எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஜூலை, 2012

பிரம்ம கபாலம்.:-

காறலோ கசப்போ
உணர்ந்து பார்க்க
ஒற்றைக் கோப்பையைத்
தேர்ந்தெடுக்கிறேன்.

புதைக்கப்பட்ட பீப்பாயில்
கசிந்து வழிந்ததை
மண்ணோடு ஊற்றிச்
செல்கிறான் ஒருவன்.

ஆசை.. சிறுகதை குங்குமத்தில்

ணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு் வெளியே செல்ல வேண்டும். இதுதான் பாமாவின் ஆசை.

திருமணத்தன்று கைபிடித்தது. அப்போது 20 வயது.

திருமணமான புதிதில் ஊட்டி போனபோது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டாள். ,”என்னங்க நாம கைகோர்த்துக்கிட்டு போலாமா..” கிண்டலாய்ப் பார்த்தவர் சொன்னார்., ”நீ கண்ட சினிமாவையும் பார்த்து கண்ட புஸ்தகத்தையும் படிச்சு கெட்டுப் போயிருக்குறே.”.

திங்கள், 30 ஜூலை, 2012

கத்துக்குட்டி..!

கத்துக்குட்டி..!

இரண்டு நாள் முன்பு என் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். வந்த விருந்தோம்பி வரும் விருந்து நோக்கியிருந்தது ஒரு காலம். அது கிட்டத்தட்ட ஒரு 3 , 4 வருஷம் இருக்கலாம். நாம பிரபல வலைப்பதிவர் ஆகிட்டபின்னாடி ரொம்ப விருந்தோம்புறது இல்லை. வந்தா சரி.. வராட்டியும் சரி.. அதுக்குன்னு வந்தா சரியா கவனிச்சுத்தான் விடுறது. (அட இது நிஜமான கவனிப்பு ஹுசைனம்மா..:))

வந்த விருந்தாளிங்க கண்ணுல அன்னிக்கு வந்திருந்த ஒரு பத்ரிக்கை தென்பட்டது. அதுல என்னோட அருமைத் தோழியின் கலை பற்றிய கட்டுரை 3 பக்கத்துக்கு வந்திருந்தது. சந்தோஷமா எடுத்துக் காட்டினேன். அதைப் பார்த்த இருவரும் படிக்கத் தொடங்கிட்டாங்க.

பிடிவாதம். - ( கவிதை) குமுதத்தில்..

ஏதோ ஒரு காரணத்துக்காகப்
பிடிவாதம் பிடிக்கும்போது
வெளிப்படுகிறது..

வெள்ளி, 27 ஜூலை, 2012

குழுமங்களும் பக்கங்களும்..

கடிதங்கள் எழுதும் பழக்கம் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகக் குறைந்துவிட்டது.எல்லாம் வலை மூலமே. ஜி மெயில் யாஹு மற்றும் செல்போன் மூலம் மெசேஜ்.., தகவல் அனுப்புதல் மற்றும் , யாஹூ மெசஞ்சர்., ஜி டாக் தான் உடனடி செய்திப் பரிமாற்றத்துக்கு. அழைப்பிதழ்கள் கூட மின்னழைப்பிதழ்களாக அனுப்பப்படுகின்றன. வீட்டு அட்ரஸ் கேட்பதில்லை யாரும். கைபேசி எண் அல்லது மெயில் ஐடிதான்.

இந்த சூழலில் முதல் முதல் கம்ப்யூட்டரில் மெயில் அனுப்பத் துவங்கும்போது நாம் தனிப்பட்ட மெயில் அனுப்பத் துவங்குகிறோம். பின்னர் நம் ஐடியை யார் யாரோ சேர்த்து க்ரூப் மெயில்களாக அனுப்பும்போது கொஞ்சம் சிரமத்துக்கு ஆளாகிறோம்.

வியாழன், 26 ஜூலை, 2012

புலம் பெயர்ந்த பெண்களின் மன அழுத்தம் தீர

புலம் பெயர்ந்த பெண்களின் மன அழுத்தம் தீர:-

உயிரோசையில் வெளியான இக்கட்டுரை (எனது பதினாலாவது நூலான) “பெண்ணும் மரபும்” என்ற தொகுப்பில் அமேஸானில் ஈ புக்காக வெளியாகி உள்ளது. அதனால் அதை இங்கிருந்து எடுத்துள்ளேன். 

