எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அதீதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதீதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 அக்டோபர், 2015

பூக்கள் பயணிக்கின்றன:-

பூக்கள் பயணிக்கின்றன:-
*********************************
பூத்து தினம்
உதிர்க்கிறீர்கள் பூவை.
கொஞ்சம் போதும்
உங்கள் ஆன்மதிருப்திக்கு

கண்டதை கேட்டதை
நினைத்ததை உணர்ந்ததை
அறிந்ததை தெரிந்ததை
எல்லாம் பூவாக்குகிறீர்கள்
எருவடித்தோ உரமடித்தோ

கண்டமேனிக்கு விளைந்து
பின் பூக்காடாய்
மடியும் பிணக்குப்பைகளை
பாதுகாக்கிறீர்கள்
புஷ்கரணியில் போடலாமென.

செவ்வாய், 31 மார்ச், 2015

மது.. பாலா..



மது.. பாலா..
==============
”நான் ரொம்ப ஸ்ட்ராங்க்ன்னு  நெனைச்சிண்டு  இருந்தேன் மது. ஆனா நான் ஒரு கூடு. வெறும் கூடு மட்டுமில்ல மதூ.. உளுத்துப்போன கூடு. தட்டினா உதுந்து போயிடுவேன்னு புரிஞ்சிடுத்து மதூ. யெஸ். “ என்று கூறிக் கண்கலங்கிய பாலாவை மதுவால் என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியவில்லை.

எது பேசினாலும் ஆறுதல் கூறப்போனால் கூட அந்த நேரத்தில் சரியாய்க் கூற முடியாதோ என்றிருந்தது.

“நான் அப்பாடான்னு நிம்மதியா சாஞ்சுக்கவும் ஒரு தோள் வேணும். என் தோள்லே சாயவும் ஒரு ஆள் வேணும். நான் இப்பிடிப் பேசுறது உனக்குத் தப்பாக்கூடப் படலாம் மதூ. “

காதல்னா இவ்வளவு சிரமம் இருக்காது பாலாம்மா.. ‘ எடுக்குறதும் கொடுக்குறதும்தான் ப்யூர் லவ். உரிமையோட இருக்குறதும்தான்.. கெஞ்சிக் கேட்டு வாங்குறதில்லை. “ சொல்ல நினைத்தும் மௌனித்தான் மது.

புதன், 4 மார்ச், 2015

பணிமனை.

விதியை மீறி
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்
ஓடிய வண்டிகள்
ஓவராயிலிங்குக்காகக்
காத்திருந்தன..

புதிதாயும்.,
தூசிபடிந்தும்.,
இளமையாயும்.,
முதுமையாயும்..

எதையோ காயப்படுத்தும்வரை
தான் உடைந்து வீழும்வரை.
பாகங்கள் உராய்ந்து தேயும்வரை.
பற்சக்கரங்கள் தவழும்வரை..

திங்கள், 9 பிப்ரவரி, 2015

விரல்கள்.:-



விரல்கள்.:-
================

பிரம்மிப்பு ஏற்பட்டது மனதில் அந்த ஓவியத்தைப் பார்த்ததும். எப்படி வரைய முடிந்தது இப்படி மனசை இழுத்துக் கட்டிக் கொள்கிறார்போல். இத்தனைக்கும் வெறும் பென்சிலால் ஷேட் மட்டும் கொடுத்து வரையப்பட்ட படம் அது. ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் இதழ் பிரிக்காமல் சிரிப்பது போல் இருந்தது.

அந்த இதழின் ஓரத்தில் லேசாய் ஒரு மடிப்பு. அதுதான் சிரிப்புக்கு ஆதாரம்.அந்தப் படத்தில் அந்தப் பெண்ணின் கைகள், விரல்கள், சீராய் சமப்படுத்தப்பட்ட நகநுனிகள், கவுன் சுருக்கம், சுருள் முடி, பம்மினாற்போன்று அந்தக் கன்னம், பளபளத்த தோள்பட்டை எல்லாமே சேர்ந்து சிரிப்பதாகப் பிரமை அளித்தது. கொஞ்சநேரம் எதைப்பறியும் சிந்திக்க முடியவில்லை.

அதன் மேல் வைத்த கண்ணை வேரோடு பிடுங்கித்தான் எடுக்கவேண்டும் போலிருந்தது. மனசு வரிவரியாய் அந்த ஓவியத்தைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருந்தது. ஓவியத்தின் இடது கை மூலையில் கீழ்ப்பக்கம் இராஜன் என்று போட்டிருந்தது.

வியாழன், 18 டிசம்பர், 2014

காண்டாமணியும் பிச்சைத் தட்டும். :-

ஊசிமுனை அமர்வு
சுகம் உனக்காய்
காத்திருப்பதை விட.

