எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஏப்ரல், 2015

பிள்ளைக் கறி:- ( பெண்கள் ராஜ்ஜியம் )

பிள்ளைக் கறி.:-

வராத்திரி பத்து நாளும் கோயிலில் கமலாம்பிகை ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலித்துக்கொண்டிருப்பாள். எட்டாம் நாள் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை, I SPY.

22.ஐ ஸ்பை

இதுவும் ஒளிந்து பிடித்துப் போலத்தான். ஆனால் இதில் ஒளிந்துகொண்டவர்களைப் பிடிக்கும்போது தேடிக்கண்டுபிடித்தவர்  ஐ ஸ்பை என்று தொட்டுவிட்டுக் கத்தவேண்டும். அவ்வாறு ஒளிந்துகொண்டவர்கள் தேடுபவர்களின் பின்புறம் அவர்கள் அறியாமல் வந்து டப்பா (டெட் கிவவே என்ற வார்த்தை தமிழ்ல திரிஞ்சிருச்சு போலிருக்கு ) என்று தட்டினால் அவுட் இல்லை. 
 
23.ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது

இதுவும் ஒரு டீம் விளையாட்டுத்தான். இதில் இருவர் கை கோர்த்து உயரப் பிடித்து எதிர் எதிராக நின்று கொள்ள அவர்களின் கைகளின் ஊடாக எல்லாரும் செயின்  போல் ஒருவர் பின் ஒருவர் ஓடலாம். அப்போது கை கோர்த்து நிற்பவர்கள் இந்தப் பாடலைப் பாடுவார்கள்.

சனி, 25 ஏப்ரல், 2015

சாட்டர்டே போஸ்ட். ஆங்கிலம் அந்நிய மொழியல்ல என்கிறார் தில்லை அகத்து துளசிதரன்.

வலைத்தள சகோதரரான துளசிதரனின் தில்லை அகத்துக்கு அவ்வப்போது விசிட் செய்வதுண்டு. வெங்கட் சகோ, தனபாலன் சகோ, யாதவன் நம்பி - புதுவை வேலு சகோ, யாழ்பாவண்ணன் சகோ, கில்லர்ஜி சகோ, ரூபன் சகோ போல துளசிதரன் சகோவும் என்னுடைய அநேக இடுகைகளை அவ்வப்போது படித்தும் சில சமயம் ஒரு வார இடுகைகளை ஒரே நேரத்தில் படித்தும் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவார்கள்.

அவர் மட்டுமல்ல அவரது தோழி கீதா அவர்களும் தில்லை அகத்தில் எழுதி வருகிறார்கள். உரையாடல் பாணியில் அமைந்த இடுகைகளும் நிறைய இன்ஃபர்மேஷன் கொண்ட இடுகைகளும் எனக்குப் பிடித்தவை. எதை எழுதினாலும்  திருத்தமாக கவனமாக அழகாக எழுதி வெளியிடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. (தோழர் & தோழி இருவர் எழுதும் வலைத்தளம். ) இதிலும் ஸ்பெஷல் என்னவென்றால் கேரளாவில் ஆங்கில ஆசிரியராகப் பணி புரியும் துளசிதரன் சகோ ஃபோனில் சொல்லச் சொல்லக் குறிப்பெடுத்து பல இடுகைகளை சென்னையில் வசிக்கும் கீதா அவர்கள் செம்மையுறப் பதிவேற்றி உள்ளார்கள். ( ஃபோனில் சொல்லி அதைக் கேட்டுப் பதிவு செய்து இடுகையை எழுதும் வித்யாசமான நண்பர்கள்.!!! அருமை. இன்னும் வியக்க வைக்கிறார்கள். !!! )

தமிழ்தான் எனக்குப் பிடித்த மொழி & தாய்மொழி என்பதை விட சரளமாகப் படிக்கவும் பேசவும் எழுதவும் வரும் மொழி. ஆங்கிலம் அடுத்தபடிதான். நட்பு வட்டத்தில் மற்ற மொழிக்காரர்களுடன் உரையாடும்போதுதான் ஆங்கிலத்தில் எழுதுவது. மேலும் பெரிய பெரிய ஆங்கில கில்லிகளைக் கண்டால் கிலி வேறு. :) இது பள்ளியில் பாதி வரை தமிழ் மீடியத்திலும் அதன் பின் ஆங்கில மீடியத்துக்கும் மாறின அநேக பேருக்கு இருக்கும் என நினைக்கிறேன். ( என் கணிப்புதான் ) .

