எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

வியாழன், 3 செப்டம்பர், 2026

யூ ட்யூபில் 6271 - 6280 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6271.திருமந்திரம்  - 601 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/t5GILsFz1qo


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6272.திருமந்திரம்  - 602 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/eXvmVan9TIM


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 2 செப்டம்பர், 2026

புனிதப் போராளி மாய் பாகோ

புனிதப் போராளி மாய் பாகோ

நாட்டிற்காகப் போராடியவர்களைப் பார்த்திருக்கிறோம். அந்நியர்கள் வசப்படலாகாது என்று ஆத்மஹத்தி செய்து கொண்டவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தன்னுடைய சீக்கிய மதத்தைக் காக்கவும் அதன் குருவான குரு கோவிந்த் சிங் ஜிக்குக் காவலாக இருக்கவும் மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்துடன் தைரியமாக மோதியவர் மாய் பாகோ. சீக்கியர்களின் மீட்பர் இந்த மாய் பாகோ எனப்படும் மாதா பாக் கவுர் என்ற பெண்மணி என்று சொன்னால் மிகையாகாது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்தவர். துணிச்சல் மிக்கவர். சமத்துவ சமூகத்தைப் பாதுகாக்க விரும்பியவர். கவுர் என்றால் இளவரசி. மாய் மற்றும் மாதா என்றால் அம்மா என்று பொருள்படும்

மாய் பாகோ 1705 இல் முகலாயர்களுக்கு எதிரான முக்த்சார் போரில் முகலாயர்களின் 10,000 வீரர்கள் கொண்ட படையுடன் 40 சீக்கிய வீரர்களை மட்டுமே கொண்டு போரிட்ட, அசாத்தியத் துணிச்சல் கொண்ட பெண் துறவி. ஆனந்த்பூர் சாஹிப்பின் முற்றுகையின் போது 40 சீக்கியர்கள்  சாலி முக்தே) குரு கோவிந்த் சிங்கைக் கைவிடும்படி நேர்ந்தது. ஒரு பெண்ணாய் இருந்தும் ஆண்போல் துணிவு கொண்டு அவர்களை குருவுக்கு ஆதரவாக ஒன்று திரட்டி மீண்டும் முகலாயர்களுக்கு எதிராகச் சண்டையிடும்படிக் கொண்டு வந்தார்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

யூ ட்யூபில் 6251 - 6260 வீடியோக்கள்

6251.விநாயகர் துதி 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/P45qoiNm82A


#கணபதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GANAPATHI, #THENAMMAILAKSHMANAN,



6252.ஐயப்ப மாலா மந்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/rd7tueFZn6E


#ஐயப்பமாலாமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AIYYAPPA, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

பிடிமண்

 பிடிமண்

ரோட்டை ஒட்டிய பாலத்தின் அடியில் இருந்தது அந்தப் பெட்டிக் கடை. அந்த ரோட்டின் மேலேயே பாலத்தின் கைப்பிடிச் சுவரில் ஒரு பிள்ளையார் கோவிலும் இருந்தது. பெட்டிக்கடைக்காரரே பிள்ளையார் கோவிலையும் பூசாரி போல் பார்த்துக் கொண்டு இருந்தார். இன்னோவாவை விட்டு இறங்கிக் கடைக்கருகே சென்று விசாரித்தார் பழனி, “இங்கே ராஜநாயகம்கிறது யாரு ?” ”நாந்தான்” என்று பெட்டிக் கடை ஓலையைப் பிடித்தபடி எழுந்து சரிவான பாதையில் மேலேறி வந்தார் கடைக்காரர்.

”இங்க ஜாதகம் எல்லாம் பார்க்கிறதுன்னு சொன்னாங்களே”,ஐயத்தோடு கேட்டார் பழனி. “ஆமா நாந்தான் பார்ப்பேன். இருங்க வரேன். என்றவர் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு இவருக்கும் நீட்டினார். ”இல்லங்க வேண்டாம். ஒரு ஜாதகம் பார்க்கணும்”

சனி, 29 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6241 - 6250 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

6241.புகழ்க் கன்னி l சாமி பழனியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1IdRU7LDxN4


#புகழ்க்கன்னி, #சாமிபழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#pugalkanni, #samipalaniappan, #thenammailakshmanan, 



6242.நாளமில்லாச் சுரப்பிகளும் மரபுவழி மருத்துவ முறைகளும் l எஸ் கதீஜா நாச்சியார் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XD4Q9PjOZk8


#நாளமில்லாச்சுரப்பிகள், #மரபுவழிமருத்துவமுறை,  #கதீஜாநாச்சியார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#endocrineglands, #kathijanachiyar, #thenammailakshmanan,

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 9

 **ஒற்றைச் செடியாய்த்

தனித்திருப்பது பிடித்திருக்கிறது.
எவ்வுயிர்க்கும் வானமும்
மழையும் வெய்யிலும் ஒன்றுதானே.

