எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஜனவரி, 2015

நாற்றங்கால்



எனக்குள்ளும்
ஒரு நாற்றங்கால்
தலையசைக்கும்

களையெடுக்க
அவசரிக்கும்

நிலம்விரும்பி
நீருறிஞ்சி
வேர்க்கையால் நன்றி கூறி
உரம் வளர்க்கும்.

கர்மயோகியாய்க்
குண்டலியை
நெற்றியில் நிறுத்தித்
தலைவணங்கிக்
கிடக்கும் நெற்பயிர்.

சாட்டர்டே போஸ்ட். உரத்த சிந்தனையாளர்,பன்முகத் திறமையாளர் பத்மாமணி.

முதன் முதலில் பத்மாமணி மேடத்தை நான் விக்னேஷ்வரா க்ளப்பின் ஒரு நிகழ்ச்சிக்கு ருக்மணி அம்மாவுடன் துணை விருந்தினராகச் ( துணைக்குச் சென்று விருந்தினராக கௌரவிக்கப்பட்டேன். ! )  சென்றபோது சந்தித்தேன்.
எஸ் ஏ பி வரதன் அவர்களுடன்.

வெள்ளி, 30 ஜனவரி, 2015

ப்ரியமுள்ள முதியவளுக்கு :-



ப்ரியமுள்ள முதியவளுக்கு :-

ஒரு சின்னக்குட்டி
எழுதும் அன்பு மடல்
உன்னுடைய ஊன்றுகோலும்
மூக்குக்கண்ணாடியும் நலமா ?
இந்தக்காயசண்டிகைக்கு
அறிவுநீர் வார்த்து
அமைதிப்படுத்தினவளே.
என்னை
உதயகுமாரனாய் நினைத்துக்
கண்ணாடி மாளிகைக் கதவு
அடைப்பதேன்.?

செவ்வாய், 27 ஜனவரி, 2015

கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.


121. தெரிந்தவர் தெரியாதவர்
பேதமற்று இதழ் மலர்கிறது.
பேருந்தின் முன்சீட்டில்
பூத்த குழந்தை. 
 
122. தெரியாமல் செய்துவிட்டதுதான்
தெரியாமல் பின் தொடர்ந்துவந்திருக்கிறது

தெரியாமலே கலங்கிக்கொண்டிருக்கிறேன்

தெரியவைக்காமல் போகாது

தெளிந்தெழவும் விடாது

துரத்திக்கொண்டிருக்கிறது. 

123. எத்தனையோ ராஜா ராணிகளைப் பார்த்த அந்த நிலவு
அந்த உப்பரிகையின் அருகில் அன்று
எங்களையும் பார்த்தது..


ஞாயிறு, 25 ஜனவரி, 2015

திண்ணையில் ஒரு இடம்.

நான் வலை உலகில் எழுத வந்து ஒரு வருடத்துக்கு மேல்தான் திண்ணையின் இணைய முகவரி கிடைத்து எழுதத் தொடங்கினேன்.

செப்டம்பர்  2, 2010 இல் ரிஷான் ஷெரீஃபின் நூல்-- வீழ்தலின் நிழலுக்கு எழுதிய  விமர்சனம்தான் முதலில் வெளிவந்தது. அதன் பின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நகைச்சுவையும் வித்யாசமானவையும் , ஆன்மீகம், சமூகம் என்று கிட்டத்தட்ட 190 படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் புதுத்திண்ணையில் 101 படைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிச்சம் பழைய திண்ணை இணைப்பில் இருக்கிறது.

என்னுடைய வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்துள்ளது திண்ணை. என் படிமக் கவிதைகளைத் திண்ணையில் படித்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் விஜயன் ஒரு முறை மெயில் செய்திருந்தார்.

சனி, 24 ஜனவரி, 2015

சாட்டர்டே போஸ்ட். கீதா சாம்பசிவம் - விரதங்களும் ஃபல் ஆஹாரும்.

        
 கீதா சாம்பசிவம் மேம். வலைத்தளப் பகிர்வுகளில் மட்டுமல்ல பின்னூட்டங்களிலும் சும்மா பிச்சு ஒதறுவார். சிலருக்கு எழுத்து என்பது ஒரு வரம். அது கீதா மேடத்துக்கும் வாய்க்கப் பெற்றிருக்கு. பொங்கல் ( சீ (று)ருங்கள், திருப்பாவை, மார்கழி, ஆன்மீகப் பயணங்கள், பெட்டகம் ( போன தலைமுறையில் நம் குடும்பத்தினர் உபயோகித்த பொருட்கள் பற்றிய விவரங்களும் , குறிப்பிட்டுச் சொல்லணும்னா இவரோட முதல் தாட்ஸ்ம், ( 2005 லேயே பதிவர்பா.. ப்ப்பா !!!! ) , ஊர்மிளை பற்றின சாகேத் ராமாயணக் கவிதை விவரிப்பும் அற்புதம். படிச்சுப் பாருங்க.

