எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 ஜூன், 2021

யூ ட்யூப் சேனலில் 11 - 20 வீடியோக்கள்.

 நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு  பயணங்களில் (யூரோப் டூர்)  எடுத்த வீடியோக்களையும் என் யூ ட்யூப் சேனலில் பதிவேற்றி வருகிறேன். இதற்கு முன் பத்து வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 

இதில் பதினொன்றாவது வீடியோவில் இருந்து இருபதாவது வீடியோ வரை பதிவு செய்து உள்ளேன். 

11. நீ நிழலாக நான் நிஜமாக - சாய் சக்தி சர்வி - நூல் பார்வை - தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=LBMFICbYTcA


12.சொல்லாததையும் செய் - சோம. வள்ளியப்பன் - நூல் பார்வை - தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=S9k8-5sc7FU&t=22s

திங்கள், 28 ஜூன், 2021

ராமேஸ்வரம் சோகியும், மருந்துரைக்கும் கல்லும், சீசாக்களும்

168.


1896*இராமேஸ்வரம் சென்று வருபவர்கள் முன்னே இந்தச் சோகிகள், சங்குகளையும் வாங்கி வந்துள்ளார்கள். காரைக்குடிப் பக்கம் நல்லதுக்கு எல்லாம் சங்கு ஊதுவது வழக்கம். ( வேவு எடுத்தல், பொங்கல், பிள்ளையார் நோன்பு என்று ) அந்தச் சங்குகளை வெள்ளி பிடித்து வைத்திருப்பார்கள். வலம்புரிச் சங்கு என்றால் ரொம்பவே விசேஷமாக வெள்ளி பிடித்து வைத்து வணங்கி வருவார்கள். 

இந்தச் 1897*சோகிகள் எல்லாம் திருமணத்தில் வைத்தது. இராமேஸ்வரம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் எப்படித்தான் எழுதினார்களோ தெரியவில்லை. முழுதுமே ஓவியம் போல் இருக்கிறது. ராமர், லெக்ஷ்மணர், சீதை, அனுமன், வானரப் படைகள் என்று எனாமல் பெயிண்டிங் போல் வரையப்பட்டிருக்கு. 


சோகியின் கீழ்ப்புறம். சங்கு போலவே இருக்கும். 

ஞாயிறு, 27 ஜூன், 2021

இசையுரையரசி, இறைப் பாடகி நித்யா அருணாசலம் அவர்களுடன் ஒரு பேட்டி.

 இசையுரையரசிஇறைப் பாடகி நித்ய அருணாசலம்அவர்களிடம் நமது செட்டிநாடு இதழுக்காக ஒரு பேட்டி.

 


1.    உங்கள் குடும்பம் பற்றிக் கூறுங்கள்

 

பிறந்தது  பட்டமங்கலம் (சுப.இராம.நா. வீடு), புகுந்தது   காரைக்குடி (சி.மெ. வீடு) பெற்றோர் - திரு.இராமசாமி செட்டியார்திருமதி.சிவகாமி ஆச்சி

மாமாஅத்தை - திரு.சிதம்பரம் செட்டியார் , திருமதி.செல்லம்மை ஆச்சி.

கணவர் திரு.அருணாசலம்மகன் - செல்வன்.சித்தார்த் சிதம்பரம்

சனி, 26 ஜூன், 2021

யூ ட்யூபில் என் வீடியோ சானல். 1 - 10 வீடியோக்கள்.

 யூ ட்யூபில் இரு ஆண்டுகளுக்கு முன் மருமகள் ஆரம்பித்துக் கொடுத்த யூ ட்யூப்  சானலில் முதன் முதலில் பீட்ரூட் வடை பற்றிப் போட்டிருந்தேன். முகநூல் எங்கும் பீட்ரூட் வடையா அப்ப அடுத்து பீட்ரூட் அடையா என்று ரொட்டி தட்டியதில் அதை அப்படியே கிடப்பில் போட்டிருந்தேன். 

