எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 1 டிசம்பர், 2023

நிலை & ஜன்னலில் இயற்கை வண்ண ஓவியங்கள் , கடியாபட்டி

 கடியாபட்டியில் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது வீட்டைப் புதுப்பித்து இருந்தார்கள். அப்போது இந்த ஜன்னல் மற்றும் நிலை ஓவியங்கள் பளிச்சென்று தெரிந்தன.

கலைநோக்கில் அக்காலத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்களின் பின்னணி தெரியவில்லை.ஆனால் நூறாண்டுகளுக்குமுன் இயற்கைச் சாயங்களால் வண்ணம் தீட்டப்பட்டவை.

இரட்டை மான்கள். சுற்றிலும் பூக்களும் இலைகளும். 

யூ ட்யூபில் 2261 - 2262 வீடியோக்கள்.

2261.பிள்ளையார்பட்டி l ஸ்ரீ கற்பக விநாயகர் துதி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jsM2L50nUVI


#பிள்ளையார்பட்டி, #ஸ்ரீகற்பகவிநாயகர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PILLAIYARPATTI, #SRIKARPAGAVINAYAGAMOORTHI, #THENAMMAILAKSHMANAN



2262.செல்வ முத்துக்குமரன் l அருண்வீரப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=bDZrng3PZuM


#செல்வமுத்துக்குமரன், #அருண்வீரப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SELVAMUTHUKUMARAN, #ARUNVEERAPPAN, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 30 நவம்பர், 2023

காரைக்குடி முத்தாளம்மன் கோயில்

அம்மனின் முன் ஒரு சூலம் பார்த்திருப்பீர்கள். ஐந்து சூலங்கள் சந்நிதி முன் எலுமிச்சையோடு அலங்கரிக்க ஐந்து அம்மன்களை ஒரே சந்நிதியில் ஒரே கருவறை பீடத்தில் பார்த்திருக்கிறீர்கள். இல்லை என்றால் காரைக்குடிக்கு வாருங்கள். கண் குளிரப் பார்த்து மகிழலாம். காரைக்குடியில் அருளாட்சி செய்துவரும் அம்மன் கோவில்களில் ஒன்று முத்தாளம்மன் கோவில். 

இக்கோவில் காரைக்குடியின் மத்தியில் நகரச் சிவன் கோவிலுக்கு அருகில் முத்து ஊரணியின் கரையில் அமைந்துள்ளது .மிகச் சக்தி வாய்ந்த கோவில் இது. 

செவ்வாய்ப் பொங்கல் எனப்படும் வைகாசிப் பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அன்று புற்றுமண் மாற்றும் நிகழ்வில் அம்மனுக்குச் சிறப்பு  அலங்காரம் நடைபெறும்.

நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்தபோது இந்தத் திருவிழாவின் போதுதான் அம்மன் உருவத்தைப் பார்ப்போம். மற்றைய சமயங்களில் அக்கோயிலின் எல்லாச் சந்நிதிகளிலும்  இப்போது இருப்பது போல் மேற்கூரை இல்லாமல்தான் இருக்கும்.  இப்போது கருவறை மட்டும் நடுவில் திறந்த வெளியாய் இருக்கிறது.  சுற்றிலும் வேல் கொண்ட கம்பித் தடுப்புகள். 

முத்தாரம்மன் என்றும் சொல்கிறார்கள். நாங்கள் முத்தாளம்மன் என்றே கூறிப் பழக்கப்பட்டு விட்டோம். முத்து ஆரம் போல் ஐந்து அம்மன்கள் நெருக்கமாய் அமர்ந்த திருவுருவம் முத்தாளம்மா.

இக்கோயில் பத்மசாலியர், சேணியர் என்னும் சமூகத்தினரால் ( வேளாளர்கள் என்றும் சொல்வார்கள் ) நிர்வகிக்கப்படுகிறது.  


செவ்வாய், 28 நவம்பர், 2023

கறையான்கள்

கறையான்கள்

தேவி கருமாரியம்மா சிறந்த உபகாரி. அவள் தேசம் எல்லாம் காக்கும் அருள் செல்வி அவதாரி “ என்று பாடிக்கொண்டிருந்தது பெரியபாளையத்தம்மன் கோவிலின் லௌட் ஸ்பீக்கர். அன்று ஆடி வெள்ளியாதலால் புற்றுக்குப் பால் ஊற்ற பெண்கள் கூட்டம் க்யூ கட்டி நின்றது.

 

கூட்டத்துக்கு நடுவில் வாழையிலையில் தட்டு வைத்து அதில் மூன்று மாவிளக்கு உருண்டைகள் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பூ வைத்து நடுவில் குழியாக்கி நெய் ஊற்றித் திரிப் போட்டு ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார் நீலாக்கா. சிறிது நேரத்தில் காரின் அருகில் வந்து மாவிளக்கைக் கொடுத்துவிட்டு ”தேவிம்மா கூட்டம் கொஞ்சம் கம்மியான மாதிரி இருக்கு. அதுனால சீக்கிரம் எட்டிப்பார்த்துக் கும்பிட்டு வந்துடலாம் வாம்மா” என்றார்.

திங்கள், 27 நவம்பர், 2023

எழுத்தில் எனைக் கண்டு கொண்டேன் !

 எழுத்தில் எனைக் கண்டு கொண்டேன் !



நான்நாகாவின் நான்மீடியாவுக்காக எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். எனது பெயர் தேனம்மைலெக்ஷ்மணன். வலைப்பதிவர், எழுத்தாளர், சுதந்திரப் பத்திரிக்கையாளர். அடையாள அட்டைகளில் மட்டுமே அடையாளமாய் இருந்த என் பெயர் இன்று இணையத்தில் உயிர்ப்புடன் இனங்காணப்படுவதற்கு என் தொடர் எழுத்துக்களே காரணம். ஏழு வலைப்பூக்களிலும், தமிழ் கூறும் நல்லுலகின் பல இணைய மற்றும் அச்சு இதழ்களிலும் பங்களிப்புச் செய்துள்ளேன். அச்சில் 24 நூல்களும் அமேஸானில் 57 நூல்களும் வெளியாகி உள்ளன. 25 இணைய விருதுகளும், 20 க்கும் மேற்பட்ட பட்டயங்களும் சான்றிதழ்களும் என் தொடர் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள்.

எனது தொடர் உழைப்புக்கும் எழுத்துலகில் எனது பங்களிப்புக்கும் நான்மீடியா நாகா போன்ற பல மீடியா நண்பர்களும், தோழிகளுமே காரணம். என் மனத் தடைகளை மீறி நான் எழுத வந்தது போல் பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வரும் மகளிர் பற்றிய எனது முதல் தொகுப்பே ”சாதனை அரசிகள்”. என் எழுத்துத் திறனைக் கண்டுபிடித்து ஊக்குவித்தவர்கள் என் தமிழாசிரியை சுசீலாம்மா, அடுத்து 24 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இணையத்தில் எழுதத் தொடங்கிய என்னைப் பத்ரிக்கையில் எழுத அழைத்தவர்கள் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜாம்மா. இவர்கள் இல்லாமல் இன்று இருக்கும் நான் இல்லை.

