எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கம்பனடிசூடி பழ பழநியப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பனடிசூடி பழ பழநியப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜனவரி, 2020

கம்பராமாயணம் – 6 தொகுதிகள் ஒரு பார்வை


கம்பராமாயணம் – 6 தொகுதிகள் ஒரு பார்வை

கம்பராமாயணம் பத்தாயிரத்து ஐநூறு பாடல்களையும் ஆறு காண்டங்களையும் 118 படலங்களையும் உடையது. இதை ஒருவர் செய்யுள் வடிவில் படித்து உணர்ந்து உய்ய ஓரிரு ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால் உமா பதிப்பகம் வெளியிட்டுள்ள இக்கம்பராமாயணம் அவற்றின் சாறைப் பிழிந்து பக்குவமாய்ப் பருகத் தருகிறது.

கம்பன் அடிசூடி திரு பழ. பழனியப்பன் அவர்கள் எழுதிய இந்நூல் ஆறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்று ஆறு காண்டங்களை ஆறு தனி நூல்களாகப் பொழிப்புரையுடன் தொகுத்திருக்கிறார்கள்.

வெள்ளி, 22 மார்ச், 2019

சீதை என்றொரு – ஒரு பார்வை.


சீதை என்றொரு – ஒரு பார்வை.

சீதை என்றொரு காப்பிய நாயகி என்ற பார்வையில் படிக்க ஆரம்பித்து சீதை என்றொரு பெண்மையின் குறியீடு என ஆசிரியர் நிறுவதைப் படித்து வியந்தேன்.

கம்பன் அடிசூடி திரு பழ பழநியப்பன் அவர்கள் பெண்ணினத்தின் பிரதிநிதியாக, பெண்ணினத்தின் வளர்ச்சியாக, பெண்ணியத்தின் வளர்ச்சியாகச் சீதையைக் கூறுகிறார்கள்.

மானிடப் பெண் செய்யத்தக்கன செய்யதகாதன என்பதை அவள் வாழ்க்கையில் இருந்தே எடுத்துக்காட்டுகிறார். சீதை கணவனுடன் பேசிய சொற்கள் இல்லறநெறியையும், அதிக முக்கியத்துவம் கொடுத்த சொற்கள் தனிமனித ஒழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...