எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 அக்டோபர், 2021

தாய்போல் காத்த தாரை.

தாய்போல் காத்த தாரை


நம்மைச் சார்ந்த ஒருவருக்கு ஒரு இக்கட்டு நேரும்போது காப்பது நம் கடமை. அதையும் ஒருத்தி வெகு இலகுவாகச் செய்தாள். தனக்காக மட்டுமல்ல தன் நாட்டையும் வீட்டையும் தாய்போல் தீர்க்கமான மதியுடன் செயல்பட்டுக் காத்த அந்தப் பெண்ணைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
வானர அரசன் வாலியின் மனைவி தாரை. இவள் வானரர்களின் மருத்துவர் சுசேனரின் மகள். வாலி தேவர்களுக்குத் துணையாகப் பாற்கடலைக் கடைந்தபோது அவதரித்தவள் என்றும் சொல்கிறார்கள். அவள் தன் கணவன் வாலியின்மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தாள். இவர்கள் மகன் அங்கதன்.
ஒரு சமயம் சுக்ரீவனும் வாலியும் ஒரு மாயாவி அரக்கனுடன் போர் செய்யச் சென்றபோது வாலியும் அந்த அரக்கனும் ஒரு குகைக்குள் சென்றனர். போர் தொடர்ந்தது. ஆனால் இதை அறியாத சுக்ரீவன் தனயன் திரும்பவில்லை எனவே அவனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று சொல்லி நாடு திரும்பி அரசாட்சியை எடுத்துக் கொண்டான்.

சனி, 28 ஆகஸ்ட், 2021

மாயமான் ஆன மாரீசன்

மாயமான் ஆன மாரீசன்

தனக்கு உரிமையில்லாத ஒரு பொருளின்மேல் நாட்டம் வைத்தால் தனக்கு உரிமையானதையும் இழக்க நேர்ந்துவிடும் , மேலும் கெட்டவர்களோடு இணைந்தால் அழிவு வரும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது. கதைக்குள் போவோம் வாருங்கள் குழந்தைகளே.
தண்டகாரண்யத்தில் ராமன் இலக்குவன் சீதை ஆகியோர் பர்ணசாலை அமைத்து தங்கள் வனவாசத்தை மேற்கொண்டிருந்தார்கள். கானகங்களில் முனிபுங்கவர்களின் வேள்விக்கு இடையூறு செய்துவந்த அரக்கர்களின் தொல்லைகளில் இருந்து அவர்களைக் காத்ததால் அகத்தியரிடம் ஆசி பெறுமாறு கூறினார்கள் முனிவர்கள்.

ஞாயிறு, 11 ஜூலை, 2021

இராமனின் முன்னோர்கள்

இராமனின் முன்னோர்கள்


நாம் நம்முடைய முன்னோர்களை அறிந்திருக்கிறோமா. அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயரை அறிந்திருப்போம். அதிகபட்சமாக எள்ளுத் தாத்தாவின் பெயரை அறிந்தவர்கள் அபூர்வமே. ஆனால் இராமன் தோன்றின சூரிய குலத்தில் இட்சுவாகு வம்சத்தில் இராமனுக்கு முன்னே அரசாண்ட அவனது தாத்தாக்கள் யார் அவர்களது வீர தீரப் பராக்கிரமம் என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

ஞாயிறு, 20 ஜூன், 2021

இராமன் செய்தது நியாயமா ?

இராமன் செய்தது நியாயமா ?

