ஜெர்மனி வாழ் தமிழர்கள்
அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்துத் தமிழர்கள் அதிக அளவில் வாழத் தகுதியான ஒரு இடம் என்றால் அது ஜெர்மனிதான். 1980 களில் வெளிநாடுகளுக்கு அதிக அளவு புலம் பெயர்ந்தவர்கள் ஈழத் தமிழர்கள். ஜெர்மனியிலும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் தமிழர்கள் புலம்பெயர்ந்து டுல்டுங் எனப்படும் இரட்டைக் குடியுரிமை வசதி பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.
2010 ஆம் ஆண்டு முதல் அங்கே ஐடி துறைக்காக வேலைக்கு சென்றவர்கள் அதிகம். ஜெர்மன் மொழியைக் கற்றவர்களுக்கு அங்கே வேலைவாய்ப்புகள் அதிகம். மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியோர் மொழியைக் கற்றிருந்தால் விசா கிடைப்பதில் சிரமம் இருக்காது. அங்கேயே மேல் கல்வி கற்போருக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஜெர்மன் மொழியைக் கற்று இருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