என்னதான் நாம் முகநூலில் தமிழ் ஆங்கிலம் தங்கிலீஷ் பயன்படுத்தினாலும் ஆங்கிலத்தில் உரையாடும்போது கொஞ்சம் பட்லர் இங்கிலீஷ் பாணியில் அமைந்துவிடுவதும் உண்டு. மிகப் பெரும்பான்மையோர் வெளுத்துக் கட்டினாலும் இந்தத் தாழ்வு மனப்பான்மையாலேயே அவர்களுடன் கூடிக் களிக்க அவர்களின் நட்பு வட்டத்தில் இருப்பவர்களால் இயல்வதில்லை. ஆங்கிலப் பாடல்கள் ( ஆல்பம் ) கேட்பது, திரைப்படம் பார்ப்பது,புத்தகங்கள் படிப்பது என்பது என்று இருக்கும் ஒருவர் உரையாடும்போது அவ்வளவு சரளமாக இல்லாததை உணரலாம். ( நம் உச்சரிப்பை ( தமிங்கிலம் என்று ) டப் டுப் என்று உச்சரித்து ஹிந்திக்காரர்கள் கிண்டல் செய்ய, அவர்களின் ஆங்கில உச்சரிப்பை ஹிந்தி + அங்க்ரேசி = ஹிங்க்ரேசி என நானும் கிண்டலடித்திருக்கிறேன் .) ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள். ஆனால் அவர்களின் மொழி ஆட்சி செய்கிறது என்ற ஆதங்கம் தமிழர்களுக்கு உண்டு.

எனவே ஆங்கில ஆசிரியரான துளசிதரன் சகோ அவர்களிடம் அதுபற்றி ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு அவர்கள் பதில் இங்கே.

///அந்நிய மொழியான ஆங்கிலம் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது எப்படி ? ///

ஆங்கில மொழியை இனியும் அந்நிய மொழியாகக் காண வேண்டிய அவசியமில்லை
     

    2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தாய் மொழியான தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களைப் படித்து மகிழும் நமக்கு, வெறும் 700 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் வாழ்ந்த சாசரால் எழுதப்பட்ட காண்டர்பரி டேல்சிலிரிந்து வளரத் தொடங்கிய ஆங்கிலம், இன்றியமையாத ஒரு மொழியாக மாறியிருப்பதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.  தமிழகம் உட்பட இந்தியா மட்டுமல்ல, கடந்த நூற்றாண்டின் இறுதி வரை ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமலிருந்த சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும், இப்போது ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. 

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

விவேகானந்தரும், கல்யாணும், அட்சயாவும் அரிமாவும். - விருதுகள் பகுதி - 2.

முகநூல் நண்பர் சதீஷ் பல்லாவரம் லயன்ஸ் க்ளப்பில் செயலாளராக இருக்கிறார். முகநூலில் என்னுடைய இலக்கியப் பங்களிப்பைப் பார்த்துவிட்டு ஆசிரியர் தினத்தன்று  உரையாற்ற அழைத்திருந்தார். குரோம்பேட்டை ஸ்ரீமதி ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயாவில் ஆசிரியர் தினத்தில்  (செப்டம்பர் 5 )கிட்டத்தட்ட 110 ஆசிரியைகளுக்கு TEACHERS ROLE IN TODAYS ATMOSPHERE  - இன்றைய சூழலில் ஆசிரியர்களின் பங்கு -- என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

சித்திரை.( மலைகள் இதழ் )

குறும்பாட்டைக் கவ்விப்
போடுகிறது புலிவேஷம்.
மயானக் கொள்ளையில்
சப்பரத்தில் அங்காளம்மனும்
பேச்சியம்மனும் பாவாடை ராயனும்.
வியர்வையும் வெண்ணையும் வழிய
திருமாலோடு திரும்புகிறது பல்லாக்கு.
சூர்யப் பிரபையும் சந்திரப் பிரபையும்
வாணவேடிக்கையாய்ப் பொரிகின்றன.
கொடுக்காப் புளியும் குமுட்டிப் பழமும்
குவிந்து கிடக்கிறது சந்தையில்.