 

**தேடுகிறாயா எனத்
தெரிந்துகொள்ளவே
காணாமல் அடிக்கிறேன் என்னை.

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6231 - 6240 வீடியோக்கள்.

6231.இருவாட்சி l  காதல் வனம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6rv9i5KZkSU


#இருவாட்சி, #காதல்வனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#iruvatchi, #jathalvanam, #thenammailakshmanan, 



6232.சாக்கோட்டை வீரசேகரர் உமையாம்பிகை கோயில் l  புதுவயல் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=eNKNgVb6wZE


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 26 ஆகஸ்ட், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 9

 

9

”அக்கினியாத்தா எங்கள ஏன்தா இப்பிடிச் சோதிக்கிறே. ” மனமுருகிக் கையேந்திக் கேட்டுக் கொண்டிருந்தாக ஆவுடையப்பன். உங்கிட்ட உத்தரவு வாங்கித்தானே இந்தப் புள்ளைக்குக் கலியாணம் பண்ணினேன். ஆத்தா இல்லாத புள்ள மனக்கொறை இருக்கப்புடாதுன்னு புள்ளைகிட்டயும் கேட்டுத்தானே செஞ்சோம். மாப்பிள்ளைக்கு ரத்தப் புத்தாமே. என்ன செய்வேன் ஆத்தா?”

அவுகளை விட அதிகமாகக் கலங்கிக் கொண்டிருந்தாக கருப்பஞ்செட்டி. ”எங்க ஆத்தா போல உன்னயத்தானே நம்புனோம். எங்கள ஏன் கைவிட்டே.”

”சரி தம்பி கிளம்புங்க ஆறுமாசமா வைத்தியம் பார்க்குறோம். சரியாயிரும்னு நம்புவோம். வேலுவோட போய் பொங்கச்சீரைக் கொடுத்துட்டு வாங்க”.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6201 - 6210 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6201.திருமந்திரம்  - 591 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/q_ZWvQFIv6M


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6202.திருமந்திரம்  - 592 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/aOa2p8VYBRA


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

பந்த பாசங்களைச் சீர்ப்படுத்தும் ஸ்ரீதேவி மந்திரம்


உலகில் உள்ள பெண் வடிவங்கள் எல்லாம் நம் தாயின் வடிவங்களே என்று கூறும் மந்திரம் ஒன்று உள்ளது. மேலும் நம் மனக்கவலையை நீக்கவும், பந்தபாசங்களை அறுக்கவும், அதே சமயம் ஞானம் கிட்டவும் அம் மந்திரம் உதவுகிறது என்று அறியும்போது வியப்பு மேலிடுகிறதுதானே. அது என்ன மந்திரம் என்று அறிய ஆவலாய் இருக்கிறது அல்லவா!  மேலும் அந்த மந்திரம் எப்படி ஒரு மன்னனுக்கும் மனிதனுக்கும் உதவியது என்றும் பார்ப்போம்.


முன்னொரு காலத்தில் சுரதன் என்னும் அரசன் தன்னுடைய நாட்டை ஆண்டு வந்தான். திடீரென அவனுடைய அண்டை நாட்டு மன்னர்கள் அவன் மீது படையெடுத்தனர். அவனுடைய நாட்டை சூழ்ந்து வளைத்து முற்றுகையிட்டனர். எதிர்பாராத அந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மன்னன் அதற்குத் தயாராக தன்னுடைய படையை வைத்து இல்லாததால் தோல்வி அடைந்தான். எனவே நாட்டை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. மனம் நொந்து அவன் காட்டை அடைந்தான். மரங்கள் சூழ்ந்த அந்த அடர்வனத்துக்குள் மனம் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6191 - 6200 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6191.திருமந்திரம்  - 581 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/nTxAa8VGlUk


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6192.திருமந்திரம்  - 582 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/_oXjNT2Zs2E


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 22 ஆகஸ்ட், 2026

மக்கள் திலகம் எம்ஜிஆர்

 மக்கள் திலகம் எம்ஜிஆர்


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.. உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்.. கடமை அது கடமை.. எத்தனை எத்தனையோ நூறு பாடல்கள் இருந்தும் இப்பாடல்தான் மக்கள் திலகம் எம்ஜியாரை மக்கள் தலைவனாக வடிவமைத்த பாடல். நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் என்பதோடு முதன்மையாகத் தாயைத் தெய்வமாகப் போற்றியவர், மக்களிடம் பரிவு கொண்டவர், மனிதாபிமானம் மிக்கவர், விருந்தோம்பல் மற்றும் கொடைக்குணம் கொண்டவர் எம்ஜியார்.

