எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கிருஷ்ணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருஷ்ணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஜூலை, 2025

பிரலம்பாசுரனுக்கு முக்தி அளித்த பலதேவர்

பிரலம்பாசுரனுக்கு முக்தி அளித்த பலதேவர்


தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையினால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அசரீரி கூறக் கேட்ட கம்சன் ஒவ்வொரு நாளும் கோகுலத்துக்குக் கிருஷ்ணரை அழிக்கப் பூதனா, சகாட்சுரா, பகாசுரா என்று அரக்கர்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இவர்களை எல்லாம் குழந்தை கிருஷ்ணர் அழித்ததால் அடுத்துப் பிரலம்பாசுரன் என்பவனை அனுப்பினான். இவனிடமிருந்தும் குழந்தைக் கிருஷ்ணரும், பலராமரும் எப்படித் தப்பினர் என்பதைப் பார்ப்போம்.

யமுனை நதிக்கரையில் பாண்டீரவனம் என்றொரு வனம் இருந்தது. ஆநிரைகளின் மேய்ச்சலுக்கு உகந்த இடம் பசும்புற்களும், சுனைப் புற்களும், நிரம்பிய இடம் அது.  மேலும் குழந்தைகள் எல்லாம் ஊஞ்சலாடி மகிழ ஆலம் விழுதுகளும் கைகோர்த்துக் காட்சி அளிக்கும். ஆயர்பாடிச் சிறுவர்களுக்குப் பிடித்த அற்புத வனம் அது.

புதன், 8 நவம்பர், 2023

சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்

 சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்


சூதாட்டத்தில் லாபமும் வரும், நட்டமும், கேடும் கூட வரும். ஒருவர் இதை எல்லாம் அறிந்து அதிலிருந்து விலகி இருக்கவேண்டும். ஆனால் பஞ்சபாண்டவர்கள் கௌரவர்களுடன் சூதாடித் தம் நாடு, படை, பட்டாளம், சேனை, செல்வம் அனைத்தையும் இழந்தார்கள். அவர்கள் உடனே இருந்த கிருஷ்ணர் சூதாடினால் கேடு வரும் என அறிந்திருந்தும் ஏன் அவர்களைத் தடுக்கவில்லை என்ற எண்ணம் ஒருவர் மனதில் பல்லாண்டுகாலமாய் ஓடிக் கொண்டிருந்தது. அவர் ஒருகணத்தில் அதை கிருஷ்ணரிடமே கேட்டுவிட்டார். அதற்கு கிருஷ்ணர் அளித்த பதில்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறதுதானே குழந்தைகளே.

கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் சகோதரர் தேவபகாரியின் மகன் உத்தவர். அவர் இளம்பருவத்தில் கிருஷ்ணனுக்குத் தேரோட்டியவர். கிருஷ்ணர் குருக்ஷேத்திர யுத்தம் முடிந்து தன் அவதாரப் பணியும் முடியும் தருவாயில் உத்தவரிடம் ”உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் நான் அதைத் தரச் சித்தமாய் இருக்கிறேன்.” என்கிறார்.

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

பாரபட்சமில்லாமல் உணவளித்த உடுப்பி மன்னர்

 பாரபட்சமில்லாமல் உணவளித்த உடுப்பி மன்னர்

மகாபாரதப் போர் நடைபெற்றபோது எல்லா மன்னர்களும் பாண்டவர்கள் பக்கமோ, கௌரவர்கள் பக்கமோ துணை நின்று போர் புரிந்தனர். அம்மாபெரும் போரில் அனைவருக்கும் உணவின் தேவை இருந்தது. எல்லா மன்னர்களும் இப்படி இரு புறமும் பிரிந்து நின்று போரிட்டபோது உடுப்பி மன்னர் மட்டும் வித்யாசமாகச் சிந்தித்தார். அதைக் கிருஷ்ணரின் துணையோடு செயலாக்கமும் செய்தார். அப்படி அவர் என்ன செய்தார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

மகாபாரதப் போர் ஆரம்பிக்குமுன்பு மன்னர்கள் அனைவரும் இருகூறாகப் பிரிந்து பாண்டவர் பக்கமோ, கௌரவர் பக்கமோ சென்று யுத்தகளத்தில் கைகோர்த்தனர். அச்சமயம் அந்த ரத்த யுத்தத்தில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தார் ஒருவர். அவர்தான் உடுப்பியின் மன்னர். அவர் கிருஷ்ணரிடம் யுத்தம் ஆரம்பிக்கும் முன்பே தான் யுத்தத்தில் பங்குபெறப்போவதில்லை என்றும் ஆனால் அனைவருக்கும் தான் உணவு வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

