எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஞாயிறு, 20 அக்டோபர், 2019
சூரியப்ரபை சந்திரப்ரபை.
வியாழன், 11 ஜூலை, 2019
தினமலர் திண்ணை பற்றி வாசகர் கடிதங்களும், மஞ்சளும் குங்குமமும் வெளியீடும்.
வெள்ளி, 25 ஜனவரி, 2019
வியாழன், 3 டிசம்பர், 2015
கூடு
சனி, 7 நவம்பர், 2015
வெட்கச் செடியும் சன்யாசி மரமும். :-
மழைவரும்போல் தெரிகிறது
சுருட்டிச்செல்கிறது செங்காந்தள் அந்தி வானம்.
திங்கள், 3 ஆகஸ்ட், 2015
நாதாங்கி.
புதன், 1 ஜூலை, 2015
பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும். நமது மண்வாசம் & ஷெனாய் நகர் டைம்ஸ்.
வியாழன், 14 மே, 2015
செவ்வாய், 10 மார்ச், 2015
திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை.:-
திங்கள், 2 பிப்ரவரி, 2015
உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
ஞாயிறு, 25 ஜனவரி, 2015
திண்ணையில் ஒரு இடம்.
செப்டம்பர் 2, 2010 இல் ரிஷான் ஷெரீஃபின் நூல்-- வீழ்தலின் நிழலுக்கு எழுதிய விமர்சனம்தான் முதலில் வெளிவந்தது. அதன் பின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நகைச்சுவையும் வித்யாசமானவையும் , ஆன்மீகம், சமூகம் என்று கிட்டத்தட்ட 190 படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் புதுத்திண்ணையில் 101 படைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிச்சம் பழைய திண்ணை இணைப்பில் இருக்கிறது.
என்னுடைய வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்துள்ளது திண்ணை. என் படிமக் கவிதைகளைத் திண்ணையில் படித்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் விஜயன் ஒரு முறை மெயில் செய்திருந்தார்.
வெள்ளி, 16 ஜனவரி, 2015
புதன், 14 ஜனவரி, 2015
ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்:-
2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். கவிதைகளை என்றுமே விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் கவிஞனின் எண்ணப் போக்கின் வெளிப்பாடு. மனம் மலரும்போது மலர்ந்தும் , சுருங்கும்போது கசங்கியும் விழும் பூக்களைப் போலத்தான் கவிதைகளும்.எனவே நான் ரசித்த சிலரின் கவிதைகள் இங்கே . முதலில் ஷான் கவிதைகள்.
ஷானின் கவிதைகள் குழந்தைகள் , மழை, வாழ்க்கைத்துணை பற்றிப் பேசினாலும் இணையத்தாலும் தொலைக்காட்சி போன்ற நவீனசாதனங்களாலும் நாம் அடிமைப்பட்டுப்போனதைப் பதிவு செய்கின்றன. அதிலும் அகத்திலும் புறத்திலும் ஏற்படும் இரைச்சலை எழுத்திலேயே நம்மையும் கேட்கவைக்க முடிகிறது அவரால்.
உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் :-
உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்
கிழக்குப் பதிப்பகத்தின் மிக அருமையான நூல் உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள். நம் குழந்தைகளிடம் என்னமாதிரியான திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை நாம் இனங்கண்டு அவர்களை எப்படி வழி நடத்தலாம் என்பதை ஜி ராஜேந்திரன் தகுந்த விளக்கங்களுடன் அளித்துள்ளார்கள்.
Constructive Pedagogy பற்றி ( ஆக்கப்பூர்வமான கற்பித்தல் முறை ) கோட்பாட்டில் ஆர்வமுள்ள இவர் ஒரு ஆசிரியர், எழுத்தாளர், கற்பிக்கும் முறைகளிலும் கற்றுக்கொள்ளும் முறைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து வருகிறார்.
செவ்வாய், 13 ஜனவரி, 2015
சி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று. நூல் பார்வை.
சிறிது அதிர்ச்சியை உண்டாக்கிய தலைப்புதான். படித்த பல கணங்களுக்குப் பின்னும் கூட அது நீடித்தது என்று சொல்லலாம். சரவண கார்த்திகேயன் தனது முதல் தொகுதிக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்திருப்பது ஆச்சர்யம்தான். பெங்களூருவில் கணிப் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றி வரும் இவர் இந்திய நிலவாராய்ச்சித் திட்டம் பற்றி சந்திராயன் என்று ஒரு புத்தகமும் சாருவுடனான விவாதங்கள் தாந்தேயின் சிறுத்தை என்று இரண்டாம் நூலாகவும் வந்திருக்கின்றன. மூன்றாம் நூலான இக்கவிதைத் தொகுதி இவரது முதல் கவிதைத் தொகுதி.
