எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

சகோதர பாசத்தில் சிறந்த சம்பாதி.

 சகோதர பாசத்தில் சிறந்த சம்பாதி.  


பொதுவாகவே பறவைகளுக்கு இருக்கும் கூரியபார்வையை நாம் அறிவோம். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நீரில் இருக்கும் தம்முடைய இரையை அவை கூர்ந்து கவனித்து இறங்கிப் பிடிக்கும். ஆனால் ஒரு பறவையின் பார்வையில் கடல் தாண்டி இருக்கும் தீவே தெரிந்ததாம். அதனால் நன்மையே விளைந்தது அப்பறவைக்கும். சகோதர பாசத்திலும் சிறந்த அப்பறவையின் கதை என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. 

மஹேந்திரமலையில் ஏறிக்கொண்டிருந்தார்கள் சுக்ரீவனின் வானர வீரர்கள். அங்கதன், அனுமன் இவர்களோடு ஜாம்பவானும் சென்று கொண்டிருந்தார். அனைவரின் முகங்களிலும் ஆயாசம். பலமாதங்கள் ஆயிற்று அவர்கள் கிளம்பி. சீதா தேவியாரைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் அவர்கள்.

திங்கள், 25 அக்டோபர், 2021

தாய்போல் காத்த தாரை.

தாய்போல் காத்த தாரை


நம்மைச் சார்ந்த ஒருவருக்கு ஒரு இக்கட்டு நேரும்போது காப்பது நம் கடமை. அதையும் ஒருத்தி வெகு இலகுவாகச் செய்தாள். தனக்காக மட்டுமல்ல தன் நாட்டையும் வீட்டையும் தாய்போல் தீர்க்கமான மதியுடன் செயல்பட்டுக் காத்த அந்தப் பெண்ணைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
வானர அரசன் வாலியின் மனைவி தாரை. இவள் வானரர்களின் மருத்துவர் சுசேனரின் மகள். வாலி தேவர்களுக்குத் துணையாகப் பாற்கடலைக் கடைந்தபோது அவதரித்தவள் என்றும் சொல்கிறார்கள். அவள் தன் கணவன் வாலியின்மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தாள். இவர்கள் மகன் அங்கதன்.
ஒரு சமயம் சுக்ரீவனும் வாலியும் ஒரு மாயாவி அரக்கனுடன் போர் செய்யச் சென்றபோது வாலியும் அந்த அரக்கனும் ஒரு குகைக்குள் சென்றனர். போர் தொடர்ந்தது. ஆனால் இதை அறியாத சுக்ரீவன் தனயன் திரும்பவில்லை எனவே அவனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று சொல்லி நாடு திரும்பி அரசாட்சியை எடுத்துக் கொண்டான்.

திங்கள், 26 ஜூலை, 2021

ராமனுக்கு உதவப் புறப்பட்ட குலசேகரர்.

ராமனுக்கு உதவப் புறப்பட்ட குலசேகரர்.

தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகள் அதில் ஆழ்ந்து அதைப் போலவே வீரசாகசங்களைத் தாங்களும் செய்து பார்ப்பதுண்டு. இப்பழக்கம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஒரு அரசருக்கே அந்த நாளில் இருந்தது. யார் அந்த அரசர் அப்படி அவர் என்ன காரியம் செய்தார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
எட்டாம் நூற்றாண்டில் சேரநாட்டின் திருவஞ்சைக்களம் என்னும் இடத்தில் திடவிரதன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருக்குக் குலசேகரன் என்ற மகன் பிறந்தார்.
தன் தந்தைபோலவே சிறப்பாக ஆட்சி புரிந்த இவர் ஒரு சமயம் நாடு பிடிக்கும் ஆசையில் சோழ பாண்டிய நாடுகளின் மீதும் படையெடுத்து வென்றார். பாண்டிய மன்னன் இவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்குச் சேரகுலவல்லி என்ற மகள் பிறந்தாள்.
மகன் பிறந்ததும் தான் ஈடுபட்ட கொடுமையான போர்க்களங்களை நினைத்து வருந்திய குலசேகரர் ஒரு கட்டத்தில் கடவுளைச் சரணடைந்தார். நாளும் கிழமையும் கடவுளின் புகழ் கூறும் உபன்யாசகர் யாரையாவது அழைத்து வந்து காவியங்களின் விளக்கத்தைக் கேட்டு இன்புற்று வந்தார்.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

கம்பர் எழுதிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) - ஒரு பார்வை.

கம்பர் எழுதிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) - ஒரு பார்வை.


கம்பர் அருளிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) – ஒரு பார்வை.