சனி, 25 நவம்பர், 2023

வம்சம் தழைக்கச் செய்யும் ஊனையூர் ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார்.

வம்சம் தழைக்கச் செய்யும் ஊனையூர் ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார்.


சிவகங்கை மாவட்டம்  காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தானிலிருந்து திருமயம் செல்லும் வழியில் இருக்கிறது  ஊனையூர்.  இங்கே பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார் கோயில் கொண்டிருக்கிறார். சக்தி வாய்ந்த தெய்வம். சாத்தன் என்ற பெயர் சமணச் சார்புடைத்தாம். சமண மதம் சார்ந்த சாத்தன் என்ற பெயர் ஐயனாரையும் குறிப்பது. ஐயனார் & சாத்தன் வணிகர்களின் குலதெய்வம். சாத்தன் என்றால் காப்பவன் என்று பேராம்.


தனது வணிகக் குழுக்களைக் காக்கும் தலைவன் பெயர் சாத்தன் என்றிருந்தது போல, மக்களைக் காக்கும் பேரரசர்களுக்கும் சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது வியக்கவைக்கும் ஒற்றுமை. அரசர்களின் பெயர்கள்  சாத்தன், சாத்தன் மாறன் , சாத்தன் பூதி, சாத்தன் பழியிலி மற்றும் ராணியின் பெயரும் சாத்தன் காளி என்று வழங்கப்பட்டிருக்கிறது.

யூ ட்யூபில் 2251 - 2260 வீடியோக்கள்

2251.பன்னிருநாமங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

https://www.youtube.com/shorts/OmPlT2Xa1EM


#பன்னிரு நாமங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PANNIRUNAMANGAL, #THENAMMAILAKSHMANAN, 



2252.நமச்சிவாய l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=mnlRYZAzSps


#நமச்சிவாய, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAMACHIVAYA,#THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 24 நவம்பர், 2023

சாண்டர்ஸ் ட்ராகனோ

சாண்டர்ஸ் ட்ராகனோ

காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன் பூப்பறித்துக் கோர்க்கச் சொன்னேன் ஓடிவந்து உன்னைச் சந்திக்க.. ” ஸாமின் செல்ஃபோன் ரிங்கிட்டது. சமீபகாலமாக அவன் இந்தப் பாட்டைக்கூட நேசிக்கத் துவங்கி இருந்தான்.

 

நேரம் கிடைக்கும்போதெல்லாம் எப்போதடா ராணியைப் பார்ப்போம் என்றே ஏங்கிக்கொண்டிருந்தது அவன் மனது. காலிங் பெல் அடிக்கும்போதும் மெல்லவே தட்டுவான். அவள் பயந்துவிடக்கூடாது என்று.  சரிந்த வயிற்றோடு மெல்ல மெல்ல நடந்து வந்து அவள் கதவைத் திறக்கும்போது அவள் வயிற்றில் கதவு இடித்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு அவனது பிரியம் எல்லை கடந்து கொண்டிருந்தது.

 

“ஹேய் ஒண்ணுல்லப்பா , குட்டீஸ் முண்டுறாங்க. ரெண்டு பக்கமும் வயிறு அசைஞ்சிச்சு அதான் சொல்ல கூப்பிட்டேன். என்னால அந்த பரவசத்தை தாங்க முடில. “ ஸ்கந்தபுரி எஸ்டேட்டில் இருக்கிறான் ஸாம். அவனது மனமோ பறந்து போய் அவளது வயிற்றைத் தொட்டுப்பார்த்துக் கொண்டிருந்தது.

யூ ட்யூபில் 2241 - 2250 வீடியோக்கள்.சினிமா பார்வை.

2241.2010: The Year We Make Contact l Peter Hyams l ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=qnW3WsUC9yY


#2010:TheYearWeMakeContact, #PeterHyams, #ThenammaiLakshmanan,



2242.Glass l M.Night Shyamalan l ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=d4K9dEdIBrQ


#Glass, #MNightShyamalan,#ThenammaiLakshmanan,

செவ்வாய், 21 நவம்பர், 2023

எந்த மாற்றம் வரினும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று கூறும் மணிமேகலை

 எந்த மாற்றம் வரினும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று கூறும் மணிமேகலை.



மணிமேகலை. இப்பெயரைக் கேட்டதும் உங்களுக்கு மணிமேகலைக் காப்பியம் நினைவுக்கு வரலாம். இவர் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்.தன் பத்து வயதிலேயே 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்துப் பரிசு வாங்கியவர். ஒரு கவிதை நூலுக்குச் சொந்தக்காரர். அனைவருடனும் தன்மையாக இயைந்து செல்லும் குணம் கொண்டவர். அழகப்பா கல்லூரியில் பி காம் படித்த இவர் சக்தி நிறுவனத்தின் தூணாக இருபத்தி ஐந்து வருடம் பணியாற்றினார். அதிலிருந்து விலக நேரிட்டதும் அடுத்த நாளே இன்னொரு கம்பெனியில் பணியில் அமர்ந்தார். ஆனால் தன் பூர்வீகப் பணியிடத்தைப் பற்றி ஒரு நாளும் குறை கூறியதே இல்லை. எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நங்கை. அவரிடம் அவரது குழந்தைப்பருவம், குடும்பம், பணி பற்றிக் கேட்டபோது அவர் கூறியதைத் தொகுத்திருக்கிறேன்.


 


”என் அம்மாவிற்கு தமிழ் இலக்கியம் இதிகாசங்கள் புராணங்கள் இவற்றின் மேல் தீராக் காதல். நான் அம்மாவின் வயிற்றில் நிறைமாதமாக இருந்தபோது காரைக்குடி கம்பன் விழாவுக்குச் சென்ற அம்மாவை அனைவரும் இப்படி நிறை மாதத்தில் வரலாமா எனக் கேட்க என் மகள் விழா முடிந்ததும்தான் பிறப்பாள் எனக் கூறினார்கள். அதுபோல் விழா முடிந்ததும் திருவாதிரை நட்சத்திரத்தில் நான் பிறந்தேன். ஆதிரை கையால் அமுத சுரபியில் அன்னம் பெற்றுப் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுத்த மணிமேகலையின் பெயரை எனக்கு வைத்தனர்.

திங்கள், 20 நவம்பர், 2023

மகர்மச் யா மஹாதேவ்

மகர்மச் யா மஹாதேவ்

சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடி.. ” பாடிக்கொண்டிருந்தது அந்த மஹேந்திராதாரில் மாட்டி இருந்த பென் ட்ரைவ். 

 

”இன்னொருத்தி நிகராகுமோ எனக்கின்னொருத்தி நிகராகுமோ.. ” இப்பவெல்லாம் என்ன என்னவோ பாட்டைக் கேட்டுக் குட்டிச்சுவராகிப் போய்க்கொண்டிருக்கிறாள் தேவி. நல்ல வேளை சீரியல் எல்லாம் பார்க்காமல் இருக்காளே. நினைத்துப் பெருமூச்சு விட்டான் சாம்.