கொடுத்துச் சிவந்த கரம்,  கலியுகக் கடவுள்,  பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர்,  இதய தெய்வம்,  வாத்தியார்,  இதயக்கனி என்றெல்லாம் புகழப்படும் திரு எம் ஜி ராமச்சந்திரன் தமிழகத் திரைப்பட உலகையும் தமிழக அரசியலையும் ஒருசேரக் கலக்கியவர். இவருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் திரு.தமிழ்வாணன் அவர்கள் வழங்கிய மக்கள் திலகம் என்ற பட்டமே மிகப் பொருத்தமானதாக தோன்றுகிறது. நடிகர்களில் ஆலயம் கட்டப்பட்டது என்றால் அது முதலில் எம்ஜிஆருக்கு என்றே சொல்ல வேண்டும். இன்றும் இருக்கும் அந்த ஆலயம் திருநின்றவூர் நத்தம்மேடு கிராமத்தில் உள்ளது. கலைவாணன் சாந்தி தம்பதியினர் எம்ஜிஆருக்காகக் கோவிலை அமைத்துக் கும்பாபிஷேகம் செய்து உள்ளார்கள்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6161 - 6170 வீடியோக்கள்.

6161.ஸ்ரீ மாதா புவனேஸ்வரி துதி l ஸ்ரீ தேவி பாகவதம் l தேனம்மை லட்சுமணன்

https://www.youtube.com/shorts/pBconIAO5wI


#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,



6162.திருப்பரங்குன்றம் முருகன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/y8l2gYT1S3o


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

ரெவே பார்க்கிங்கும் மேகக் கரடியும்

233.


4641.புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியின் தாளாளர்கள் கவிதா, சுப்ரமணியன் ஆகியோரின் புதல்வன் ரகு மருமகள் அழகு ஆகியோரின் பேபி ஷவர் நிகழ்ச்சி எஸ் ஆர் மஹாலில் நடைபெற்றது.  அப்போது  தேனம்மை லெக்ஷ்மணனின்," கருப்பை நம் உயிர்ப்பை, காப்பியக் கதைகள், ஆழ்வார்களின் கதைகள்" ஆகிய மூன்று நூல்களையும் முன்னாள் அமைச்சர் திருமிகு ரகுபதி அவர்கள் வெளியிட்டார்கள்.


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

பதிமூன்றாம் அத்யாயம் எட்டாவது ஸ்லோகம்

பதிமூன்றாம் அத்யாயம் எட்டாவது ஸ்லோகம்


    ராஞி தர்மிணி தர்மிஷ்டா:

பாபே பாபா: ஸமே ஸமா: l

    ராஜானம் அனுவர்(த்)தன்தே

யதா ராஜா ததா ப்ரஜா: ll

சனி, 15 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6151 - 6160 வீடியோக்கள்.

6151.நாச்சியாரம்மன் l  ரெ.முத்துக்கணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/il04qgiQCAI


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



6152.நிலாவின் ஒளி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/L80qvthmOrs


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

புதன், 12 ஆகஸ்ட், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 8

 

8

கல்யாணப் படைப்பு படைக்க வேண்டிக்கொண்டு அக்கினியாத்தா வீட்டில் படைச்சிக்கினு இருந்தாக ஆவுடையப்பன் குடும்பத்தார். ”இது கோழிப்படைப்புன்ன. ராத்திரி வெகு நேரமாகும். இந்த ரொட்டியத் தின்னுட்டு நீ போய் ஒறங்கப்பச்சி. சாமி கும்பிடும்போது எழுப்பிவிடுறேன்” என்று சாஞ்சாடிக் கொண்டிருந்த பேரனைச் சீராட்டிக் கொண்டிருந்தாக பங்காளி வீட்டு வள்ளியாச்சி.

சிவகாமிக்கும் சொக்கலிங்கத்துக்கும் கல்யாணமாகி மறுவீடு, மூணாம் வீடு வந்து போய் ஒருவாரம் கழிச்சு வீட்டுப் படைப்பு. எடயில பால்பழம் வைச்சுக் கும்பிடவும் பால்பழம் சாப்பிடவும் ஆத்தாவீடு வந்து போனாக. ”பாட்டையா பாட்டியாயா ஆத்தா எல்லாரையும் நெனைச்சுக் கும்பிட்டுக்காத்தா.” கல்கண்டுபோட்டுப் பாலைக்காய்ச்சி வெள்ளைப் பணியாரம் சுட்டு வைத்திருந்தார் கருப்பையாண்ணன்.  கருப்பஞ்செட்டி வகைப்பழங்களும் பூமாலைகளும் பூச்சரமும் வாங்கி வைத்து இருந்தாக. புதுமணத் தம்பதிகள் பேழையின் முன் விழுந்து வணங்கி ஆவுடையப்பன், கருப்பஞ்செட்டி கையால் விபூதி பூசிக்கினாக.

