224.
4461.ஜெர்மனியின் செந்தேன் மலர்கள்
4462.என் பேரன்பின் தேனு....
உங்களை என் மார்போடு அணைத்துக் கொள்கிறேன்..
ஆயா வீடு என்பது ஊருணித் தண்ணியும், கொடுக்காப்புளியும் அன்பும் நிறைந்தது...
என் கண்கள் கலங்கி விட்டது தங்கம்..
நம் வாழ்வில் பல வகையான புத்தகங்கள் படிக்கிறோம்..
சில மட்டுமே நம் உள் உணர்வுகளோடு இசைந்து இருக்கும்..
மிக அருமையாக எழுதியிருப்பது தெரிகிறது..
ஈசன் வாசிக்கும் நாள் கொடுத்தால் நிச்சயமாக வாசிப்பேன். எனக்கு ஒரு புத்தகம் வேண்டும். எங்கு கிடைக்கும்?
உங்களுக்கு என் வாழ்த்துகளும் அன்பும்..
அடுத்து நிச்சயமாக அப்பச்சிகளையும் ஐய்யாவையும் மக்களையும் எழுதுங்கள்..
வரலாற்று சிறப்பு மிக்க நம் வாழ்வியலை எழுதுவது ஒரு வேள்வி போன்றது..
நமது தமிழ் மிகுந்த அழகோடும் அர்த்தத்தோடும் உள்ள மொழி...
அம்மாவின் அண்ணன் #அம்மான் எனச் சொல்லும் அழகு மொழி..
அந்த மொழியில் எழுதியமைக்கு மீண்டும் என் வாழ்த்துகள் தங்கம்..
பேராசிரியர் சாந்தி ராமு அவர்களுக்கு மிக்க நன்றி. 🙏🏼
4463.என்னைப் போன்ற மிக இரக்க குணம் கொண்டவர்கள் இந்த மாதிரி கதைகளை படித்தால் மனதில் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த அளவு மிகவும் சிறப்பாக இயற்கையாக நமது செட்டியார் வீட்டில் உள்ள நடப்புகளை எழுதியிருக்கிறாய். மிகச் சிறப்பாக இருக்கிறது. மனம் அமைதி அடைய வெகு நேரம் ஆகியும் சாதாரண நிலைக்கு வர முடியவில்லையே.
4264.தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதிய செட்டி நாட்டுப் பெண்கள் பற்றிய கதையை முனைவர் சாந்தி அவர்கள் செய்த திறனாய்வு அழகப்பா பல்கலைக்கழக சமுதாய வானொலியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழகத்தில் ஒரு குடும்பம் மிக மிக உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறது என்றால் அதன் அச்சாணியாக ஒரு பெண் இருப்பார் என்பது நிதர்சனமான உண்மை. அதை அலசி ஆய்வு செய்துப் பார்த்தால் செட்டி நாட்டுப் பெண்கள் தனித்துவம் கொண்டவர்களாக இருந்தது,இருப்பது எளிதாக அனைவருக்கும் புரியும்.
சைவ சமயத்துக்கு செட்டி நாட்டுக்கார்கள் அளப்பரிய திருப்பணிகள் செய்திருக்கிறார்கள் என்றால் அதற்குரிய அடித்தளமாக இருந்தது, செட்டி நாட்டுப் பெண்களே.
இது போன்று பல்வேறுபட்ட சிறப்புகளைக் கொண்ட செட்டி நாட்டுப் பெண்களைப் பின்னணியாக வைத்து தேனம்மை அவர்கள் எழுதிய கதைகள் அருமை. முக்கனி சுவையாக இருக்கும் கதை கருக்களை நான் மிகச்சிறந்த வரலாற்றுப் பதிவாகவும் பார்க்கிறேன்.
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மிக விரைவில் தமிழ்ச் சமுதாய உள்கட்டமைப்புகளை சிதைத்து விடுமோ என்ற அச்சம் பலருடைய மனதிலும் உள்ளது.
இந்த நிலையில் செட்டி நாட்டுப் பெண்கள் தங்களை மெழுகுவர்த்தியாக உருக்கிக் கொண்டு தங்களுடைய தனித்துவமான, தன்னலமற்ற தியாகங்களை வெளியில் சொல்லமல் வாழ்ந்து செல்வதை தேனம்மை அழகாக பதிவு செய்திருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முனைவர் சாந்தி கதை கருவை விளக்கி சொன்னது அற்புதமாக இருந்தது. அழகான தமிழ் உச்சரிப்பு.
99 சதவீதம் ஆங்கில கலப்பு இல்லாமல் பேசியது, காதுகளில் இன்பத் தேனாகப் பாய்ந்தது. எப்போதாவதுதான் இத்தகைய மிக அரிய அழகு தமிழ் பேச்சைக் கேட்க முடியும்.
