எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மகாபாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகாபாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 நவம்பர், 2023

சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்

 சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்


சூதாட்டத்தில் லாபமும் வரும், நட்டமும், கேடும் கூட வரும். ஒருவர் இதை எல்லாம் அறிந்து அதிலிருந்து விலகி இருக்கவேண்டும். ஆனால் பஞ்சபாண்டவர்கள் கௌரவர்களுடன் சூதாடித் தம் நாடு, படை, பட்டாளம், சேனை, செல்வம் அனைத்தையும் இழந்தார்கள். அவர்கள் உடனே இருந்த கிருஷ்ணர் சூதாடினால் கேடு வரும் என அறிந்திருந்தும் ஏன் அவர்களைத் தடுக்கவில்லை என்ற எண்ணம் ஒருவர் மனதில் பல்லாண்டுகாலமாய் ஓடிக் கொண்டிருந்தது. அவர் ஒருகணத்தில் அதை கிருஷ்ணரிடமே கேட்டுவிட்டார். அதற்கு கிருஷ்ணர் அளித்த பதில்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறதுதானே குழந்தைகளே.

கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் சகோதரர் தேவபகாரியின் மகன் உத்தவர். அவர் இளம்பருவத்தில் கிருஷ்ணனுக்குத் தேரோட்டியவர். கிருஷ்ணர் குருக்ஷேத்திர யுத்தம் முடிந்து தன் அவதாரப் பணியும் முடியும் தருவாயில் உத்தவரிடம் ”உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் நான் அதைத் தரச் சித்தமாய் இருக்கிறேன்.” என்கிறார்.

திங்கள், 2 அக்டோபர், 2023

மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரியுமா ?

 மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரியுமா ?

குருக்ஷேத்திரப்போர் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த ஒரு மிக பெரிய போர்.  இதில் தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சாகதேவன் எனப் பாண்டவர்கள் ஐவரின் பெயர்கள் நமக்கு தெரியும். ஆனால் கௌரவர்கள் 100 பேரின் பெயர் தெரியுமா ? சொல்லப்போனால் அவர்களுக்கு 101 ஆவதாக ஒரு சகோதரியும் உண்டு.

அவர்கள் யாரென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

பார்பரிகாவின் சொல்லப்படாத கதை

பார்பரிகாவின் சொல்லப்படாத கதை

குருக்ஷேத்திரப் போர் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. ஆனால் அதைத் தன்னால் ஒரே நிமிடத்தில் முடிக்கமுடியும் என்று போர் ஆரம்பிக்கும் முன்பே கூறினார் ஒருவர். எதை வைத்து அப்படிச் சொன்னார், யார் அவர் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன் இடும்பி தம்பதியின் மகன் கடோத்கஜன். இவரது மகன் பார்பரிகா. மிகச் சிறந்த வீரர். சிறந்த சிவபக்தரும் கூட. சிவனிடம் நிறைய வரங்கள் பெற்றவர். மேலும் அவரிடம் மிகச் சிறந்த மூன்று அம்புகள் இருந்தன.

மகாபாரதப்போர் ஆரம்பிக்கும் முன்பு கிருஷ்ணர் சிறந்த வீரர்களிடம் இப்போர் முடிவடைய எத்தனை காலம் ஆகும் எனக் கேட்டார். அதற்கு பீஷ்ம பிதாமகர் இருபது நாட்கள் ஆகுமென்றும், துரோணர் இருபத்தி ஐந்து நாட்களும் கர்ணன் இருபத்தி நான்கு நாட்களும், அர்ஜுனன் இருபத்தி எட்டு  நாட்களும் ஆகுமெனக் கூறினர். அப்போது அங்கே இருந்த பார்பரிகா தன்னால் அப்போரை ஒரே நிமிடத்தில் நிறுத்திவிட முடியும் எனக் கூறினார்.