ஒருவரை நேருக்கு நேர் நின்று எதிர்ப்பது ஒரு விதம். ஆனால் ஒருவரை மறைந்திருந்து தாக்குதல் இன்னொரு விதமான போர்முறை. இராமன் வாலியை அப்படி மறைந்திருந்து தாக்கிக் கொன்றான். அதனால் வாலியின் மனதில் ”பகைவனல்லாத தன்னை இராமன் மறைந்திருந்து அம்பெய்ந்து கொன்றானே. அவன் செய்தது நியாயமா” என்ற கேள்வி உறுத்திக்கொண்டே இருந்தது. அதை இலக்குவனிடம் கேட்டான். அதன் பின் தெளிந்தான். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அன்றலர்ந்த பூக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. வாலி அவற்றை எடுத்துக் கொண்டு காலை பகல் மாலை என்று மூன்று வேளையும் எட்டுத் திக்கும் சென்று சிவனுக்கு அர்ச்சித்து வணங்குபவன். சிவநேயச் செல்வன். பக்தியிலும் ஆட்சி நெறியிலும் வல்லமை, வலிமை கொண்டவன் என்பதால் வாலி என வழங்கப்பட்டான்.
அன்று காலையும் தன் பூஜை புனஸ்காரங்களை முடித்து வந்து அமர்ந்தான் வாலி. வெளியே சுக்ரீவனின் அறைகூவல் கேட்கிறது. வாலியின் தம்பிதான் அவன். போருக்கு வரும்படி ஏன் அறைகூவல் விடுக்கிறான் அவன். என்னாயிற்று இன்று அவனுக்கு. வாலி உணவை விடுத்துத் தன் கதையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.

புதன், 22 ஜனவரி, 2020

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை. தினமலர் சிறுவர் மலர் - 49.

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை.
நல்லவர் ஒருவர் எந்தக் காரணமும் இல்லாமலே துயர்ப்பட நேரும். அது அவங்க தப்பு இல்லை. தன் துர்நோக்கம் நிறைவேற அவங்களை இப்பிடிப் பகடைக்காயா சிலர் பயன்படுத்திக்குவாங்க. அப்படிப்பட்ட துர்நோக்கம் கொண்ட சூர்ப்பனகை தன் எண்ணம் நிறைவேற ஒன்றுமறியா சீதையைப் பகடையாகப் பயன்படுத்திக்கிட்டா. உள்ளபடி அவள் காழ்ப்புணர்வு சீதை மேலே இல்லை. பின்னே யார் மேலேன்னு பார்க்கலாம் வாங்க குழந்தைகளே.
பிரம்மாவின் புத்திரர் புலத்திய மகரிஷி. அவரது மகனான விச்ரவசுவுக்கும் அவரது இரண்டாம் மனைவியான கேசிக்கும் பிறந்தவர்கள்தான் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன்.
சூர்ப்பணகைக்கு உரிய பருவம் வந்ததும் காலகேயர் என்னும் தங்கநிற அரக்கர் வம்சத்தைச் சார்ந்த வித்யுத்சிகுவன் என்பாருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். சூர்ப்பணகையும் இயல்பிலேயே அழகானவள். இருவரும் இன்பமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒருமுறை இராவணன் தன் புஜபராக்கிரமத்தைக் காட்ட வேண்டிக் காலகேயர்களுடன் போரிட்டான். அப்போது வித்யுத்சிகுவனை சூழ்ச்சி செய்து இராவணன் கொன்று விடுகிறான். இதைக்கேட்டுத் துடித்த சூர்ப்பணகை போர்க்களத்துக்கு ஓடிவருகிறாள். அண்ணனாயினும் தன் கணவன் சாவுக்குக் காரணமானவனை அதே போல் சூழ்ச்சியால் வெல்வேன் என சபதமேற்கிறாள்.

திங்கள், 23 செப்டம்பர், 2019

பவன்குமாரனின் பலம் தெரிவித்த ஜாம்பவான். தினமலர் சிறுவர்மலர். 33.

