எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நடிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 செப்டம்பர், 2012

மயிலின் சீற்றம். வடிவுக்கரசியின் பேட்டி

மயிலின் சீற்றம் பார்த்திருக்கிறீர்களா.. தன் கொண்டையை அசைத்துக் கொண்டே அது அகவுவதைப் போல அழகாய் இருந்தது திரைப்படம் மற்றும்., தற்போது சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும்., இன்றளவும் வடிவழகியான நடிகை வடிவுக்கரசியின் பேச்சு.. வேறொன்றுமில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இருவரும் எதிர் எதிர் அணியில் அமர்ந்து பேச வேண்டியதாயிருந்தது. அப்போது நான் எடுத்து வைத்த கருத்துக்களுக்கு உண்டான கோபத்தில் இருந்தார் அவர். திரும்ப என் நிலைப்பாடை எடுத்துச் சொல்லி விடாது கருப்பு மாதிரி தொடந்து படையெடுத்து அவரிடம் இந்தப் பேட்டியை வாங்கினேன்..

1. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.. நீங்கள் நடிக்க வந்தது எப்படி.?

எனக்கு சொந்த ஊர் வேலூர் இராணிப்பேட்டை. எட்டாவது வரை அங்கே படித்தேன். பின் ஒன்பதாவது படிக்கும்போது மெட்ராஸ் வந்தேன். வாலாஜா காலேஜில் பி யூ சி படித்தபின் அடையாரில் ஹோட்டல் மானேஜ்மெண்ட். அப்புறம் கன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்தேன்.

வியாழன், 28 ஜூன், 2012

மற்ற மொழிக்காரர்கள் தமிழை நன்கு உச்சரிக்கின்றார்கள்.-- நடிகை ஊர்வசி..

ஊர்வசியிடம் ஒரு பேட்டி:-

1. பலவருடங்களாகத் தமிழ்த்திரையுலகிலும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வெற்றிக் கொடி நாட்டுகிறீர்கள்.. இது எப்படி? சினிமாவிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்ய எப்படி முடிந்தது.? தமிழ் ஹ்யூமர் ஹீரோயினா எப்படி உணர்கிறீர்கள்.

பல வருடங்களுக்கு முன்பு என்றால் அது கொஞ்சம் யோசிச்சிருப்பேன். இப்போ பத்து வருடங்களாக சினிமா ஆர்டிஸ்டுகள் தொலைக்காட்சித் தொடர்களிலும் நிகழ்ச்சிகளும் பங்கேற்பதால் சகஜமான ஒன்றாகி விட்டது. விஷுவல் மீடியாவில் தற்போதைய காலகட்டத்தின் மாற்றம் என்னன்னா டி வி் என்பது மக்களை ஈஸியா அடைகின்ற மீடியாவாகிவிட்டது, இது தவிர்க்க முடியாத மாற்றம்.

புதன், 1 ஜூன், 2011

ஃபாத்திமாபாபு பேட்டி..கான்வெண்டில் படிக்கும் பெண்களுக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வருவதில்லை..

சந்தனக் குரல் கேள்விப்பட்டிருப்பீர்கள் .. சந்தனம்., ஜவ்வாது ., பன்னீர் எல்லாம் கலந்து மணக்கும் உன்னதமான குரலுக்குச் சொந்தக்காரர் கிட்டத்தட்ட 24 வருடங்களாக தொலைக்காட்சி செய்திகள்., நாடகங்கள்., தொகுப்புகள்., திரைப்படங்கள் என எல்லாவற்றிலும் முத்திரையைப் பதிக்கும் மல்கோவா மாமி ..பிரபல செய்தி வாசிப்பாளர் . ஃபாத்திமா பாபுவை நம் பத்ரிக்கைக்காக தொடர்பு கொண்டோம்..

புதன், 4 மே, 2011

சீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))



இந்த சம்மருக்கு இங்கே போகலாம் அங்கே போகலாம்னு ஆயிரத்தெட்டு ப்ளான் வச்சிருப்பீங்க ..எங்கே போகப் போறீங்க நீங்க எல்லாம். இந்த வருடம் கொஞ்சம் வித்யாசமான ஊரு ட்ரை பண்ணுங்க. ஜெயா டிவியில் ஸ்டார்ஸ் உங்களுடன் நிகழ்ச்சி நடத்தும் வினோ சுப்ரஜா இந்த வருடம் சீனா போய் வந்து இருக்காங்க . அவங்க அனுபவத்தை இங்கே நம்ம இவள் புதியவள் வாசகர்களுக்காக சொல்றாங்க..ஆர்வமாயிட்டீங்கள்ல கேக்க..

வியாழன், 7 ஏப்ரல், 2011

காற்றுக்கென்ன வேலி..

”அன்னக்கிளி உன்னத்தேடுதே.”. .. என்று பாடிய சோக சுஜாதாவை மறக்க முடியாது.. அந்தப்படத்துக்கு எதிர் மாறாய் அதிரடி காரெக்டர் ”அவள் ஒரு தொடர்கதை..” தொட்டால் பற்றும் நெருப்பு போல பேச்சு.. மிகத்துணிச்சலாய் அப்போதே அவர் நடித்த படம். உடை மாற்றுவது கூட ஜன்னல் வழியாய் எடுக்கப்பட்டிருக்கும்.


Related Posts Plugin for WordPress, Blogger...