ஆசனவாய் வழி அது
கபாலம் பாய்ந்தாலும்
இருப்பின் வலி குறைவு,

ஞாபகம் புரட்டிய வெளியில்
கோயில் வாசலில்
பிச்சைக்காரனாய்,
உன் கருணைக்காய்த்
தட்டேந்திக் காத்து,

போவோர் வருவோரின்
காசுகளால்
நிரம்பிக் கிடக்கிறது தட்டு.

பல்லாக்கில்
பவனிவரும் நீ..
பக்கம்கூடத் திரும்பாமல்
பதுமையாய்..

செவ்வாய், 2 டிசம்பர், 2014

பழைய பேப்பர்..:-

பழைய பேப்பர்..:-
****************************
வாசித்தவுடன் அனைத்தும்
வீடடைக்கும் குப்பைகளாகி
எடைக்குப் போடத்
தகுதியானவையாகிவிடுகின்றன.

மொழிவாரியாக
பிரிக்க வேண்டும்.,
மானியத்திற்கல்ல..
விலை கூடக்கிடைக்க..

வியாழன், 6 நவம்பர், 2014

படுக்கைப் பூக்களும் பட்டாம் பூச்சிகளும்.

இரவு உடையில் வண்ணத்துப் பூச்சிகள்

குழல் சுழல கதை கேட்டுக்

கண் விரித்தபடி காத்திருக்கும்

படுக்கைப் பூக்களில்.

வியாழன், 9 அக்டோபர், 2014

வைப்பரில் மரிக்கும் ஈசல்.:-

கண்ணுக்குள் ஒளிந்து
கசிகிறது ஏக்கம்
புகைப்படங்களில்
பதிந்துவிடாதபடி.

ஒளிவிடும் ஆவலை
அடக்கமுடியாமல்
அலைகிறது விழி

உன் உருவச்
சாயலொற்றவைகளை
அளைந்து களைக்கிறது மூளை.

மனதுக்குப் புரிவதில்லை
அமாவாசையெலாம்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

மேகவிரலும் மழைத் தீண்டலும்.

வலிநீங்க வன்மையாய்
சுழற்றிச் செல்கிறது
காட்டாறு.
வலித்தவை
முண்டுமுடிச்சாய்த் தேங்க
அடுத்த சுழற்சிக்குத் தயாராய்ப்
பதுங்கிக் கிடக்கிறது..

நுரைபொங்க ஆவிபறக்க
ருசியாய்ப் பாய்கிறது
அருவி.
கோரம்பாய்க் கோடுகளாய்
வெய்யிலில் மின்னுகிறது
அருவிகளற்ற தடம்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இருபத்து நாலு மணி நேரமும்...

இருபத்து நாலு மணி நேரமும்.
********************************

கரண்ட் கட்..

இன்வர்டரும் கீ கீ என்று கத்தியபடி நின்றுவிட்டது.

வேறு வழியில்லாமல் வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டு கம்ப்யூட்டரில் ஒரு கதையை டைப் அடித்துக் கொண்டிருந்தாள் லதா. பாட்டரி இன்னும் தீராமல் இருந்தது. சீக்கிரம் முடிக்கவேண்டும்.

நிழலாடியது. பக்கத்து வீட்டக்கா கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

வேலை கிடைச்சுட்டுது..

அன்றையப் பொழுது ரொம்ப உற்சாகமாய் விடிவதாய்த் தெரிந்தது ரவிக்கு. 
 
இன்றைக்கு இருபத்தைந்தாவது இண்டர்வியூ. எம்ப்ளாய்மெண்ட் 
எக்ஸ்சேஞ்ச் மூலம் வந்தது.
 
நாலரைக்கே விழிப்பு வந்து விட்டது. எழுந்துபோய் பல் விளக்கிவிட்டு 
உள்ளே வந்தபோது ’முணுக், முணுக்’ கித்த சிம்னியில் அம்மா 
அடுப்புப் பற்ற வைக்க முயற்சிப்பது தெரிந்தது.
 
--- “ ஏம்பா ..! இப்பவே ஏந்திருச்சிட்டே..! கொஞ்சம் இரு 
டீ போட்டுத் தாரேன்..! “ என்றூ கூறிப் பின் வீட்டுக்குச் சென்று 
100 மில்லி பால் வாங்கி வந்தாள் பத்துப் பேருக்கு டீ கலக்க..! 
 
பௌர்ணமி இரவில் நட்சத்திரமே வானில் இல்லாததுபோல் 
அம்மாவும் இருந்தாள் மழுமழுவென்று, நகையணியாத பௌர்ணமி மாதிரி.!
 