வியாழன், 22 ஜனவரி, 2015

தொட்டால் தொடரும் நாளை.

வலையுலக நண்பர் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் நாளை வெளிவருகிறது.

கதாநாயகி தேவையில்லாத ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்வதாகவும் கதாநாயகன் அந்தப் பிரச்சனையில் இருந்து அவரை மீட்பதாகவும் என்று கதையின் அவுட்லைனை தமிழ் சினிமா ரிப்போர்ட்டருக்காகக் கூறியுள்ளார் சங்கர்.

மேலும் அவர்களின் பேட்டியில்  உங்களால்  (படம் பற்றி ) விமர்சிக்கப்பட்டவர்கள் உங்களை எதிர் விமர்சனம் செய்தால் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள் என்று கேட்டதற்கு  படத்தைப் பற்றி யாரும் விமர்சனம் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தனக்கு உண்டு என்று கூறி இருக்கிறார். நாளை ரிலீஸ். படம் வெற்றிபெற வாழ்த்துகள் கேபிள் சங்கர்ஜி.



காரைக்குடி திருக்குறட்கழகத்தின் 61 ஆம் ஆண்டு குறள் விழா.

காரைக்குடி திருக்குறட்கழகத்தின் 61 ஆம் ஆண்டு குறள் விழா.:-
.


சென்ற சில மாதங்களுக்குமுன் காரைக்குடி சென்றிருந்த போது திருக்குறள் கழகத்தின் 61 ஆம் ஆண்டுவிழாவுக்கான அழைப்பிதழை என் அன்பிற்குரிய மாமா திரு லயன் வெங்கடாசலம் அளித்தார்கள்.

புதன், 21 ஜனவரி, 2015

குங்குமம் தோழியில் மலருக்குப் பிடித்த பெண் பதிவர்கள்.



நட்புகளில் இவர் நன்று ,இவர் சரியில்லை என்ற பேதம் பார்ப்பதில்லை நான்...எல்லோரிடமும் ஏதோ ஒரு தனித்துவம் உண்டு என்பதை அவர்களின் பதிவுகளின் மூலம் அறிந்து ,படித்து , ரசித்து வருகிறேன் நாள்தோறும்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்று சொல்லும் வகையில் பலதரப்பட்ட நட்புக்களும் அவர்களின் எண்ணங்களும் இங்கே வெகு அழகாக வெளிப்படுகிறது.அவர்களில் என்னை அதிகம் ஈர்த்த சில பதிவர்களைக் குறித்து இங்கே சொல்ல விரும்புகிறேன்.

தேனம்மை லெட்சுமணன்
*************************************
- ஒரு சக பிளாக்கர் ஆக இவர் 2009 தில் எனக்கு அறிமுகம் ஆனவர்.(அவருக்கு அப்போ என்னைத் தெரியாது) ..அப்போது அவர் பதிவுகள் சில வாசித்தது உண்டு...பின்பு முகப்புத்தகம் வந்து சில மாதங்களில் எனது நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டேன்.அவர் பதிவுகளில் கட்டுரைகளும் , கவிதைகளும் தொடர்ந்து வெளிவந்து என்னை அவர் ரசிகையாக மாற்றியது உண்மை.நல்ல கலாரசிகரும் கூட.. சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்த அவர் வரிகள் ''அழகு முதுமை வரை தொடர்கிறது. அறிவு மரணம் வரை தொடர்கிறது. அன்பு அதற்குப் பின்னும் தொடர்கிறது.''

இவருக்கு நான் வைத்த பெயர்-கவியம்மை

அன்ன பட்சியும் கயல்விழிஷண்முகமும்

தேனக்கா....

முகநூலில் கிடைத்த நல்ல நட்பு.

நிறைய பகிர்ந்திருக்கிறோம். நிறைய பேசியிருக்கிறோம்.

படபடவென பேசி அதே வேகத்தில் பாசத்தால் திக்குமுக்காடச் செய்யும் அன்பின் அருவி Thenammai Lakshmanan

தனது அன்னப்பட்சி நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். கவிஞர் என்ற அடைமொழி சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது. நானும் இரவெல்லாம் கண்விழித்து எழுதி வைத்திருந்தேன். மறுநாள் அகநாழிகை பதிப்பகத்தில் நிகழ்ச்சி. தமிழச்சி,தேனக்கா,வாசு என்று மனதிற்கு நெருங்கிய நட்புகள் தானென்றாலும் மெல்லிய பதட்டம் இருந்தது. அதை மீறிய மகிழ்வு. கல்லூரி நாட்களுக்குப் பின் இலக்கியம் பேச ஒரு வாய்ப்பென்பதிலும் கணவரும் உடன் வருவார் என்கிற துள்ளலும்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

துபாயில் ஆஸ்ட்ராலஜிபடி சக்ஸஸிவா ஷேர் பிசினஸ் செய்யணுமா.



