எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அன்ன பட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்ன பட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 ஜூலை, 2017

குட்டி ரேவதி அவர்களுக்கு நன்றிகள்.

சில விஷயங்கள் காலம் தப்பிக் கண்ணில் படும். அப்படிப்பட்ட ஒன்று நேற்று முகநூலில் படித்துச் சந்தோஷமடைந்த குட்டி ரேவதி அவர்களின் இந்த போஸ்ட்.

பெண் எழுத்துக்களுக்கான ஊக்கம் மட்டுமல்ல. கவிதை நூல்களுக்கான ஊக்கமும் குறைந்துவரும் காலகட்டத்தில் இம்மாதிரி ஊக்கங்கள் எழுத்தில் நிலைத்திருக்க வைக்கின்றன.

பெண்களுக்குப் பெண்களிடம் இருந்து கிடைக்கும் ஆக்கபூர்வமான வரவேற்புகள் சிறப்பானவை. காலம் கடந்தும் ஜெயிப்பவை. அன்பும் நன்றியும் குட்டி ரேவதி :) 


Kutti Revathi
17 January 2014 ·

2014 புத்தகக்காட்சியில்
பெண்களின் நவீன இலக்கியப்படைப்புகள் அதிகம்!

நண்பர்களே, இந்தப்புத்தகக்காட்சிக்கு வெளியாகியுள்ள பெண்களின் படைப்புகள் இவை. தற்கால இலக்கியப்படைப்பாக்கத்தில் பெண்களின் பங்கு அதிகமாவதை இது உறுதி செய்கிறது. பெரும்பாலான படைப்புகள் பெண்களின் முதல் நூலாகவும் அவை கவிதையாகவும் இருப்பது வியப்பைத் தருகிறது. 'போராட்ட வாழ்வியலாக' வந்துள்ள இரு நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அதே சமயம், நாவல், சிறுகதை, கவிதை, பயணநூல், கட்டுரைத்தொகுப்பு, மொழியாக்கம் என வடிவங்களும் விரிந்துள்ளன.

இங்கே, ஏதேனும் படைப்புகள் விடுபட்டிருந்தால் அது தற்செயலானதே. மன்னித்து, அந்தப்படைப்பையும் இங்கு பதிவு செய்ய நண்பர்கள் உதவினால் சிறப்பாக இருக்கும். நன்றிகள்.

புதன், 21 டிசம்பர், 2016

நலந்தாவில் எனது நூல்கள். தனித்தமிழும் இனித்தமிழும் கருத்துப் பேழை.

////அன்புடையீர் 

வணக்கம் 

வ. சுப. மாணிகனார் நூற்றாண்டை முன்னிட்டு நலந்தாவின் "தனித் தமிழும் இனித் தமிழும்" கருத்துப் பேழையில் ஆக்கம் நல்கி பங்கு பெற வேண்டுகிறோம். 

தங்கள் கருத்துகளை 500 சொற்களுக்கு மிகாமல் கை எழுத்து பிரதியாகவோ தட்டச்சுப் பிரதியாகவோ 05.01.2017 க்குள் அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி

அன்புடன்
நலந்தா செம்புலிங்கம் .////
*                *                   *               *                  *                   *                *
காரைக்குடி நலந்தா புத்தகக் கடை நிகழ்த்தும் ”இனித்தமிழும் தனித்தமிழும் ” என்ற தலைப்பில் கருத்துப் பேழைக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பிப் பங்கு பெற வாழ்த்துகிறேன்.
நலந்தா = நல்ல புத்தகக் கடை. இதை நடத்தி வருபவர் தேவகோட்டையைச் சேர்ந்த திரு ஜம்புலிங்கம் அவர்கள். 

திங்கள், 5 டிசம்பர், 2016

நூல் உலகத்தில் அன்னபட்சியும் பெண்பூக்களும்.

எனது மூன்றாவது நூலான அன்னபட்சியும் நான்காவது நூலான பெண்பூக்களும் நூல் உலகம் என்ற ஆன்லைன் ஷாப்பிங் சைட்டில் கிடைக்கிறது. ஸ்டாக் இருக்குதுன்னு போட்டிருக்காங்க. இவை இரண்டும் கவிதை நூல்கள். விருப்பமுள்ளவர்கள் வாசிக்கணும்னா இதில் ஆர்டர் செய்யுங்க. இரண்டு மூன்று நாளில் ஆன்லைன் டெலிவரி செய்வதாகப் போட்டிருக்காங்க.

வாங்கி வாசிச்சிட்டுக் கருத்தைச் சொல்லுங்க.