இராமாயணத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். அதுவும் ஒவ்வொருவர் வசப்பட்டும் அதுவரை தென்படாத வித்யாசமான பாதை ஒன்றிற்கு அழைத்துச் செல்லும். இந்த நூலைத் தொகுத்து உரை கண்ட சொ முருகப்பனார் அது நூலாக்கம் பெறுமுன்பு இறைவனடி சேர்ந்ததால் இதற்கு நூல்முகம் எழுதியதாகக் குறிப்பிட்டு இருக்கிறார் ராய. சொ. அவர்கள்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

சொ. முருகப்பனாரும் பாரதியாரும்.

நலந்தா = நல்ல புத்தகக்கடை என்ற புத்தகக்கடையைக் காரைக்குடியில் நடத்தி வரும் திரு நலந்தா ஜம்புலிங்கம் அவர்கள் சிறந்த எழுத்தாளர் & பதிப்பாளரும் கூட. மிக சிறந்த எழுத்தாளுமைகளுடன் தொடர்பில் உள்ளவர். என் எழுத்தைப் பற்றி அவர் கூறியுள்ளவற்றைப் படிக்கும்போது சிறிது கூச்சம் ஏற்பட்டது. அதோடு சொ. முருகப்பனாரின் இராமகாதை பற்றியும் கூறி  இருக்கிறார். வாசித்துப் பாருங்கள்.


(இந்தப் புகைப்படம் பாரதி காரைக்குடி வந்தபோது எடுத்தது. பாரதியாரின்  வலது பக்கம் இராய சொ அவர்களும் இடது பக்கம் சொ முருகப்பனாரும் அமர்ந்திருக்கிறார்கள். )

வெள்ளி, 12 ஜூலை, 2019

சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன். தினமலர் சிறுவர்மலர் - 23

சகோதர பாசத்தில் சிறந்த சத்ருக்னன்
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்தில் ஓரிரு இடங்களில் ஆங்காங்கே வந்தாலும் சத்ருக்னன் இராமன் மேல் மட்டுமல்ல தன் சகோதரர்கள் மூவர் மேலும் கொண்ட பாசம் நம் கண்களைக் கலங்க வைத்துவிடும்.
அயோத்தியை ஆண்ட தசரத மன்னருக்குப் புத்திர பாக்கியமில்லை என்பதால் புத்திர காமேஷ்டியாகம் நடத்துகிறார். ஹோமப் ப்ரசாதமாக பாயாசம் தரப்படுகிறது. அதை தசரதரின் மனைவியரான கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் அருந்துகிறார்கள். கடைசியாக அருந்தும்போது பாயாசப் பாத்திரத்தில் சுமித்திரைக்கு மட்டும் கடைசியாக இருமடங்கு பிரசாதம் கிடைக்கிறது. அதனால் கௌசல்யைக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும் பிறக்க சுமித்திரைக்கு லெக்ஷ்மணன், சத்ருக்னன் என்ற இரு மகன்களும் பிறக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் வசிஷ்டரின் வழிகாட்டுதலின் படி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறார்கள்.  இப்படி இருக்கையில் ஒரு நாள் விசுவாமித்திர முனிவர் தனது தவத்துக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை அழிக்க ராமனையும் லெக்ஷ்மணனையும் அனுப்பும்படி தசரதரிடம் கேட்கிறார். குழந்தைகளைப் பிரிய தசரதர் தயங்கினாலும் அனுப்பி வைக்கிறார்.

புதன், 8 மே, 2019

பரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம். தினமலர் சிறுவர்மலர் - 16.

பரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம்
அண்ணன் தம்பி பாசத்துக்கு எத்தனையோ பேரை உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் மாற்றாந்தாய்க்குப் பிறந்து தன் சகோதரன் மேல் அதீத பாசம் வைத்து அவன் வராததால் தீப்பாயத் துணிந்தவனை நீங்கள் எங்கேனும் கண்டதுண்டா. இல்லைதானே அப்படிப்பட்ட பாசக்காரப் பரதன் என்னும் தம்பியைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் குழந்தைகளே இன்று.
அயோத்தி அரண்மனையில் ஒரே மக்கள் வெள்ளம். அமைச்சர்களும் அரச மாதாக்களான கைகேயி கோசலை சுமித்திரை ஆகியோரும் பரிதவித்துப் பார்த்திருக்கிறார்கள்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

உள்ள நலன் அழிந்ததால் இழிந்த இராவணன். தினமலர் சிறுவர்மலர் - 11.

