எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜனவரி, 2021

பண்ணாகம் இணையத்துக்காக ஒரு பேட்டி.

 முகநூலில் நட்பாகி  அதன் பின் ஜெர்மனியிலும் சந்தித்த மதிப்பிற்குரிய நண்பர், ஊடக வித்தகர், பண்ணாகம் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னிடம் பண்ணாகம் இணையதளத்துக்காகப் பேட்டி ஒன்று எடுத்தார்கள். அதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். 


////உங்களுடைய பேட்டி ஒன்று எமது பண்ணாகம்.கொம் இணையத்தின் சாதனையாளர் வரிசையிலே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.      Zoom மூலம் நடைபெறும் இதில் தாங்கள் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  19.1.2021 இந்தியநேரம் 20.00 மணிக்கு நடைபெற ஒழுங்கு உள்ளது. இந்த நேரம் தங்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பதை அறியத்தாருங்கள்.

புதன், 17 ஜூலை, 2013

நன்றி ஊடகம்.

தேனம்மை  லக்ஷ்மணன், தமிழ் இணைய எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது படைப்புகள் பல்வேறு இணையதள பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. சமூக சிந்தினைக் கொண்ட இவரது எழுத்துக்கள் வாசிப்பவரை தன்  வசமாக்கும். இவர் சும்மா என்கிற வலைப்பூவும, சமையல் கலைக்கு ஒன்று என இரு வலைப்பூ நடத்தி வருகிறார்.


ஊடகம்: நீங்கள் எழுத்து துறைக்குள் நுழைந்தது தற்செயலாகவா ? இல்லை  எழுத்து மீது உங்கள் ஆர்வம் காரணமாகவா ?

தேனம்மை லக்ஷ்மணன்: எழுத்து என்பது கல்லூரிப் பருவத்திலேயே இருந்தது.  2008 அக்டோபர் மாதம்., பாரதி பதிப்பகத்தின் குற்றமும் தண்டனையும் என்ற மொழிபெயர்ப்பு புத்தகம் பெஸ்ட் செல்லர்களில் ஒன்றாக குமுதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.. அதை எழுதியவர் என்னுடைய கல்லூரிப் பேராசிரியை திருமதி எம் ஏ சுசீலாம்மா அவர்கள்.. புது தில்லியில் இருக்கும் அவர்களை தொலைபேசியில் வாழ்த்தியபோது வலைத்தளத்தில் எழுதி வருவதைக் குறிப்பிட்டார்கள்..பின்னர் நானும் அவர்கள் உதவியால்  வலைத்தளம் ஆரம்பித்து எழுதி வருகிறேன்.

வியாழன், 11 ஏப்ரல், 2013

திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஹலோ எஃப் எம்மில் எனது பேட்டி.

முகநூலில் தோழர் தோழிகளாக இருப்பவர்கள் மூலமே நான் பல்வேறு வகைகளில் இனம் காணப்பட்டேன். அதில் வானொலி தொடர்பாக என்னை அணுகியவர்கள் கவிதா சொர்ணவல்லியும், ஜெயகல்யாணியும்.

பொதிகைக்காக திரு ப்ரேம் சாகர் அணுகியிருந்தார். மிக நல்ல தொடக்கங்கள் எல்லாம் எனக்கு முகநூல் மூலம் கிட்டின. அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் கிடைத்தது நான் செய்த தவம்தான்.

புதன், 13 பிப்ரவரி, 2013

மாமியார் vs மருமகள்

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே பையனோட தகுதிகளோடு கூட மாமியார் நல்லவங்களா., பொண்ணை நல்லா வச்சிப்பாங்களா என்பதுதான் பெற்றோரின் கேள்வியாய் இருக்கும். பின்னாளில் இந்தப் பொண்ணு நம்ம நல்லா கவனிச்சுக்குவாளா என்பதே பையனைப் பெற்ற தாயின் எண்ணமாய் இருக்கும். ஒரு ஆண்மகன் மனைவி பக்கமோ, தாய் பக்கமோ பேசமுடியாதபடி நடுநிலைமை வகிக்க வேண்டியிருக்கும். இருவருமே அவருக்கு முக்கியம்.