அன்ன பட்சி.
http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2

வகை

: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேனம்மை லெக்ஷ்மணன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.80


இது பற்றி ஷானின் விமர்சனம் இங்கே கனவு தேசத்தில். !!!

அன்ன பட்சி – தேனம்மை லெக்ஷ்மணன்

இவர்களுக்கும் நன்றி :) 

அன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.

நன்றி நன்றி நன்றி :)

1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்

2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.

3. திரு இரத்னவேல் ஐயா.

4. திருமதி பத்மா & திரு இளங்கோ

5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.

6. புதிய தரிசனம்.

7. திரு செல்வகுமார்

8. திருமதி அகிலா புகழ்.

9. திரு பால கணேஷ்

10. திருமதி கலையரசி, வலைச்சரம். 


பெண் பூக்கள்.
http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2

வகை

: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேனம்மைலெக்ஷ்மணன்
பதிப்பகம்: புதிய தரிசனம் (Puthiya Tharisanam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.60


பெண்பூக்கள் பத்தி விமர்சனம் செய்த விஜிகே சார், ஸ்ரீராம், ரத்னவேல் ஐயா ஆகியோருக்கும் நன்றி :)

”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.



வெள்ளி, 20 மே, 2016

டிஸ்கவரியில் சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண் பூக்கள்.

சாதனை அரசிகள்


http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

Product Description

வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.


செவ்வாய், 1 செப்டம்பர், 2015

தின ஓவியம்.

ஒவ்வொரு தினமும்
புதிய ஓவியத்தை
வரையத் துவங்கி விடுகிறது.

சிலவற்றில் கோபச் சிவப்பு.
சிலவற்றில் காம நீலம்.
சிலவற்றில் காதல் பசுமை
சிலவற்றில் தியான வெண்மை
சிலவற்றில் இழப்பின் கறுப்பு
சிலவற்றில் குழந்தை ரோஜா
சிலவற்றில் துறவின் வயலட்.

சனி, 22 ஆகஸ்ட், 2015

தேடிப்பாரேன்..

தேடிப்பாரேன்,
கொஞ்சம் தேடிப் பாரேன்.
நொறுங்கிக் கிடக்கும்
கண்ணாடிச் சில்லுகளில்
ஆற்றின் கண்ணாடிச் சில்லுகளில்
கொட்டிச் சிதறும்
வெளிச்ச வெள்ளங்களில்
சூரியனின் சூடான முத்தங்களில்

வியாழன், 16 ஜூலை, 2015

காரைக்குடி புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

காரைக்குடியில் சென்ற ஒரு மாதமாக சேத்தியா தோப்பு  அபிநயா புத்தக நிலையத்தார் ஆரியபவன் அருகில் உள்ள ராமநவமி திருமண மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். அங்கே எனது நூல்களும் இடம் பெற்றுள்ளன.ஓரளவு விற்பனையும் ஆகி உள்ளன.

வெள்ளி, 26 ஜூன், 2015

அன்ன பட்சி பற்றி கலையரசி.

என் வலையுலக சகோதரி கலையரசி. அவர் தன்னுடைய ஊஞ்சல் வலைப்பூவில் அன்னபட்சி பற்றி மிக அழகானதொரு விமர்சனம் கொடுத்திருக்கிறார்.  படித்தேன். படித்”தேன்”. அதை இங்கே பகிர்வதில் இன்புறுகிறேன்.. அஹா மிக அருமை கலையரசி :) கவிதைகள் எழுதிய பொழுது பெற்ற இன்பத்தை விட  உங்கள் விமர்சனம் படித்துப் பேருவகை அடைந்தேன். நன்றிம்மா. எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை.

துரை அவர்கள் சொன்னது போல் கவிதைகள் சுவையா கருத்துரை சுவையா என்று சொல்லலாம். மனம் உண்மையிலேயே தடுமாறுகிறது. அன்பும் நன்றியும் பா :)

இதை அவர்களின் வலைத்தளத்திலும் படிக்கலாம். அதற்கான இணைப்பு இங்கே.
http://www.unjal.blogspot.in/2015/02/blog-post_98.html.

////என் பார்வையில் - 'அன்னபட்சி' - கவிதைகள்

‘அன்ன பட்சி’ - கவிதைகள்
ஆசிரியர்:- தேனம்மை லெஷ்மணன்
இவரது வலைப்பூ:- சும்மா
முதல் பதிப்பு:- ஜனவரி 2014
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம் கைபேசி:- 9994541010
இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.  ஏற்கெனவே ‘ங்கா’ என்ற தொகுப்பு வெளிவந்துள்ளது. 