ஞாயிறு, 19 மார்ச், 2023

நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள்

 நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள்

எத்தனையோ மனிதர்களை நட்புக்கு எடுத்துக்காட்டாய் நாம் சுட்டுகிறோம். படித்து அதிசயிக்கிறோம். ஆனால் எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலேயே நட்புக்கு எடுத்துக்காட்டாய் பார்த்த கணத்திலிருந்து இறந்து வீழ்ந்த கணம் வரை வாழ்ந்தவர்கள் என்றால் கர்ணனையும் துரியோதனனையுமே சுட்டலாம். அவர்களின் சிறப்பான பக்கங்களைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

அஸ்தினாபுர அரண்மனையில் மன்னர்களுக்கிடையே ஒரு வில்வித்தைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபோட்டியில் விஜயன் வென்றுவிட அங்கே தேரோட்டியின் மகனான கர்ணன் பங்கெடுக்க விரும்புகிறான். ஆனால் துரோணரோ அது க்ஷத்திரிய மன்னர்களுக்கான போட்டி என நிராகரிக்கிறார். உடனே துரியோதனன் கர்ணனைத் தன் நண்பனாக ஏற்று அங்க தேசத்தின் அரசனாக அறிவிக்கிறான். இங்கே ஆரம்பிக்கிறது அவர்களின் மாசற்ற நட்பும் கர்ணனின் செஞ்சோற்றுக் கடனும்.

வியாழன், 16 மார்ச், 2023

மகாபாரதத் துணைக் கதைகள் - எனது இருபத்தி இரண்டாவது நூலின் முன்னுரை

 முன்னுரை




மகாபாரதமும் ராமாயணமும் இந்தியாவின் தொன்ம இதிகாசங்கள். மண்ணாசையால் வீழ்ச்சி ஏற்படும் எனக் கூறியது மகாபாரதம். பெண்ணாசையால் அழிவு ஏற்படும் எனக் கூறியது இராமாயணம். தாய் வழிச் சமூகத்தின் மூலம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் மகாபாரத அரசர்கள். அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பிறந்த திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் வாரிசுகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த ஆட்சி உரிமைப் போரை விளக்கும் இதிகாசம் மகாபாரதம்.

மகாபாரதத்தைத் தொகுத்தவர் வேதவியாசர். அவர் சொல்லச் சொல்லத் தனது கொம்பை ஒடித்து ஓலைச்சுவடிகளில் எழுதியவர் விநாயகர். பகவத் கீதை இதன் முக்கிய அம்சம். பாரதம் பாடிய பெருந்தேவனார் இதை முதலில் தமிழ்ப்படுத்தினார். அதன் பிரதிகள் கிடைக்கவில்லை. நல்லாப்பிள்ளை என்பவர் இயற்றிய “ நல்லாப்பிள்ளை பாரதம்” மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளது.

திங்கள், 6 பிப்ரவரி, 2023

அன்பெனும் கட்டிற்குள் அகப்பட்ட கிருஷ்ணர்

 அன்பெனும் கட்டிற்குள் அகப்பட்ட கிருஷ்ணர்


பகவானான ஸ்ரீகிருஷ்ணரை இருவர் கட்டிப் போட முயன்றனர். இரண்டுமே கிருஷ்ணர் நடத்திய லீலைகளால் விளைந்தவைதான். இருவருமே அவருக்கு நெருக்கமானவர்கள்தான். ஒருவர் கிருஷ்ணரின் வளர்ப்புத்தாய் யசோதை, இன்னொருவர் அவரது அத்தை குந்தியின் மகனான சகாதேவன். சிறு குழந்தையில் கிருஷ்ணர் சேட்டைக்காரர் என்பதால் அவரை உரலில் கட்டிப் போட்டாள் யசோதை, ஆனால் சகாதேவன் ஏன் கிருஷ்ணரைக் கட்டினான் என்பது புதிரானது. இரண்டைப் பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

