எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 செப்டம்பர், 2021

வால்நட் கேரமல்லும் ஃபெரேரோ ரோச்செரும்

 உலகப் புகழ்பெற்ற மியூசியங்களில் ஒன்று ஜெர்மனியில் இருக்கும் இம்ஹாஃப் சாக்லேட் மியூசியம். 1993  அக்டோபர் 31 இல் ரைன் நதியில் மேல் கட்டமைக்கப்பட்டது.  

1585 லேயே சாக்லேட்டை பானமாக அருந்தி வந்தாலும் மக்கள் அதைப் பதினேழாம் நூற்றாண்டில்தான் திடப் பொருளாக சாக்லேட்டாகப் பயன்படுத்தத் துவங்கினார்கள். அப்போது இது அரிதாகக் கிடைக்கும் விலையுயர்ந்த ஒரு அபூர்வப் பொருள். எனவே சீமான்களும் சீமாட்டிகளும் மட்டுமே சுவை பார்த்திருக்காங்க. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது பொதுமக்களுக்கும் எட்டிய கனியாயிடுச்சு. 

கொலோனில் இருக்கும் வித்யாசமான சாக்லேட் ஃபவுண்டன் எனப்படும் சாக்லேட் செடி. இதில் வேஃபர்ஸைத் தொட்டுத் தருவார் இங்கே பணிபுரியும் பெண் ஒருவர். கியூவில் நின்று அனைவருமே வாங்கிச் சுவைத்தோம். 



முதலில் இம்ஹாஃப் ஸ்டார்வெர்க் மியூசியம் என அழைக்கப்பட்ட இது பின்னர் லிண்ட் இதன் பார்ட்னரானவுடன் இம்ஹாஃப் சாக்லெடன் மியூசியம் என அழைக்கப்படுது. 

திங்கள், 27 செப்டம்பர், 2021

பூவில் பிறந்து பாவில் இணைந்தவர்கள்.

பூவில் பிறந்து பாவில் இணைந்தவர்கள்.

மனிதர்கள் பூவில் பிறக்க முடியுமா. அதுவும் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவர்கள் ஒரு பாடலில் இணைய முடியுமா. இதெல்லாம் முடியும் என நிரூபிக்கிறது திருக்கோயிலூர் என்னும் ஊர். வாங்க குழந்தைகளே அங்கே யார் வந்தார்கள், எப்படி இணைந்தார்கள், என்ன நடந்ததுன்னு பார்ப்போம்.
ஏழாம் நூற்றாண்டுக் காலம். திருக்கோவிலூர் என்னும் ஊரில் ஒரு குடிசை வீட்டின் முன்னே ஒருவர் வருகிறார். அடை மழை.. மின்னல் கண்ணைப் பறிக்கிறது. இடியோ கட்டிடங்களையே இடிப்பது போல் இடித்துத் தள்ளுகிறது. சரி அந்த வீட்டில் மழைக்கு ஒதுங்கலாம் என நினைத்துத் திண்ணையில் ஏறுகிறார். வெகுதூரம் கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்த களைப்பின் மிகுதியில் படுக்கிறார். அவர்தான் பொய்கையாழ்வார்.

சனி, 25 செப்டம்பர், 2021

சாட்டர்டே போஸ்ட். தன்னைச் செதுக்கிய சிற்பி பற்றி திரு. இரா.இரவி.

 தமிழ்நாடு அரசுச் சுற்றுலாத்துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார் திரு. இரவி. மதுரையில் தானம் அறக்கட்டளை எனது நூல்களை வெளியிட்ட நிகழ்வில் இவரைச் சந்தித்துள்ளேன். 

1992 ஆம் வருடம் குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த அரசுப் பணியாளருக்கான விருதைப் பெற்றவர். விழிப்புணர்வுப் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள் ஆகியவற்றில் முத்திரை பதித்தவர். மதுரைக் கவிஞர் பேரவையின் செயலர். 

23 நூல்கள் எழுதி உள்ளார். ஹைக்கூ திலகம், கவியருவி, கவிமுரசு கலைமாமணி விக்ரமன், எழுத்தோலை , ஹைக்கூ செம்மல், பாரதி ஆகிய  விருதுகள் பெற்றவர். இவரது ஹைக்கூ கவிதைகள் தமிழகத்தின் அநேகப் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன! இவரது ஹைக்கூ கவிதைகளை மாணவர்கள் க. செல்வகுமார், லெ. சிவசங்கர் , மாணவி ஜானு ஆகியோர் ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி  உள்ளார்கள். இன்னும் பல்வேறு சிறப்புகளும் விருதுகளும் பெற்றவர். சிறப்பு விருந்தினராகவும் சிறப்புப் பேச்சாளராகவும் அநேக அவைகளை அலங்கரித்தவர். 

இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித் தரும்படிக் கேட்டிருந்தேன்

தான் எழுத்துக்கு வரக் காரணமாயிருந்தவரும் தன்னைச் செதுக்கியவருமான முனைவர் திரு. இரா. மோகன் பற்றி எழுதிக் கொடுத்தார். நீங்களும் அவரைச் செதுக்கிய சிற்பியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். 

தமிழ்த்தேனீயும் நானும்!

கவிஞர் இரா.இரவி

 
தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவ்ர்கள் நாடறிந்த தமிழ் அறிஞர். அவரது இழப்பு உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத இழப்பு. மதுரையில் ஒரு வெற்றிடமானது. நூல் வெளியீட்டு விழாக்களை முன்நின்று நடத்தி தமிழன்னைக்கு அணிகலன்களைப் பூட்டி அழகு பார்த்தவர்.


பட்டிமன்ற நடுவராக இருந்து தனிமுத்திரை பதித்தவர். விழிப்புணர்வு பட்டிமன்றங்களை நடத்தியவர். தமிழுணர்வை விதைத்தவர். அவரது பட்டிமன்றம் கேட்டுவிட்டு, முடிந்ததும் ஐயாவை

கைகொடுத்துப் பாராட்டினேன். மடலாகவும் அனுப்புங்கள் என்றார். அப்படித்தான் தொடங்கியது எனது கட்டுரைப்பணி. மடல் அனுப்பினேன். படித்துவிட்டு உடன் அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.

அவருடைய தனிப்பேச்சு என்றாலும், தவறாமல் சென்று குறிப்பெடுத்து பாராட்டு மடல் அனுப்புவேன். இப்படித்தான் மலர்ந்தது எங்கள் நட்பு. திடீரென ஒருநாள் நீங்களும் பட்டிமன்றத்தில் பேசுங்கள் என்றார். முதலில் தயங்கினேன். ஊக்கம் தந்து, பேச அழைத்தார். முதல் பட்டுமன்றம் வெளியீரில் மகிழுந்தில் அழைத்துச் சென்றார். செல்லும் வழியிலேயே வாந்தி வந்தது எனக்கு. உடன் மனம் சோர்ந்து ஐயா, நான் பேசவில்லை என்றேன். உங்களால் முடியும் பேசுங்கள் என்று பேச வைத்தார். எத்தனை பட்டிமன்றங்கள் பேசினோம் என்று குறித்து வைக்கவில்லை. ஆனால் மோகன் ஐயா ஆவணப்படுத்துவதில் வல்லவர். உங்களுக்கு இத்தனையாவது பட்டிமன்றம் என்று எண் சொல்வார்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

அந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு

 அந்த வானத்தைப் போல மனம் படைத்த நல்லவரு


கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்த ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சப்ளை செய்வதாகச் சொன்னவர் இன்று இரண்டு அரங்கங்களிலும் ஆக்டிவாக இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.

தூரத்து இடி முழக்கத்தில் “உள்ளமெல்லாம் தள்ளாடுதே” என்ற பாடலைப் பார்க்கும்போதெல்லாம் இவர் வெற்றிக்குக் காரணம் இவரது பந்தா இல்லாத எளிமையே என நினைப்பேன். நல்ல திராவிட நிறம். தொப்பை இல்லாத உடல்வாகு. கிராமத்து இளைஞன் போல் தோற்றம். விசாலமான, நேர்மையாய் நோக்கும் பெரிய கண்கள். இந்தக் கண்கள் அற்புதமாக நடித்த ”சின்னமணிக் குயிலே” என்ற பாடலை என்னால் மறக்க இயலாது.

திங்கள், 20 செப்டம்பர், 2021

சினேகா பொட்டீக்கும் அன்னபூரணி நாராயணனும்.

 சினேகா பொட்டீக்கும் அன்னபூரணி நாராயணனும்


 

டிகிரி படித்துவிட்டு வீட்டில் இருக்கும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இல்லத்தரசி அன்னபூரணி நாராயணன். இவர் பிறந்தது அழகான ஆத்தங்குடியில். வாக்கப்பட்டது பாசமான பள்ளத்தூரில். இவரது அன்புக் கணவர் திரு. நாராயணன், ஆசை மகள் சினேகவல்லி, அருமை மாப்பிள்ளை சுப்பையா, தங்கப் பேத்தி யாழினி, அறிவான மகன் அவினாஷ் குமரன் என்று கட்டுசெட்டான குடும்பம் இவருடையது.

சனி, 18 செப்டம்பர், 2021

சாட்டர்டே போஸ்ட். மறக்கப்பட்ட மேதைகள் பற்றி திரு. முத்துமணி.