புதன், 28 மே, 2014

கனக்கும் இறக்கைகள்.

பறந்து பறந்து
களைத்து வந்தமர்கிறது
ஒரு பறவை.
இளைப்பாறுதல் தந்த கிளையில்
ஒட்டிக் கொள்கின்றன கால்கள்.
இருப்பிடம் கிடைத்த இன்பத்தில்
சோர்ந்திருக்கின்றன இறகுகள்.
வேண்டும்போதெல்லாம்
கனிகள் கிடைக்கின்றன வாய்க்கருகில்.
கிறங்கிக் கிடந்த ஒரு கணத்தில்
யோசிக்கத்துவங்குகிறது பறவை,

திங்கள், 26 மே, 2014

அப்பத்தா.



அப்பத்தா:-
*******************
அவளுக்குக் கோபமாய் வந்தது. ரொம்பக் கோபம். நேத்துவரை சிட்டி வெளையாடுறதுக்காக அவள் வீட்டுக்கு வந்து ஓடிக் கொண்டிருந்த அந்த வள்ளிக் குட்டி இன்னைக்கு சன்னல் வழியாக இவள் கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காமல் சென்றது. ‘சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பி வரும்ல.. அப்பப் பார்த்துக்கலாம்.’.

இவள் திரும்பி வந்து அப்பத்தாவின் தலை மாட்டில் நின்று எக்கிப் பார்த்தாள். ஆயா வீட்டிலிருந்து அப்போதான் அப்பத்தா வீட்டிற்கு வந்திருந்தாள். அப்பத்தா மேல் அவ்வளவு பிரியம் என்றோ வெறுப்பு என்றோ சொல்வதற்கில்லை. இருந்தாலும் அவளுக்கு அப்பத்தாளைப் பிடிக்கும்.

திங்கள், 19 மே, 2014

ப்ரொஃபஸர்.



ப்ரொஃபஸர்.
================

ப்ரொஃபஸர் அந்தக் கண்ணாடிக் கதவுகளின் உட்புறத்தில் துல்லியமாய்த் தெரிந்தார். வெள்ளை வெளேரென்று ஜிப்பாவும், பாண்டும் அணிந்து கொண்டு. கிரிஸ்டல் போலப் பல்வரிசை மின்னியது. கருட மூக்குடன் அலையலையாய்ப் புரண்ட சுருள் முடிகளுடனும் அவர் கிளாஸ் எடுப்ப்தே அமர்க்களமாய் இருக்கும். கையில் சாக்பீஸுடன் அவர் தெர்மோ டைனமிக்ஸை எடுக்கும்போது பார்த்தால் செங்கோல் ஏந்தின அரசன்தான். அந்தக் குரலின் கம்பீரத்தில் மயங்கிக் கட்டுண்டு மாணவர்கள் வகுப்பை ஒழுங்காய் அட்டெண்ட் செய்வார்கள்.

அந்த ஹால் முழுக்கக் குரல் தெறித்து எதிரொலித்து ‘ உன்னை எங்கும் செல்ல விடமாட்டேன் ‘ என்று கையைப் பிடித்து வகுப்பில் உட்கார வைக்கும். ”சந்தேகங்கள் பாடங்களில் ஏற்பட்டால் உடனே வந்து என்னிடம் கேளுங்கள்.,”  என்று அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக சந்தேகம் வந்ததோ இல்லையோ அவரின் எக்ஸ்ப்ளனேஷன்களைக் கேட்க வேண்டியே அவரைச் சுற்றிக் கும்பல் குழுமிக் கொண்டேயிருக்கும்.

புதன், 16 ஏப்ரல், 2014

அன்ன பட்சி - அணிந்துரையில் கனிந்துரைத்த சுசீலாம்மா.

நன்றி அதீதம் சிறப்பான முன்மொழிதலுக்கு. :-





 மிக்க நன்றி சுசீலாம்மா..


////எம்.ஏ.சுசீலா
[எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்,தமிழ்ப்பேராசிரியர்-பணி ஓய்வு(பாத்திமாக்கல்லூரி)]
:

அன்னப்பட்சியை நீவியபடி…..

*கொப்பளித்துப் பெருகும் உற்சாகமும் மலர்ச்சியும் கொண்ட பதின்பருவத்துப் பெண்ணாக, வேதியல் மாணவியானாலும் சமகாலப்படைப்புக்களின்பால் தணியாத தாகம் கொண்ட வாசகியாக, தினம் ஒரு கவிதையை எழுதிப் பார்த்தபடி மலர்ந்து கொண்டிருக்கும் துடிப்பான படைப்பாளியாக….இப்படிப் பல பரிமாணங்களில் ‘80களில் எனக்கு அறிமுகமாகியிருந்த என் அன்பு மகளும் மாணவியுமான தேனம்மை லட்சுமணனின் இன்றைய வளர்ச்சிக்கு உரைகல்லாகக் கைகளில் தவழும் ’அன்னப்பட்சி’யைப் பரிவோடு நீவித் தந்தபடி இந்த அணிந்துரை……

புதன், 9 ஏப்ரல், 2014

காதலா.. காதலா..