என்னுடைய அண்ணன் திரு வள்ளியப்பன் மாணிக்கம் அவர்கள் பாண்டியில் வசிக்கிறார்கள். பங்குச் சந்தை ஆலோசனையும், ஜோதிட ஆலோசனையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

”அன்ன பட்சி”க்கு அரிமாவின் ”சக்தி” விருது.

அன்னபட்சிக்கு அரிமா சக்தி விருது கிடைத்துள்ளது. எனது தோழியர் ராமலெக்ஷ்மி, சுபா மேம், அகிலா புகழ், சுந்தரி செல்வராஜ், சாந்தா தத் மேம், ராஜேஸ்வரி கோதண்டம் மேம் ஆகியோருக்கும் இன்னும் 15 பெண் எழுத்தாளர்களுக்கு  ( கதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்காக) விருது கிடைத்துள்ளது.  தேர்ந்தெடுக்கும் மிகக் கடுமையான பணியில் ஈடுபட்ட திரு. கனவு சுப்ரபாரதி மணியன் சார் அவர்களுக்கும், விருது வழங்கி எம்மையெல்லாம் கௌரவித்த திருப்பூர் அரிமா சங்கத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

திங்கள், 19 ஜனவரி, 2015

புத்தம் புதிய புத்தகமே பாகம் 2.

என் முகநூல் நண்பர் சண்முகம் சுப்ரமணியன் அவர்களின் இரு நேர்காணல்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் வெளிவருகின்றன. ஒன்று முபின் சாதிகா , இன்னொன்று ட்ராட்ஸ்கி மருது.

புகைப்படம் சார்ந்த பகிர்வுகளில் தத்துவக் கருத்துக்களை தினம் 20 ஆவது பகிர்வார் சண்முகம். ஒவ்வொன்றும் சிந்தனையைச் செதுக்கக்கூடியதாக இருக்கும். உலகளாவிய இலக்கிய தத்துவ ஞானிகளின் மேற்கோள்களும் கருத்துகளும் கவி வரிகளும் தினம் அழகழகான கேரிகேச்சர்களில் பகிர்வார். அவர் எடுத்த நேர்காணல் என்பதால் இரண்டுமே ரொம்ப ஸ்பெஷலாகத்தான் இருக்கும்.

முபின் சாதிகா  அவர்களின்  வலைப்பூவையும் கவிதைகளையும் படித்து அசந்திருக்கிறேன். மிகச் சிறப்பான ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை போலிருக்கும் அவரது எல்லாக் கட்டுரைகளும். நெருக்கமாய் கோர்க்கப்பட்ட சரங்கள் போலிருக்கும் கவிதைகள். இவரது கவிதைகளுக்கு சகோ பாலகணேஷ் விமர்சனம் எழுதி இருக்கிறார்.

அன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலாவின் விமர்சனம்.

  1. அன்னபட்சி பற்றி அகிலா புகழ் கோவை இலக்கிய சந்திப்பில் பேசியதை தனது வலைப்பதிவில் ( சின்ன சின்ன சிதறல்கள் ) பதிவிட்டிருந்தார்.

அதன் சுருக்கம் அக்டோபர் 16 - 31  புதிய தரிசனம் இதழில் வெளியாகி உள்ளது.

தலைப்பிற்குரிய கவிதையில் தேனம்மை அவர்கள், அன்னபட்சியின் தன்மையை அழகாய் இயம்புகிறார். அன்னபட்சி எப்படி நீர் தவிர்த்து பால் மட்டும் கொள்ளுமோ அதையே சற்று மாற்றி,

சனி, 17 ஜனவரி, 2015

TAK3N (->T4KEN ) CINEMA REVIEW. டேக்கன் 3. சினிமா எனது பார்வையில்.

என்ன ஆக்‌ஷன் மூவிஸ் எல்லாம் பார்ப்பீங்களான்னு கேக்குறீங்களா. முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைச்சா அதுவும் ஹைதராபாத்  ஃபோரம் மால்ல பார்க்குற சான்ஸ் கிடைச்சா விடுவீங்களா என்ன. ?

ஆக்சுவலா நான் லியம் நீஸனின் டேக்கன் 1, டேக்கன் 2 இரண்டும் பார்த்துட்டு ரசிகையா ஆகி இருந்தேன்.