சனி, 30 மே, 2015

சின்னச் சின்ன சந்தோஷங்கள். :)

பீபிள்ஸ் டுடேயின் சப் எடிட்டர் உமாகாந்த் திருக்குமரன் தான் வாங்கிய புத்தகங்களை முகநூலில் முகப்புப் படமாகப் போட்டிருந்தார். ஆஹா அஞ்ஞாடிக்குப் பக்கத்தில் அன்ன பட்சி. என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி :)


ஃபேஸ்புக் முரசில் ஒன் லைனர்.

ஃபேஸ்புக் முரசில் ஒரு ஒன்லைனர் கேட்டு இன்பாக்ஸில் போடச் சொல்லி இருந்தார்கள். அதுதான் இது :)

வியாழன், 23 ஏப்ரல், 2015

திரு உமாகாந்த் தமிழ்க்குமரன் அவர்கள் பார்வையில் அன்னபட்சி.


நூல் : அன்னபட்சி
ஆசிரியர் : தேனம்மை லக்ஷ்மணன்
அகநாழிகை பதிப்பகம்
ஜனவரி 2014

தேனம்மை அவர்கள் சிறந்த கவிஞர், எழுத்தாளர், திறமையான படைப்பாளி. பத்திரிகைகளில் கட்டுரை, சிறுகதை என எழுதியுள்ளார். இந்த நூலுக்கு எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான எம் ஏ சுசீலாம்மாதான் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

ஹைதராபாத்தில் ”அரிமா சக்தி” விருதும் ”அன்ன பட்சி”யும்.

அன்னபட்சிக்கு அரிமா சக்தி விருதை திருப்பூரிலிருந்து  கனவு சுப்ரபாரதிமண்யன் அவர்கள் ஹைதராபாத் வந்திருந்து நிறை தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

இதை ஒருங்கிணைத்த சாந்தா தத் மேடம் கலந்து கொள்ளச் சொல்லி கைபேசியில் அழைத்து இருந்தார்கள். இடம் பற்றி விலாவாரியாக கேட்டுத் தெரிந்து கொண்ட நான் அன்று செல்ல இயலாமல் கால் ஸ்லிப்பாகி விட்டது. எனவே என் அன்பிற்குரிய பெரிய மகன் திருவேங்கடநாதன் சென்று என் சார்பாக வாங்கி வந்து கொடுத்தான். அந்த விருது இதோ.

நன்றி சாந்தாதத் மேடம் & கனவு சுப்ரபாரதிமணியன் சார். & நன்றி வெங்கட் :)





புதன், 21 ஜனவரி, 2015

அன்ன பட்சியும் கயல்விழிஷண்முகமும்

தேனக்கா....

முகநூலில் கிடைத்த நல்ல நட்பு.

நிறைய பகிர்ந்திருக்கிறோம். நிறைய பேசியிருக்கிறோம்.

படபடவென பேசி அதே வேகத்தில் பாசத்தால் திக்குமுக்காடச் செய்யும் அன்பின் அருவி Thenammai Lakshmanan

தனது அன்னப்பட்சி நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். கவிஞர் என்ற அடைமொழி சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது. நானும் இரவெல்லாம் கண்விழித்து எழுதி வைத்திருந்தேன். மறுநாள் அகநாழிகை பதிப்பகத்தில் நிகழ்ச்சி. தமிழச்சி,தேனக்கா,வாசு என்று மனதிற்கு நெருங்கிய நட்புகள் தானென்றாலும் மெல்லிய பதட்டம் இருந்தது. அதை மீறிய மகிழ்வு. கல்லூரி நாட்களுக்குப் பின் இலக்கியம் பேச ஒரு வாய்ப்பென்பதிலும் கணவரும் உடன் வருவார் என்கிற துள்ளலும்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

”அன்ன பட்சி”க்கு அரிமாவின் ”சக்தி” விருது.

அன்னபட்சிக்கு அரிமா சக்தி விருது கிடைத்துள்ளது. எனது தோழியர் ராமலெக்ஷ்மி, சுபா மேம், அகிலா புகழ், சுந்தரி செல்வராஜ், சாந்தா தத் மேம், ராஜேஸ்வரி கோதண்டம் மேம் ஆகியோருக்கும் இன்னும் 15 பெண் எழுத்தாளர்களுக்கு  ( கதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்காக) விருது கிடைத்துள்ளது.  தேர்ந்தெடுக்கும் மிகக் கடுமையான பணியில் ஈடுபட்ட திரு. கனவு சுப்ரபாரதி மணியன் சார் அவர்களுக்கும், விருது வழங்கி எம்மையெல்லாம் கௌரவித்த திருப்பூர் அரிமா சங்கத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

திங்கள், 19 ஜனவரி, 2015

அன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலாவின் விமர்சனம்.