உள்ள நலன் அழிந்ததால் இழிந்த இராவணன்.
ள்ளம் கெடாதவரை எதுவுமே கெடுவதில்லை. உள்ளம் கெட்டால் அனைத்தும் கள்ளமாகும், அது ஒருவனை மலையில் இருந்து மடுவில் மட்டுமல்ல மரணத்துக்கும் செலுத்தும் என்று ஒருவனின் வாழ்க்கை நமக்குப் பாடம் புகட்டுகிறது.
அப்படி உள்ள நலன் அழிந்ததால் இழிந்தவன் சாதாரணன் அல்ல. உலகனைத்தையும் வென்றவனும், மூன்று கோடி வாழ்நாள் உடையவனும், முயன்று பெற்ற தவப்பயனால் யாராலும் வெல்லப்படமாட்டான் என சிவபெருமானே மனமகிழ்ந்தருளி வரம் வழங்கிய தசமுகன் எனப்படும் இராவணன்தான் அவன். அவனைப்பற்றிப் பார்ப்போம் குழந்தைகளே.
தென்கடலில் கெம்புப் பதக்கம் போல் ஒளிவீசி மின்னுகிறது இலங்கை மாநகரம். அங்கே அயோத்திக்கீடாக ஏன் அதை விடவும் அழகான மாட மாளிகை கூட கோபுரங்கள் எல்லாம் ஒளிவீசிப் பொலிகின்றன. அவற்றின் நடுவில் அதோ விஸ்வகர்மா சமைத்து விண்ணளாவி உயர்ந்து நிற்கின்றதே அந்த அரண்மனைதான் இலங்காதிபதி இராவணனின் மாளிகை.
இராவணனின் பெற்றோர் புலஸ்தியரின் பேரனான விஸ்ரவ முனிவரும், அசுரகுலத் தலைவனான கமாலியின் மகள் கேசியும் ஆவார்கள்.. இராவணனின் கூடப்பிறந்தவர்கள் விபீஷணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை. இவனது மனைவி மண்டோதரி. மகன்கள் இந்திரஜித்து, அட்சய குமாரன், அதிகாயன், பிரகஸ்தன், திரிசரன், நராந்தகன், தேவாந்தகன் ஆகியோர்.

வெள்ளி, 22 மார்ச், 2019

சீதை என்றொரு – ஒரு பார்வை.


சீதை என்றொரு – ஒரு பார்வை.

சீதை என்றொரு காப்பிய நாயகி என்ற பார்வையில் படிக்க ஆரம்பித்து சீதை என்றொரு பெண்மையின் குறியீடு என ஆசிரியர் நிறுவதைப் படித்து வியந்தேன்.

கம்பன் அடிசூடி திரு பழ பழநியப்பன் அவர்கள் பெண்ணினத்தின் பிரதிநிதியாக, பெண்ணினத்தின் வளர்ச்சியாக, பெண்ணியத்தின் வளர்ச்சியாகச் சீதையைக் கூறுகிறார்கள்.

மானிடப் பெண் செய்யத்தக்கன செய்யதகாதன என்பதை அவள் வாழ்க்கையில் இருந்தே எடுத்துக்காட்டுகிறார். சீதை கணவனுடன் பேசிய சொற்கள் இல்லறநெறியையும், அதிக முக்கியத்துவம் கொடுத்த சொற்கள் தனிமனித ஒழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.

சனி, 16 மார்ச், 2019

மாசறு கற்பினாள் அகலிகை (பல்வேறு கோணங்களில் 19 சான்றோர்களின் கருத்துக்கள்) – ஒரு பார்வை.


மாசறு கற்பினாள் அகலிகை (பல்வேறு கோணங்களில் 19 சான்றோர்களின் கருத்துக்கள்) – ஒரு பார்வை.


அகலிகையைப் பற்றி முன் முடிபுகளோடு அணுகுபவர்கள் அவசியம் படிக்கவேண்டியது இந்நூல். இந்நூலில் 19 சான்றோர்களின் கருத்துக்களை பி எல் முத்தையா அவர்கள் 1988 இலேயே தொகுத்து வழங்க எண்ணி இருக்கிறார்கள. அதை அவர் மகன் முல்லை மு. பழனியப்பன் அவர் மறைவுக்குப் பின் ஏப்ரல் 2013 இல் சாத்யமாக்கி இருக்கிறார்கள்.
வால்மீகி, கம்பன், வெ. ப. சுப்ரமணிய முதலியார், ராஜாஜி, ச. து. சு. யோகியார், புதுமைப்பித்தன், தமிழ் ஒளி, கவிஞர் கம்பதாசன், வ. ரா, வி. திருவேங்கடாச்சாரியார், ஸ்ரீ சங்கரகிருப, பெ. கோ. சுந்தர்ராஜன், எம். வி. வெங்கட்ராம், அரு. ராமநாதன், க. கைலாசபதி,  ஜமதக்னி ஆகியோரின் பார்வையில் இதிகாசம், வெண்பா, கவிதை, கதை, கட்டுரை, நாடகம், சிந்தனைகள் தொகுப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.
Related Posts Plugin for WordPress, Blogger...