பவன்குமாரனின் பலம் தெரிவித்த ஜாம்பவான்
எந்தச் செயலைச் செய்வதற்கும், “உன்னால் முடியும் தம்பி” என்று ஒருவர் சொன்னால் அதை நம்ப வேண்டும் அப்படித் தன் மறந்து போன திறமையை ஒருவர் ஞாபகப்படுத்தியவுடன் தன்னால் முடியும் என்று விண்ணிலே பறந்த ஒருவரைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் குழந்தைகளே.
கேசரி அஞ்சனை ஆகியோருக்கு வாயுபுத்திரரின் அருளால் பிறந்தவர் ஹனுமன். இவர் சிறு வயதில் மிகுந்த சுட்டிக் குழந்தையாய் இருந்தார். ஒருமுறை தாய் ஏதோ வேலையாக இருக்கும்போது இவருக்குப் பசி எடுத்துவிட வானில் தோன்றிய சூரியனைப் சிவப்புப்பழம் என நினைத்துத் தாவிப் பிடிக்கப் போனார். அதைக் கண்டு பதறிப்போன  இந்திரன் சின்னக் குழந்தையான அனுமனைத் தாடையில் அடிக்க அவர் மயக்கமுற்று விழுந்தார்.
இதனால் வாயு பகவான் கோபப்பட்டுத் தன் இயக்கத்தை நிறுத்த அனைத்து உயிர்களும் காற்றில்லாமல் தவித்தன. உடனே சூரியன் முதலான தேவர்கள் அனுமனை மயக்கம் தெளிவித்துப் பல்வேறு வரங்கள் வழங்கினார்கள். அணிமா மஹிமா லகிமா ஆகிய சித்திகளும், காற்றில் பறக்கும் சக்தியும் பெற்றார் அனுமன்.

வெள்ளி, 12 ஜூலை, 2019

சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவர்மலர் - 23

சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன்
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்தில் ஓரிரு இடங்களில் ஆங்காங்கே வந்தாலும் சத்ருக்னன் இராமன் மேல் மட்டுமல்ல தன் சகோதரர்கள் மூவர் மேலும் கொண்ட பாசம் நம் கண்களைக் கலங்க வைத்துவிடும்.
அயோத்தியை ஆண்ட தசரத மன்னருக்குப் புத்திர பாக்கியமில்லை என்பதால் புத்திர காமேஷ்டியாகம் நடத்துகிறார். ஹோமப் ப்ரசாதமாக பாயாசம் தரப்படுகிறது. அதை தசரதரின் மனைவியரான கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் அருந்துகிறார்கள். கடைசியாக அருந்தும்போது பாயாசப் பாத்திரத்தில் சுமித்திரைக்கு மட்டும் கடைசியாக இருமடங்கு பிரசாதம் கிடைக்கிறது. அதனால் கௌசல்யைக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும் பிறக்க சுமித்திரைக்கு லெக்ஷ்மணன், சத்ருக்னன் என்ற இரு மகன்களும் பிறக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் வசிஷ்டரின் வழிகாட்டுதலின் படி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறார்கள்.  இப்படி இருக்கையில் ஒரு நாள் விசுவாமித்திர முனிவர் தனது தவத்துக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை அழிக்க ராமனையும் லெக்ஷ்மணனையும் அனுப்பும்படி தசரதரிடம் கேட்கிறார். குழந்தைகளைப் பிரிய தசரதர் தயங்கினாலும் அனுப்பி வைக்கிறார்.

வெள்ளி, 5 ஜூலை, 2019

கல்லும் கனிந்து தாயானது. தினமலர் சிறுவர்மலர் - 21.

கல்லும் கனிந்து தாயானது
தவறு செய்பவர்கள் பலரகம். தெரிந்தே தவறு செய்பவர்கள்,தெரியாமல் தவறு செய்பவர்கள் என்று. சிலர் தவறே செய்யாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறானவர்களாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். கம்பராமாயணத்தில் நிரபராதியான ஒரு பெண் அப்படித் தண்டிக்கப்பட்டு மனதால் கல்லான கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஒரு முறை ப்ரம்மா குறையே இல்லாத ஒரு பெண்ணைப் படைக்க எண்ணினார். அவள் பூரணத்துவம் மிகுந்தவள். அவள் முன் மோகினி கூட நிற்க முடியாது. அவ்வளவு எழில், அவ்வளவு அழகு, அவ்வளவு சாந்தம். தன்மையா குணம் கொண்ட அவளை விண்மீன்களும் சூரியனும் சந்திரனும் கூட ஆராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள். குறையே இல்லாமல் படைக்கப்பட்ட அவள் பெயர் அகல்யை.
அந்தப் பெண்ணரசி திருமணப் பருவம் எட்டினாள். அவளை மணந்துகொள்ள இந்திரனும் மற்ற தேவர்களும் கூட போட்டி போட்டனர். அங்கே வந்தார் துறவியான கௌதம மகரிஷி.