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சக்கரவர்த்தினி ரஸியா சுல்தானா.. மக்களின் ராணி

சக்கரவர்த்தினி ரஸியா சுல்தானா.. மக்களின் ராணி

கிபி 1206 – 1290 வரை இந்தியா துருக்கியிலிருந்து வந்த அடிமை வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. அடிமை வம்சத்தின் முதல் அரசர் குத்புதீன் ஐபக். இவர் டெல்லியில் சுல்தானகத்தை நிறுவினார். அவருக்குப் பின் அவரது மருமகன் இல்துமிஷ் பதவி ஏற்றார். அடுத்துப் பதவி ஏற்ற ரசியா இல்துமிஷின் மகளாவார்.

பதிமூன்றாம் நூற்றாண்டிலேயே ஆளும் தகுதிபெற்ற சகோதரர்கள் இருக்கும்போது அடிமை வம்ச சக்கரவர்த்தியான தனது தந்தை சம்சுதீன் இல்துமிஷிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்றாள். 1236 முதல் 1240 வரை நான்கே ஆண்டுகள்தான் ஆட்சி செய்தார். ஆனால் டெல்லியை ஆண்ட ஒரே பெண் சுல்தான் என்ற வரலாற்றைப் படைத்துச் சென்றார்.

சனி, 8 ஆகஸ்ட், 2026

வசந்த மாளிகை வாணிஸ்ரீ

வசந்த மாளிகை வாணிஸ்ரீ


"இனியவளே என்று பாடி வந்தேன், மயக்கம் என்ன மௌனம் என்ன, பால் போலவே வான்மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்,கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம், முல்லைப்பூ பல்லக்குப் போவதெங்கே, ஓ மைனா ஓ மைனா,  ஜனகனின் மகளை மணமகளாக, மேளதாளம் கேட்கும் காலம், என் ராஜாவின் ரோஜா முகம்" இப்பாடல்களில் நடித்த வாணிஸ்ரீக்கு 77 வயதாகிவிட்டதாம். இத்தனைக்கும் தமிழில் 39 படங்களே நடித்திருக்கிறாராம்.

அழகு பொழியும் முக லாவண்யம், ஓங்குதாங்கான உருவம் , பளிச்சென்று பெரிய கண்கள், வில் போன்ற புருவங்கள், தீர்க்கமான நாசி, பளபள கன்னங்கள், மலர்ச்சியான புன்சிரிப்பு, உயரத் தூக்கிப் போட்ட பன் கொண்டை, லிப் க்ளாஸ் போட்ட ரோஜா உதடுகள், மாடர்ன் உடைகளிலும் புடவையிலும் கூடக் கவர்ச்சிகரமாக இருப்பார், பரிபூரண அழகி. சிவாஜியின் ஜோடிகளில் மிகப் பொருத்தமானவர். இவர் நடித்ததில் எனக்கு பிடித்த படங்கள் சிவகாமியின் செல்வன், வாணி ராணி, வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன்.

புதன், 5 ஆகஸ்ட், 2026

சிம்மவர்மன் இரண்யவர்மன் ஆன கதை

 சிம்மவர்மன்  இரண்யவர்மன் ஆன கதை



எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் இறைவனின் கருணை இருந்தால் அது சூரியனைக் கண்ட பனி போல விலகி விடும் என்பதற்குச் சிம்மவர்மன்  என்ற மன்னனின் கதையே எடுத்துக்காட்டு.

முன்னொரு காலத்தில் கௌட தேசம் என்ற ஒரு தேசம் இருந்தது. அதை அரசாண்ட மன்னனின் மூத்த குமாரனின் பெயர் சிம்மவர்மன். பெயர்தான் கம்பீரமாக சிம்மவர்மன் என்று இருந்ததே தவிர அவன் உடல் முழுதும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தது. ஆகையால் அவன் தன் நாட்டில் இருக்க விருப்பமின்றி, முடிசூட்டி அதை ஆளும் எண்ணமும் இன்றி ராஜ்யத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பினான்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 8

 **வாழ்ந்திருந்தது ஒரு காலம்

வாழ்ந்ததை நினைத்திருப்பது ஒரு காலம்
காலங்கள் மாறுகின்றன நினைவுகள் மாறுவதில்லை.