வியாழன், 23 ஏப்ரல், 2015

திரு உமாகாந்த் தமிழ்க்குமரன் அவர்கள் பார்வையில் அன்னபட்சி.


நூல் : அன்னபட்சி
ஆசிரியர் : தேனம்மை லக்ஷ்மணன்
அகநாழிகை பதிப்பகம்
ஜனவரி 2014

தேனம்மை அவர்கள் சிறந்த கவிஞர், எழுத்தாளர், திறமையான படைப்பாளி. பத்திரிகைகளில் கட்டுரை, சிறுகதை என எழுதியுள்ளார். இந்த நூலுக்கு எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான எம் ஏ சுசீலாம்மாதான் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்.

வாசகர் கடிதங்கள், குமுதம் பக்தி ஸ்பெஷல். !



ஜனவரி  15 - 31 , 2013, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பூஜையறைக் கோலங்களைப் பாராட்டிய எஸ்.பிரபாவதி, மெய்யூர் அவர்களுக்கு நன்றி.!


2014 ஜனவரி 1 - 15 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்த பொங்கல் கோலங்களைப் பாராட்டிய கடலூர், வெ. லெக்ஷ்மிநாராயணனுக்கு நன்றிகள்.. !!

புதன், 22 ஏப்ரல், 2015

செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

52. உள்மேங்கோப்பு. :- இது வளவில் உள்ள மேங்கோப்பு . மரச் சட்டங்களால்/வேலைப்பாடுகளால் மூடப்பட்டிருக்கும்.



 இது வெளி மேங்கோப்பு. வளவில் உள்ளது.

குழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம்ஸ் - INDOOR GAMES )

16. சைனீஸ் செக்கர்ஸ்

இது எல்லாம் ப்ளாஸ்டிக் அட்டையில் விளையாடுவது. ஸ்டார் வடிவப் பள்ளம் கொண்ட ப்ளாஸ்டிக் அட்டையில் ஒவ்வொருவருக்கும் பத்துக் காய்கள் உண்டு. 6 பேர் விளையாடலாம். ஒவ்வொரு காயையும் தாண்டி தன் எதிர் ஸ்டார் கோணத்தை அடைய வேண்டும். யார் முதலில் சேர்க்கிறார்களோ அவர்களே வென்றவர்கள்.  

17. லூடோ

இதை நால்வர் விளையாடலாம். அப்ஸ்டகிள் ரேஸ் போல அங்கங்கே தடை வந்து நால்வர் கட்டத்தையும் சுற்றிவந்து கடைசியில் வின்னிங்க் பாயிண்டை அடைவது. இதில் தாயம் போட்டால்தான் ஆட்டம் ஆரம்பிக்கும். 

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.

181. நல்ல வேளை ஃபேஸ்புக் ஃபீட்ல சைட்ல இன்னார் இன்னாரோட மெசேஜை லைக் பண்றாங்க. இன்னார் இன்னாரோட ஃபோட்டோவை லைக் பண்றாங்க. கமெண்ட் பண்றாங்கன்னு மட்டும் வருது. ( லைக்ஸ் & கமெண்ட்ஸ் மட்டும் .. பப்ளிக் பப்ளிக் நு அலர்ட் கொடுக்குறாப்புல.)