அந்த ஆயர்பாடியில் எப்போதும் குட்டிக்கோபர்களின் ஆர்ப்பாட்டம். நடுநிலையில் குட்டிக்கண்ணன். இவனோடு வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடுவதும் அதைத் தாங்கள் உண்பதும் குரங்குகளுக்கு அளிப்பதும்தான் குட்டிக்கோபர்களின் வேலை. எப்போது பார்த்தாலும் எல்லாத் திசைகளிலிலிருந்தும் கிருஷ்ணனை நோக்கிக் கோபியர்களின் புகார்தான். ”கண்ணன் இங்கே எங்கள் இல்லம் புகுந்தான், வெண்ணெய் திருடிச் சென்றான், உரியை உடைத்தான், உண்டு களித்தானெ”ன்று.

பார்த்தாள் யசோதை. இந்த சேட்டைகள் நடக்காமலிருக்க வேண்டுமானால் அவனைக் கட்டிப் போட வேண்டும். வீட்டின் புழக்கடைப்பக்கத்தில் ஒரு உரல் இருந்தது. அதில் கட்டிப்போட்டால்தான் சரிவரும். ஒரு துண்டுக்கயிற்றை எடுத்தாள். அதைக் கொண்டு கண்ணனின் இடுப்பைச்சுற்றிக் கட்ட எத்தனித்தாள். அட! இதென்ன கயிற்றின் நீளம் போதவில்லையே. அதற்குள் கண்ணனின் குட்டித்தொந்தி பெருத்து விட்டதா என்ன. இன்னும் ஒருதுண்டுக் கயிற்றை இணைத்துக் கட்ட ஆரம்பித்தாள். அடடா! இன்னும் போதவில்லையே. தன் மகனின் வயிறு என்ன பானை ஆகிவிட்டதா.?

ஞாயிறு, 20 நவம்பர், 2022

பத்தாயிரம் யானைகளின் பலம் பெற்ற பீமன்

பத்தாயிரம் யானைகளின் பலம் பெற்ற பீமன்


ஒரே மனிதனுக்குப் பத்தாயிரம் யானைகளின் பலம் கிட்ட முடியுமா. அப்படி பலம் கிட்டிய ஒருவன் தன் எதிரிகள் நூறு பேரை ஒரே போரில் கொல்ல முடியுமா? சாதாரண மனிதருக்கு அசாத்தியமான இவை இரண்டையும் நிகழ்த்திய பீமனின் வரலாறைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.


பாண்டுவுக்கும் குந்திக்கும் பிறந்த மகன் பீமன். இவர் வாயுபுத்திரனின் அருளால் பிறந்தார். எனவே வலிமையுடன் திகழ்ந்தார். இவரது மனைவி இடும்பி, மகன் கடோத்கஜன். சிறுவயதிலிருந்தே நகைச்சுவையுணர்வு நிரம்பப் பெற்றவர். அதோடு அளப்பரிய கோபமும் கொண்டவர்.

அஸ்தினாபுர அரண்மனையில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பீஷ்மர் குரு துரோணர் மற்றும் கிருபாச்சாரியார் மூலம் பல்கலைகளையும் பயிற்றுவித்து வந்தார். பீமன் கதாயுதப் பயிற்சியில் சிறந்து விளங்கினார். மல்யுத்தம் போன்றவற்றிலும் வெற்றிகாண முடியாத வீரராகத் திகழ்ந்தார்.

புதன், 24 மார்ச், 2021

சக்கர வியூகத்தை உடைத்த அபிமன்யு.