 

மெர்க்கராவின் எஸ்டேட். கொண்டை ஊசி வளைவுகளில் மடிக்கேரி என்று கன்னட எழுத்துக்கள் மின்னின. காஃபி எஸ்டேட்டின் வனப்புக்குள் புகுந்து புகுந்து சென்றது அந்த ஜீப்.

 

இன்ஸ்டண்ட் காஃபி பவுடர் தயாரிக்கும் கம்பெனியிலிருந்து காஃபியின் தவிர்க்கமுடியாத அரோமா எழும்பிக்கொண்டிருந்தது. பாசம் பிடித்த மண்ணில் பச்சையமிட்டிருந்தன ஏலச்செடிகளும் மிளகுக் கொடிகளும்.

யூ ட்யூபில் 2231 - 2240 வீடியோக்கள்.

2231.ஸ்ரீ சனைச்வர அஷ்டோத்திர சத நாமாவளி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4WMh4aGapfE


#ஸ்ரீசனைச்வரஅஷ்டோத்திரசதநாமாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRISANISHWARAN, #ASHTOTHRAM, #THENAMMAILAKSHMANAN,



2232.பிரதோஷ வழிபாட்டுக்குரிய மந்திரங்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=9Gw5S-E2q6A


#பிரதோஷவழிபாட்டுக்குரியமந்திரங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PRADHOSHAM, #THENAMMAILAKSHMANAN,

சனி, 18 நவம்பர், 2023

ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 10.

 ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 10.

  முழுப்பரிட்சை லீவ் விட்டாச்சு. லீவுக்கு எங்கேயெல்லாம் போகலாம்னு ஆராதனாவுக்கும் ஆதித்யாவுக்கும் ஏகப்பட்ட ஆலோசனை. தாத்தாவிடம் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். ”தாத்தா, இங்கே ஒரே ஹாட். நாம குளுகுளுன்னு எங்காவது போலாம். ஷிம்லா, டார்ஜிலிங் மாதிரி”.

  ”இல்ல கண்ணுங்களா, நாம இந்தவாட்டி என்னோட பால்யகால நண்பன் மகாதேவன் இருக்குற பெங்களூருக்குப் போகப்போறோம். பெங்களூர்ல லால்பாக், கப்பன்பார்க், விதான்சௌதா, மியூசியம் எல்லாம் பார்த்துட்டு மைசூர் போய் அரண்மனையும் பார்த்துட்டு வரப்போறோம் “

  “ஹையா” எனக் குதித்தார்கள் இருவரும் கைகோர்த்து. இதை அவர்கள் நண்பர்களிடம் கைபேசியில் தெரிவிக்க ஓடினார்கள். ” என்ன சத்தம் “ என்றபடி வந்த ரம்யா, “வீடியோ கேம்ஸெல்லாம் விளையாடக் கூடாது “ என செல்ஃபோனைப் பறித்தாள். ”இல்லம்மா ஃப்ரெண்டுக்கு ஃபோன் “ என்று கொஞ்சிவிட்டு இரண்டும் மாறி மாறி தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டன.

வியாழன், 16 நவம்பர், 2023

அமேஸானில் என்னுடைய 57, 58 ஆவது நூல்கள்.

**என்னுடைய 57 ஆவது மின்னூல்  “கடவுள் நாமம் காப்பாற்றும் !” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. 

விலை ரூ. 200//- மட்டுமே.


கடவுள் நாமம் காப்பாற்றும்

https://www.amazon.in/dp/B0C66NN5WC

பதின்பருவத்தினரும் நம் புராண இதிகாச காப்பியங்களைப் புரிந்து கொள்ளும் வண்ணம் சிறுகதைகளாகக் கொடுத்துள்ளேன். 

யூ ட்யூபில் 2221 - 2230 வீடியோக்கள்.

2221.அன்பே தகளியாய் l பூதத்தாழ்வார் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6z0Phr_hV74


#அன்பேதகளியாய், #பூதத்தாழ்வார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ANBETHAGALIYAY, #BHOOTHATHAZHWAR, #THENAMMAILAKSHMANAN, 



2222.லிங்கப் பாடல் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=gvw85NPU5TQ


#லிங்கப்பாடல், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#LINGAPADAL, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 15 நவம்பர், 2023

குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

 176.


3501.ஜெர்மனி ரைன் தமிழ்ச்சங்கத்தின் இன்றைய ஒன்று கூடலில் எனது 25 ஆவது நூல், " செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் " வெளியிடப்பட்டது. 

திருமதி தனலெக்ஷ்மி அவர்கள் வெளியிட திருமதி கீதா அவர்களும்  செயலாளர் திரு மணி அவர்களின் மனைவி திருமதி காவ்யா மணி அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.



செவ்வாய், 14 நவம்பர், 2023

கதை கேளு.. கதை கேளு…

கதை கேளு.. கதை கேளு…

தை கேளு கதை கேளு சுகமான கதை கேளு..மைக்கேல் மதன காம ராஜன் கதையை நல்லா கேளு “ என்று பாடிக் கொண்டிருந்தது காரின் 106.4. எஃப் எம்.

 

சவுண்டைக் குறைத்த ஸாம் இன்னிசைத்த ஃபோனை டாஷ்போர்டிலிருந்து எடுத்தான். அவரது பிஸினஸ் பார்ட்னரும் நண்பருமான குமாரிடமிருந்துதான் ஃபோன் .

 

பயணத்தின்போது சைலண்டில் போட்டு டாஷ்போர்டில் போடவேண்டுமென்பது தேவியின் கட்டளை. ப்ளூ டூத்தும் உபயோகிக்கக் கூடாது. அன்று சைலண்ட் மோடில் போட மறந்துவிட்டான். காரின் வைப்பர்கள் சர் சர் என அசைந்து கொண்டிருந்தன.

திங்கள், 13 நவம்பர், 2023

திருமணத் தடை நீக்கும் புரவி எடுப்பு

திருமணத் தடை நீக்கும் புரவி எடுப்பு

ஸ்ரீ நரியங்குடி கருங்குளம் பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக் கருப்பர் கோயில்

காடுகளையும் கழனிகளையும் காக்கும் ஊர்க்காவல் தெய்வங்கள்தான் அய்யனாரும், கருப்பரும். கம்மாய்க் கரையோரம் அமைந்த இவ்வகைக்கோவில்கள். சிவகங்கைப் பகுதியில் அதிகம். இவை பல்வேறு இனத்தாருக்கும் குலதெய்வக் கோயில்களாகத் துலங்குகின்றன. அவற்றில் ஒன்று நரியங்குடியில் உள்ள பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக்கருப்பர் கோவில்.

யூ ட்யூபில் 2211 - 2220 வீடியோக்கள்.

2211.பெருமாள் திருமொழி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=QQ4f9NTanEg


#பெருமாள்திருமொழி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERUMALTHIRUMOZHI, #THENAMMAILAKSHMANAN, 



2212.சாய்ந்தாடு முருகா சாய்ந்தாடு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ASj1IpL9dbM


#சாய்ந்தாடுமுருகாசாய்ந்தாடு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SAYNTHADUMURUGA #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 12 நவம்பர், 2023

மூங்கில் குருத்துக்கள்

மூங்கில் குருத்துக்கள் 

“மூங்கில் இலைக் காடுகளே.. முத்து மழை மேகங்களே..பூங்குருவிக் கூட்டங்களே கேளுங்கள். மாலையிட்ட மங்கையர்க்கு தற்கொலைதான் சொர்க்கம் என்றால் மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள்.. “

 

“என்ன பாட்டு இதுன்னு கேட்டுட்டு இருக்கே.” குளித்துவிட்டு ஈரத்தலையை சரியாகத் துவட்டாமல் சிலிப்பியபடி படுக்கையறைக்குள் நுழைந்த ஸாம் அங்கே இருந்த ரிமோட்டை எடுத்து படக்கென்று டிவியை அணைத்தான்.