**நிலவுடன்  உருண்டு
இருளுடன் இணையுமுன்
பெருநெருப்பொன்று
உரசி எழுகிறது தினசரி..
சூரியனாம்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6141 - 6150 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6141.திருமந்திரம்  - 571 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/wMFT0dPgUwI


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6142.திருமந்திரம்  - 572 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/53wbdy18Qyk


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 1 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6121 - 6130 வீடியோக்கள்.

6121.அருளார் அமுதே l ராமலிங்க அடிகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/_qM3m0o3PFo


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,



6122.மதுரை மீனாக்ஷி l  ரெ.முத்துக்கணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/JKbUQgC_nQc


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 30 ஜூலை, 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 7

 

7

”பொறந்தோடனே ஆத்தாளைத் தூக்கிப் போட்டு முழுங்கிருச்சி இந்தக்குட்டி. ” எனப் பேசிக்கொண்டிருந்தாக பங்காளி வீட்டில் இரு ஆச்சிகள். “ எறையாமப் பேசு. அப்பச்சிக்கும் ஐயாவுக்கும் இந்தக்குட்டின்னா ஓவியம், உசுரு. ஒருத்தருக்கு ஒரு சாமானைக் கொடாது. அதுவே வச்சிக்கினு உங்கும், திங்கும். வெளையாடும். ஆரையும் சேத்துக்காது. சரியான வறளி “

”ஆமாமாம் எதுனால அந்த ஒமையா எறந்து போனாளாம்.”

“ரெத்தப் போக்கு அதிகமா இருந்துச்சாம். மேக்கொண்டு சமைஞ்சாப்புல அவ ஊரணிக்குத் தண்ணி எடுக்கப் போனாளாம். அப்ப முனி அடிச்சிருக்குன்னு வேற சொல்றாக. குலதெய்வக் கோயில்லே கொண்டே சேத்துப்புட்டாகன்னு சொன்னாக. ஆர் கண்டா “

செவ்வாய், 28 ஜூலை, 2026

தேன்தீ.. தீந்தேன்.. எனது 30 ஆவது நூல்.

எனது 30 ஆவது நூல் " தேன்தீ.. தீந்தேன்" கவிதைத் தொகுப்பு இன்று காதலர்தினத்தில் சிநேகாவின் வெளியீடாக மலர்கிறது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன்.



***தேனம்மை லெக்ஷ்மணனின் தேன்தீ*

   இது, ஆசிரியர் - கவிஞர் - கட்டுரையாளர் - நகரத்தா ரியல் ஆய்வாளர் அவர்களின் முப்பதாவது நூல் (கவிதை) சிநேகா பதிப்பகத்தாரின் வெளியீடு.

ஞாயிறு, 26 ஜூலை, 2026

மன்னர் பின்னோரும் வட்டகைகளும்

183.

 

2091.மன்னர் பின்னோர் – மன்னருக்கு ஆட்சி, நிதி மற்றும் பாதுகாப்பில்  பக்கபலமாயிருந்து கடமை ஆற்றும் வணிகக் குலத்தோர். (சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது).

2092.வட்டகை – வட்டாரப் பகுதி, குறிப்பிட்ட இன மக்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதி. செட்டிநாட்டுப் பகுதிகளையே 64 வட்டகை என்பார்கள். பகுதிவாரியாகப் பிரிக்கப்பட்டு இதுபோல் 7 வட்டகைகள் உள்ளன.

சனி, 25 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6101 - 6110 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6101.திருமந்திரம்  - 561 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/FjBGwM-tT6s


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6102.திருமந்திரம்  - 562 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Mo9exBq1XA4


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 24 ஜூலை, 2026

குபேரர் ஆன குசேலர்

 குபேரர் ஆன குசேலர்


நண்பர்கள் ஒருவருக்காக இன்னொருவர் உதவி செய்வதும்அதே இன்னொருவர் ஒரு சில சமயங்களில் சுயநலமாய் நடந்து கொள்வதும் நாம் காணக்கூடியதேஅப்படிப்பட்ட ஒருவர்தான் சுதாமாயார் அந்த சுதாமா என்று கேட்கிறீர்களாஅவர்தான் கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர்சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக்கல்வி முறையில் கிருஷ்ணருடன் பயின்றவர்குசேலனான அவர் எப்படிக் குபேரன் ஆனார் என்று பார்ப்போம்

உஜ்ஜினியில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் கிருஷ்ணரும் குசேலரும் பயின்று வந்தார்கள் அக்காலங்களில் குருகுலங்களில் பயில்பவர்கள் குருசேவை செய்ய வேண்டும்குருபத்தினி கூறும் பணிகளை நிறைவேற்ற வேண்டும்அவ்வாறாக ஒருமுறை குருவின் வயலில் நீர்வரத்து அதிகம் இருந்ததால் பயிர் அழிந்துவிடும் என்று வரப்பில் மண்ணை வெட்டிப்போட்டு அடைக்க கிருஷ்ணர் செல்லவேண்டிய முறை வந்தது.

