எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 நவம்பர், 2012

மழை.

புலிக்குட்டிகளாய்
உருண்டு புரள்கிறது
மாநகரச் சாலைப்பள்ளத்தில்
மழைநீர்.

குளித்த எருமைகளாய்
அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில்
கட்டிக்கிடக்கின்றன வண்டிகள்.

சிறிதாய்ப் பெய்த மழையில்
மிதக்கும் நகரம் ஆகிறது
மாநகரம்.

வியாழன், 29 நவம்பர், 2012

நூலகங்களும் கழிப்பிடங்களும்.

நூலகங்களும் கழிப்பிடங்களும்.

இன்றைய இந்தியாவின் மிக அத்யாவசியமான தேவை எது என்றால் கழிப்பிடங்கள் என்றுதான் சொல்வேன். ஏனெனில் இந்தியன் ரயில்வேயில் பயணம் செய்யும்போதுதான் தெரியும் எத்தனை பெரிய நீளமான டாய்லெட்டை அரசாங்கம் அமைத்துள்ளது என்று. அது போக சுற்றி இருக்கும் வயல்வெளிகள், கம்மாய்கள் எல்லாமே இயற்கை உபாதையைத் தீர்க்கும் இடமாகவே திகழ்கின்றன.

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் செல்லும்போது அங்கே ஒரு செம்மொழி நூலகம் திறக்கப்படக் காத்திருந்தது. இந்த முறை அது திறக்கப்பட்டு செயல்படுவதாகத் தோன்றியது. ஆனால் அடுத்தே ஒரு முகம் சுளிக்கும் காட்சியைக் காண நேர்ந்தது. அதன் பக்கமிருந்த வயல்களில் சிலர் அங்கேயே போய் அதன் பக்கம் தேங்கி இருந்த மழைத்தண்ணீரையே அள்ளிக் கழுவிக் கொண்டிருந்தனர்.

புதன், 28 நவம்பர், 2012

எஸ்டிமேட்..

சின்னவன்., ”அம்மா. சீக்கிரம். செய்தாச்சா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துருவாங்க..”

”சரிடா. சமையல் ஆகிக்கிட்டே இருக்கு. கொஞ்சம் ஃபாண்டாவும்., ஐஸ்க்ரீமும் வாங்கி வந்திரு.”

பெரியவன் போனில் நண்பனிடம் .,”டேய் எங்க வீட்டுல என் தம்பி ஃப்ரெண்ட்ஸ் சாப்பிட வர்றாங்களாம். ஒரே மட்டன் சிக்கன்தான். ஆர்ப்பாட்டமா இருக்குடா.. எங்க அம்மாவுக்கு அவன்னா ரொம்ப பிடிக்கும். ”

சின்னவன் நண்பர்களை அழைக்கச் சென்றிருந்தான். எல்லாரும் வந்துவிட ., ”டேய், தம்பி. இன்னும் கொஞ்சம் நேரமாகும். அந்த ஃபாண்டாவை ஊத்திக் கொடு எல்லாருக்கும்.”

செவ்வாய், 27 நவம்பர், 2012

சிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 10, அக்டோபர் , 2011 திண்ணையில் வெளிவந்தது. 


திங்கள், 26 நவம்பர், 2012

குங்குமம் தோழியில் குட்டி ராஜாக்களும் சுட்டி தேவதைகளும்.

1. வளர்ந்து கொண்டே
போகிறாள் மகள்
குழந்தையாகிறேன் நான்.

2. அட்டைப் பெட்டியில் நீ
விளையாடிய பொம்மைகளை
அடுக்குகிறேன்.
நீ எழுந்ததும் உயிர்பெறும்
ஆசையில் காத்திருக்கின்றன அவை.

புதன், 21 நவம்பர், 2012

நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


டிஸ்கி:- இந்த விமர்சனம் 2 அக்டோபர் , 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஐந்தாவது வர்ணத்தின் முன்னேற்றம்..

அம்பேத்கார் மற்றும் பெரியார் இந்த இரு பெயர்கள் இல்லாமல் நாம் பெண்களின் விடுதலை பற்றிப் பேச முடியாது. வர்ணாசிர தர்மங்களை இறுக்கிப் பிடித்திருந்த நம் நாட்டில் (ஐந்தாவது வர்ணமாக குறிப்பிடப்படாவிட்டாலும்) பெண் இனம் என்ற ஒன்றுதான் அந்த ஐந்தாவது வர்ணம் என்று சொல்லலாம்.