 

சோஃபாவில் கால் மடித்து ஒரு பக்கம் சாய்ந்தமர்ந்திருந்த தேவியின் கண்களில் கண்ணீர் வடிந்த தடம். முகம் ஊதிப்போய்க் கிடந்தது. இரவு பூரா தூங்காமல் கண்கள் உப்பி வீங்கி இருந்தன.

யூ ட்யூபில் 2201 - 2210 வீடியோக்கள்.

2201.ஸ்ரீ ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகங்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NidxBqNlBbE


#ஸ்ரீஐயப்பன், #நமஸ்காரஸ்லோகங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIAYYAPPAN, #THENAMMAILAKSHMANAN,



2202.ராஜராஜேஸ்வரி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7xZMD59ceJI


#ராஜராஜேஸ்வரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#RAJARAJESHWARI, #THENAMMAILAKSHMANAN,

புதன், 8 நவம்பர், 2023

சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்

 சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்


சூதாட்டத்தில் லாபமும் வரும், நட்டமும், கேடும் கூட வரும். ஒருவர் இதை எல்லாம் அறிந்து அதிலிருந்து விலகி இருக்கவேண்டும். ஆனால் பஞ்சபாண்டவர்கள் கௌரவர்களுடன் சூதாடித் தம் நாடு, படை, பட்டாளம், சேனை, செல்வம் அனைத்தையும் இழந்தார்கள். அவர்கள் உடனே இருந்த கிருஷ்ணர் சூதாடினால் கேடு வரும் என அறிந்திருந்தும் ஏன் அவர்களைத் தடுக்கவில்லை என்ற எண்ணம் ஒருவர் மனதில் பல்லாண்டுகாலமாய் ஓடிக் கொண்டிருந்தது. அவர் ஒருகணத்தில் அதை கிருஷ்ணரிடமே கேட்டுவிட்டார். அதற்கு கிருஷ்ணர் அளித்த பதில்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறதுதானே குழந்தைகளே.

கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் சகோதரர் தேவபகாரியின் மகன் உத்தவர். அவர் இளம்பருவத்தில் கிருஷ்ணனுக்குத் தேரோட்டியவர். கிருஷ்ணர் குருக்ஷேத்திர யுத்தம் முடிந்து தன் அவதாரப் பணியும் முடியும் தருவாயில் உத்தவரிடம் ”உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் நான் அதைத் தரச் சித்தமாய் இருக்கிறேன்.” என்கிறார்.

யூ ட்யூபில் 2191 - 2200 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

2191.சொல் எனும் வெண்புறா l தேன்மொழி ராஜகோபால் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=mW8cZHQ_gGA


#சொல்எனும்வெண்புறா, #தேன்மொழிராஜகோபால், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SOLENUMVENPURA, #THENMOZHIRAJAGOPAL, #THENAMMAILAKSHMANAN,



2192.361° வெளியீடு l நரன் & நிலா ரசிகன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=N2haBEKNB-s


#361°வெளியீடு, #நரன்நிலாரசிகன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#361VELIYEEDU, #NARANNILARASIGAN, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 6 நவம்பர், 2023

அழகியை மீட்ட அழகி

 அழகியை மீட்ட அழகி

காதல் என்பது எதுவரை.. கல்யாண காலம் வரும்வரை”  என்று ஜெமினியும் சந்திரபாபுவும் பாடி ஆடிக்கொண்டிருந்தார்கள். யானைகள் செயின்போலக் கோர்த்தும் வரிசையாகவும் தும்பிக்கை பிடித்தும் அசைந்தாடி வந்துகொண்டிருந்தன. அழகியின் தந்தை செந்தில்நாதன் முகமலர்ச்சியோடும் சிறிது கவலையோடும் அமர்ந்திருந்தார்.

 

அவர் கையசைக்கவும் ஹாலில் இருந்த டிவியை ரிமோட் கொண்டு அணைத்துவிட்டுச் சென்றான் பணியாள். அவரது மனைவியும் மகனும் கூட அமர்ந்திருந்தார்கள். அழகி தெளிவில்லாத முகத்தோடு நீரில் நனைந்து கசங்கிய ஒரு பூங்கொத்துப் போல அமர்ந்திருந்தாள். இன்னும் கூட ஹார்மோன்களை இசைபாடத் தூண்டும் அவளது அழகு ஸாமுக்குப் பிரமிப்பூட்டியது. 

 

கல்யாணகாலம் வரும்வரைதானா காதல்.. என யோசித்தபடி செந்தில்நாதன் அருகில் அமர்ந்திருந்தான் ஸாம். அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் சிறிது குழப்பமாகவும் இருந்தது. அழகியுடனான காதல் வாழ்வு.. எத்தனை நாள் ஏக்கம். நாள்கடந்து கிடைத்த வரம். அவனை வெறுமையாக்கியதோடு சிறிது அயர்வையும் தந்தது.

யூ ட்யூபில் 2181 - 2190 வீடியோக்கள்.

2181.பெரியநாயகி அம்மன் l  சோலை ராமச்சந்திரன் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=mv_u7qhKvkw


#பெரியநாயகிஅம்மன், #சோலைராமச்சந்திரன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERIYANAYAGIAMMAN, #SOLAIRAMACHANDRAN, #THENAMMAILAKSHMANAN, 



2182.நடராஜா l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HiJmreA6kFM


#நடராஜா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NATARAJA, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 3 நவம்பர், 2023

வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும் எனக் கூறும் திரு. லயன் வெங்கட்.

வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும் எனக் கூறும் திரு. லயன் வெங்கட்.