புதன், 8 மே, 2019

பரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம். தினமலர் சிறுவர்மலர் - 16.

பரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம்
அண்ணன் தம்பி பாசத்துக்கு எத்தனையோ பேரை உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் மாற்றாந்தாய்க்குப் பிறந்து தன் சகோதரன் மேல் அதீத பாசம் வைத்து அவன் வராததால் தீப்பாயத் துணிந்தவனை நீங்கள் எங்கேனும் கண்டதுண்டா. இல்லைதானே அப்படிப்பட்ட பாசக்காரப் பரதன் என்னும் தம்பியைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் குழந்தைகளே இன்று.
அயோத்தி அரண்மனையில் ஒரே மக்கள் வெள்ளம். அமைச்சர்களும் அரச மாதாக்களான கைகேயி கோசலை சுமித்திரை ஆகியோரும் பரிதவித்துப் பார்த்திருக்கிறார்கள்.

வெள்ளி, 22 மார்ச், 2019

சீதை என்றொரு – ஒரு பார்வை.


சீதை என்றொரு – ஒரு பார்வை.

சீதை என்றொரு காப்பிய நாயகி என்ற பார்வையில் படிக்க ஆரம்பித்து சீதை என்றொரு பெண்மையின் குறியீடு என ஆசிரியர் நிறுவதைப் படித்து வியந்தேன்.

கம்பன் அடிசூடி திரு பழ பழநியப்பன் அவர்கள் பெண்ணினத்தின் பிரதிநிதியாக, பெண்ணினத்தின் வளர்ச்சியாக, பெண்ணியத்தின் வளர்ச்சியாகச் சீதையைக் கூறுகிறார்கள்.

மானிடப் பெண் செய்யத்தக்கன செய்யதகாதன என்பதை அவள் வாழ்க்கையில் இருந்தே எடுத்துக்காட்டுகிறார். சீதை கணவனுடன் பேசிய சொற்கள் இல்லறநெறியையும், அதிக முக்கியத்துவம் கொடுத்த சொற்கள் தனிமனித ஒழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.

சனி, 16 மார்ச், 2019

மாசறு கற்பினாள் அகலிகை (பல்வேறு கோணங்களில் 19 சான்றோர்களின் கருத்துக்கள்) – ஒரு பார்வை.


மாசறு கற்பினாள் அகலிகை (பல்வேறு கோணங்களில் 19 சான்றோர்களின் கருத்துக்கள்) – ஒரு பார்வை.


அகலிகையைப் பற்றி முன் முடிபுகளோடு அணுகுபவர்கள் அவசியம் படிக்கவேண்டியது இந்நூல். இந்நூலில் 19 சான்றோர்களின் கருத்துக்களை பி எல் முத்தையா அவர்கள் 1988 இலேயே தொகுத்து வழங்க எண்ணி இருக்கிறார்கள. அதை அவர் மகன் முல்லை மு. பழனியப்பன் அவர் மறைவுக்குப் பின் ஏப்ரல் 2013 இல் சாத்யமாக்கி இருக்கிறார்கள்.
வால்மீகி, கம்பன், வெ. ப. சுப்ரமணிய முதலியார், ராஜாஜி, ச. து. சு. யோகியார், புதுமைப்பித்தன், தமிழ் ஒளி, கவிஞர் கம்பதாசன், வ. ரா, வி. திருவேங்கடாச்சாரியார், ஸ்ரீ சங்கரகிருப, பெ. கோ. சுந்தர்ராஜன், எம். வி. வெங்கட்ராம், அரு. ராமநாதன், க. கைலாசபதி,  ஜமதக்னி ஆகியோரின் பார்வையில் இதிகாசம், வெண்பா, கவிதை, கதை, கட்டுரை, நாடகம், சிந்தனைகள் தொகுப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.
Related Posts Plugin for WordPress, Blogger...