வியாழன், 23 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6091 - 6100 வீடியோக்கள். புத்தக விமர்சனங்கள்.

6091.உத்தம கிறிஸ்துவன் l கிறிஸ்டியான் உவைஸ் l ஆசீர்வாதம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7OUeKj74YCk


#உத்தமகிறிஸ்துவன், #கிறிஸ்டியான்உவைஸ், #ஆசீர்வாதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#bookreview, #thenammailakshmanan, 



6092.மலரும் உள்ளம் l அழ.வள்ளியப்பா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jjJid-YEspM


#மலரும்உள்ளம், #அழவள்ளியப்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#malarumullam, #azhavalliappa, #thenammailakshmanan, 

செவ்வாய், 21 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6081 - 6090 வீடியோக்கள்.

6081.சாமியே சரணம் சரணம் என் முருகா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BVoNwcR8k0c


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,



6082.கவலையைத் தீர்க்கும் கடவுள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=a3K6TTvdYak


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,

திங்கள், 20 ஜூலை, 2026

ஜெர்மனி வாழ் தமிழர்கள்

ஜெர்மனி வாழ் தமிழர்கள் 



அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்துத் தமிழர்கள் அதிக அளவில் வாழத் தகுதியான ஒரு இடம் என்றால் அது ஜெர்மனிதான். 1980 களில் வெளிநாடுகளுக்கு அதிக அளவு புலம் பெயர்ந்தவர்கள் ஈழத் தமிழர்கள். ஜெர்மனியிலும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் தமிழர்கள் புலம்பெயர்ந்து டுல்டுங் எனப்படும் இரட்டைக் குடியுரிமை வசதி பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

2010 ஆம் ஆண்டு முதல் அங்கே ஐடி துறைக்காக வேலைக்கு சென்றவர்கள் அதிகம். ஜெர்மன் மொழியைக் கற்றவர்களுக்கு அங்கே வேலைவாய்ப்புகள் அதிகம். மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியோர் மொழியைக் கற்றிருந்தால் விசா கிடைப்பதில் சிரமம் இருக்காது. அங்கேயே மேல் கல்வி கற்போருக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஜெர்மன் மொழியைக் கற்று இருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஞாயிறு, 19 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6071 - 6080 வீடியோக்கள்.

6071ராஜ்கோபால் ரெஸிடென்ஸியில் ஒரு விடியல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=lRKuTZgGNbs


#ராஜ்கோபால்ரெஸிடென்ஸி,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#rajgopalresidency, #thenammailakshmanan,



6072.வில்ஹெல்ம் ll  பயணித்த பாதையில் l  ஜிகுபுகு ஜிகுபுகு ரயிலே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=UW6RPDrVyKw


#வில்ஹெல்ம்llபயணித்தபாதையில், #ஜிகுபுகுஜிகுபுகுரயிலே, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#traintravel, #germany, #thenammailakshmanan, 

சனி, 18 ஜூலை, 2026

வெள்ளி, 17 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6061 - 6070 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6061.திருமந்திரம்  - 551 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/ETOQ_Ad51zs


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6062.திருமந்திரம்  - 552 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/98YmxiO2oVw


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 16 ஜூலை, 2026

ப்ரைம் படிகளும் ரெவே சரக்கும்

231.


4601.Sunday breakfast


4602.வாழ்க்கையிலிருந்தும் அனுபவத்திலிருந்தும்தான் எல்லோரும் கற்றுக்  கொள்கிறோம். பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

செவ்வாய், 14 ஜூலை, 2026

பதினொன்றாம் அத்யாயம் பதினெட்டாவது ஸ்லோகம்

பதினொன்றாம் அத்யாயம் பதினெட்டாவது ஸ்லோகம்


    தேயம் போஜ்யதனம் தனம் ஸுக்ருதிபி:

நோ ஸஞ்சய: தஸ்ய வை

    ஸ்ரீகர்ணஸ்ய பலேச்ச விக்ரமபதே:

அத்ய அபி கீர்த்தி: ஸ்திதா l

    அஸ்மாகம் மதுதானபோகரஹிதம்

நாதம் சிராத் ஸஞ்சிதம்

    நிர்வாணாத் இதி நைஜபாதயுகலம்

தர்ஷயன்தி அஹோ மக்ஷிகா: ll

ஞாயிறு, 12 ஜூலை, 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 6

 

6

”நெல்லிமரத்துப் பிள்ளையாருக்குச் செதர்காய் ஒடைச்சிட்டுத்தான் வந்தேம்ணே “ என்று பரிதவிப்போடு கூறினான் வேலு. “பரவாயில்லை விடப்பா “ என்று பத்தாவது முறையாகக் கூறினாக கருப்பஞ்செட்டி. கோழி விழுந்ததும் திண்ணையில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவர் எழுந்து வந்து “அதுகளாத்தான் குறுக்கால ஓடியாந்து விழுந்துச்சுக. எங்க கோழிகதான். ஒங்க தப்பில்ல போங்க “ என்று கூறிவிட்டார்.

என்னவோ இன்று பலி விழுந்தது நல்ல சகுனமாகத் தோன்றவில்லை வேலுவுக்கு. வீட்டுக்கு வந்ததும் பங்காளி வீட்டுச் சுகுணா ஆச்சி வந்து ஆலாத்தி எடுத்தாக. சாமி வீட்டில் விளக்கேற்றி இருந்தது. மூன்று கட்டு வளவு உள்ள பெரிய வீடு அது. அப்பச்சி கூட்டிக்கினுபோய் விபூதி பூசி விட்டாக. வேலு கார் டிக்கியிலிருந்து எடுத்து பொட்டி பைகளைக் கொண்டு வந்து பட்டாலை அறையில் வைத்தான்.

சனி, 11 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6041 - 6050 வீடியோக்கள்.

6041.ஸ்ரீ தேவி பாகவதம் l மகிஷாசுர சரிதம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/5DQwzx1U_Vo


#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,



6042.முத்தப் பருவம் l ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் l குமரகுருபரர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=F86jYvuj58s


#முத்தப்பருவம் #ஸ்ரீமீனாட்சிஅம்மன்பிள்ளைத்தமிழ், #குமரகுருபரர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 10 ஜூலை, 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 7

 ** ஒரு சந்தி விரதம்

இரு சந்தி தியானம்
இவை களைந்த காமம்
நிறுத்துகிறது முச்சந்தியில்.

 

**ஒத்த மிஞ்சி கொடுத்தேண்டி
தங்கமே தங்கம்
அது ஒண்ணுக்கு மூணா மின்னுவதென்ன
தங்கமே தங்கம்
ஒத்த மிஞ்சி நீ கொடுத்தே
மச்சானே மச்சான்
அது ஒன் பிரியம் போலப் பெருகிப் போச்சு
மச்சானே மச்சான்

--
இதுக்கும் எம் எல் எம் பிஸினஸுக்கும் சம்பந்தமில்ல மில்ல மில்ல

புதன், 8 ஜூலை, 2026

ஒப்பிட முடியா வீராங்கனை ஒனகே ஓபவ்வா

ஒப்பிட முடியா வீராங்கனை ஒனகே ஓபவ்வா

 

கர்நாடக மாநிலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டதால் கொண்டாடப்படும் இராணிகளுடன் ஒனகே ஓபவ்வா என்ற வீரதீரமிக்க பெண்மணியும் கொண்டாடப்படுகிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மீதும் முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆக்கிரமிப்பு தொடங்கியது.

 

கர்நாடகாவின் சித்ரதுர்கா இராஜ்ஜியத்தினைப் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் ஆண்டுவந்தவர் மதகரி நாயக்கர். வலிமையாகக் கட்டப்பட்ட சித்ரதுர்கா கோட்டை ஒரு குன்றின் மீது அமைந்திருந்தது. சித்ரதுர்கா கோட்டைக்கு எலுசுட்டினா கோட் என்ற பெயரும் உண்டு. அதாவது ஏழு வட்டங்களின் கோட்டை என்று பொருள்படும் . தற்போதைய பெங்களூருவில் இருந்து வடமேற்கே 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

செவ்வாய், 7 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6031 - 6040 வீடியோக்கள்.