இந்த வருடம் நூல் பார்வைகள் எல்லாம் எழுத முடியாததால் ( கண் பிரச்சனை, கை வலி, நேரப் பிரச்சனை, கொரோனா காலகட்ட மன நெருக்கடி, வேலைகள்) அவற்றை நேரம் கிடைக்கும்போது யூ ட்யூபில் பகிர்ந்து வருகிறேன்.  

அது போக சுற்றுலா போன இடங்கள். சில கவிதைகள் இவற்றையும் பதிந்துள்ளேன். என்னுடைய சேனலின் பெயர் Thenammai Lakshmanan

இதுவரை 20 வீடியோக்கள் வந்துள்ளன. அவற்றில் முதல் 10 இன் இணைப்பை இங்கே தருகிறேன்.நேரம் கிடைக்கும்போது போய்ப் பார்த்துட்டு வந்து கருத்துச் சொல்லுங்க மக்காஸ். 

1.Beetroot vadai. பீட்ரூட் வடை

https://www.youtube.com/watch?v=_j-aY9we0Kk&t=4s

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/_j-aY9we0Kk" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>


2. 40+ மாற்றம் - புத்தக விமர்சனம் by தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=dvOrLd4zbs4

40+ மாற்றம், திருமதி வள்ளி அருணாசலம் அவர்கள் எழுதிய புத்தகம் பற்றிய என்னுடைய பார்வை.

வெள்ளி, 25 ஜூன், 2021

தனவணிகனில் கொரோனா கூட்டுப் பிரார்த்தனை.

 சென்ற மாதம் (மே 16 ) அன்று கொரோனா பெருந்தொற்று நீங்க வேண்டிக் கூட்டுப் பிரார்த்தனை ஒன்று ஜூம் மீட்டில் நடைபெற்றது.  இந்நிகழ்வை ஹேப்பி டூர்ஸ் என்ற வாட்ஸப் குழுமத்தின் அட்மினாக இருக்கும் பள்ளத்தூரைச் சேர்ந்த திரு விஸ்வநாதன் அவர்கள்,  குழுமத்தில் இருக்கும் அனைவரையும் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார். தேவகோட்டையைச் சேர்ந்த வீர சுப்பு அவர்கள் தன்னுடைய யூ ட்யூப் சேனலில் இதை லைவ் ஸ்ட்ரீமாகப் பதிவேற்றி இருந்தார். கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கும் மேலாக அனைவரும் இதில் நல்ல உற்சாகத்துடன் பங்கேற்றுப் பேசிச் சிறப்பித்தார்கள். செல்வன் அ. சொ. கி. முருகப்பன் இறைவணக்கம் பாட விழா இனிதே தொடங்கியது. திரு விஸ்வநாதன் அண்ணன் வரவேற்புரை நல்கினார்கள். 

திரு கண்ணப்பன் அழகன் முருகனுக்குக் குளிரக் குளிர அபிஷேக ஆராதனைகள் செய்து மனம் கனியக் கனியக் கந்தர் அலங்காரம் சொன்னார். இன்னும் கூடக் கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருந்தது. பேச வேண்டியவர்கள் அதிகம் மற்றும் நேர மேலாண்மை காரணமாக அவர் சட்டென முடிக்க வேண்டியதாயிற்று.  திரு வெங்கட் கணேசன், திருமதி கமலா பழனியப்பன் இன்னும் திரு. வீரப்பன்,திரு. பழனியப்பன், திரு மோகன் ஆகியோர் பாமாலைகள் பாடிச் சிறப்பித்தார்கள். 

வியாழன், 24 ஜூன், 2021

அமேஸானில் என் மின்னூல்கள் 38 - 41.

1.  எனது முப்பத்தி எட்டாவது மின்னூல்,” சிறுவர் நூல்கள் - ஒரு பார்வை   “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 50/- மட்டுமே



சிறுவர் நூல்கள் - ஒரு பார்வை

https://www.amazon.in/dp/B094CNC156


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 

செவ்வாய், 22 ஜூன், 2021

மைசூர்ச் சட்டியும் தூக்குச்சட்டியும் தெக்களூர்த் தவலையும்

 167.