  1. அன்னபட்சி பற்றி அகிலா புகழ் கோவை இலக்கிய சந்திப்பில் பேசியதை தனது வலைப்பதிவில் ( சின்ன சின்ன சிதறல்கள் ) பதிவிட்டிருந்தார்.

அதன் சுருக்கம் அக்டோபர் 16 - 31  புதிய தரிசனம் இதழில் வெளியாகி உள்ளது.

தலைப்பிற்குரிய கவிதையில் தேனம்மை அவர்கள், அன்னபட்சியின் தன்மையை அழகாய் இயம்புகிறார். அன்னபட்சி எப்படி நீர் தவிர்த்து பால் மட்டும் கொள்ளுமோ அதையே சற்று மாற்றி,

திங்கள், 5 ஜனவரி, 2015

அன்னப்பட்சி செய்த ஜாலம் - அன்னப்பட்சி பற்றி சகோ பாலகணேஷ்.

அன்னப்பட்சி செய்த ஜாலம்..!!!

Posted by பால கணேஷ் Monday, August 04, 2014
ன்னால் சுலபமாக எழுத வராத ஒன்று என்பதாலேயே கவிதைகளையும் கவிஞர்களையும் பிடிக்குமெனக்கு. நேரடியாகப் பொருளுணர்த்தும் கவிதைகள், மறைபொருளாய் நம்மை உணரச் செய்யும் கவிதைகள், எதுவும் புரிபடாது – அந்தக் காரணத்தாலேயே – சிறந்த கவிதைகளோ என எண்ண வைப்பவை, உரைநடையை அடுத்தடுத்த வரிகளாக உடைத்துப் போடுகிற கவிதைகள் (என்று சொல்லப்படுபவை) என்று எல்லா எல்லா ரகங்களையும் படித்திருக்கிற படியால் நல்ல கவிதைகளின் தொகுப்பு கையில் கிடைக்கையில், படித்து முடிக்கையில் மனம் நிறைந்து விடும். அத்தகையதொரு நிறைவை சமீபத்தில் எனக்கு வழங்கியது திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் ‘அன்ன பட்சி’ கவிதை நூல்.
நானறிந்த வரையில் தேனக்காவே ஒரு அன்னப்பட்சிதான். சந்திக்கிற எல்லா மனிதர்களிடமும் ஏதாவது நல்ல விஷயத்தைக் கண்டெடுத்து அதை மட்டுமே போற்றுகிற அன்னப்பட்சி அவர். நெற்றிப் பொட்டில்லாத பெண் மாதிரி ஒற்று இல்லாமல் அன்ன பட்சி என்று தலைப்பு வைத்திருந்தது எனக்கு கொஞ்சம் உறுத்தல்தான். அதுசரி…. இப்பல்லாம் எந்தப் பொண்ணுய்யா நெற்றிப் பொட்டு வைக்குது? புருவப் பொட்டும். மூக்குப் பொட்டும் தானே வைக்குது என்கிறீர்களா…? அதுவும் சரிதேங். பட்… இங்க பேச வந்த விஷயம் கவிதைகளைப் பற்றி.


இந்தத் தொகுப்பில் இருக்கும் எல்லாக் கவிதைகளுமே எனக்குப் பிடித்திருந்தன. அவற்றில் ஒன்றிரண்டைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். (பின்ன... முழுசாக் குறிப்பிட்டா தேனக்காவோ, இல்லை அகநாழிகை வாசுதேவனோ என்னைக் ‘கவனிச்சுட’ மாட்டாங்களா என்ன...?) குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவதை ரசிக்காதவர் இருக்க முடியாது. கவிதை படைத்தால் குழந்தையின் பார்வையில் படைப்பது வழக்கம். இவர் பொம்மையின் பார்வையில் கவிதை தந்திருக்கிறார் இப்படி : கடைக்கு வந்தாய் | எல்லா பொம்மைகளிலும் | சொல்பேச்சு கேட்பது போலிருந்த | என்னைத்தான் விரும்பினாய் என்று துவங்கி கனவிலாவது விட்டு | விடுதலையாகும் எண்ணத்தோடு | குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாய் | தூங்கப் படைக்கப்படாத நான் | உன் விழிப்புக்காய்க் காத்திருக்கிறேன் | நீ எழுந்தவுடன் விளையாட என்று முடிக்கையில் நம் ரசனைப் புருவங்கள் உயரத்தான் செய்கின்றன.

வியாழன், 1 ஜனவரி, 2015

அன்ன பட்சி பற்றி ஷான் கருப்பசாமி.