 


காரைக்குடியைக் கல்விக்குடியாய் மாற்றியதில் வள்ளல் அழகப்பரின் பங்கு அளப்பரியது. அதேபோல் காரைக்குடியில் 21 ஆண்டுகளாய்ப் புத்தகத் திருவிழா நடத்தி அறிவுச் சுடரேற்றி வருபவர்கள் காரைக்குடிப் புத்தகத் திருவிழாக் குழுவினர். இவர்களுள் லயன் வெங்கட் என்று நண்பர்களால் அழைக்கப்படும் திருமிகு.வெங்கடாசலம் அதன் பொருளாளராய் இருந்து திறம்படத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

 

இது மட்டுமல்ல வாழ்வியல் நெறிகளை அழகுறத் தரும் திருக்குறள் கழகம், மெய்யியல் நெறியைப் பரப்பும் இந்து மதாபிமான சங்கம், இசைத்தமிழுக்கென்று உருவான தமிழிசைச் சங்கம், தனவணிகர் மரபுக்கேற்ற காரைக்குடி தொழில் வணிகக் கழகம் எனக் காரைக்குடியின் பாரம்பரியச் சங்கங்கள் பலவற்றுக்கு இவர் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றி உள்ளார். உலகளாவிய அரிமா சங்கத்தின் காரைக்குடி மாவட்ட வட்டாரத் தலைவராகவும் பல்வேறு தொண்டுகள் புரிந்துள்ளார். எப்படி இவ்வளவையும் திறமையாக, சரிவர நிறைவேற்ற முடிகிறதென்று பார்க்கும்கணம் தோறும் என்னை ஆச்சர்யப்பட வைப்பவர் இவர். சுறுசுறுப்பானவர். எப்போதும் பளிச் தோற்றம் கொண்டவர். இவரைப் பார்த்தாலே நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இந்த மனம் ஒரு நந்தவனம், சுவாமி சிவானந்தரின் பொன்மொழிகள் போன்ற நேர்மறை எண்ணங்கள் கொண்ட புத்தகங்களை அனைவருக்கும் பரிசாக வழங்கி மகிழ்பவர்.

யூ ட்யூபில் 2171 - 2180 வீடியோக்கள்.

2171.Music Notes played by our friend Vinodh

https://www.youtube.com/shorts/KA1o2i-Akdw


#MusicNotes, #Vinodh,



2172.திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=K1WcW-C7fOw


#திருச்செந்தூர், #பிள்ளைத்தமிழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUCHENDUR, #PILLAITAMIL, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 30 அக்டோபர், 2023

ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 9.

 ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 9.

  தீபாவளிக்காகப் பட்டாசுக் கடைகள் நகரெங்கும் திறந்திருந்தன. புத்தாடைகளும் இனிப்பு வகைகளும் விற்றுத் தீர்த்துக் கொண்டிருந்தன. ஒவ்வொருவர் வீடுகளில் இருந்தும் அதிரசம், முறுக்கு, லட்டு, மைசூர்ப்பாகு போன்றவை செய்யும் எண்ணெய் வாசமும் வெல்லப்பாகின் மணமும் வந்து கொண்டிருந்தன.

  “குலோப் ஜாமுன் மட்டும் செய்திடு. என் ஆஃபிசிலேயே ஸ்வீட்ஸ் டப்பா கிஃப்ட் கிடைக்கும். மத்த ஸ்வீட்ஸெல்லாம் அதிலேயே இருக்கும். அதுனால செய்ய வேண்டாம்.” என்றான் ராஜன்.

  ”தீபாவளிக்கு எண்ணெய்ப் பலகாரம் செய்யணும். அடுப்புல எண்ணெய்ச் சட்டி வைக்கணும். அதுனால இட்லியும் அரைச்சுவிட்ட சாம்பாரும் போட்டு வடையும் செய்திடுறேன்.” என்றாள் ரம்யா.

யூ ட்யூபில் 2161 - 2170 வீடியோக்கள்.

2161.ஸ்ரீ லெக்ஷ்மி அஷ்டோத்திர சத நாமாவளி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HFsZPA6Dk0c


#ஸ்ரீலெக்ஷ்மி, #அஷ்டோத்திரசதநாமாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRILAKSHMI, #ASHTOTHRAM, #THENAMMAILAKSHMANAN,



2162.மங்களம் துதிமலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=FH0wH5DfyR0


#மங்களம், #துதிமலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MANGALAM, #THUTHIMALAR, #THENAMMAILAKSHMANAN, 

சனி, 28 அக்டோபர், 2023

காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்

 காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்


 


தொடுவதென்ன மலர்களோ தென்றலோ, விஸ்வநாதன் வேலை வேண்டும், உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, அனுபவம் புதுமை, மாதமோ ஆவணி, காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ..என்ற பாடல்களை அறுபதுகளின் இளைஞர்கள் மறக்க முடியாது. களை சொட்டு முகம், வசீகரப் புன்னகை, துள்ளும் இளமை, துடிப்பான நடனம் இவையே ரவிச்சந்திரன் புகழ்பெறக் காரணம். நெற்றியில் சுருண்டு விழும் முடி, கவரும் காந்தப் பார்வை, கட்டுக்கோப்பான உருவம், சொஃபிஸ்டிகேட்டட் லுக் கொண்டவர்.

 

தன் கல்லூரிப் பருவத்தில் காலேஜைக் கட் அடித்துவிட்டு காதலிக்க நேரமில்லை படத்தைப் பத்து முறை பார்த்ததாகச் சொல்லி என்னை வியக்கவைத்தார் என் பக்கத்து வீட்டுப் புஜ்ஜியம்மா. அவருக்கு ரவிச்சந்திரன் மேல் எவ்வளவு க்ரேஸ் என்றால் தன்னுடைய டிவிடியில் காதலிக்க நேரமில்லை கேஸட்டை வாங்கி வந்து போட்டு என்னைப் பார்க்கவைக்கும் அளவு அவ்வளவு பைத்தியம். அந்தக்காலக் கட்டத்தில் எம் ஜி ஆர் சிவாஜி அளவு அதிக ரசிகைகளைப் பெற்றிருந்தார் ரவிச்சந்திரன்.

யூ ட்யூபில் 2151 - 2160 வீடியோக்கள். கம்பர் விழாக்கள் & நூல்கள்.

2151.காரைக்குடி கம்பர்விழா l  படத்திறப்பும் புத்தக வெளியீடுகளும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=PkUXzP_1ndA


#காரைக்குடி, #கம்பர்விழா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARAIKUDI, #KAMBARVISHA, #THENAMMAILAKSHMANAN,



2152.கவிக்கோ உரை l காரைக்குடி கம்பன் விழா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yE_3gAzu06U


#கவிக்கோஉரை, #காரைக்குடி, #கம்பன்விழா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAVIKO, #KARAIKUDI, #KAMBANVIZHA, #THENAMMAILAKSHMANAN,

புதன், 25 அக்டோபர், 2023

டாமியும் டார்ட்டிங்கும்

டாமியும் டார்ட்டிங்கும்

ன்று வந்ததும் அதே நிலா.. லல்லல்லா இன்று வந்ததும் அதே நிலா “ என்று பாடிக்கொண்டிருந்தார் எம்ஜியார் சரோஜாதேவியுடன். பாவாடை குடை போல் விரிய கண்கள் குடை போல் மலர அழகுப் பூங்கொத்தாய் சரோஜாதேவி மலர்ந்துகொண்டிருந்தார். கைபிடித்துக் கைமாற்றி பூமாலையைப் போல அடுத்த அடுத்த ட்விஸ்ட்களிலும் காந்தமாய்க் கவர்ந்துகொண்டிருந்தார்கள் இருவரும் ஒருவரை ஒருவர்.