புதன், 25 ஜூலை, 2012

அரிசிச் சோறா.. அப்பிடின்னா..?

அரிசிச் சோறா.. அப்பிடின்னா..?

இப்படி உங்க வாரிசுகள் கேட்கும் காலம் அதிகமில்லை ஜெண்டில் மேன் & உமன்.. மாதா மாதம் ஏறிக்கிட்டு இருந்த அரிசி விலை ( பால், பஸ், பெட்ரோல் இதெல்லாம் தனிக்கதை).. இன்னிக்கு நாளுக்கு நாள் ஏறுது. தங்கம் விலை மாதிரி நேத்து என்ன விலை. இன்று என்ன விலைன்னு டிவியில் கூட சொல்லலாம். பங்குச் சந்தை சதியா இருக்குமோன்னு கூட ( கமாடிட்டீஸ் மார்க்கெட் மாதிரி அரிசி மார்க்கெட்..) தோணுது.

மனித ஆயுதம்.. ”உலோகம்” . ஒரு பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

டிஸ்கி:- இந்த விமர்சனம்  2011,அக்டோபர் முதல் வாரம் உயிரோசையில் வெளியானது.

செவ்வாய், 24 ஜூலை, 2012

ஒன்றுமறியாத பூனைக்குட்டி

ஷாப்பிங் மால்களில்
முயல்குட்டிகளும்
பூனைக்குட்டிகளும்
கடந்த போது
அவன் கண்கள்
அவைபோல் துள்ளின.

கூட வரும் மனைவி
பார்க்கும்போது
கீழ்விடுவதும்
பின் ஏந்திக்கொள்வதுமாக
நீண்டன அவன் கண்கள்.

திங்கள், 23 ஜூலை, 2012

வெள்ளி, 20 ஜூலை, 2012

”பூவரசி” ஈழவாணி ஜெயாதீபன்

பூவரசி ஈழவாணி ஜெயாதீபன். :-

வாணி ஜெயாதீபன் இலங்கையைச் சேர்ந்தவர். ஈழவாணி என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். இவர் ஒரு பத்ரிக்கையாளர், கவிஞர், எழுத்தாளர், குறும்பட இயக்குநர். 2004 இல் இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு குடிபெயர்ந்தவர். பின் 2007 இல் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.

வியாழன், 19 ஜூலை, 2012

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சொக்கலிங்கம் செந்தில்வேல்.

மிகச் சிறுவயதிலேயே பெரிய பதவிகளை வகிப்பவர் சொக்கலிங்கம் செந்தில்வேல். மயிலாடுதுறை ஏவிசி கல்லூரிகளின் ( 3 கல்லூரிகள்) செகரெட்டரி கரெஸ்பாண்டண்டாக 12 வருடங்களாக இருக்கிறார். மெஜெஸ்டிக் மஹேந்திராவின் ட்ராக்டர்ஸின் மேனேஜிங் டைரக்டராக 2005 லிருந்து இருக்கிறார்.

புதன், 18 ஜூலை, 2012

ஆட்டோ கொள்ளையா., கொடையா. ..?

ஆட்டோ வருமான்னு கேட்டா சென்னை ஆட்டோக்காரங்க எங்க போகணுகம்னு கேப்பாங்க. நாம இடத்தை சொன்னதும் தலையை இடம் வலமா அசைச்சிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. ஏன்னா அவங்க போற இடத்துக்குத்தான் நாம போகணும். நாம் போக வேண்டிய இடத்துக்கு அவங்க வரமாட்டாங்க.

செவ்வாய், 17 ஜூலை, 2012

விண்ணில் பறந்த மனிதன் மனோஜ் விஜயகுமார்.