சக்கரவியூகத்தை உடைத்த அபிமன்யு

பதினாறு வயதே நிரம்பிய ஒரு இளைஞன் குருஷேத்திரப் போரில் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சல்லியன், துரியோதனன் ஆகியோரைத் தன் வில்லாற்றலால் கதி கலங்க அடித்தான். யார் அந்த வீரன், அவன் பலம் என்ன பலவீனம் என்ன எனப் பார்போம் வாருங்கள் குழந்தைகளே.
கிருஷ்ணரின் சகோதரி சுபத்திரை. அவளை பஞ்சபாண்டவர்களுள் ஒருவரான அர்ஜுனன் மணந்து கொண்டார். சுபத்ரையின் வயிற்றில் அபிமன்யு கருவாக இருந்த போது சக்கரவியூகம் பற்றி சுபத்ரையிடம் பேசிக்கொண்டிருந்தார் கிருஷ்ணர். பாதிகேட்டுக் கொண்டிருக்கும்போதே சுபத்திரைக்கு உறக்கம் வந்துவிட சக்கரவியூகம் என்றால் என்ன அதில் எப்படி நுழைவது எனச் சொல்லிக் கொண்டிருந்த கிருஷ்ணர் பாதியிலே நிறுத்தி விட்டார். சுபத்திரை இக்கதையைக் கேட்டாளோ இல்லையோ அவள் கர்ப்ப்பத்தில் இருந்த அபிமன்யூ நன்றாகக் கேட்டுக் கொண்டான்.
அன்பும் அழகும் அறிவும் பொருந்திய அப்பாலகனின் துவாரகையில் வளர்ந்து வந்தான். கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் வில் வாள் வித்தைகள் எல்லாம் கற்றுத் தேறினான். கிருஷ்ணரின் மகன் ப்ரத்யும்னனும் அவனுக்கு வித்தைகள் எல்லாம் கற்பிக்கின்றான்.

புதன், 11 மார்ச், 2020

பரிபாஷை அறிந்ததால் தப்பித்த சாரதி. தினமலர் சிறுவர்மலர் - 55.

பரிபாஷை அறிந்ததால் தப்பித்த சாரதி
பறவைகள் ப்ராணிகளின் மொழி அறிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். காக்கை காகாவெனக் கரைவதையும் கிளி கிக்கீ எனப் பேசுவதையும் குயில் குக்கூவெனக் கூவுவதையும் மட்டுமல்ல குரங்கின் கீச் கீச்சையும் நாயின் குரைப்பையும் கூட நாம் விலங்குகளின் பாஷை அறிந்தால் அவை என்ன சொல்ல வருகின்றன என்பதை அறியலாம். இப்படி குதிரைகளின் கனைப்பொலியையும் அவற்றின் உள்ளுணர்வையும் அறியும் திறனோடு ஒருவர் இருந்தார். அதனால் அவர் தனக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடிந்தது. அப்படிப்பட்டவர் யார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திருதராஷ்டிரனின் குழந்தைகள் கௌரவர்கள். பாண்டுவின் குழந்தைகள் பாண்டவர்கள். இவர்களில் பாண்டுவின் முதல் மனைவி குந்திக்கு தர்மர், பீமன் அர்ஜுனர் ஆகியோரும் பாண்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரிக்கு நகுலன் சகாதேவன் ஆகியோரும் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்தமையால் நகுலன் சகாதேவன் ஆகியோர் மிகுந்த அழகுடன் திகழ்ந்தார்கள். கடைக்குட்டிகள் என்ற செல்லம் வேறு. எல்லாரிலும் அழகு வாய்ந்த நகுலன் ஆயுர்வேத மருத்துவம், வாள் பயிற்சி, குதிரை வளர்ப்பு ஆகியவற்றில் தேர்ந்தவன்.

சனி, 3 ஆகஸ்ட், 2019

கர்ணன் செய்யாத தானம். தினமலர் சிறுவர்மலர். 25.