இன்னார் இன்னாரோட ஃபோட்டோவை பார்க்கிறாங்க.. இன்னார் இன்னாரோட ஸ்டேடசைப் படிக்கிறாங்கன்னு வந்தா எப்பிடி இருக்கும்.. ஹாஹா.. பாதிப்பேர் எங்க போட்டுக்கொடுத்துருமோன்னு டெரர்லயே ஃபேஸ்புக் வரமாட்டாங்க.. :)


182. இங்கே நாளைதான் தீபாவளி.

இனிப்பு, எண்ணெய்ப் பலகாரம் சாப்பிட வீட்டில் யாரும் இண்ட்ரஸ்ட் காட்டுவதில்லை. புதுத் துணிகள் அவ்வப்போது வாங்கியதே இருக்கு. பட்டாசு வெடிச்சிப் பல வருஷமாச்சு. அக்கம் பக்கம் இருக்கும் வாண்டுகள் அப்போ அப்போ வெடிப்பது ஒன்றுதான் தீபாவளி என்பதை ஞாபகப் படுத்துது.

சின்னப் புள்ளையில் வீட்டில் அனைவருக்கும் வாங்கின ட்ரெஸை எடுத்து வச்சு வீட்டுக்கு வர்றவங்க கிட்ட எல்லாம் ஜவுளிக் கடைக்காரங்க மாதிரி விரிச்சுக் காட்டுறதும். சில நாள் முன்பிருந்தே ஏலம் நெய் மணக்க அம்மா செய்யும் மைசூர்பாகு, தேன்குழலும், தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து (!) கண்ணில் எண்ணெய் விழ கரகரப்பாக சீயக்காய் தேய்ச்சுக் குளிச்சு மஞ்சள் தொட்டு வைச்ச பாவாடை,சட்டையை அப்பாவிடம் விழுந்து வணங்கி வாங்கி அணிவதும் . கோயிலுக்குச் சென்று வந்து அம்மா சுடச் சுடச் செய்யும் கல்கண்டு வடை, வெள்ளைப் பணியாரம், மிளகாய்த் துவையல், இட்லி, முருங்கை கத்திரி உருளை பச்சைமிளகாய் போட்டு செய்யும் சாம்பார் எல்லாம் சாப்பிட்டுட்டு. அக்கம் பக்கம் வீடுகளுக்கு இனிப்புகள் சப்ளை செய்துட்டு அவங்க கொடுக்கும் பலகாரத்தை டேஸ்ட் செய்தபடி அண்ணன் தம்பிகள் வெடிக்கும் வெடியைப் பங்குபோட்டு வெடித்ததும் ஹ்ம்ம்ம். கனவு போலிருக்கு. !

சனி, 18 ஏப்ரல், 2015

பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 5

குங்குமம் தோழியில் ஒரு கேள்வி ஒரு மனசு பகுதியில்.ஷேர் ஆட்டோ பற்றி.



குமுதம் பக்தி ஸ்பெஷல் தீபாவளி இதழில் ( 2014 )
பெண்கள் ராஜ்ஜியத்தில் பிள்ளைக்கறி என்ற சிறுகதையுடன் புகைப்படம்.

சாட்டர்டே போஸ்ட் - அழகைத் தக்கவைக்க அக்குபஞ்சர் - ஆரண்யம் - ஈஸ்வரி ரகு.

அக்குபஞ்சர் - ஒரு அறிமுகம்
ஈஸ்வரி ரகு.

சென்னையில் ஒரு முறை வலைப்பதிவர் சந்திப்பு மிகக் கோலாகலமாக அடையார் ழ கஃபேயில் நடைபெற்றது. அதை இங்கே காணலாம்.

ழ வில் வலைப்பூ வடை...

அப்போது ஈஸ்வரியை சந்தித்தேன். மிக அருமையான தோழி. அவ்வப்போது தொலைபேசியில் உரையாடுவோம். அவர் அக்குபஞ்சர் பற்றி எழுதி நக்கீரனில்  “ அக்குபஞ்சர் - உடற்கூறுகளும் உணவு முறைகளும் “ என்ற புத்தகம் வெளியாகி உள்ளது. அக்குபஞ்சர் அறிவோம் என்ற தலைப்பிலும் பத்திகள் எழுதி வருகிறார்.