துரியோதன் கேட்க நினைத்த மூன்று கேள்விகள்

 துரியோதன் கேட்க நினைத்த மூன்று கேள்விகள்

குருக்ஷேத்திர யுத்தத்தில் பீமனின் கதாயுதத்தால் தொடையில் கடுமையாகத் தாக்கப்பட்டு வீழ்ந்த நிலையிலும் துரியோதனன் மனதில் சில கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அதை யாராலும் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் கிருஷ்ணர் அவற்றைப் புரிந்து கொண்டு அதற்குப் பதில் அளித்தார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் கௌரவர் இருவர் பக்கமும் பலர் மறைந்தனர். பதினேழாம் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. போர் விதிகளுக்கு மாறாக பீமன் துரியோதனனின் தொடையில் தனது கதாயுதத்தால் ஓங்கி அடித்தான். அதனால் தொடை உடைபட்டுத் துரியோதனன் சாய்ந்தான். ஆனாலும் அவன் உயிர் போகவில்லை. ஆனால் அவனால் பேசவும் முடியவில்லை.

மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த துரியோதனன் மனதில் மூன்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதனால் அவன் தன் மூன்று விரல்களை நீட்டியபடியே கிடந்தான். அவனது பக்கம் உள்ள யாராலும் அவன் எதனால் அவ்வாறு மூன்று விரலை மட்டும் நீட்டியபடிக் கிடக்கிறான். அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை தன் ஞானதிருஷ்டியால் அறிந்த கிருஷ்ணர் அவன் அருகே வந்தார்.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

பார்பரிகாவின் சொல்லப்படாத கதை

பார்பரிகாவின் சொல்லப்படாத கதை

குருக்ஷேத்திரப் போர் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. ஆனால் அதைத் தன்னால் ஒரே நிமிடத்தில் முடிக்கமுடியும் என்று போர் ஆரம்பிக்கும் முன்பே கூறினார் ஒருவர். எதை வைத்து அப்படிச் சொன்னார், யார் அவர் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன் இடும்பி தம்பதியின் மகன் கடோத்கஜன். இவரது மகன் பார்பரிகா. மிகச் சிறந்த வீரர். சிறந்த சிவபக்தரும் கூட. சிவனிடம் நிறைய வரங்கள் பெற்றவர். மேலும் அவரிடம் மிகச் சிறந்த மூன்று அம்புகள் இருந்தன.

மகாபாரதப்போர் ஆரம்பிக்கும் முன்பு கிருஷ்ணர் சிறந்த வீரர்களிடம் இப்போர் முடிவடைய எத்தனை காலம் ஆகும் எனக் கேட்டார். அதற்கு பீஷ்ம பிதாமகர் இருபது நாட்கள் ஆகுமென்றும், துரோணர் இருபத்தி ஐந்து நாட்களும் கர்ணன் இருபத்தி நான்கு நாட்களும், அர்ஜுனன் இருபத்தி எட்டு  நாட்களும் ஆகுமெனக் கூறினர். அப்போது அங்கே இருந்த பார்பரிகா தன்னால் அப்போரை ஒரே நிமிடத்தில் நிறுத்திவிட முடியும் எனக் கூறினார்.

திங்கள், 6 பிப்ரவரி, 2023

அன்பெனும் கட்டிற்குள் அகப்பட்ட கிருஷ்ணர்

 அன்பெனும் கட்டிற்குள் அகப்பட்ட கிருஷ்ணர்


பகவானான ஸ்ரீகிருஷ்ணரை இருவர் கட்டிப் போட முயன்றனர். இரண்டுமே கிருஷ்ணர் நடத்திய லீலைகளால் விளைந்தவைதான். இருவருமே அவருக்கு நெருக்கமானவர்கள்தான். ஒருவர் கிருஷ்ணரின் வளர்ப்புத்தாய் யசோதை, இன்னொருவர் அவரது அத்தை குந்தியின் மகனான சகாதேவன். சிறு குழந்தையில் கிருஷ்ணர் சேட்டைக்காரர் என்பதால் அவரை உரலில் கட்டிப் போட்டாள் யசோதை, ஆனால் சகாதேவன் ஏன் கிருஷ்ணரைக் கட்டினான் என்பது புதிரானது. இரண்டைப் பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

அந்த ஆயர்பாடியில் எப்போதும் குட்டிக்கோபர்களின் ஆர்ப்பாட்டம். நடுநிலையில் குட்டிக்கண்ணன். இவனோடு வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடுவதும் அதைத் தாங்கள் உண்பதும் குரங்குகளுக்கு அளிப்பதும்தான் குட்டிக்கோபர்களின் வேலை. எப்போது பார்த்தாலும் எல்லாத் திசைகளிலிலிருந்தும் கிருஷ்ணனை நோக்கிக் கோபியர்களின் புகார்தான். ”கண்ணன் இங்கே எங்கள் இல்லம் புகுந்தான், வெண்ணெய் திருடிச் சென்றான், உரியை உடைத்தான், உண்டு களித்தானெ”ன்று.