6031.வூபர் நதியின் மேல் தொங்கு ரயிலில் ஒரு த்ரில்லிங் சவாரி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BHbnusIEgYw


#வூபர்நதி, #த்ரில்லிங்சவாரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#wupperriver, #thenammailakshmanan, 



6032.பஞ்சு மிட்டாய் l காதல்வனம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=w8F1b15EUYM


#பஞ்சுமிட்டாய், #காதல்வனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#panchumittai, #kathalvanam, #thenammailakshmanan, 

திங்கள், 6 ஜூலை, 2026

தேனம்மைலெக்ஷ்மணனின் நூல்கள்

தேனம்மைலெக்ஷ்மணனின் நூல்கள்

நூல் – பக்கம் – வருடம் – விலை – பதிப்பகம் - சமர்ப்பணம்


1.சாதனை அரசிகள் – 80 – ஜனவரி 2012 – 50/- - முத்துசபா - அய்த்தான்

ஞாயிறு, 5 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6021 - 6030 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6021.திருமந்திரம்  - 541 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/cxbfRsZHs2k


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6022.திருமந்திரம்  - 542 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/kIv1d_bulrw


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 4 ஜூலை, 2026

சின்னத்தம்பி பிரபு


என் காதலே என் காதலே என்ன செய்யப் போகிறாய், மழைவருது மழை வருது குடை கொண்டு வா, எனக்கெனப் பிறந்தவ ரெக்கை கட்டிப் பறந்தவ, குண்டு ஒண்ணு வைச்சிருக்கேன், கத்திரிக்காய் குண்டுக் கத்திரிக்காய், குளிச்சா குற்றாலம் கும்பிட்டா பரமசிவம், அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி, மழையின் துளியில் லயம் இருக்குது, பூவே இளைய பூவே, ஏதோ மோகம் ஏதோ தாகம், மாறுகோ மாறுகோ, பூங்காற்று உன் பேர் சொல்ல எனக் காதலும் காமெடியும் கலந்தவை பிரபுவின் படப்பாடல்கள்.

 

25, டிசம்பர் 1956 இல் பிறந்தார். நடிகர் திலகத்தின் இளைய மகன். பரந்த முகம். அகண்ட நெற்றிநிறைந்த தலைமுடி கன்னக்குழி, நிறைவான புன்னகை எப்போதும் ஹை எனர்ஜி லெவலில் இருப்பது இவரது ஸ்பெஷாலிட்டிஜாலி பால். தந்தையின் புகழ் விசிட்டிங் கார்டாகப் பயன்பட்டாலும் அதையும் மீறித் தன்னை நிலை நாட்டி ஜெயித்தவர்.

புதன், 1 ஜூலை, 2026

யூ ட்யூபில் 6001 - 6010 வீடியோக்கள்.

6001.ஸ்ரீ காளியம்மன் கவசம் l ஸ்ரீ துர்க்கைச் சித்தர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6WyKeXoHwCU


#ஸ்ரீகாளியம்மன்கவசம், #ஸ்ரீதுர்க்கைச்சித்தர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



6002.கலைமகள் வாழ்த்து l ரெ.முத்துகணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=df7bBS9rRTw


#கலைமகள்வாழ்த்து, #ரெமுத்துகணேசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 28 ஜூன், 2026

பதினொன்றாம் அத்யாயம் இரண்டாவது ஸ்லோகம்

 பதினொன்றாம் அத்யாயம் இரண்டாவது ஸ்லோகம்


    ஆத்மவர்கம் பரித்யஜ்ய

பரவர்கம் ஸமாச்ரயேத் l

    ஸ்வயமேவ லயம் யாதி

ததா ராஜா அன்யதர்மத: ll

வெள்ளி, 26 ஜூன், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 5

 

5

நாகப்பட்டினம் கப்பலடிக்கு ஆஸ்டின் காரை எடுத்துக்கினு டிரைவர் வேலு கருப்பஞ்செட்டியைக் கூட்டப் போயிருந்தான். கப்பலடியில் பெருவாரிக் கூட்டம்.

ஒரு வழியா வக்கூடையும் சூட்கேஸுகளையும் ட்ரங்குப் பொட்டியையும் எடுத்துக்கினு கருப்பஞ்செட்டியோடு கார் கிளம்பியது. ”அண்ணே அங்கன கணக்கப்புள்ள கல்யாணண்ணே நல்லா இருக்காகளா “ என்று விசாரித்துக் கொண்டான் ட்ரைவர் வேலு. அவனுக்கு பெரியத்தா மகளைத்தான் அவருக்குக் கொடுத்திருந்தது.

“அவுகளுக்கென்ன நல்லாத்தான் இருக்காக. பொட்டியடிப் பையனும் சமையக்காரண்ணனும் நல்லாப் பார்த்துக்குவாக அவுக வீட்டு அக்காளுக்கும் அவரு சாமான் குடுத்து விட்டிருக்காரு. ஒரு பையில இருக்கு. நாளைக்குப் பிரிச்சுத் தாரேன். அத அவுக வீட்டுல சேர்த்துரு வேலு.”

Related Posts Plugin for WordPress, Blogger...