வியாழன், 16 ஏப்ரல், 2015

புதிய பயணியும் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்களும்.



பத்து நூல்கள் ஒரு பார்வை. - 1
புதிய பயணி - திசைகள் கடந்து ,என் வானிலே, ஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும், நீர்க்கோல வாழ்வை நச்சி, டீக்கடைச் சூரியன் , எஞ்சோட்டுப் பெண், தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், கதை கதையாம் காரணமாம், சூடிய பூ சூடற்க, ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள். 

1.புதிய பயணி - திசைகள் கடந்து :-

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா மண்ணா.

11. ஓடிப் பிடிச்சு:- 

ஓடி விளையாடு பாப்பான்னு பாரதியார் எழுதினது இதப் பத்தித்தான். இதெல்லாம் கோடைகால விடுமுறை விளையாட்டுகள். தினம் சாயந்திரம் விளையாடுவோம்னாலும் கோடைகாலத்து விடுமுறைகளை சுவாரசியமாக்குன விளையாட்டுகள் இவை. எல்லாரும் ஓடணும். ஒருத்தர் பிடிக்க ஓடி வரணும். யார் பிடிபடுறாங்களோ அவங்க அவுட். அவுட் ஆகுறவங்க அடுத்த ஆட்டத்துல மத்தவங்களப் பிடிக்கணும். 

12. ஒளிஞ்சு பிடிச்சு:- 

அதேதான் இது ஆனா எல்லாரும் ஒளிஞ்சுக்கணும்.
இதுக்குக் கண்ணாமூச்சி விளையாட்டுன்னும் சொல்லுவாங்க. ஒருவர் கண் பொத்திக்கொள்ள மற்றவர்கள் ஒளிந்து கொள்ள அவர்களைத் தேடிப்பிடிக்கும் விளையாட்டு. சிலசமயம் ஒருவர் அமர்ந்து தேடுபவரின் கண்ணைப் பொத்திக்கொண்டு இந்தப் பாட்டைச் சொல்வார்.தேடுபவர் சென்று ஒளிந்திருப்பவர்களைப் பிடித்துவர வேண்டும்.இதுதான் அந்த ஃபேமஸ் பாட்டு.

புதன், 15 ஏப்ரல், 2015

பூனைச் சொப்பனம். ( சொல்வனத்தில் )



எண்ணெய்ப்புகை காரம் இழுத்து
வெளியெறியும் மின் போக்கிவழி 
கரேலென்று உள்நுழைந்து
தொலைக்காட்சி அட்டைமேல்
சுருண்டு துயிலும் அது.
தடைபட்ட மின்சாரம் வேர்வையூற்ற
சமையலறை இருளில்
தாகமடக்க நீர்விழுங்கி
மல்லாந்திருக்கும் போது
பரணில் மின்னும் இரட்டை வைரம்

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

அண்ணல் அம்பேத்காரின் 22 உறுதிமொழிகள் பதாகை ( புகைப்படம் ) வெளியீடு.



சகோதரர் கரந்தை ஜெயகுமார் எழுதி இருக்கும் இந்த இடுகையைப் படித்துவிட்டு அண்ணல் அம்பேத்காரின் இந்த 22 உறுதிமொழிகள் அடங்கிய பதாகையைப் படியுங்கள்.

மீன் மார்க்கெட்டில் திருமணம் 

புறக்கணிப்பின் வலி உணரலாம்.





கடவுள் வழிபாடு குறித்து எனக்கென தனிப்பட்ட கருத்து இருந்தாலும் அண்ணலின் கொள்கைகளையும் உறுதி மொழிகளையும் புரிந்து கொள்கிறேன். மதிக்கிறேன்.

சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-

சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-

வாழ்க்கையில் போராடி ஜெயித்த பெண்களையும் தன்னுடைய துறையில் ஈடுபட்டு ஜெயித்து வானளாவிய அதிகாரத்தோடு திகழும் பெண்களையும் சாதனைப் பெண்கள் எனவும் சக்தி வாய்ந்த பெண்கள் எனவும் சொல்லலாம். இந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளைப் பார்த்து இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ஆண்கள் மட்டுமல்ல சமூகமே அச்சமுறுகிறது என்றே சொல்லலாம். இந்திரா காந்தி,மார்கரெட் தாட்சர் போன்ற சில பெண் தலைவர்களையே நாம் சக்தி வாய்ந்த பெண்மணிகளாக அறிந்திருக்கிறோம். இன்னும் பலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

ஃபோர்ப்ஸ் பத்ரிக்கையில் பெப்சிகோ இந்திரா நூயி, எஸ் பி ஓ சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா , ஐசிஐசிஐ சந்தா கோச்சார்  (இவருக்கு ஃபார்ச்சூன் பத்ரிக்கையும் நம்பர் ஒன் பட்டம் அளித்திருக்கிறது. ), சிஸ்கோ சிஸ்டம்ஸ் பத்ம ஸ்ரீவாரியார், பயோகான் கிரண் மஜூம்தார்,, ஆகியோர் மட்டுமல்ல. ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா சர்மா, கேப் ஜெமினி இந்தியாவின் அருணா ஜெயந்தி, பணக்காரப் பெண்மணிகள் சாவித்ரி ஜிண்டால், இந்து ஜெயின், அனு அகா, ,மீடியா பெண்மணி ஷோபனா பார்த்தியா ( ஹிந்துஸ்தான் டைம்ஸ் ) , ஜே. கே. லெக்ஷ்மி சிமிண்ட் வினிதா சிங்கானியா, லலித் சூரி ஹாஸ்பிட்டாலிட்டி திவ்யா சூரி சிங், கிண்டால் புஷ்பா பானர்ஜி இன்னும் பல ப்ரபலங்களும் இருக்காங்க  அந்த லிஸ்ட்ல நம்மைப் போன்ற சாதாரணப் பெண்களும் இருக்காங்க.

திங்கள், 13 ஏப்ரல், 2015

பாபா சாகிப் டாக்டர் பி ஆர் அம்பேத்காரின் 125 ஆவது பிறந்தநாளில் 22 உறுதிமொழிகள் பதாகை திறப்பு.

அம்பேத்காரின் 125 ஆவது பிறந்த நாளில் சென்னையில் உள்ள நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் ( தம்ம கிரந்தி யாத்ரா என்று நினைக்கிறேன் - மகாராஷ்டிரா -  நாக்பூரின் தீக்ஷா பூமியில்) 1956 இல் மேற்கொள்ளப்பட்ட சமத்துவமான சமுகத்தை உருவாக்கிடத் தேவையான 22 உறுதிமொழிகள் கொண்ட பதாகை திறக்கப்படுகிறது என்று  ஈ மெயில்  - PRESS INVITATION என்று தலைப்பிடப்பட்டு எனக்கு வந்திருந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதை, சமநீதி, அரசியல் பொருளாதார சமூக சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, வர்க்க பேதம் நீக்குதல், பெண் கல்வி ஆகியவற்றை வலியுறுத்தியவர் என்று அம்பேத்காரின் மேல் அபிமானம் உண்டு. (சாஸ்த்ரி பவன் பெண்கள்/ தலித் பெண்கள் நலச்சங்கத் தலைவி சென்ற இரு வருடங்களுக்கு முன்னால் அம்பேத்கார் பிறந்த தினத்தில் அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் உரையாற்ற அழைத்திருந்தார். ) இந்த ஈமெயில் அழைப்பைப் பார்த்ததும் அந்த ஞாபகங்கள் அலைமோதின. 
இந்தப் பதாகைகள் செலக்ட் செய்யப்பட்ட 125 குடும்பங்களுக்கு வால் ஹேங்கிங் ஆக வழங்கப்படவும் இருக்கின்றனவாம். 

சனி, 11 ஏப்ரல், 2015

சாட்டர்டே போஸ்ட். வலைச்சரத்தில் வசிக்கும் தமிழ்வாசி ப்ரகாஷ்.