காரைக்குடியில் வீட்டில் உபயோகிக்கும் ஒவ்வொரு சில்வர் சாமானுக்கும், ( ஏன் மரம், இரும்பு, தகரம், அலுமினியம், துத்தநாகம், ஜாடி, கண்ணாடி, ப்ளாஸ்டிக், ரப்பர் வகையறா சாமான்களுக்கும் ) தனித்தனிப் பெயருண்டு. 

இதில் இருப்பது 1856*விளிம்பு உருட்டிய சாப்பிடும் தட்டு, 1857*பூப்போட்ட டிசைன் தட்டு. 1858*மாவு மூடி, 1859*ஏந்தல் மூடி.


இவை 1860*கெஸ்ட் ப்ளேட். 1861*சாப்பிடும் தட்டு சின்னம் பெரிசு மூணுக்கு ஜோடி ஒன்று என எழுதுவார்கள். 

ஞாயிறு, 20 ஜூன், 2021

இராமன் செய்தது நியாயமா ?

இராமன் செய்தது நியாயமா ?

ஒருவரை நேருக்கு நேர் நின்று எதிர்ப்பது ஒரு விதம். ஆனால் ஒருவரை மறைந்திருந்து தாக்குதல் இன்னொரு விதமான போர்முறை. இராமன் வாலியை அப்படி மறைந்திருந்து தாக்கிக் கொன்றான். அதனால் வாலியின் மனதில் ”பகைவனல்லாத தன்னை இராமன் மறைந்திருந்து அம்பெய்ந்து கொன்றானே. அவன் செய்தது நியாயமா” என்ற கேள்வி உறுத்திக்கொண்டே இருந்தது. அதை இலக்குவனிடம் கேட்டான். அதன் பின் தெளிந்தான். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அன்றலர்ந்த பூக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. வாலி அவற்றை எடுத்துக் கொண்டு காலை பகல் மாலை என்று மூன்று வேளையும் எட்டுத் திக்கும் சென்று சிவனுக்கு அர்ச்சித்து வணங்குபவன். சிவநேயச் செல்வன். பக்தியிலும் ஆட்சி நெறியிலும் வல்லமை, வலிமை கொண்டவன் என்பதால் வாலி என வழங்கப்பட்டான்.
அன்று காலையும் தன் பூஜை புனஸ்காரங்களை முடித்து வந்து அமர்ந்தான் வாலி. வெளியே சுக்ரீவனின் அறைகூவல் கேட்கிறது. வாலியின் தம்பிதான் அவன். போருக்கு வரும்படி ஏன் அறைகூவல் விடுக்கிறான் அவன். என்னாயிற்று இன்று அவனுக்கு. வாலி உணவை விடுத்துத் தன் கதையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.

புதன், 16 ஜூன், 2021

கைகேயி ஏன் அப்படிச் செய்தாள்.

கைகேயி ஏன் அப்படிச் செய்தாள்.


ஒருவர் ஒரு விஷயத்தைச் செய்யும்போது ஏன் செய்தார்கள் என்று அறிந்துகொண்டோமானால் நமக்கு அவர்கள் மேல் ஏற்பட்ட வெறுப்பு சிறிதாவது குறையும்.இப்படித்தான் கேகய நாட்டு மன்னனும் தயரதனின் மனைவியுமான கைகேயி அனைவராலும் வெறுக்கப்பட்டாள். ஆனால் அவள் மகன் ராமனோ அவளுக்காகத் தந்தையிடம் பரிந்து பேசினான். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அயோத்தியே ஒளிமயமாய் மின்னிக் கொண்டிருந்தது. மக்கள் தங்கள் இல்லங்களைக் கோலங்களாலும் மாவிலை தோரணங்களாலும் அழகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். விடியற்காலையிலேயே பம்பையும் எக்காளமும் ஒலிக்க அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருந்தது. ஏனெனில் அவர்கள் சக்கரவர்த்தி தயரதன் தன் இளவல் ராமனுக்கு முடிசூட்டப் போகிறார். அந்த இனிய காட்சியைக் காண அரண்மனை நோக்கி சாரி சாரியாக மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

செவ்வாய், 15 ஜூன், 2021

மடக்கு இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும்

166.