கர்ணன் செய்யாத தானம்.
பொன், வைரம், வைடூரியம், நவரத்தினம் மட்டுமல்ல தனது அவைக்கு வந்தவர்க்கெல்லாம் தனது கரூவூலத்திலிருந்து கை நிறைய மனம் நிறைய எடுத்துக் கொடுத்து மகிழ்ந்தவன் கர்ணன். கையில் எது இருந்தாலும் பிறர் கேட்டால் கொடுத்துவிடுவான். பிறந்ததில் இருந்து தனது உடலோடு ஒட்டியிருந்த கவச குண்டலங்களையும் வழங்கியவன். ஆனால் அவன் எத்தனைதான் தானம் செய்திருந்தாலும் ஒரு முறை கூட அன்னதானம் செய்யாததால் பட்ட துன்பத்தைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
யதுகுலத்தைச் சேர்ந்த சூரசேனரின் மகள் பிரீதா. சூரசேனர் பெண்குழந்தை இல்லாத தன் நண்பரான குந்தி போஜருக்கு தன் மகளான பிரீதாவைத் தத்துக் கொடுத்தார்.  குந்தி போஜரின் மகளானதும் இவர் குந்தி என அழைக்கப்பட்டார். குந்திக்கு ஒரு வரம் கிடைத்தது. அதன்படி கிடைத்த ஒரு மந்திரத்தைச் சோதிக்க எண்ணினார். அப்போது குளக்கரையில் நின்றதால் சூரியனின் ஒளி பட சூரியபகவானை நினைத்து இவர் அம்மந்திரத்தைக் கூற உடனே கர்ணன் பிறந்தான்.
கவசகுண்டலங்கள் அணிந்த அழகான குழந்தை. தந்தைக்குத் தெரியாமல் அக்குழந்தையை எப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்வது. எனவே குந்தி அதை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள். அக்குழந்தையை அதிரதன் ஒருவர் கண்டெடுத்து தன் மகனாக வளர்த்து வந்தார். அவனை மன்னர்களுக்கிடையேயான  ஒரு போட்டியில் கர்ணன் போட்டியிட விரும்ப அவனை துரியோதனன் ஆதரித்து மன்னனாக்கினான்.

வியாழன், 27 ஜூன், 2019

அஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள். தினமலர் சிறுவர்மலர் - 20.

அஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள்.
ஒருவனுக்கு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அஸ்திரம் கொடுத்தும் அதைக் கொண்டு அவன் ஜெயிக்கமுடியவில்லை. ஏனெனில் அவற்றை அவன் நல்லனவற்றுக்குப் பயன்படுத்தவில்லை. தீயோரை ஆதரிக்கப் பயன்படுத்தினான். அதனால் அவை செயலிழந்தன. மும்மூர்த்திகளிடம் அந்த அஸ்திரங்களைப் பெற்ற பெருமைக்குரியவன் அஸ்வத்தாமன். அவனைப் பற்றியும் அந்த அஸ்திரங்கள் பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
துரோணர் கிருபி ஆகியோரின் மைந்தர் அஸ்வத்தாமன்.  இவன் சிறுகுழந்தையாயிருந்தபோது மிகுந்த வறுமையில்தான் வளர்ந்துவந்தான். துரோணர் கௌரவர்கள் பாண்டவர்களின் ஆசியராக ஆனபின்தான் ஓரளவு செல்வச்செழிப்பை எட்ட முடிந்தது. அதிலும் துரோணர் பாண்டவர்களில் அர்ஜுனனுக்கு மட்டுமே கவனம் செலுத்தி எல்லா அஸ்திர சஸ்திரங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்.
இருந்தும் தந்தையும் தனயனும் ஒருவர் மேல் ஒருவர் மிக்க பாசத்தோடுதான் வாழ்ந்து வந்தார்கள். ஏனெனில் துரோணர் பல்லாண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்தபின் பிறந்த பிள்ளைதான் அஸ்வத்தாமன். எனவே அஸ்வத்தாமனுக்கு சிரஞ்சீவித்தன்மை வழங்கும்படி கேட்டதால் ஈசனும் அஸ்வத்தாமனுக்கு அமரத்தன்மை வழங்கினார். அதனால் அவருக்கு இறப்பு என்பதே கிடையாது.

திங்கள், 5 நவம்பர், 2018

குணம் அழகு தரும். தினமலர். சிறுவர்மலர் - 42.