வலைச்சரப் பொறுப்பாசிரியராகப் பலர் இருந்தாலும்  சீனா சார்தான் வலைச்சரத்தை உருவாக்கியவர் என்று நினைத்து வலைச்சரம் பற்றி அவரிடம் கேட்டிருந்தேன். அவரோ தானும் பொறுப்பாசிரியர்தான் என்றும் இது பற்றிக் கூறச் சரியானவர்  தமிழ்வாசி ப்ரகாஷ்தான் என்றும் அவரிடம்  கேட்கும்படியும் கூறி இருந்ததால் அவர்களிடம் வேறு கேள்வி கேட்டேன்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!!

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி

நற்றமிழ்ப் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு. :)

திருவிளையாடல் ஞாபகம் வந்திருச்சு.:)

முகநூல், ப்லாக் பத்ரிக்கை அனைத்திலும் சிறுகதை எழுதிக்கொண்டிருப்பவர்களும் , பத்ரிக்கைகளில் வெளிவருமா என்று ஆவலோடு காத்திருப்பவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு.

கல்கி மறக்கமுடியாத இதழ். சுசீலாம்மா எங்கள் கவிதைகளை அனுப்பி முதன் முதல் அச்சில் பார்த்த 10.2.1985 என்னால் மறக்கமுடியாத ஒரு பொன் தினம். அந்தக் கவிதை கிராமத் திருவிழா பற்றியது.

வியாழன், 9 ஏப்ரல், 2015

வெள்ளையா இருக்கதெல்லாம் வெசமாமே..

மனோ சுவாமிநாதன் மேடம்  இன்று எதைத்தான் சாப்பிடுவது என்று ஒரு போஸ்ட். போட்டிருந்தார்கள்.

கடந்த சில நாட்களாக நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டே இருந்தேன். சிக்கன் சாப்பிடாதீங்க அதுல ஆர்சனிக் இருக்குன்றாங்க. எறால் சில சமயம் கல்டிவேட் ஆகுற இடத்துல ஓவரா ஏதோ மருந்து தெளிச்சு விட்டிருக்காங்க போல டபுள் கொடலோட எறாக்கள பார்த்தேன். ரெட் மீட் வேண்டவே வேண்டாம் வெயிட் போடும். ஹார்ட்டுக்கு எதிரி. முட்டை மஞ்சக் கரு வேணாம். மத்ததுல கொழுப்பு, தோல் எல்லாம் வேணாம். கருவாடும் உப்புக் கண்டமும் ”ஆத்தாடி கெட்ட பயவிட்டு..” என்று சொல்வார்கள். ( கெடுதல் என்பதைக் காரைக்குடி மொழி வழக்கில் )

நினைவுகள்.:-

நினைவுகள்.:-
******************
வாலைச் சாமரமாக்கி
சுற்றி வரும்
ஈக்கு விசிறியபடி
எருமை இறங்கியது
நீருக்குள்..
முதுகு நனையாமல்
தெப்பமாய் நகர்ந்தது.
வைக்கோல் தேய்த்துத்
தண்ணியள்ளி அலசி
ஊற்றினான் மேய்ப்பன்.

புதன், 8 ஏப்ரல், 2015

அமெரிக்கத் “தென்றலில் “ எங்கள் அம்மாவுடன் நாங்களும்.

அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து வெளிவரும் தென்றல் பத்ரிக்கையில் ( மார்ச் 2015 இதழில்)  எங்கள் சுசீலாம்மா பற்றி  மிக அழகாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் திரு அரவிந்தன் அவர்கள். அம்மாவைப் பற்றிய முழுமையான தொகுப்பாகவே இதைக் கொள்ளலாம்.

திரு அரவிந்தன் அவர்கள் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார்கள். அம்மாவைப் பற்றி அறியாதவர்கள் இலர். அவர்களின் மாணவிகளாய் இருந்த பாக்கியத்தாலேயே என்னைப் பற்றியும் உமா மகேஸ் பற்றியும் நாங்கள் அவருக்கு ( சுசீலாம்மாவுக்கு ) எங்கள் புத்தகத்தை சமர்ப்பணம் செய்தது குறித்தும் எழுதி இருக்கிறார் திரு அரவிந்தன்.

