நான் வலை உலகில் எழுத வந்து ஒரு வருடத்துக்கு மேல்தான் திண்ணையின் இணைய முகவரி கிடைத்து எழுதத் தொடங்கினேன்.
செப்டம்பர் 2, 2010 இல் ரிஷான் ஷெரீஃபின் நூல்-- வீழ்தலின் நிழலுக்கு எழுதிய விமர்சனம்தான் முதலில் வெளிவந்தது. அதன் பின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நகைச்சுவையும் வித்யாசமானவையும் , ஆன்மீகம், சமூகம் என்று கிட்டத்தட்ட 190 படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் புதுத்திண்ணையில் 101 படைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிச்சம் பழைய திண்ணை இணைப்பில் இருக்கிறது.
என்னுடைய வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்துள்ளது திண்ணை. என் படிமக் கவிதைகளைத் திண்ணையில் படித்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் விஜயன் ஒரு முறை மெயில் செய்திருந்தார்.
செப்டம்பர் 2, 2010 இல் ரிஷான் ஷெரீஃபின் நூல்-- வீழ்தலின் நிழலுக்கு எழுதிய விமர்சனம்தான் முதலில் வெளிவந்தது. அதன் பின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நகைச்சுவையும் வித்யாசமானவையும் , ஆன்மீகம், சமூகம் என்று கிட்டத்தட்ட 190 படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் புதுத்திண்ணையில் 101 படைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிச்சம் பழைய திண்ணை இணைப்பில் இருக்கிறது.
என்னுடைய வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்துள்ளது திண்ணை. என் படிமக் கவிதைகளைத் திண்ணையில் படித்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் விஜயன் ஒரு முறை மெயில் செய்திருந்தார்.