எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2020

செவ்வாய், 29 டிசம்பர், 2020

தன்னையே தரணிக்கீந்த லோபாமுத்ரா.

தன்னையே தரணிக்கீந்த லோபாமுத்ரா.

அன்னதானம் செய்வார்கள் பலர். கல்விதானம் செய்வார்கள் சிலர். இரத்ததானம் செய்வார்கள் மிகச்சிலர். ஆனால் தான் உயிரோடு இருக்கும்போதே தன்னை இந்த உலகுக்கு ஈந்தாள் ஒரு பெண். அதுவும் நீராக மாறி இவ்வுலக மக்களின் தாகம் தீர்த்தாள். யார் அந்தப் புனிதவதி எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மகிரிக் குன்றத்தில் வாழ்ந்து வந்தார் கவேர மகரிஷி என்பவர். அவர் தனக்கு ஒரு மகள் வேண்டுமென்று பிரம்மனைக் குறித்துத் தவமியற்றி வந்தார். மிகக் கடுமையான தவம். அந்தத் தவத்தின் நெருப்பு பிரம்மலோகத்தை எட்ட பிரம்மன் ஓடோடி வந்து “ என்ன வரம் வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தவத்தை நிறுத்துங்கள் “ என்றார்.
“பிரம்ம தேவரே.. எனக்கு ஒரு மகள் வேண்டும். “ என்றார் கவேர மகரிஷி.
மகள் வேண்டுமா. உடனே எப்படி உருவாக்க முடியும்.. யோசித்தார் பிரம்மா. மகாவிஷ்ணு முன்பொருமுறை உருவாக்கித் தன்னிடம் வளர்த்துவரும்படித் தந்த லோபாமுத்ரா என்ற பெண் குழந்தையின் ஞாபகம் வந்தது. அப்போதுதான் அவள் பதின்பருவத்தை எட்டியிருந்தாள்.

உடனே பிரம்மா கவேர மகரிஷியிடம் “ மகரிஷியே உங்கள் தவத்தை மெச்சி உடனே இந்த மகளை உங்களுக்குத் தருகிறேன். இவள் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டு என்னால் வளர்க்கப்பட்டவள் “

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

அன்பிற்கினிய ஆசிரியை அலமு அத்தை.




என் காதல்வனம் புத்தக வெளியீட்டின் போது எங்கள் உறவினரும் ஆசிரியையுமான அலமு அத்தையிடம் பாராட்டுக் கிடைத்தது. அம்பத்தூரில் வாழ்ந்து வரும் அவர் பட்டிமன்றங்களிலும் தலைமை ஏற்றிருக்கிறார். தீர்க்கமான சிந்தனைக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் சொந்தக்காரர். 

திங்கள், 21 டிசம்பர், 2020

அன்பொளி ANBOLI, தர்ம சக்கரம், நகரத்தார் மலர் – ஒரு பார்வை

 அன்பொளி ANBOLI, தர்ம சக்கரம், நகரத்தார் மலர் – ஒரு பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

காதல் வனத்தில் உறவினர்கள்

 காதல் வனத்தில் உறவினர்கள்.


சனி, 19 டிசம்பர், 2020

வீழ்தலின் நிழல் - நூல் திறனாய்வு.

 தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையும் சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து பல்வேறு நூல்களை ஆய்வு செய்கிறார்கள். நம் தோழி திருமதி. பவளசங்கரி தமிழர் வாழிவியல் ஆய்வு அறக்கட்டளையின் நிறுவனர். ஈழத்துக் கவிஞர் திரு. ரிஷான் ஷெரீஃப் அவர்களின் நூலை  (முன்பே வலைத்தளத்தில் விமர்சனம் வெளியிட்டுள்ளேன் ) நூல்களின் நண்பர்களின் குழுமத்துக்காக ஆய்வு செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. 

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

நமது மண்வாசமும் பெண்மொழியும்

 நமது மண்வாசம் மதுரையில் இருந்து வெளிவரும் மாத இதழ். தானம் அறக்கட்டளையின் ரிஃப்ளெக்‌ஷன் பதிப்பகத்தின் மூலம் இன்று வரை இடையறாது ஆறாண்டுகளுக்கும் மேலாகப்  பயணம் செய்து சமூக மாற்றத்தை உண்டாக்கி  வரும் இதழ். இதில் கிட்டத்தட்ட 50 இதழ்களுக்கும் மேலாகக் கதை, கவிதை, கட்டுரை எனப் பங்களிப்புச் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. 





Related Posts Plugin for WordPress, Blogger...