மனோஜ் விஜயகுமார். மனசு வைச்சா எதிலும் ஜெயிக்கலாம்னு சொல்ற திருப்பூர் தொழிலதிபர். எக்ஸ்டீஸ் என்ற பனியன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர். எக்ஸ்டீஸ் என்ற ப்ராண்டை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியவர். இவரோட ஆன்லைன் டீ ஷர்ட் ஸ்டோர்ஸ் பற்றி என் டி டி வி , சி என் பி சி , டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஹிண்டு, இண்டியன் எக்ஸ்ப்ரஸ் , டெக்கான் ஹெரால்ட், பிசினஸ் வேர்ல்டு, பிசினஸ் டுடே, இந்தியா டுடே ஆகியவற்றில் வந்துள்ளது.

திங்கள், 16 ஜூலை, 2012

TEACHERS OR CENTUM MAKING MACHINES..?

மாதா, பிதா, குரு , தெய்வம்னு சொல்றோம். இதுல குரு தெய்வத்துக்கு சமம். அந்த தெய்வங்கள்தான் நம்ம கல்விக் கண்ணைத் திறக்கிறாங்க. ஆனா அவங்களுக்கு இருக்க சிரமங்கள் எக்கச்சக்கம். இதுல நான் வகுப்புல சரியா சொல்லித்தராம தனியா ப்ரைவேட் ட்யூஷன் எடுக்கிற டீச்சர்களையோ, ஏதோ காழ்ப்புணர்வோடயோ, காம உணர்வோடயோ குழந்தைகள் கிட்ட நடந்துக்கிற ஆசிரியர்களைப் பற்றி சொல்லலை. அவங்க எல்லாம் விலக்கப்படவேண்டியவர்கள்.

சனி, 14 ஜூலை, 2012

இளங்கோ பத்மாவின் “ங்கா” விமர்சனம்.

நேற்று தான் உங்கள் “ ங்கா”  புத்தகத்தை வாங்கினேன். உடன் வந்த பத்மா வாங்கியது ஆன்மீகம், வீட்டுக் குறிப்புகள் தொடர்பான 3 புத்தகங்கள்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக படிக்கத் தொடங்கினோம். என் கையில் ”ங்கா”.பத்மா கையில் ஆன்மீகம் தொடர்பான ஒன்று. நான் முதலில் முடித்தேன்.

முடித்தவுடன் எழுதி வைத்த குறிப்புகளை வைத்து விமர்சனம் எழுதலாம் என்று நினைத்த போது,பத்மாவின் குரல்...'ங்கா'வைத் தாங்க இங்க.’.எனக்கு ஒரே ஆச்சரியம்...எனக்குத் தெரிந்து பத்மா கையில் முதன்முதலாய் ஒரு கவிதைப் புத்தகம்.

வெள்ளி, 13 ஜூலை, 2012

கார்ட்டூன் கதைகள்..

கார்ட்டூன் கதைகள்..
*********************

சில பல கோடுகளால்
கரடு முரடு வார்த்தைகளால்
குழந்தைகள் மனதில்
உருவாகி விடுகிறது
பொம்மைச் சித்திரக் கதைகள்..

அவ்வப்போது அவை
பொம்மைகள் போல
கதைப்பதும் குதிப்பதும்
களியாட்டம் தருகிறது.

வியாழன், 12 ஜூலை, 2012

இரட்டைக் குடிசைகள்

பக்கத்துப் பக்கத்தில்
இழைநெய்து கொண்டிருந்தன
இரட்டைச் சிலந்திகள்.
ஒன்றின் வீட்டை
ஒன்று ரசித்தபடி.

பூச்சிகள் தின்று
சலிக்கும் வேளை
இரண்டும் கால் பாவி
ஒன்றின் மையத்தில்
இன்னொன்றும் கூடி.

புதன், 11 ஜூலை, 2012

காரணங்கள்..

காரணங்கள்:-
***************

செய்யும் அனைத்திற்கும்
செய்யாத எல்லாவற்றுக்கும்
செய்ய விரும்பும் இன்னவற்றிற்கும்
காரணம் சொல்ல
வேண்டியதிருக்கிறது..

ஏன் செய்தோம்.
ஏன் செய்யவில்லை..
ஏன் செய்ய முடியாமல் போனது
ஏன் செய்திருக்கக் கூடாது..
எது தடுத்தது.
ஏன் செய்ய வேண்டும்
எதற்காக செய்ய வேண்டும்
யாருக்காக செய்ய வேண்டும்.