திங்கள், 17 செப்டம்பர், 2012

மயிலின் சீற்றம். வடிவுக்கரசியின் பேட்டி

மயிலின் சீற்றம் பார்த்திருக்கிறீர்களா.. தன் கொண்டையை அசைத்துக் கொண்டே அது அகவுவதைப் போல அழகாய் இருந்தது திரைப்படம் மற்றும்., தற்போது சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும்., இன்றளவும் வடிவழகியான நடிகை வடிவுக்கரசியின் பேச்சு.. வேறொன்றுமில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இருவரும் எதிர் எதிர் அணியில் அமர்ந்து பேச வேண்டியதாயிருந்தது. அப்போது நான் எடுத்து வைத்த கருத்துக்களுக்கு உண்டான கோபத்தில் இருந்தார் அவர். திரும்ப என் நிலைப்பாடை எடுத்துச் சொல்லி விடாது கருப்பு மாதிரி தொடந்து படையெடுத்து அவரிடம் இந்தப் பேட்டியை வாங்கினேன்..

1. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.. நீங்கள் நடிக்க வந்தது எப்படி.?

எனக்கு சொந்த ஊர் வேலூர் இராணிப்பேட்டை. எட்டாவது வரை அங்கே படித்தேன். பின் ஒன்பதாவது படிக்கும்போது மெட்ராஸ் வந்தேன். வாலாஜா காலேஜில் பி யூ சி படித்தபின் அடையாரில் ஹோட்டல் மானேஜ்மெண்ட். அப்புறம் கன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்தேன்.

வியாழன், 28 ஜூன், 2012

மற்ற மொழிக்காரர்கள் தமிழை நன்கு உச்சரிக்கின்றார்கள்.-- நடிகை ஊர்வசி..

ஊர்வசியிடம் ஒரு பேட்டி:-

1. பலவருடங்களாகத் தமிழ்த்திரையுலகிலும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வெற்றிக் கொடி நாட்டுகிறீர்கள்.. இது எப்படி? சினிமாவிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்ய எப்படி முடிந்தது.? தமிழ் ஹ்யூமர் ஹீரோயினா எப்படி உணர்கிறீர்கள்.

பல வருடங்களுக்கு முன்பு என்றால் அது கொஞ்சம் யோசிச்சிருப்பேன். இப்போ பத்து வருடங்களாக சினிமா ஆர்டிஸ்டுகள் தொலைக்காட்சித் தொடர்களிலும் நிகழ்ச்சிகளும் பங்கேற்பதால் சகஜமான ஒன்றாகி விட்டது. விஷுவல் மீடியாவில் தற்போதைய காலகட்டத்தின் மாற்றம் என்னன்னா டி வி் என்பது மக்களை ஈஸியா அடைகின்ற மீடியாவாகிவிட்டது, இது தவிர்க்க முடியாத மாற்றம்.

புதன், 1 ஜூன், 2011

ஃபாத்திமாபாபு பேட்டி..கான்வெண்டில் படிக்கும் பெண்களுக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வருவதில்லை..

சந்தனக் குரல் கேள்விப்பட்டிருப்பீர்கள் .. சந்தனம்., ஜவ்வாது ., பன்னீர் எல்லாம் கலந்து மணக்கும் உன்னதமான குரலுக்குச் சொந்தக்காரர் கிட்டத்தட்ட 24 வருடங்களாக தொலைக்காட்சி செய்திகள்., நாடகங்கள்., தொகுப்புகள்., திரைப்படங்கள் என எல்லாவற்றிலும் முத்திரையைப் பதிக்கும் மல்கோவா மாமி ..பிரபல செய்தி வாசிப்பாளர் . ஃபாத்திமா பாபுவை நம் பத்ரிக்கைக்காக தொடர்பு கொண்டோம்..

Related Posts Plugin for WordPress, Blogger...