காரைக்குடியில் புழங்கிய/புழங்கும் சில பொருட்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை என் திருமணத்தில் வைக்கப்பட்டவை என்பது ஸ்பெஷல். 

1846*இது குழந்தையின் வாநீர்த் துண்டு. அதில் ஓவியாய் இருக்கும் பலூனில் கட்டி மிதக்கும் பூனையும், பின்னே பறக்கும் வண்டும் வெகு அழகு. 

புதன், 9 ஜூன், 2021

அன்பின் இசையால் அருமை பெற்ற பாணர்

அன்பின் இசையால் அருமை பெற்ற பாணர்

பெரியோர் சிறியோர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வறியோர் வலியோர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருமே இறைவனை எட்டமுடியும் என்பதற்கு இறைவனை நினைத்து யாழிசை மீட்டி வந்த ஒரு பாணரின் கதை உதாரணமாய் இருக்கிறது. அது என்ன என்று பார்ப்போம் குழந்தைகளே.
உறையூர் நகரில் மிகப் பரந்த செந்நெல் வயல் அது. கடம்ப மரங்களும் மருதநில மரங்களும் செழித்திருந்தன. நண்பகல் நேரம் வெய்யிலோ தகித்தது. திடீரென குவா குவா என்ற சத்தம் ஓங்கி வளந்திருந்த நெற்பயிரின் ஊடே ஒலித்தது.
அந்தப் பக்கமாக பாணன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் யாழினை மீட்டி இறைவனைப் பாடிப் பரவும் மெய்யன்பர். இறையன்பரான அவருக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லை. எனவே குழந்தைச் சத்தம் கேட்டதும் மனம் திடுக்கிட்டு இதென்ன பிரம்மையோ என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

உண்மையாகவே ஒரு குழந்தையின் அழுகுரல் அவரை அசைத்தது. பதட்டத்துடன் செந்நெற்பயிர்களை விலக்கித் தேடத் தொடங்கினார். அடடா பிஞ்சுக் குழந்தை ஒன்று கைகால்களை அசைத்தபடி உச்சியில் சுட்ட சூரியனைக் காணக் கண் ஒட்டாமல் அழுது கொண்டிருந்தது.

சனி, 5 ஜூன், 2021

காதல் வனத்தில் மணிமேகலைகள்.

 அதிசயமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது காதல் வனம் நூலை வெளியிட்டவர்கள் , பெற்றுக் கொண்டவர் இருவருமே மணிமேகலைகள். காதலை வெறுத்த துறவி மணிமேகலையின் பெயர் கொண்ட இருவரும் எனது காதல்வனம் நூலைப் படித்துப் பார்த்தார்கள் வெளியிடும் முன். :) 

ஒருவர் எனது அன்பிற்குரிய தோழி சாஸ்திரி பவன் பெண்கள் சங்கத் தலைவி, தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி மணிமேகலை. இன்னொருவர் பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன். ( இவரது பெயரில் இருவரின் பெயருமே காதலையும் இல்வாழ்வையும் துறந்தவர்களாக இருப்பது ஆச்சர்யத்துக்குரியது ) 


என்னப்பா நம்மளக் கூப்பிட்டுத் தேன் இப்பிடி ஒரு புக்கை வெளியிடுறா.. என்று கூறுகிறார் தோழி மணிமேகலை :) 

வியாழன், 3 ஜூன், 2021

ஆடியன்ஸ் ..

 சென்னையில் இருந்தபோது பல்வேறு நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அவை எல்லாவற்றையும் தொகுத்துப் போட்டுள்ளேன். சில நிகழ்வுகள் விடுபட்டுள்ளன. 

இது அட்சய ஃபவுண்டேஷனுக்காக அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் மாணவச் செல்வங்களுடன். 
Related Posts Plugin for WordPress, Blogger...