 

நடனம் என்றதும் டிவியிலிருந்து சுவாமிநாதனின் கவனம் முத்தழகிக்குப் பயணித்தது. அடுத்தடுத்த சேனல்கள் மாற்றும்போது மாஸ்க் ஆஃப் ஸாரோவில் ஆண்டானியோ பாந்தரஸ் கேதரின் ஸீடா ஜோன்ஸுடன் வளைத்து வளைத்து டாங்கோ ஆடிக்கொண்டிருந்தார். என்ன ரிதம் என்ன ரிதம். ஒரு கணம் மெய்மறந்து ஸாம் தான் செல்லமாக அழைக்கும் அழகி என்ற முத்தழகியின் கைபற்றி மைனஸ் ஒன் பப்புக்குச் சென்றான். ஜோடியாகச் சென்றால்தான் அந்த பப்புக்குள்ளே அனுமதி. காதல் ஜோடிகளின் தீப்பிடிக்கவைக்கும் நடனம் நிகழ்ந்துகொண்டிருந்தது அவன் மனக்கண்ணில்.

திங்கள், 23 அக்டோபர், 2023

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 8.

 ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 8.

  தித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார்கள். தாத்தா அழைத்ததும் இருவரும் ஓடி வந்தார்கள்.

  ”தாத்தா வாக் போகப்போறேன். யார் வர்றீங்க.” ரெண்டு பேரும் வர்றோம் என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டார்கள். “ரம்யா இவங்கள அழைச்சிட்டுப் போயிட்டு வர்றேன். ஏதும் வாங்கிட்டு வரணுமாம்மா” என்று கேட்டார்.

  “இல்ல மாமா நான் நேத்தே வாங்கின காய் கொஞ்சம் மிச்சம் இருக்கு. பூஜைக்கு உள்ளதெல்லாம் வாங்கிட்டேன். வேறு ஏதும்னா நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று சொன்னாள் ரம்யா.

  “சரிம்மா” என்று சொல்லிவிட்டு வாசலில் செருப்பைப் போட்டுக் குதித்துக் கொண்டிருந்த ஆதித்யாவையும் ஆராதனாவையும் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். பஜார் கடைகள் எல்லாம் ஒரே கூட்டமாக இருந்தது. விஜயதசமிக்காக பூக்கடைகள், பொரிக்கடைகள் எல்லாம் வியாபாரம் தூள் பறந்து கொண்டிருந்தது.

யூ ட்யூபில் 2141 - 2150 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

2141.யாதெனக் கேட்டேன் l கவியரசு கண்ணதாசன் l ஐ எஸ் ஆர் செல்வகுமார் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Ou6YtEq2UGk


#யாதெனக்கேட்டேன், #கவியரசுகண்ணதாசன், #ஐஎஸ்ஆர்செல்வகுமார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#YATHENAKKETEN, #KAVIYARASUKANNADASAN, #ISRSELVAKUMAR, #THENAMMAILAKSHMANAN,



2142.டேகன் - 3 l  லியம் நீஸன் l ஒலிவியர் மெகடன் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1lfj1c8wTrg


#டேகன்3, #லியம்நீஸன், #ஒலிவியர்மெகடன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#TAKEN3, #LIAMNEESON, #OLIVIERMEGATON, #THENAMMAILAKSHMANAN,

புதன், 18 அக்டோபர், 2023

ஆபத்துக்களில் இருந்து காப்பார் ஆதினமிளகி அய்யனார்

 திருமணத் தடை நீக்கும் புரவி எடுப்பு



ஸ்ரீ நரியங்குடி கருங்குளம் பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக் கருப்பர் கோயில்

செவ்வாய், 17 அக்டோபர், 2023

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

மாலையில் யாரோ மனதோடு பேச.. மார்கழி வாடை மெதுவாக வீச.. தேகம் பூத்ததோ.. ஓ மோகம் வந்ததோ… மோகம் வந்ததும் மௌனம் வந்ததோ.. தென்றலே பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது.. ” என்று பானுப்பிரியா தன் அழகான கூந்தல் கற்றைகள் முகத்தில் விழ கவர்ச்சிகரமாகப் பாடிக் கொண்டிருந்தார்.

 

சேனலை மாத்திய மஹாராணி ட்ராவல் & லிவிங் சேனலில் ஸ்கூபா டைவிங்கைப் பார்த்ததும் குதூகலித்தாள். பச்சையும் நீலமும் கலந்த மாலத்தீவு, சிறிது சாம்பலும் கலந்த அந்தமான், அடர் பச்சை நிற சென்னை கோவளம் என லிஸ்ட் போட்டு ஸ்கூபா டைவிங்க் போட்டிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

 

கடல் ஒரு நீலத்தாமரை மாதிரி மலர்ந்து அவளை அழைத்துக் கொண்டிருந்தது. கருப்பு உடை உடுத்திய வண்டுபோல அதில் துளைந்துகொண்டிருந்தாள் ராணி. மெல்ல மெல்ல பவளப்பாறைகளின் முடிச்சுகளின் மேலாக ஒரு தேனீயைப் போல வட்டமிட்டு வளைந்து நெளிந்து கொண்டிருந்தாள்.

யூ ட்யூபில் 2131 - 2140 வீடியோக்கள்.

2131.Tricolour Capsicum Rice l  ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=Qv-e1VJahUQ


#TricolourCapsicumRice, #ThenammaiLakshmanan,



2132.ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3OwLPkQTCxQ


#ஸ்ரீஐயப்பன்நமஸ்காரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIAYYAPPANNAMASKARAM, #THENAMMAILAKSHMANAN, 

வெள்ளி, 13 அக்டோபர், 2023

10. இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்

 10. இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்


கர்ப்பப்பையில் பெண்களுக்கு ஏற்படும் நார்த்திசுக்கட்டிகள் பற்றி முன் இதழில் பார்த்தோம். அடுத்து நீர்க்கட்டிகள் பற்றிப் பார்ப்போம்.இடுப்பு வலி, இடுப்பு அழற்சி இருந்தால் அது கர்ப்பப் பையில் நீர்க்கட்டிகள் இருப்பதாலும் ஏற்படலாம். பல பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் கருப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்படுகின்றனர். இவை சிறிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டுப் பெரும்பாலும் சில மாதங்களில் தானாகவே மறைந்துவிடும். ஆனால் கருப்பை நீர்க்கட்டி சிதைந்தால் அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.


இதனால் பெண்களில் ஆண்தன்மை, முகத்தில் மீசை போன்ற முடி வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப் போக்கு, இடுப்புக்களில் வலி, மலட்டுத்தன்மை, இதயநோய், சீரற்ற மனநிலை போன்றவையும் ஏற்படும். உடலில் பல நீர்க்கட்டிகள் நாளங்களின் அடைப்பின் விளைவாக அல்லது வினை சார் வெளியீடுகளாக, தீங்கற்றதாக இருக்கின்றன. இருப்பினும் சில புற்றுக்கட்டிகளாக மாறுகின்றன. அல்லது புற்றுக் கட்டிகளால் உருவாகின்ற்ன. அவை நிலையானதாகவும் வீரியமிக்கதாகவும் இருக்கும்போது அவற்றுக்கான முறையான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

யூ ட்யூபில் 2121 - 2130 வீடியோக்கள்.