மிக முன்னேறிய நாடுகளில் கூட மனைவி அடிமை மாதிரி நடத்தப்படுவதைக் காண்கிறோம். பெண்கள் மீது வன்முறை, பாலியல் துஷ்பிரயோகங்கள், குடும்ப வன்முறை, குழந்தைத் தொழிலாளிகள், கொத்தடிமைகள், பாலியல் தொழிலாளிகள் என்று பலவிதத்திலும் இன்னல்படும் இனம் பெண்ணினம். சொல்லப்போனால் எல்லா வர்ணத்தின் ஆண்களும் தங்களின் கீழானதாகக் கருதும் இனம் பெண்ணினம்தான். அடக்கி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆண்கள் கூட தங்கள் மனைவி தங்களுக்கு அடங்கி ஒடுங்கிப் போக வேண்டும் என எண்ணுகிறார்கள். சீதை கண்ணகி, நளாயினி இப்படித்தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது சமூகம்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

விடுவிப்பு.

நீங்கள் அவளை அனுப்பத்
தீர்மானித்து விட்டீர்கள்..
முதல்கட்டமாக அவளது
வேலைகளைப் பிடுங்குகிறீர்கள்.

சமைக்கக் கற்கிறீர்கள்..
துலக்கிப் பார்க்கிறீர்கள்.
பெட்டிபோடுபவனை விடவும்
அழகாய்த் துணி மடிக்கிறீர்கள்.

வியாழன், 15 நவம்பர், 2012

மனித நேயர்

தொழுகைத் தொப்பி
புனிதநூல் பிரதி
பேரரசன் உடுப்பிற்கும்
உணவிற்கும்
நெய்தபடி இருந்தார்.

மலை எலிகளை
விரிந்த நாகங்களை
விக்கிரகங்களை உடைத்து
பள்ளிகளை
எழுப்பினார்.

டாரா ஷிக்கோ
புறச்சமயியானான்,
அவனோடு ஷூஜா, முராட்,
சர்மட்டை சிதைத்தார்
வாழும் புனிதர்.

மதமெனும்
மதுவில் மூழ்கியவர்
வீராபாயையும்
இழந்தார் தந்தையின்
அன்பையும்.

புதன், 14 நவம்பர், 2012

குழந்தைகள் தினத்தில் பெற்றோரைப் போற்றுவோம்.

இந்தக் குழந்தைகள் தினத்தன்று என்னைக் கவர்ந்த மூன்று பெற்றோரைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நான் முகநூலில் சந்தித்தவர்கள் இவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்கள் ஈடுபடும், ஆர்வம் கொள்ளும் துறையில் ஊக்கம் கொடுப்பவர்கள். விடாமுயற்சியோடு செய்யும் கலையை இவர்கள் இவர்களின் பெற்றோரிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்க வேண்டும். எனவே என்னுடைய ராயல் சல்யூட்  இந்த மூன்று பெற்றோருக்கும்.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

காதலும் சாதலும்

இன்னிக்கு முளைச்ச 20 வயதுப் பிள்ளைகள்   நேத்திக்கு முளைச்ச 40 களில் இருக்கும் அப்பா அம்மாவையும் மதிப்பதில்லை.  முந்தாநாள் முளைச்ச 60 களில் இருக்கும் தாத்தா பாட்டி சொல்பேச்சும் கேப்பதில்லை.

ஒரு பெண் அப்பா அம்மாவை மதித்திருந்தால் அவர்களின் சம்மதத்தோடு மணப்பதுதான் காதலுக்கு மரியாதை. அதை விட்டு என்னவோ நடக்கட்டும் நாம் பாடு போவோம் எனப் போனதால் இன்று எத்தனை உயிர்கள் பலி. என்ன ஒரு சுயநலம். 20 வயது வரை வளர்த்த தகப்பன் முக்கியமில்லை, தாய் முக்கியமில்லை. சமூகத்தில் அவர்களின் மதிப்பு முக்கியமில்லை தன்னுடைய காதலும் காமமுமே முக்கியம் என்றால் அந்தப் பையனை அழைத்து வந்து  அவனுடைய நல்ல நடத்தைகளையும் குணநலன்களையும் புலப்படுத்தி சம்மதம் வாங்கித்தான் மணந்து கொண்டிருக்க வேண்டும்.

வெள்ளி, 9 நவம்பர், 2012

வியாபாரி..

மிக உன்னதமான
ஒன்றைப் போன்ற
பாவனைகளுடன்
எழுதப்படுகின்றன.
ஒவ்வொரு வார்த்தைகளும்
மிக எளிமையான
ஒன்றைப் பற்றி.

புரிந்து கொள்ளவும்
உணர்ந்து கொள்ளவும்
அயற்சி ஏற்படுத்தும்
ஒவ்வொரு நிமிடங்களும்
அதன் மதிப்பை
அதிகப்படுத்துகின்றன.

