணு அல்லது குட்டிப் பையன் இருக்கானா .. அப்ப இந்த விவரம் எல்லாம் நீங்கதான் தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சுகிட்டு உங்க குட்டீஸ்கிட்டயும் சொல்லிக் கொடுக்கணும்.

திங்கள், 18 ஜூலை, 2011

சண்டே ஃபாமிலி ஸ்பெஷல்.. லஞ்ச்.







எதேச்சையா ஒரு ஞாயித்துக் கிழமை அன்னிக்கு சீக்கிரமா முழிப்பு வந்துருச்சு. நமக்கெல்லாம் திங்கக்கிழமை அன்னிக்குத்தானே சூப்பரா தூக்கம் வரும். சரின்னு சீக்கிரமா வேலை எல்லாம் முடிச்சாச்சு.. டிவியில் பார்த்த ப்ரோக்ராமே பார்த்த மாதிரி இருந்துச்சு. கம்ப்யூட்டர் லீவு நாள்ல கிடைக்காது.. சரி என்ன பண்ணலாம் பொழுதே போகலையேன்னு யோசிச்சப்ப எதிர் ப்ளாட்டில் இருந்து சரிகமபதநச னு ஒரு சின்னபிள்ளையோட கணீர் குரலோட பாட்டு கேட்டுச்சு.. அட பூஜா.. பாட்டெல்லாமா பாடுறா. அந்த குட்டீஸ்க்கு மிஞ்சி மிஞ்சிப் போனா 5 வயசு இருக்கும். பிரபல பாடகி மாதிரி அற்புதமா பாடினா.. சமையல் வாசனை வேற அவங்க வீட்டில இருந்து மூக்கை துளைச்சுச்சு.. ஞாயித்துக்கிழமையும் அதுவுமா அவங்க என்ன செய்யிறாங்கண்ணு பார்க்கலாம்னு போனேன்.. அடுத்தவங்க வீட்டுல என்ன செய்யிறாங்கன்னு பார்க்கிறதுன்னா நமக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம்..

வெள்ளி, 15 ஜூலை, 2011

சாமியும் சும்மா சாமியும்..(சும்மாவுக்குப் பிறந்தநாள்)

சாமி..:-
***************

நீ உலவும் இடத்தில் உலவி
உண்டக்கட்டி உண்டு
ஓரமாய் உறங்குகிறேன்.
தாவாங்கட்டை தாடிசூழ
தலைசுமந்த சடைமுடியுடன்.
உன்னைக் காண
வழிமோதி வருவோர்க்கு
தீவட்டி பிடிக்கிறேன்
வழி விடுமாறு.

புதன், 13 ஜூலை, 2011

இருப்பு..பூவரசியில்

இருப்பு..:-
***************

மலைகளில்., விளம்பர
பெயிண்ட் அடித்தல்.,
பாறைகளில் ., பீச் மணலில்
முகங்களை வடித்தல்.,
மரங்களிலும் ., பேருந்துகளிலும்
பெயர்களைச் செதுக்குதல்.,

செவ்வாய், 12 ஜூலை, 2011

பலூன்கள்... பூவரசியில்..

பலூன்கள்..
**********************

காற்றூதி விரிவாக்கி
கடற்கரையில் விளையாடவும்

நெஞ்சடைக்கும்
குருதியோட்டம் சீராக்கவும்

கலவி முடிந்து
விந்து பிடிக்கும் பையாகவும்

கார் விபத்தில்
உயிர் காக்கும் மெய்யாகவும்..


டிஸ்கி:- இந்தக் கவிதை 28. மே 2011 பூவரசியில் தேனு கவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

திங்கள், 11 ஜூலை, 2011

நம்பிக்கை.. பூவரசியில்

நம்பிக்கை..
**********************

விளைந்த புற்றுக்கள்
முளைவிட்ட நாகங்களோடு..

எங்கேயோ உரமடித்தால்
எங்கேயோ விளையுமென்று

வெள்ளி, 8 ஜூலை, 2011

குழந்தைமை.....




குழந்தைமை..
**********************

”வ வா . வெ. வில் பாடு.. “..

“வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா..”..

புறநகர் செல்லும் மின்சார ரயிலில் குட்டியாய் நாலு பெண்கள்..

வியாழன், 7 ஜூலை, 2011

அவர் பெயர் பழநி....

எங்காவது ஊருணியிலோ
கம்மாய்க் கரையிலோ
கண்டிருக்கலாம்,
கேள்விக்கு்றியாய் வளைந்து
கருத்து துவைக்கும் உருவத்தை..

வெளுத்து வெளுத்து
வெள்ளாவிப் பானையில்
வெந்தது போக..
உவர்மண்ணோடு உவர்மண்ணாய்
வெடித்த கைகளும் கால்களும்.

புதன், 6 ஜூலை, 2011

சும்மா.. உங்கள எல்லாம் நினைச்சு கவிதை அருவி...:)

அன்புடன் மணிகண்டன்
அன்போடு உங்களை.

என் சிநேகிதனே
உன் செல்ல நாய்க்குட்டி நான்.

சைவக் கொத்துப் பரோட்டாவும்
கொத்துப் பரோட்டாவும்
சும்மா உண்டு.,

செவ்வாய், 5 ஜூலை, 2011

எங்கே அது..?

எங்கே அது..?
*************************

கொஞ்சம் படபடப்பாய் இருந்தது..

இந்த நேரத்தில் .. என்ன செய்ய..

சீக்கிரம் சீக்கிரம் .. .. உடனடியாய் ..

எல்லாரும் நல்லா தூங்கிக் கொண்டிருக்க மெல்ல எழுந்தாள்..

திங்கள், 4 ஜூலை, 2011

வாக்குமூல மொழி...

வாக்கு மூல மொழி..
****************************

யார் மொழிய
நினைத்ததெல்லாம்
நீ மொழிந்தாய்..?

நீ மொழிய
நினைத்ததை
யார் மொழிவார்..?

சனி, 2 ஜூலை, 2011

கிரஹலெக்ஷ்மி பெண்கள் சுய உதவிக் குழு.





சென்னையில் இருக்கும் ஒரு சுய உதவிக் குழுவை ஷேர் ஆட்டோவில் செல்லும் போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 11 பேர் இருந்தார்கள்..ஒரே மாதிரி டிசைன்., கலர் உள்ள புடவை உடுத்தி இருந்தார்கள் அவர்களின் முக மலர்ச்சியும் பேச்சும் மிக அழகாக இருந்தது. அவர்களிடம் பேச்சு கொடுத்த போது தங்கள் மாதாந்திரக் கூட்டத்துக்காக செல்வதாக சொன்னார்கள்..

வெள்ளி, 1 ஜூலை, 2011

பெண் ஆட்டோ ஓட்டுநர் இன்று சிஐடியூவின் மாநிலக்குழு உறுப்பினர். போராடி ஜெயித்த பெண்கள். (10)

ஒரு சாதாரண குடும்பத்தலைவியாய் ப்ளஸ்டூ படித்துவிட்டுப் பின் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண் இன்று CITU வின் மாநிலக்குழு உறுப்பினர். வேறு பெண் ஆட்டோ ஓட்டுனர்களும் உள்ள சங்கத்தில் எப்படி அடைய முடிந்தது இந்த உயரம்.? அவரையே கேட்டோம்.. சென்னை கே கே நகரில் ஐயப்பன் கோயிலருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் சாந்தி. 46 வயதான இவர் எம் ஜி ஆர் நகரைச் சேர்ந்தவர்.
Related Posts Plugin for WordPress, Blogger...