சனி, 4 ஏப்ரல், 2015

சாட்டர்டே போஸ்ட், திருக்குறள் ஸ்பெஷல் திண்டுக்கல் தனபாலன்

எனது மதிப்பிற்குரிய சகோதரர் திண்டுக்கல் தனபாலன் கடந்த சில வருடங்களாக வலையுலகில் எழுதி வருகிறார். தனது வலைப்பூவில் மட்டுமல்ல., மற்றவர்களின் வலைப்பூவிலும் அநேகமான பின்னூட்டங்கள் கொடுத்திருப்பார். வேகமாகப் படித்துவிட்டு நான் உட்பட பலர் கடந்து விடுவோம் பல வலைப்பூக்களை. ஆனால் தகுந்த பின்னூட்டம் கொடுத்து ஊக்குவிப்பதில், உற்சாகப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. பின்னூட்டங்களில் டிடி என்று பலர் அழைப்பார்கள். நான் தனபாலன் சகோ என்று விளித்திருப்பேன்.

வியாழன், 2 ஏப்ரல், 2015

செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

வளவு- பட்டாலைக்கு அடுத்து வளைவாய் வரும் பத்திகள்.. இது பட்டாலையையும் கீழ் வாசலையும் ( முற்றம் ) இணைக்கும் பகுதி.

மைக்கும் நானும்.

முகநூலில் மைக்குடன் ப்ரொஃபைல் பிக்சர் போட்டபோது வல்லிம்மா தன்னுடைய போஸ்ட் ஒன்றில் ஒரு  ஹேண்ட் ஷவர் சாய்ந்திருப்பது போலப் போட்டு இதப் பார்த்தா என்ன தோணுதுன்னு கேட்டிருந்தாங்க.

அப்போ நான் சொன்னேன் அம்மா எனக்கு அதைப் பார்த்தா மைக் ஞாபகம் வருது. அப்பிடின்னு சொல்லி அவங்களுக்குப் பிடித்த ( அப்பிடின்னு நான் நினைச்ச :) ) ஃப்ராங்க் சினாட்ராவின் ப்ளூ ஸ்கைஸ் சாங்கை ஷேர் செய்திருந்தேன். அதுக்கு அவங்க சொன்னாங்க. தேன் நானும் மைக் மோஹினி ஆகட்டுமான்னு.

ஸோ அந்த வார்த்தை ரொம்பப் பிடிச்சதால இந்த மைக் மோஹினி இடுகை. ( எதைப் பார்த்தாலும் கேட்டாலும் இடுகை இடுகைன்னு இடுகை போடத் தோணுதே இது இடுகையோமேனியாவா :)

சரி ரைட்டு படத்தைப் போடுறேன் :)

இது சுய உதவிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் குறித்துப் பேசியபோது முதன் முதலாக கல்லூரிப் பருவத்துக்குப்பின் பல ஆண்டுகள் கழித்து மைக்கைத் தொட்டது.

1.லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் சுய உதவிக் குழு மகளிர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள். (2010)



புதன், 1 ஏப்ரல், 2015

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.



ப்ரிய மாமா
”மா” ”மா” நீங்கள்.
இந்தக் கவிதை
உங்கள் மனவீட்டுக்குள்
அரிக்காத வண்ணப்புகைப்படமாய்
இருக்க வேண்டாம்
ஒரு சுருண்ட காலண்டராகவாவது
முடங்கிக்கொள்ள அனுமதியுங்களேன்

எப்படி முடிகிறது உங்களால்
மனத்தடி மண்ணில்
கப்பும் கிளையுமாய்ப் பூக்க
வெடிக்க நினைக்கும்
ப்ரிய விதைகளை
ஆழப் புதைக்க

இன்னும் எனக்கு நீங்கள்
ஆச்சர்யம் உண்டுபண்ணும்
மனிதர்தான்

Related Posts Plugin for WordPress, Blogger...