 ஜகர்த்தா, இந்தோனேசியாவில் வசித்து வருகிறார் நண்பர் முத்துமணி. இவர் தேவகோட்டையைச் சேர்ந்தவர். தமிழ் வான் அவை குழுமத்தில் இவரது கவிதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். கொரோனாவாகட்டும், சமூக இடைவெளியில்லாத மதுப்பழக்கத்தால் ஏற்படும் அவதி ஆகட்டும், பாரதி நூற்றாண்டாகட்டும், அறிஞர் அண்ணா பற்றியதாகட்டும், அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற சீற்றமிகு கவிதைகள் படைத்திடுவதில் வல்லவர் இவர்! 


எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பர். இவர் வணிகவியல் பட்டதாரியாக இருந்தாலும் கணக்கியலிலும்  எழுத்திலும் தன் முத்திரையைப் பதித்துக் கண்ணெனக் காத்து  வருகிறார். கவிதைகள்மேல் இவர் கொண்ட காதலால், பித்தால் கவிக்கிறுக்கனெனவும் அழைக்கப்படுகிறார்!.

வியாழன், 16 செப்டம்பர், 2021

சாக்லேட்களின் மகாத்மியம் - லிண்ட் - LINDT - ஜெர்மனி

ஜெர்மனியின் சாக்லேட் மியூசியத்தில் சாக்லேட்களின் வகைகள், தயாரிப்பு, தயாரிக்கும் மெஷின்கள், பாக்கிங், மோல்டுகள், விற்பனையகம், சாக்லேட்டின் பூர்வீகம், நூற்றாண்டுகளாக அதன் பயணம் பற்றி அறிய முடிந்தது. இவற்றை செக்‌ஷன் செக்‌ஷனாகப் பிரித்து விவரித்து எழுதியே வைத்திருக்கிறார்கள். எல்லாம் நமக்குத் தெரியாத ஜெர்மனில் இருக்கு ஹ்ம்ம்!. 

சாக்லேட், சொக்கலைட், சிக்லேட் என்று எல்லாம் என் பெரியம்மா 1950 களின் சாக்லேட்களை ஒரு முறை வகைப்படுத்தினார். டார்க் சாக்லேட், சாஃப்ட் சாக்லேட் என்றெல்லாமும் இருக்கிறது. வெள்ளை நிறம், அரக்கு நிறம், கருப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம் இன்னும் பல நிறக் கலவைகளில் சாக்லேட்டுகள் கிடைக்கின்றன. 

வாயில் போட்டால் கரையும் ஸ்விஸ் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. சில சாக்லேட்டுகள் நம்மூரு உஷ்ணத்தில் சாக்லேட் ட்ரிங்க் ஆகிவிடும் அபாயம் உள்ளவை. எனவே ரெஃப்ரிஜிரேஷன் செய்துதான் சாப்பிடணும். 

நம்மூரு டெய்ரி மில்க்கும், ஃபைவ் ஸ்டாரும், காட்பரீஸும், காஃபி பைட்டும்தான் பல்லாண்டுகளாக என் விருப்பமாக இருந்திருக்கிறது.  வான் ஹௌடன் என்று சிங்கப்பூரில் இருந்து என் மாமா கொண்டு வரும் சின்ன சிவப்பு கவர் போட்ட டார்க் சாக்லேட் எங்களுக்கு எப்போதாவது கிடைக்கும் பேரதிசயம். 

பெர்னாட்ஷாவின் போரும் காதலும் என்ற நாடகத்தில் வரும் வீரனுக்கு அதன் நாயகி சாக்லேட் சாப்பிடக் கொடுப்பாள். சர்காஸ்டிக்காக அவனை க்ரீம் வீரன் என்றும் அழைப்பாள். 

சனி, 11 செப்டம்பர், 2021

சாட்டர்டே போஸ்ட். அறம் வேரோடிய ஒளிமுத்து பற்றி திரு. துரை அறிவழகன்.

 நண்பர் திரு. துரை அறிவழகன் காரைக்குடி மரப்பாச்சி குழுவின் மூலம் அறிமுகமானவர். காரைக்குடி புத்தகத் திருவிழாவில் அவரது ஸ்டாலுக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் “தனபாக்கியத்தோட நவநேரம்” என்ற புத்தகமும் ஒன்று.இது அவர் தொகுத்த நூல். (நான் இன்னும் நூல் விமர்சனம்/அறிமுகம் செய்யவில்லை. இனிமேல்தான் செய்யவேண்டும் :) 


குழுமத்தில் அவ்வப்போது அவரின் படைப்புக்களைப் படிப்பதுண்டு.  இலங்கையில் பிறந்த இவர் கல்வி கற்றது தமிழகத்தில். “அவர்களுக்காக” ,” சிறகுக் குழந்தைகள்” என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ”ஸ்நோபாப்பாவின் அதிசயக்கடல்”, சிறார் எழுத்தாளர்களின் கதைகளைக் தொகுத்து “ ஒரு ஊர்ல ஒரு நரி” என்னும் தலைப்பில் நூல் கொணர்ந்துள்ளார். 