2121.ஸ்ரீ துளசி ஸ்தோத்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=k_5edYIVerU


#ஸ்ரீதுளசிஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRITHULASISTOTRAM, #THENAMMAILAKSHMANAN,



2122.ஆளவந்தவா l வெங்கட் கணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=TOHh04fSeSo


#ஆளவந்தவா, #வெங்கட்கணேசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ALAVANTHAVA, #VENKATGANESAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 11 அக்டோபர், 2023

ஈஃபில் டவரிலிருந்து ஒரு பருந்துப் பார்வை

 கோடிக்கணக்கான உல்லாசப் பயணிகளை ஈர்த்த ஈஃபில் டவரில் ஏறி பாரீஸ் மாநாகரத்தைப் பருந்துப் பார்வையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது யூரோப் டூரின் போது. நான் பார்த்த இடங்களை என் காமிராக் கண்ணின் மூலம் நீங்களும் பார்க்கலாம் வாங்க. 

வருடா வருடம் கோடிக்கணக்கான பயணிகளை ஈர்க்கும் ஈஃபில் 2019 இல் எங்களையும் வரவேற்றது. இதுதான் ஈஃபிலின் முதல் தளம். நல்ல உறுதியான எஃகிரும்பினால் வார்க்கப்பட்ட இரும்புத்தளவாடங்கள், இரும்பு ஆணிகள் கொண்டு பகுதி பகுதியாக செய்யப்பட்டு இங்கே கொண்டு வந்து பொருத்தப்பட்டிருக்கு. 

யூ ட்யூபில் 2111 - 2120 வீடியோக்கள்.

 2111.சிவபெருமான் வணக்கம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=TDMMziRYhnY


#சிவபெருமான், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVAPERUMAN, #THENAMMAILAKSHMANAN,



2112.சிவன் துதிப்பாடல்கள் - 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=gTJ1G-g69ls


#சிவன்துதிப்பாடல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVANTHUTHIPADALGAL, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 10 அக்டோபர், 2023

ஷிர்டியில் இரு நாட்கள்

 சில மாதங்களுக்கு முன் ஷிர்டி சாய் பாபாவைத் தரிசிக்கச் சென்றிருந்தோம்.

சென்னை டு ஷிர்டி, ஷிர்டி டு பெங்களூர், பெங்களூர் டு திருச்சி இண்டிகோவில் வந்து திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு வந்து சேர்ந்தோம். 

ஸ்ரத்தா, சபூரி என்ற இரு உபதேசங்களை அங்கே அவரின் மந்திரிலும் அவருடைய சமாதி இருக்குமிடம் பார்த்தோம்.

சாய்பாபா சங்ஸ்தான் ட்ரஸ்டில் தங்கினோம். 

அங்கே கோவிலில் பெருங்கூட்டம்.

திங்கள், 9 அக்டோபர், 2023

தேசியத்தாய்கள்

தேசியத்தாய்கள்

 

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து

பாவியேன் உடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பு இலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து

புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந்தருள்வது இனியே. ”

 

பாடல்கள் பாடித் தீபம் ஏற்றிக் கொண்டிருந்த ராஜராஜேஸ்வரி அம்மா விபூதியையும் குங்குமத்தையும் கொண்டு வந்து தேவிக்குப் பூசி விட்டார். தைராய்டு பிரச்சனையால் அன் ஈவன் மென்ஸஸ்ட்ருவல் ப்ரியடில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தேவிக்கு தர்மசங்கடமாயிருந்தது.

 

தான் மாசமாக இருப்பதாக நினைத்து ராஜராஜேஸ்வரி அம்மாள் தாங்கு தாங்கென்று தாங்குவது அவளுக்கு பயத்தைக் கூட உண்டு பண்ணியது. உண்மை தெரிந்தால் என்னாகுமோ என்று முன்பே அவரிடம் சில உடல்நலத் தகவல்களைச் சொல்லி இருந்தாள். சிலபேருக்குக் கர்ப்பம் தரிச்ச பின்னாடியும் லேசா ப்ளீடிங்க் ஆகுமாம்மா என்று.

சனி, 7 அக்டோபர், 2023

எட்டணா முதல் இருநூறு ரூபாய் வரை

 பிலடெலி என்று ஸ்டாம்ப்ஸ் கலெக்‌ஷன் பற்றி முன்பே போட்டிருந்தேன். இப்போது என் தாயாரும், என் சின்ன மகனும் மற்றும் நானும் சேகரித்த நாணயங்களைப் பற்றிப் பகிர்கிறேன். உலகளாவிய அளவில் இது ஒரு காலத்தில் பெரும் பொழுது போக்காவும் அரிய சேமிப்பாகவும் இருந்திருக்கிறது. செல்லாமல் போன இந்திய/அந்நிய நோட்டுக்களை எண்ணிப் பார்த்தால் அதுவே லட்ச ரூபாய்களை எட்டும்.

இதில் இந்இதிய நாணயங்களையும் ரூபாய் நோட்டுக்களையும் பகிர்ந்துள்ளேன்.

வரவு எட்டணா,செலவு பத்தணா என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு அணா என்பது ஆறு காசு.

நாலணா என்றால் 24 காசு. ஆனால் 25 காசை நாம் நாலணா என்றும் 50 காசை எட்டணா என்று கூறி வருகிறோம். ( 48 காசுதான் எட்டணா ). ஒரு ரூபாய்க்குப் பதினாறணா. 96 காசுகள். 


அப்போதெல்லாம் டவுன்பஸ்ஸில் எட்டணா டிக்கெட்டில் பயணிக்கலாம்.

அப்போது என்பது ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு. 

தேசிய விலங்கான புலியைப் பாதுகாப்பது குறித்து, மீனவர் நலன்குறித்து, இந்திராகாந்தி அம்மையார், ஜவஹர்லால் நேருஜியின்  படங்கள், தண்டி யாத்திரை, இந்தியா மேப், (விவசாயத்தின் நெற்கதிர்களின் செழிப்பு), பசுமைப் புரட்சி, சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்ததைக்  கொண்டாடும் விதமாக என காசுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

யூ ட்யூபில் 2101 - 2110 வீடியோக்கள்.

2101.நவதுர்க்கைகள் l நவதுர்க்கா தியான ஸ்லோகம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VwoZ-PoA1eo


#நவதுர்க்கைகள், #நவதுர்க்காதியானஸ்லோகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAVADURGA, #NAVADURGATHIYANASLOGAM, #THENAMMAILAKSHMANAN,



2102.சுட்டதிரு நீறெடுத்து l தொடர்பாடல்கள் - 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HJ23A_hgCmQ


#சுட்டதிருநீறெடுத்து, #தொடர்பாடல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SUTTATHIRUNEEREDUTHU, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 4 அக்டோபர், 2023

திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

174.

3461.நகரத்தார் எழுத்தாளர்கள் பற்றி நமது செட்டிநாடு இதழின் தலையங்கத்தில் அதன் ஆசிரியர் திரு.ஆவுடையப்பன் எங்களைக் கௌரவித்துள்ளார். நன்றி. 



3462.எழுத்தாளர் சாந்தி நேசக்கரம் அவர்களின் நூலான நிழற்குடையை திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் எங்களுக்கு அளித்த தருணத்தில்


யூ ட்யூபில் 2091 - 2100 வீடியோக்கள்.