செவ்வாய், 10 ஜூலை, 2012

காஸ்மெடிக் சர்ஜரி .. டாக்டர் கண்பத் விஸ்வநாதன்.


டாக்டர் கண்பத் விஸ்வநாதன் சென்னையைச் சேர்ந்த பிரபல ப்ளாஸ்டிக் சர்ஜரி நிபுணர். இவர் சேத்பட்டில் விஷி காஸ்மெடிக் சர்ஜரி க்ளினிக் நடத்தி வருகிறார். அவரிடம் ப்ளாஸ்டிக் சர்ஜரி என்றால் என்ன ? அதனுடைய பயன்கள் என்ன ? எப்போது தேவைப்படுகிறது என்ற கேள்விகளை முகநூல் உள்டப்பியில்  கேட்டிருந்தேன். அதற்கு அவர் கூறிய பதில்கள் இங்கே.

டாக்டர் , "ப்ளாஸ்டிக் சர்ஜரியில் என்னென்ன வகைகள் இருக்கின்றன?. அதன் சிகிச்சை விபரம், அதற்கு ஆகும் செலவுகள் மற்றும் எங்கு ஒரு சாதாரண மனிதன் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையை தன்னுடைய பட்ஜெட்டுக்கு ஏத்தது போல செய்து கொள்ள முடியும்.? "

டாக்டர் கண்பத் விஸ்வநாத்தின் பதில்:-

திங்கள், 9 ஜூலை, 2012

தோழமை

தோழமை:-
***********

அலுவலகத்தில்
இலக்கியத்தில்
வழிப்பயணத்தில்
தோழிகள் உண்டு
அப்பாவுக்கு
அம்மா உட்பட..

வெள்ளி, 6 ஜூலை, 2012

ப்லாகர் ஸ்பெஷல்..

ஸ்ரீவித்யா பாஸ்கர். இவர்தான் லேடீஸ் ஸ்பெஷலில் முதல் அறிமுகமான ப்லாகர். பகோடா பேப்பர்கள் இவர் வலைத்தளம். இவரின் மொழி ஆளுமை, மொழியாக்கத் திறன் அருமை. குழந்தைகள் காப்பகம் மற்றும் பள்ளி நடத்திவரும் இவருக்கு குழந்தைகள் முன்னேற்றம் குறித்த அக்கறை மிக உண்டு. இவரின் வலைத்தளம்.http://vidhoosh.blogspot.com

மேனகா சத்யா. சஷிகா என்பது இவரது வலைத்தளம் .. மிக அருமையான சமையற்குறிப்புகளுக்குச் சொந்தக்காரரான இவர் இரண்டாவதாக அறிமுகமான ப்லாகர். ஓவன் சமையல், விதம் விதமான கேக்குகள் , வித்யாசமான உணவுகள் இவரது ஸ்பெஷாலிட்டி. இவர் மாதம் ஒரு விரதம் என்ற தலைப்பிலும் சில கட்டுரைகள் லேடீஸ் ஸ்பெஷலுக்காக எழுதி இருக்கிறார். இவரின் வலைத்தளம்.http://sashiga.blogspot.com

“சாதனை அரசிகள்” விமர்சனம்

 இந்நூலை வாசித்ததும் எனக்கு ஓர் ஆச்சர்யம் ஏற்பட்டது. என்னவெனில் பெரும்பாலும் கவிஞர்கள் கற்பனை புனைந்து எழுதித்தான் மற்றவர்களை மகிழ்விப்பார்கள். ஆனால் இந்தக் கவியோ 17 பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய பெண் சாதனையாளர்களின் உண்மைச் சம்பவங்களை முழுமையாகக் கேட்டு ஆராய்ந்து பின்பு அதை மாத்திரை வடிவத்தில் வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தொகுத்து அளித்திருப்பதுதான்.

வியாழன், 5 ஜூலை, 2012

பெருந்தன்மைக்காரியும்., பேரறிவுக்காரியும்



பொழுதைத் தின்பவளும்
பேரறிவுக்காரியும்
சந்தித்தார்கள்.

வர்க்க பேதம் அறியா
வேலைக்காரி
மக்கிப் போன மனையறத்தாள்.