ஆணாதிக்க சமூகம் தம் பாலியல் இச்சை தீர்ப்பதற்காக பன்னெடுங்காலமாகப் குறிப்பிட்ட பெண்களைப் போகப்பொருளாகப் பாவித்திருப்பது பற்றியான சித்தரிப்புகள்தான் இக்கவிதைகள். சமூகம் சுமத்தும் கொடூர அடிமைத்தனம் சுமந்து, அதன் வலிகளைச் சுமந்து சோகத்தைச் சுமந்து அவர்கள் இதில் பாடுபொருளாகிறார்கள்.
வியாழன், 8 ஜனவரி, 2015
எல்லாருக்கும் பிடித்த எம்.ஜி.ஆர்.
எல்லாருக்கும் பிடித்த
எம்.ஜி.ஆர்.
எம்ஜியார் என்ற
மூன்றெழுத்து மந்திரம் நம் தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஆட்டிப்படைத்த
விபரத்தையும் அவரது வாழ்க்கைச் சரிதத்தையும் பால கணேஷ் சுருக்கமாக அழகாக
விவரித்துள்ளார்.
பிறப்பிலிருந்து அவர்
சந்தித்த சோதனைகள், ஈழத்திலிருந்து கேரளாவுக்குப் புலம் பெயர்ந்தது, மதுரை
ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கத்துவங்கி சினிமாவுக்கு வந்தது,
சினிமாவில் பெற்ற வெற்றிகள், எம் ஆர் ராதா சுட்டது, அதன் பின் அரசியல் ப்ரவேசம் ,
திமுக விலிருந்து விலகி அதிமுக துவங்கியது, மூன்று முறை முதல்வரானது, சத்துணவுத்திட்டம்,நல்லாட்சி வழங்கியது
அதன் பின் உடல் நலக்குறைவால் உயிர்துறந்தது வரை சித்தரித்துள்ளார்.
புதன், 7 ஜனவரி, 2015
மு. கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்.
உலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் புராண கதைகளுக்குமான தெளிவு கிடைப்பதில்லை.
பன் பட்டர் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு விரையும் அவசர உலகில் ஆன்மீகத்தையும் ஒரு சாண்விச் போல அழகாகச் சுற்றிக் கையில் கொடுத்திருக்கிறார் கோபி. சாண்ட்விச்சில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் சக்தியைத் தருவது போல இந்த ஆன்மீக சாண்ட்விச்சுக்குள் வைக்கப்படும் பொருட்கள் நமக்கு மறைபொருளை உணர்த்தியும் அதன் சக்தி வீச்சை உணருமாறும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளி, 2 ஜனவரி, 2015
வே. பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை:-
இளம் பாடலாசிரியர் வே. பத்மாவதியின் முதல் கவிதைத் தொகுதி கைத்தலம் பற்றி. அவர் என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்றவர். மென்பொறியியல் வல்லுநர். ஆனாலும் சிங்கை மணற்கேணி நடத்திய போட்டியில் முதல் பரிசு வென்று சிங்கை சென்று வந்தவர்.
பல தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதும் புத்தக விமர்சனமும் செய்து வருகிறார். சிறந்த பேச்சாளர். பல்வேறு பத்ரிக்கைகளில் கதைகள் கவிதைகள் எழுதி வருகிறார். லேடீஸ் ஸ்பெஷலில் நாட்டுப்புறப் பாடல்களை கிராமங்களுக்கே சென்று தொகுத்து வழங்கியது அருமை.
புதன், 31 டிசம்பர், 2014
நர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை :-
கதை கேட்பது என்பது எந்த வயதிலும் நமக்குப் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சி வந்தபின்னும் கதை படிப்பது என்பதும் அவ்வாறே சுவாரசியத்தைக் கூட்டுவதாகவே உள்ளது. கதை சொல்லப்படும் நேர்த்தியின்பாற்பட்டு வாசிப்பனுபவத்தை மட்டுமல்ல. அதைச்சுற்றிப் பின்னப்படும் கற்பனைகள் கொண்ட அக உலகை தனக்கு மட்டுமேயானதாக ஆக்குவதால் கதைகள் வாசித்தலின் சாரமும் வசீகரமும் என்றும் குறைந்துவிடாமலே தொடர்கிறது என்னை.
செவ்வாய், 30 டிசம்பர், 2014
ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.
குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் மென்மையை மேன்மையைப் பற்றியும் அதே சமயத்தில் வாழ்வின் ஆத்ம விசாரங்களையும் தான் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் அழகான கவிதைகளில் ரசனையோடு கொடுத்துள்ளார் ராமலெக்ஷ்மி. இரண்டு விருதுகள் இவரது முதல் கவிதைத் தொகுதிக்குக் கிடைத்துள்ளன. அதுவே இத்தொகுதியின் சிறப்பைக் கூறும்.














