அன்னதானம் செய்வார்கள் பலர். கல்விதானம் செய்வார்கள் சிலர். இரத்ததானம் செய்வார்கள் மிகச்சிலர். ஆனால் தான் உயிரோடு இருக்கும்போதே தன்னை இந்த உலகுக்கு ஈந்தாள் ஒரு பெண். அதுவும் நீராக மாறி இவ்வுலக மக்களின் தாகம் தீர்த்தாள். யார் அந்தப் புனிதவதி எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மகிரிக் குன்றத்தில் வாழ்ந்து வந்தார் கவேர மகரிஷி என்பவர். அவர் தனக்கு ஒரு மகள் வேண்டுமென்று பிரம்மனைக் குறித்துத் தவமியற்றி வந்தார். மிகக் கடுமையான தவம். அந்தத் தவத்தின் நெருப்பு பிரம்மலோகத்தை எட்ட பிரம்மன் ஓடோடி வந்து “ என்ன வரம் வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தவத்தை நிறுத்துங்கள் “ என்றார்.
“பிரம்ம தேவரே.. எனக்கு ஒரு மகள் வேண்டும். “ என்றார் கவேர மகரிஷி.
மகள் வேண்டுமா. உடனே எப்படி உருவாக்க முடியும்.. யோசித்தார் பிரம்மா. மகாவிஷ்ணு முன்பொருமுறை உருவாக்கித் தன்னிடம் வளர்த்துவரும்படித் தந்த லோபாமுத்ரா என்ற பெண் குழந்தையின் ஞாபகம் வந்தது. அப்போதுதான் அவள் பதின்பருவத்தை எட்டியிருந்தாள்.
உடனே பிரம்மா கவேர மகரிஷியிடம் “ மகரிஷியே உங்கள் தவத்தை மெச்சி உடனே இந்த மகளை உங்களுக்குத் தருகிறேன். இவள் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டு என்னால் வளர்க்கப்பட்டவள் “