குணம் அழகு தரும்


மிக அழகாக இருக்கிறோம் என்ற கர்வத்தால் மற்றவரை மதியாமல் நடந்தாள் ஒரு பெண். அதனால் அந்த அழகி அரக்கியாக மாறும்படி சாபம் கிடைத்தது. அரக்கியாக இருந்தாலும் அறத்தைப் பின்பற்றி வாழ்ந்ததாலும் நல்குணத்தைப் பேணியதாலும் திரும்ப அவள் சாப விமோசனம் பெற்று அழகானாள். அது எப்படி என்று பார்ப்போம் குழந்தைகளே.

மகாபாரதத்தில் அரக்கு மாளிகை தீப்பற்றும்போது சுரங்க வழியாகத் தப்பிச் சென்றார்கள் அல்லவா பஞ்சபாண்டவர்கள் அவர்கள் கங்கையைக் கடந்து வந்து சேர்ந்த இடம் இடும்பவனம். அங்கே இடும்பன், இடும்பி என்ற அரக்கனும் அரக்கியும்  வசித்து வந்தார்கள். இருவரும் அண்ணன் தங்கை. அரக்கியாக இருந்தாலும் இடும்பி யாரையும் துன்புறுத்த மாட்டாள்.

ஆனால் அன்று காலை நேரம் வெகுகோபத்தோடு விழித்தான் இடும்பன். மனித நடமாட்டமும் வாசனையும் அடிக்கிறதே. “ அடி தங்காய். இடும்பி, பக்கத்தில் மனித வாசனை அடிக்கிறது. அது ஆபத்து. நம் இடத்தை அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். ஆகையால் அவர்களைக் கொன்று விட்டு வா “ என்று கூறித் திரும்பிப் படுத்தான்.

புதன், 19 செப்டம்பர், 2018

கோவர்த்தன வில்லை ஒடித்த விதுரர். தினமலர் சிறுவர்மலர் - 35.


கோவர்த்தன வில்லை ஒடித்த விதுரர். :-

சீதையை மணக்க ராமபிரான் வில்லை ஒடித்தது தெரியும். ஆனால் மகாபாரதத்தில் விதுரர் வில்லை ஒடித்தார். அது எதற்கென்று தெரியுமா.? அதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள் குழந்தைகளே.

ஸ்தினாபுர அரண்மனை. அரசிளங்குமரிகளான அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் புத்திரர்கள் திருதராஷ்டிரனும் பாண்டுவும் ஆவார்கள். அவர்களின் தம்பி விதுரன். ஆனால் அவரது தாயார் ஒரு பணிப்பெண். அதனால் அவருக்கு நாடாளும் யோகம் கிட்டவில்லை. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சித்தப்பாவான அவர் தான் வகுத்த விதுரநீதியைக் கூறி அவர்களை நெறிப்படுத்தி வந்தார்.

விதுரர் சிறந்த வில்வித்தை வீரர். சிறந்த விஷ்ணு பக்தரான விதுரருக்கு விஷ்ணு கோவர்த்தன் என்ற வில்லைப் பரிசாகக் கொடுத்தார். அந்த வில் அர்ஜுனனின் காண்டீபம் என்னும் வில்லை விட வலிமை வாய்ந்தது. அதற்கு இணையான சக்தி கொண்ட வில் எதுவுமே கிடையாது.  விதுரர் நேர்மை தவறாதவர். வாக்கும் தவறமாட்டார். பொறுமையும் பண்பும் மிக்கவர்.

பாண்டுவின் புத்திரர்களான பாண்டவர்களுக்கு அரசாளும் உரிமையை மறுத்தார்கள் திருதராஷ்டிரனும் கௌரவர்களும். அவர்களுக்காகப் பரிந்து பேசிவந்தார் விதுரர்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

மகாபாரதம் வினா - விடைகள். ஒன்பதாம் வகுப்பு மாணவியின் தொகுப்பு நூல் .



இந்த விமர்சனம் அமேஸானில் ”சிறுவர் நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

Related Posts Plugin for WordPress, Blogger...