எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அகிலா புகழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகிலா புகழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 அக்டோபர், 2022

சமகால இலக்கியத்தில் அன்னபட்சி பற்றி அகிலா.

அன்புத்தோழி அகிலா புகழ் அவர்கள் என் அன்னபட்சி கவிதைத் தொகுதி பற்றி அழகான விமர்சனம் ஒன்றைப் புதிய பார்வை இதழில் 2015ஆம் ஆண்டு  எழுதி இருந்தார்.

அன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலாவின் விமர்சனம்.

அது இப்போது நூலாக்கம் பெற்றுள்ளது. பல்வேறு ஆளுமைகளின் நூல்களுடன் எனது நூல் விமர்சனமும் நூலாக்கம் பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சியும் அன்பும் அகிலா. 

நூல் பற்றி அகிலா முகநூலில் கொடுத்துள்ளதைப் பகிர்ந்துள்ளேன். நூலின் பெயர் சமகால இலக்கியத்தின் திறனாய்வு முகம். எமரால்டு பஇரு பாகங்களாக வெளிவந்துள்ளது. 


 ////சமகால இலக்கியத்தின் திறனாய்வு முகம்..

சனி, 24 செப்டம்பர், 2016

சாட்டர்டே ஜாலிகார்னர் :- அகிலாவின் க்ளிக்ஸ் & கலர்ஸும் புகைப்பட அரசியலும்



என் அன்பிற்கினிய தோழி அகிலாபுகழ். முகநூலில்தான் கண்டடைந்தோம்.
ஆனால் பலநாள் பழகியவர்போல உரையாடினோம். மிக அருமையான பெருமைப்படக் கூடிய நட்பு. கோவை இலக்கிய சந்திப்பில் எனது அன்ன பட்சியைப் பற்றி இலக்கியப் பார்வையை அழகாக முன்வைத்தார். அது புதிய தரிசனத்திலும் வெளிவந்தது. அநேக தருணங்களில் முகநூலில் இவர் போடும் கருத்துக்கள் என் மனதுக்கு இசைந்தவையாகவே அமைந்திருக்கும். அடிப்படையில் கவிதாயினியான ( 3 கிை நூல்கள் வந்திருக்கு ) இவர் க்ளிக்ஸ் & கலர்ஸ் என்ற புகைப்படப் பக்கத்தை உருவாக்கி நிர்வகித்து  வருகிறார். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காகக் கேட்டதும் உடன் எழுதித் தந்தார். 

கிளிக்ஸ் & கலர்ஸ் (Clicks & Colours)
(முகநூலில் இயங்கி வரும் புகைப்படக்குழு)

புகைப்படம் எடுப்பது என்பது எனக்கு ரொம்ப பிடித்தமான ஓன்று. எங்க அப்பா எனக்கு சொல்லாமல் சொல்லிக்கொடுத்த பொழுதுபோக்கு இது. திருமணம் முடிந்து, நான் தனிக்குடித்தனம் போகும்போது, அப்பா, என் கையில் ஒரு Yashica AW818 கேமரா கொடுத்தார். புகைப்படக்கலையில் ஆர்வம் என்பதை அமைதியாக கவனித்திருப்பார் போலும். அதுதான் அப்பா என்னும் மந்திரம்.

புதன், 17 பிப்ரவரி, 2016

வாழ்த்துகள் உமா, அகிலா, ஷான், ராஜசுந்தர்ராஜன் !!! வாருங்கள் கொண்டாடுவோம். :)

எங்கள் அன்பின் உமா, அகிலா மற்றும்  நண்பர்கள் ஷான், ராஜசுந்தர்ராஜனின் நூல் வெளியீட்டை என் வலைத்தளத்தில் பகிர்வதில் பெருமையுறுகிறேன்.

தோழி உமாவின் நூல் துயரங்களின் பின்வாசல் - கவிதைத் தொகுதி.

 தலைமை,வெளியீடு,சிறப்புரை:
திரு.பிரபஞ்சன் அவர்கள்

திங்கள், 19 ஜனவரி, 2015

அன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலாவின் விமர்சனம்.

  1. அன்னபட்சி பற்றி அகிலா புகழ் கோவை இலக்கிய சந்திப்பில் பேசியதை தனது வலைப்பதிவில் ( சின்ன சின்ன சிதறல்கள் ) பதிவிட்டிருந்தார்.

அதன் சுருக்கம் அக்டோபர் 16 - 31  புதிய தரிசனம் இதழில் வெளியாகி உள்ளது.

தலைப்பிற்குரிய கவிதையில் தேனம்மை அவர்கள், அன்னபட்சியின் தன்மையை அழகாய் இயம்புகிறார். அன்னபட்சி எப்படி நீர் தவிர்த்து பால் மட்டும் கொள்ளுமோ அதையே சற்று மாற்றி,

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கோவை இலக்கிய சந்திப்பில் அன்ன பட்சி பற்றி கவிஞர் அகிலா புகழின் மதிப்புரை.

கோவையில் நடந்த 45 ஆவது கோவை இலக்கிய சந்திப்பில் கவிஞர் அகிலா புகழின்  அன்னபட்சி  பற்றிய மதிப்புரையை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.  இவர் சொல்லிவிட்டுச் செல், சின்ன சின்ன சிதறல்கள் என்னும் இரு கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். கவிஞரின் மதிப்புரை பெற்றமையால் அன்ன பட்சியும் சிறப்புற்றது. நன்றி அகிலா புகழ். :)
கவிஞர் அகிலா புகழ் .
 நூல் : அன்னபட்சி
ஆசிரியர் : தேனம்மை லக்ஷ்மணன்
அகநாழிகை பதிப்பகம்
ஜனவரி 2014

(கோவை இலக்கிய சந்திப்பில் 
31 ஆகஸ்ட் 2014 
என்னால் மதிப்புரை வழங்கப்பட்டது..)
தேனம்மை அவர்கள் சிறந்த கவிஞர், எழுத்தாளர், திறமையான படைப்பாளி. பத்திரிகைகளில் கட்டுரை, சிறுகதை என எழுதியுள்ளார். இந்த நூலுக்கு எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான எம் ஏ சுசீலாம்மாதான் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...