 2091.துர்க்கா ஸ்தோத்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=sccksDIWwiM


#துர்க்காஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DURGASTOTHRAM, #THENAMMAILAKSHMANAN,



2092.ஸ்ரீ ஆஞ்சநேய அஷ்டோத்திர சதநாமாவளி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=d79pCpmPO8k


#ஸ்ரீஆஞ்சநேயஅஷ்டோத்திரசதநாமாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIANJANEYAASTOTHRASATHANAMAVALI, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 3 அக்டோபர், 2023

யூ ட்யூபில் 2081 - 2090 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்

2081.கூட்டாஞ்சோறு l அணிந்துரை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=GXaFwqlAatE


#கூட்டாஞ்சோறு, #அணிந்துரை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOOTANCHORU, #ANINTHURAI, #THENAMMAILAKSHMANAN,



2082.நமது இலக்கு l பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4AlsGIBm-SA


#நமதுஇலக்கு, #பண்ணாகம்கிருஷ்ணமூர்த்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAMADHUILAKKU, #PANNAGAMKRISHNAMOORTHI, #THENAMMAILAKSHMANAN, 

ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

 173.


3441.டுசில்டார்ஃப் ஏர்போர்ட் காஃபி ஷாப்பில் ஓவியங்கள்


திங்கள், 2 அக்டோபர், 2023

மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரியுமா ?

 மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரியுமா ?

குருக்ஷேத்திரப்போர் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த ஒரு மிக பெரிய போர்.  இதில் தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சாகதேவன் எனப் பாண்டவர்கள் ஐவரின் பெயர்கள் நமக்கு தெரியும். ஆனால் கௌரவர்கள் 100 பேரின் பெயர் தெரியுமா ? சொல்லப்போனால் அவர்களுக்கு 101 ஆவதாக ஒரு சகோதரியும் உண்டு.

அவர்கள் யாரென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

யூ ட்யூபில் 2071 - 2080 வீடியோக்கள்.

 2071.துர்க்கா ஸூக்தம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Wn79xKHgEcE


#துர்க்காஸூக்தம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DURGASUKTHAM, #THENAMMAILAKSHMANAN, 



2072.திருமகள் பதிகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VMokecbJ2mQ


#திருமகள்பதிகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMAGALPATHIGAM, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 28 செப்டம்பர், 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 7

 ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 7

  குட்டீஸ் என்ன பண்றீங்க”. தனது ஈஸிசேரில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆராவமுதன் பெட்ரூமை நோக்கிக் குரல் கொடுத்தார்.

  அங்கே பெருத்த அமைதி நிலவிக்கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் அடித்துக் கொள்ளும் சப்தம் கேட்டால்கூடக் கலங்காத ஆராவமுதன் இருவரும் அமைதியாக இருப்பதைக் கண்டால் கலங்கி விடுவார். ஏனெனில் ஏதோ அவர்களை பாதித்த விஷயம் நடந்திருக்கலாம் என்பதை அவருடைய அனுபவ அறிவு சொல்லிவிடும்.

  உள்ளே அவரது மருமகள் ரம்யா பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். நடுவில் வேலையாக கிச்சனுக்குச் சென்றிருந்தாள். கால்மணி நேரமாக சப்தமில்லாமல் இருவரும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று போய் எட்டிப் பார்த்தார்.

யூ ட்யூபில் 2061 - 2070 வீடியோக்கள்

2061.சங்கஷ்ட நாசன கணேச ஸ்தோத்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4zgJX9584BM


#சங்கஷ்டநாசனகணேசஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GANESHA, #THENAMMAILAKSHMANAN,



2062.அறுமுக விருத்தம் l மீ.மணிகண்டன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=zsT6d3dCZVY


#அறுமுகவிருத்தம், #மீமணிகண்டன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ARUMUGAVIRUTHAM, #MANAIKANDAN, #THENAMMAILAKSHMANAN, 

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

உபஸர்க்கம்

உபஸர்க்கம்

ன்னைப் பார்க்கவேண்டும், ரசிக்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனதிலே.. அதை என்னவென்று எடுத்துச் சொல்லத் தெரியலை.. ஐ டோண்ட் நோ .. ஐ லவ் யூ “ என்று காரில் இருந்த ஆடியோ பாடிக் கொண்டிருந்தது. ஒரு அவசர வேலை இருப்பதாக நண்பர் குமாரின் அலுவலகத்துக்கு விரைந்து கொண்டிருந்தான் சாம். சிந்தனைகளின் வேகத்தில் அவசரமாக வெளிவந்து லிஃப்ட் வர நேரமானதால் படிகளை இரண்டிரண்டாகத் தாண்டி இறங்கினான் சாம்.

அவன் எண்ணப் போக்குக்கு ஈடு கட்டும் விதமாக ட்ரைவரும் வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார். நாற்பதாண்டு காலமாக குடும்பத்துக்கு சேவை செய்து வரும் ட்ரைவர் அய்யாக்கண்ணு. முதலாளிகளின் மனவோட்டம் அறிந்தவர். ஆனாலும் ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார். அவரை மீறி எதுவும் எங்கும் போகாது. நம்பிக்கையான ஆள்.

பிஸினஸில் பெரிய லாஸ் , அதைத் தவிர்க்க வேண்டும். அதைக் கூறாமல் ’மூன்று மணி நேரம் குமாருடன் அர்ஜண்ட் பிஸினஸ் மீட்டிங்க் இருக்கப்போகிறது எனவே தொந்தரவு செய்யவேண்டாம்’ எனத் தேவியிடம் கூறிவிட்டுத்தான் கிளம்பி இருந்தான் சாம். 

யூ ட்யூபில் 2051 - 2060 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

2051.மின்னல் முரளி l பாசில் ஜோசப் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=aSJonjz6udk


#மின்னல்முரளி, #பாசில்ஜோசப், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MINNALMURALI, #BASILJOSEPH, #THENAMMAILAKSHMANAN,



2052.சதுரங்கம் l கரு. பழனியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=MSpNK2kE7Ks


#சதுரங்கம், #கருபழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#CHATHURANGAM, #KARUPALANIAPPAN, #THENAMMAILAKSHMANAN,

சிங்கப் பெண் டெய்சி மாறன்.

 சிங்கப் பெண் டெய்சி மாறன்


 


2015 களில் ஆரம்பித்து இன்று வரை 85 நாவல்கள், 300 க்கும் மேற்பட்ட சிறுகதை, கவிதைகளை எழுதிய ஒரு நாவலாசிரியயைச் சந்தித்தேன்.இந்தக் காலக் கட்டத்தில் வந்த அநேக மாத நாவல்களைப் பார்த்தால் அதில் ஆசிரியர் என்று இவர் பெயர் இருக்கும்.  மிகப் பிரமிப்பாயிருந்தது. இத்தனை நாவல்கள் தொடர்ந்து அச்சேறுவது, அத்தனைக்கும் கற்பனை வளம் இன்றியமையாதது எனப் பல்வேறு விஷயங்கள் என் மனத்தில் ஓடின. இதனால் இல்லத்தரசியாக இருந்து இவ்வளவு சாதித்திருக்கும் அவரிடமே அவரைப்பற்றிக் கேட்டு விடுவது என அணுகினேன். அவர் கூறியதை அப்படியே தொகுத்துள்ளேன்.


Related Posts Plugin for WordPress, Blogger...