# அன்ன பட்சி - தேனம்மை லெக்ஷ்மணன் #

தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் அன்ன பட்சி தொகுப்பு சென்ற ஆண்டு என்னுடைய புத்தகத்துடன் அகநாழிகை வெளியீடாக வந்தது. அதைப் படித்துவிட்டு என் கருத்தை சொல்வதாக நான் சொல்லி சில மாதங்கள் கடந்துவிட்டன. நானும் கவிதைகள் என்று ஏதோ எழுதுவதால் நான் சக கவிஞர்களை விமர்சனம் செய்வதில்லை. எழுத்தாளனை எழுத்தாளனே விமர்சனம் செய்வது நேர்மையான, சார்பற்ற செயலாக இருக்கவும் முடியாது. நான் இப்படியாக எழுதுபவை எல்லாம் நூல் அறிமுகம் வகையைச் சேர்ந்தவையே.

திங்கள், 27 அக்டோபர், 2014

தாய்மையின் பேரன்பில் அன்ன பட்சி முன்னுரை. :-

தாய்மையின் பேரன்பில்.

ஒற்றை ஒளிக்கீற்றும் சில துளி மழையும் ஒளித்து வைத்திருக்கிறது வானவில்லை. மயில்தோகையாய் விரியும் வில்லிலிருந்து பெருகும் சொல் துளியால் கவிதை சமைத்துண்ணும் பெண்மைக்குக் கனவுகளே தானியக் கருவூலம்.

பால் நிலவு பொழியும் நீரில் பகுத்துண்டு நீந்தும் அன்னப்பட்சியாயிருத்தல் சுகம். காணும் ஒவ்வொரு மனிதரிலும் ஏதோ ஒரு குணத்தில் இனம் கண்டு ஒரு துளி சுவைத்துப் பருகி சபரியாய்ச் சிறந்ததைக் கொடுக்கும் ஆசை.


நலங்கெடப் புழுதியில் விழுந்த நற்கனிகள் புதுப்பித்து எனதென்று அறியத்தருவது என் அன்பு.

வியாழன், 23 அக்டோபர், 2014

டிஸ்கவரி புக் பேலஸில் அன்ன பட்சி.


சென்னை கே கே நகரில் சகோ. வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸ் இருக்கிறது . ( பொன்னுசாமி பிள்ளை தெரு, மஹா வீர் பில்டிங்க் ).

இங்கே என்னுடைய நூல் அன்ன பட்சி கிடைக்கும். என்னுடைய மற்ற இரு நூல்களும் சாதனை அரசிகள் & ங்கா கிடைக்கும்.

அன்ன பட்சி பற்றி ஒரு நூல் அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள் டிஸ்கவரி நூல் நிலையத்தின் இணையப் பக்கத்தில். நன்றி வேடியப்பன்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கோவை இலக்கிய சந்திப்பில் அன்ன பட்சி பற்றி கவிஞர் அகிலா புகழின் மதிப்புரை.

கோவையில் நடந்த 45 ஆவது கோவை இலக்கிய சந்திப்பில் கவிஞர் அகிலா புகழின்  அன்னபட்சி  பற்றிய மதிப்புரையை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.  இவர் சொல்லிவிட்டுச் செல், சின்ன சின்ன சிதறல்கள் என்னும் இரு கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். கவிஞரின் மதிப்புரை பெற்றமையால் அன்ன பட்சியும் சிறப்புற்றது. நன்றி அகிலா புகழ். :)
கவிஞர் அகிலா புகழ் .
 நூல் : அன்னபட்சி
ஆசிரியர் : தேனம்மை லக்ஷ்மணன்
அகநாழிகை பதிப்பகம்
ஜனவரி 2014

(கோவை இலக்கிய சந்திப்பில் 
31 ஆகஸ்ட் 2014 
என்னால் மதிப்புரை வழங்கப்பட்டது..)
தேனம்மை அவர்கள் சிறந்த கவிஞர், எழுத்தாளர், திறமையான படைப்பாளி. பத்திரிகைகளில் கட்டுரை, சிறுகதை என எழுதியுள்ளார். இந்த நூலுக்கு எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான எம் ஏ சுசீலாம்மாதான் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்

புதன், 24 செப்டம்பர், 2014

அகநாழிகை வெளியீடுகளும் எனது புத்தகங்களும் வாங்க.. இங்கேவாங்க.

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்.

சென்னை:-

1. அகநாழிகை புத்தக உலகம் - சென்னை.  
2. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.
3. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.
4. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.
5. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.

மற்றும்
Related Posts Plugin for WordPress, Blogger...