சாட்டர்டே போஸ்ட் நிகழ்ச்சி மேலாண்மை பற்றி மீனா லெட்சுமணன். ( EVENT MANAGEMENT)

என் அன்புத் தங்கை கயல். மனித நேயமிக்கவள். பொது நல காரியங்களில் ஈடுபாடு உண்டு. அவளுக்கும் எனக்குமான பந்தம் 5 வருடங்களுக்குமுன் ஆரம்பித்தது. ஒரு நாள் திடீரென வீட்டுக்கு ஒரு அழகான பரிசுப்பொருளோடு பார்க்க வந்தா. அன்னிலேருந்து இன்னி வரைக்கும் அந்தத் தொடர்பு ( நான் ஊர் ஊராவோ ஸ்டேட் ஸ்டேடாவோ போனாலும் ) அப்பிடியே மெயிண்டெயின் ஆகிக்கிட்டு இருக்கு.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

மு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்:-



மு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்:-

வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை.

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன்.

புதன், 14 ஜனவரி, 2015

ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்:-



ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்:-


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி :- ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள் இந்த விமர்சனம் 11.1.2015 திண்ணையில் வெளியாகி உள்ளது. 

டிஸ்கி 2:-  இன்பமும் மகிழ்வும் என்றும் பொங்கிட, அன்பும் செல்வமும் என்றும் தங்கிட அனைவருக்கும் பொங்குக பொங்கல். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மக்காஸ். :) 

உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் :-

உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் :-


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

சி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று. நூல் பார்வை.



சி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

திங்கள், 12 ஜனவரி, 2015

விடியும்வரை காத்திரு.



தகிக்கிறது
உறைக்கிறது
சுடுகிறது
எரிக்கிறது
காய்ச்சுகிறது
காந்துகிறது
கனலுகிறது
அனலடிக்கிறது
புழுங்குகிறது
போடுபோடென்று
போடுகிறது என்றெல்லாம்
கூப்பாடு போட்டாலும்

”ங்கா” பற்றி திரு நல்ல தம்பி அவர்கள்.



மதிப்பிற்குரிய தேனம்மை அவர்களுக்கு,
வணக்கம்.
எனக்கு விமர்சிக்கும் திறமை, அதை கோர்வையாய் வார்த்தைகளால் வடிக்கும் வலிமை கிடையாது. இது நான் உங்கள் “ங்கா....” படிக்கும்போது என்னுள் ஏற்பட்ட உணர்வுகள், அதை உங்களுக்கு தெரிவிக்கும் முயற்சி,
அவ்வளவே.

சனி, 10 ஜனவரி, 2015

சாட்டர்டே போஸ்ட். எலக்ட்ரானிக் வேஸ்டேஜும் சுனாமியும் பற்றி கோகுல கிருஷ்ணன்

என் முகநூல் நண்பர் கோகுல கிருஷ்ணன். சினிமா விமர்சனங்கள் தூள் பறக்கும். நினைத்ததை சுவாரசியமா நச்சுன்னு சொல்லத் தெரிஞ்சவர். அவரோட பிகே படம் பற்றிய கருத்து பார்த்துட்டு அசந்துபோனேன். மாலத்தீவுல இருக்கிறார். 2012 இல் இருந்து நட்பு வட்டத்தில் இருப்பவர். வேலைகளுக்கிடையிலும் என் படைப்புகளைப் பார்த்து ஒரு லைக் போடுவார். தனுஷின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். அதையே இவரும் ஒரு கட்டுரையில் எழுதி இருந்தார். அதே போல யாருடைய ஆன்மீக விஷயங்களிலும்  தலையிடுவது எனக்கு பிடிப்பதில்லை. இவரின் பிகே பற்றிய பதிவிலும் அதையே படித்தேன். மேலும் அரசியல் விமர்சனங்களும் சுருக் & நறுக்தான்.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

புத்தம் புதிய புத்தகமே..

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி தினம் ஒரு புத்தகத்தின் அட்டைப் படத்தை முகநூலில் பகிர்ந்து வருகிறேன். அந்த  நூல்கள் பற்றி சிறு அறிமுகம் இங்கேயும்.

என் அன்பிற்குரிய கவித சொர்ணவல்லியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.  

பொசல் 
நிலமிசை வெளியீடு
சிறுகதைகள். 
ஆசிரியர் :- கவிதா சொர்ணவல்லி. 
விலை ரூ 80/-

வியாழன், 8 ஜனவரி, 2015

எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார்.

எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார்:-

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி :- இந்த அறிமுகம் ஜூன் 1 , 2014 திண்ணையில் வெளிவந்தது.

புதன், 7 ஜனவரி, 2015

மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்.



மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்:-



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி :- இந்த விமர்சனம் நவம்பர் 21, 2014 திண்ணையில் வெளியானது.

Related Posts Plugin for WordPress, Blogger...