மட்டம்தட்ட
கட்டிப்போட
கொட்டில் அடங்கியது இல்லம்.

புதன், 4 ஜூலை, 2012

கொத்தும் மயில்

கொத்தும் மயில்.:-
***************************

நத்தை, மரவட்டை
மண்புழு, செவ்வட்டை,
குத்திப் பார்க்க சுருளும்.

பூரான், பல்லி,
கரப்பு, பாம்பரணை
குச்சிபட தப்பித்தோடும்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

எல்லாம் வெற்றியே..

ஒரு வல்லரசுக்கான எல்லா சக்திகளும் இந்தியாவிடம் பெருகி வருகிறது. இந்த சூழலில் எல்லா திசைகளிலிருந்தும் வரும் நெருக்கடிகளில் இருந்து அது தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இறையாண்மையோடு கூடிய அரசியலைத் தக்க வைக்க அது பெரும் ப்ரயத்தனம்தான் செய்கிறது. அரசியல் தலைவர்களே தீர்வுகள் எடுக்கமுடியாமல் திணறும் போது தன் அன்றாட வாழ்க்கைக்கே போராடும் பொது ஜனம் என்ன மாறுதல்களை நிகழ்த்தி விட முடியும்..

நாம் மார்க் எடுக்கும் ப்ராடக்டுகளை உருவாக்குகிறோமே தவிர மாரல் நாலெட்ஜ் உள்ள குழந்தைகளை அல்ல. மனிதாபிமானம் மரித்து சுயநலம் ஓங்கி வருகிறது. எதிலும் நான்.. நான் .. நான் மட்டுமே. பொது நலம் என்பது பிள்ளைகளுக்கும் புகட்டப்பட வேண்டும். பள்ளிகளில் எல்லாவற்றுக்கும் பயிற்சிகள் இருப்பது போல மனவளக்கலையும் ஒரு வகுப்பாக நடத்தப்பட வேண்டும்.

ஆன்லைன் என்றொரு ராட்சசக் கரம் நம் அனைவரையும் இணைக்கிறது. தேவையற்றவற்றிலும் பிணைக்கிறது. செல்ஃபோன், ஐ பேட், லாப்டாப் என நாமும் பிள்ளைகளும் உலகம் முழுமைக்கும் ஊருடுவுகிறோம்.

திங்கள், 2 ஜூலை, 2012

தன்னை எண்ணுதல்..

ஒரு வாரம் நட்சத்திரப் பதிவராக அறிமுகப்படுத்தி முன்னிலையில் என்னை வைத்த தமிழ்மணத்துக்கு மனமார்ந்த நன்றிகள். (கிட்டத்தட்ட  1000  விசிட்டர்கள், 3 பின்பற்றுபவர்கள், 106 ஆவதாக ஒரு நாட்டில் இருந்து ஒரு பார்வையாளர் என இந்த  ஒரு வாரம் மகிழ்வாகச் சென்றது. நேரப்பற்றாக்குறையினால் நான் பலரின் ப்லாகுக்கு விசிட் செய்யாவிட்டாலும் வழக்கம்போல என்னைப்படித்து ஊக்கமூட்டிய சக வலைப்பதிவத் தோழமைகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் . வாழ்க வளமுடன். வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !! )

தன்னை எண்ணுதல்.
******************************

தரையில் இருக்கும்
கட்டங்களை, வட்டங்களை,
கோடுகளை எண்ணத்
துவங்குகிறாள் ஒருத்தி.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

பெண் சிசுக்களை நேசிப்போம்..

பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு.. இது இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பொதிகை தொலைக்காட்சியில் காரசாரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது . நல்ல கருத்துக்களைக் கூற ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இன்னும் விழிப்புணர்வு தேவை என்பது என் கருத்தாக இருந்தது.. அங்கு பேசப்பட்ட  பல சுவையான கருத்துக்களை இங்கே நான் என்னுடைய கருத்துக்களோடும் தர விழைகிறேன்.ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். இன்னும் பெண் பிறப்பின் சதவிகிதம் குறைந்து வருகிறது. அதற்கு பெண் சிசுக் கொலைதான் காரணம்.
Related Posts Plugin for WordPress, Blogger...