திங்கள், 6 செப்டம்பர், 2021

யூ ட்யூபில் 41 -50 வீடியோக்கள்.

 யூ ட்யூபில் நூல் பார்வைகளைப் பதிவேற்றி வருகிறேன். முன்னர் பதிவிட்ட நூல் பார்வைகளை எல்லாம் அமேஸானில் புத்தகமாக்கம் செய்துள்ளேன். நூல் பார்வைகளை எழுதுவதை விடப் பேசுவது எளிதாக இருப்பதால் யூ ட்யூபில் பதிவேற்றுகிறேன். பார்த்துட்டு சொல்லுங்க மக்காஸ் எப்பிடி இருக்குன்னு. 

41. கினோ - ஹருகி முரகாமி - நூல் பார்வை - தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=Z6G44DF7omE


42. சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸே - நூல் பார்வை - தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=16bhW19uYqo


43. கறுப்பழகன் - அன்னா ஸிவெல் - தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=3zmGBf397PA&t=11s


44.குலதெய்வங்களும், சேங்கை வெட்டுதலும், புரவி எடுப்பும் - தேனம்மை லெக்ஷ்மணன்.

சனி, 4 செப்டம்பர், 2021

திருவள்ளுவர் நற்பணி மன்றம் - நூறாண்டு கடந்து வாழும் மகாகவி.

 திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களாபுதூர்  கிட்டத்தட்ட ஏழு வாரங்களுக்கு மகாகவியின் விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டு நான்கு வாரங்களாகக் கொண்டாடி வருகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோபி செட்டிப்பாளையம் பங்களாபுதூரில் இலக்கிய சேவை ஆற்றி வருகிறது இவ்வமைப்பு. நூல்கள் சிலவும் வெளியிட்டு உள்ளார்கள். பல்வேறு சமூக சேவைகளும் செய்து வருகிறார்கள். 

அவர்கள் ஏழு வார நிகழ்வாக மகாகவியின் பிறந்தநாளை சிறப்பு அழைப்பாளர்கள் கொண்டு ஜூம் மீட்டில் நிகழ்த்தினார்கள். 

தலைப்பு :- நூறாண்டு கடந்தும் வாழும் மகாகவி

முதல் நிகழ்வில் நடிகர் ரமேஷ் கண்ணா கலந்து கொண்டு சினிமாவில் மகாகவின் பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசினார். ரசனையாக இருந்தது.


சாட்டர்டே ஜாலிகார்னர். அன்னு செய்த அற்புத பாதுஷா !!!

எங்களுக்கெல்லாம்  செல்லமாக அன்னு எனப்படும்  அனிதாஶ்ரீகாந்த் வசிப்பது மஹாராஷ்டிரா டோம்பிவிலி ல. மழலை பள்ளி ஆசிரியராக இருக்காங்க. இரண்டு குழந்தைகளுக்கு( பையன் மூணாவது வருஷம் கம்ப்யூட்டர் இஞ்சினியர் படிக்கிறான்..பொண்ணு பத்தாவது படிக்கிறா) அம்மா. ஆனா எனர்ஜி லெவலில் டீனேஜ் யங்ஸ்டர். அதிரடி சரவெடி எழுத்துக்குச் சொந்தக்காரர்.  என் அன்புத் தங்கைகளில் ஒருவர். 


இவருக்குப் புத்தகங்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். அதை விமர்சிக்கவும் பிடிக்கும். இவரை நான் கண்டடைந்ததே நுழைபுலம் என்ற நூல் விமர்சனக் குழுவில்தான். எல்லோருடனும் ஒத்திசைந்து செல்வார். அதே சமயம் செம குறும்புக்காரியும் கூட. 

வியாழன், 2 செப்டம்பர், 2021

குமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல்

 குமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல்


26.8.2021 குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ”நோய் தீர்க்கும் மலர் சமையல்” என்னும் தலைப்பில் எனது 19 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.

புதன், 1 செப்டம்பர், 2021

ஆச்சி தந்த சீர்

ஆச்சி தந்த சீர்


”ஆச்சி ஆச்சி “ குரல் கேட்டு இரண்டங்கட்டிலிருந்து வெளியே வந்தாள் வள்ளி.

முகப்பில் நீலவண்ண சுடிதாரில் ஒரு கல்லூரிப் பெண் தன் தாயுடன் நின்றிருந்தாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...