செட்டி நாட்டுப் பெண்களைப் போல கம்பீரமாக அந்த பேச்சும் ஆளுமையுடன் இருந்தது. புஷ்பவதி ஆனாள், பிரயாசைப்பட்டு, கையறுநிலை போன்ற தூயத் தமிழ் வார்த்தைகளைக் கேட்ட போது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
அழகப்பா பல்கலைக்கழக சமுதாய வானொலி பொறுப்பாளர்கள், பணியாளர்கள் சேவை போற்றுதலுக்கு உரியது.
வாழ்க வளர்க தமிழ்த் தொண்டு.
4465.சின்னதாக்களின் செல்ல மகன் சரசய்த்தையின் சின்னத்தம்பி
அருணாசல ஐயாவின் அருமை பேரன்
சேலத்து மாமாவின் குடும்பத்தின் தூண்
எல்லோரையும் அரவணைக்கும் அலமு ஆச்சி.
வெள்ளந்திச் சிரிப்புக்குச் சொந்தக்காரி.
வேகுப்பட்டியார் வீடு வந்த நன்முத்து.
அன்று முதல் இன்று வரை அன்றலர்ந்த தாமரை.
எண்பத்தி ஒன்றில் இருவரும் கைகோர்த்தது
இன்று போல் இருக்கிறது
இரண்டாம் கட்டிலே எழிலான புது வாழ்வு. இருகுருவிச் சிறுகூடு.
அன்னம் போல் நடை கொண்ட
ஆச்சி வெகு நிதானம். அய்த்தானோ அதிவேகம்.
அழகாக ஈடு கொடுத்து நிறைவான தாம்பத்தியம்
தங்கம் தான் இருவருமே.
வைரங்கள் பெற்றெடுத்தார். நவரத்தினங்களாய்க் குழந்தைகளின் குடும்பம் ஜொலிக்கிறது.
45 ஆண்டுகள் நலமுடனே நீர் வாழ்ந்தீர்.
பின் தொடரும் எங்களுக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழ்கின்றீர்.
குன்றக்குடிச் சண்முகனும் இலங்குடி அய்யனாரும் உங்கள் இருவருக்கும் ஒரு நூறு ஆண்டு தருக. இன்று போல் என்றும் மகிழ்ந்து வாழ்வீர்.
ஆனந்தமாயிருங்கள் என நெகிழ்வோடு வாழ்த்தும்
அய்த்தை மகள் அம்மான் மகள்
தேனம்மை லெக்ஷ்மணன்.
4466.Some more pictures of Colmar, (the little Venice) France.
4467.Onion rings with Cappuccino
4468.பெருந்தன்மை இல்லாதவர்கள், பழி வாங்கும் மனப்பான்மை கொண்டவர்கள் பெரிய மனிதன் போர்வையில் உலா வருகிறார்கள்
4469.சில விழாக்கள் பொன்னாடை போர்த்தும் திருவிழாக்களாக இருக்கின்றன
4470.Volkswagen, Benz, Toyoto & Ford
4471.எப்பவும் ஹாப்பி பர்த்டேனு மார்க் கொடுப்பதெல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணியே பழக்கம் ஆயிடுச்சா அப்படி காப்பி பேஸ்ட் பண்ணா பர்த்டே போஸ்ட்ல என் கவிதை வந்து இருக்கு அது தெரியாமல் நிறைய பேருக்கு அப்படியே போஸ்ட் பண்ணி இருக்கேன் என்ன கொடுமை மார்க் இருக்குது
4472.நிலா இல்லீங்க. மூன்றாம் ப்ளாட்பார்ம் போக லிப்ட் இருக்கும் ஸைட் கேட் பாதை. காரை பார்க் பண்ணலாம். பெரியவங்களை நடத்திக் கூட்டிட்டுப் போறது சிரமமா இருக்கு. நிலத்தை சமப்படுத்துங்க சதர்ன் ரயில்வேஸ். #காரைக்குடிரயில்வேஸ்டேஷன்
4473.Software techies oda lunch, snacks and dinner
4474.சில்வர்ஃபிஷ் வெளியீடுகளான என்னுடைய நன்னெறிக் கதைகள் இரண்டு தொகுதிகளும் ஃபிப்ரவரி 14 - 22 வரை அந்தமான் நிகோபாரில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும்.
4475.Lunch
4476.Sofisticated Gardening
4477.சங்கந்திடல் பொய் சொல்லா மெய் ஐயனார் கோவில்
4478.என் ப்லாக்ல இருக்கதெல்லாம் யூ ட்யூபில எடுத்துப் போட்டிருக்காங்க
4479.ஜெர்மனியில் தோட்டச் செடிகளைக் கபளீகரம் செய்யும் வில்லன்.. நத்தை
4480.ஜெர்மனியிலிருந்து மகன் கொண்டு வந்தது
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.





















































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)