1. தனிமைப்பனி மூடிப்
படுத்திருக்கிறேன் பூவாய்.
சூரியனாய் வந்து
துயிலெழுப்பிக்
கதகதப்பாய் அணைக்கிறாய்.

2. எத்தனை முறை
தழுவினாலும் போதவில்லை.
திரும்ப திரும்பத்
தழுவச் சொல்கிறது
ஏறு தழுவுதலாய்..

3. காற்றிசைச் சிணுங்கியாய்
காத்துக் கிடக்கிறேன்.
நீ  காற்றாய்த் தழுவி
சரசரவென முத்தமிட
கலகலத்துச் சிரிக்கிறேன்.

திங்கள், 7 ஏப்ரல், 2014

நிழல்களை எரித்த நிஜங்கள்.



நிழல்களை எரித்த நிஜங்கள்:-
===============================

சந்தானம். சந்தானம். ஹூம் இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கின்றேன். நல்ல பரிச்சயம் கூட. எங்கே எங்கே .. என்று பாலகுமாரனின் ”மௌனமே காதலாயில்” வந்த  கதாநாயகன் பெயரைப் படித்துவிட்டு மனதினுள் தேடினாள் சுசீ.

“ஹாங்.. வந்துவிட்டது. கோ எஜுகேஷனில் எட்டாப்பூப் படிக்கும்போது எதுக்கெடுத்தாலும் என்னோட போட்டி போடுற சந்தான ராமன். வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு, வெள்ளையாய் அணிந்து கொண்டு, வெள்ளையாய்க் காண்பித்துக் கொண்டு எதுக்கெடுத்தாலும் படிப்பு, டிராமா, விளையாட்டுப் போட்டி அத்தனையிலும் போட்டி போடும் சந்தானம். தினம் அழகாய் உடையணிந்து கொண்டு நெற்றியில் கீற்றுப் பிறையாய் சந்தனத்துடன் வரும் சந்தானம்..

திங்கள், 31 மார்ச், 2014

சொர்க்கத்தின் எல்லை நரகம்.



சொர்க்கத்தின் எல்லை நரகம் :-
=================================

மீனாட்சிக் குட்டிக்குச் சந்தோஷமாயிருந்தது. அவளின் சரோசாச்சி ஆபீஸுக்குப் போயிட்டாக. அய்ய்ய்ய். இன்னைக்கு என்ன இந்தக் குளிக்குற சோப்பையும், சீப்புப் பெட்டியையும், பவுடர் டப்பாவையும் வெளிய வச்சுட்டுப் போயிட்டாக.

அடுப்படிக்குப் போய்ச் சமயல் பண்ணின சாமான்களை எல்லாம் வெளக்க எடுத்து வச்சுப்பிட்டு, எல்லாச் சாமான்களையும் உள்ளே வெச்சுப் பூட்டிப்புட்டுத் தொவைக்குற துணி, வெளக்குற சாமான், மத்தியானம் குட்டிக்குத் திங்கக் கொளகொளத்துப் போன நேத்தைச் சோறும், சுண்டக்குழம்பும், மத்யானம் இட்டலிக்கு ஆட்ட அரிசியும், உளுந்தும் ஊற வைத்துவிட்டுப் போயிருந்தாள் சரோசாச்சி.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

படிகளும் புள்ளிகளும்.

உச்சியைப் பார்த்ததும்
திகைப்பாய்த்தானிருந்தது.
கண்குவித்து
ஒவ்வொரு படியாய்
நகரத் துவங்கியதும்
அடுத்த படியே தேடலானது.
ஒரு சில படிகளில்
ஓய்ந்து அமர்வதும்

புதன், 30 அக்டோபர், 2013

சங்கிலித்தொடர்..:-

 சங்கிலித்தொடர்..:-
*****************************
தாய் தந்தையுடன்
விடுமுறைக்கு உறவு வீடுகளுக்கு
வரும் குழந்தை அடம் பிடிக்கிறது.,
நினைத்ததைச் செய்ய.

அது சொல்பேச்சு கேக்க
கையைப்பிடித்தபடி
தாயோ, தந்தையோ,பின்புயத்தில் 
லேசாய் நிமிண்டுகிறார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...