வியாழன், 8 நவம்பர், 2012

அவரோகணம்.

பழக்கப்பட்ட உடல்களைப்
போலிருந்தன அவை
செய்கையும் செய்நேர்த்தியும்
எத்தனை சிற்பியோ..
விரிந்தும் குறுகியும்
அகண்டும் பருத்தும்
ஆதிமூர்க்கங்களின் விலாசங்கள்
அறிகுறிகளின் கையெழுத்தோடு.

புதன், 7 நவம்பர், 2012

நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்த விமர்சனம்  17 செப்டம்பர் ,2011 திண்ணையில் வெளியானது.


செவ்வாய், 6 நவம்பர், 2012

வயதான பெண்களின் உடல் நலம்.

என் அம்மாவழிப் பாட்டி ( ஆயா) க்கு 87 வயதாகிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் கூட குந்தாணியில் உலக்கையால் இடித்து நெல் குத்துவார், மாவு இடிப்பார். என்னால் கூட அப்படி எந்த உடல் உழைப்பும் செய்ய இயலாது. ஏனெனில் நான் யந்திரங்களுக்கு அடிமை ஆகிவிட்டேன். தண்ணீர் இறைத்தல், மாவு ஆட்டுதல், அம்மியில் அரைத்தல் , துணி துவைத்தல் போன்ற எல்லாச் செயல்களும் எனக்காக எந்திரங்கள் செய்கின்றன. இன்னொரு காலத்தில் எனக்காக மூச்சு விடுதலைக் கூட எந்திரங்கள் நீட்டித்துக் கொடுக்கலாம்.

திங்கள், 5 நவம்பர், 2012

ரஜனி பற்றி இந்தியா டுடே ரஜனி சிறப்பிதழில்..

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஸ்பெஷல் பதிப்பு ஒன்றை இந்தியா டுடே வெளியிட்டது. அதில் ரஜனி பற்றிய கருத்துக்களைப் பகிரும்படிக் கேட்டிருந்தார்கள். என்னுடைய கருத்து இதோ..


“ ரஜனி என்றால் நம் மனதில் வரும் பிம்பம் என்ன. ஸ்டைல் என்றால் ரஜனி ரஜனி என்றால் ஸ்டைல். என் சகோதரர்கள் முரட்டுக்காளையில் வரும் , ”பொதுவாக என்மனசு தங்கம். ஒரு போட்டி”யின்னு வந்துவிட்டா சிங்கம் என்ற பாடலை பள்ளிப் பருவத்தில் அடிக்கடி பாடி ஆடுவார்கள்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

பூனைகள்..

அலுவலகம் செல்கின்றன.
தொழில் செய்கின்றன.
 கடைகள் நடத்துகின்றன.
சில சமைக்கவும் செய்கின்றன.

முக்கால்வாசி நேரம்
மூலையில் முடங்கிக் கிடந்து
பெரும் வேலை செய்ததாய்
நெட்டி முறிக்கின்றன.

வீட்டுக்காரி அள்ளி வைக்கும்
மீனில் திருப்தியடையும் அவை
வளர்ப்புப் பிராணிகள்தாம்
காவல் காப்பவை அல்ல.

வியாழன், 1 நவம்பர், 2012

REVIEW OF "LOOPER".. A SELF ENCOUNTER. லூப்பர். ஒரு சுய அழிவின் கதை.

LOOPER.. A SELF ENCOUNTER. லூப்பர். ஒரு சுய அழிவின் கதை.

கோபாலன் சினிமாஸில் லூப்பர் பார்த்தேன். ப்ரூஸ் வில்லிசின் படம். 2074 இல் காலப் பயணம் கண்டுபிடிக்கப்படுகிறது. வழக்கம்போல அது கிரிமினல் கூட்டங்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை அழிக்கப் பயன்படுத்துகிறது. கான்சாஸில் இருக்கும்  மாஃபியா கும்பல்கள் 30 வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்று தங்களுக்கு எதிரியாக மாறப்போகிறவர்களை வாடகைக் கொலையாளி அதாவது லூப்பர் மூலம் தீர்த்துக் கட்டுகிறது.

வீடழகு.

எனக்கான வீடு
அதென்று மையலுற்றுத்
திரிந்து கொண்டிருந்தேன்.

வெள்ளையடிப்பதும்
சித்திரங்கள் வரைவதுமாய்
கழிந்தது என் பொழுதுகள்.

நீர் வடியும் தாழ்வாரங்கள்
தங்கமாய் ஜொலிக்கும்
பித்தளையின் தகதகப்போடு.
Related Posts Plugin for WordPress, Blogger...