பார்த்தாள் யசோதை. இந்த சேட்டைகள் நடக்காமலிருக்க வேண்டுமானால் அவனைக் கட்டிப் போட வேண்டும். வீட்டின் புழக்கடைப்பக்கத்தில் ஒரு உரல் இருந்தது. அதில் கட்டிப்போட்டால்தான் சரிவரும். ஒரு துண்டுக்கயிற்றை எடுத்தாள். அதைக் கொண்டு கண்ணனின் இடுப்பைச்சுற்றிக் கட்ட எத்தனித்தாள். அட! இதென்ன கயிற்றின் நீளம் போதவில்லையே. அதற்குள் கண்ணனின் குட்டித்தொந்தி பெருத்து விட்டதா என்ன. இன்னும் ஒருதுண்டுக் கயிற்றை இணைத்துக் கட்ட ஆரம்பித்தாள். அடடா! இன்னும் போதவில்லையே. தன் மகனின் வயிறு என்ன பானை ஆகிவிட்டதா.?

வியாழன், 22 டிசம்பர், 2022

கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம்

 கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம்


ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேரும்போது அதைச் சமாளிக்கமுடியாவிட்டால் யாருக்குமே கோபம் வருவது இயல்பு. அப்படி ஒருவருக்குக் கோபம் அதிகரிக்க அதிகரிக்கப் பிரச்சனைகளும் பூதாகாரமாகும். அதேபோல் சிந்தித்துக் கையாண்டால் அதே பிரச்சனைகளே புழுப்போலச் சிறுத்துப் போய்விடும் என்பதற்கு உதாரணமாக கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

ஒருமுறை கிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் ஒரு கானகத்தைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. மாலை முடிந்து இரவும் தொடங்கியது. சில்வண்டுகளின் கீச் கீச் சத்தங்களும் விஷப் பூச்சிகளின் ரீங்காரங்களும் கொடிய வனவிலங்குகளின் உறுமல்களும் பிளிறல்களும் வனத்தை அதிரடித்துக் கொண்டிருந்தன.

நாலாபக்கமும் பார்த்தபடி சென்ற அவர்கள் இரவு சூழ்ந்ததும் அக்கானகத்திலேயே உறங்கி மறுநாள் காலை பயணத்தைத் தொடர நினைத்தனர். இத்தனை விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் மத்தியில் மூவரும் எப்படி நிம்மதியாக உறங்க முடியும். அதனால் மூன்று ஜாமங்களிலும் மூவரில் ஒருவர் விழித்திருந்து மற்ற இருவரைக் காவல் காக்க முடிவு செய்தனர்.

திங்கள், 26 ஏப்ரல், 2021

எடைக்கு எடை சமன் செய்த அன்பின் இலை..

பொன்னல்ல பெரிது..
எடைக்கு எடை  சமன் செய்த அன்பின் இலை/ தங்க துலாபாரத்தை சமன் செய்த துளசிதளம்

ஒரு பொருளையோ மனிதரையோ அடைய பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுக்கலாம். ஆனால் அப்பொருளையோ மனிதரையோ உண்மையான உள்ளன்பு இருந்தால் மட்டுமே ஆத்மார்த்தமாகப் பெற முடியும். கூடை கூடையாய்ப் பொன்னைக் கொட்டியும் ஒருத்தி பெற முடியாத அன்பை ஒரே ஒரு இலையை உள்ளன்போடு கொடுத்து அடைந்தாள் இன்னொருத்தி. அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பகவான் கிருஷ்ணருக்கு சத்யபாமா, ருக்மணி என்ற இரு மனைவியர் . இருவரும் அவர்மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள்.
சத்யபாமாவின் திருமணத்தின்போது அவளது தாய்வீட்டில் இருந்து பொன்னையும் பொருளையும் மலைபோல் சீராகக் கொட்டி அனுப்பி இருந்தார்கள். அது போக கிருஷ்ணருக்குத் தேரோட்டியாக ஒரு சமயம் அவள் செயல்பட்டாள் என்ற பெருமை வேறு அவள் மனத்தில் மமதையை ஏற்படுத்தி இருந்தது.

வியாழன், 27 ஜூன், 2019

அஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள். தினமலர் சிறுவர்மலர் - 20.

அஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள்.
ஒருவனுக்கு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அஸ்திரம் கொடுத்தும் அதைக் கொண்டு அவன் ஜெயிக்கமுடியவில்லை. ஏனெனில் அவற்றை அவன் நல்லனவற்றுக்குப் பயன்படுத்தவில்லை. தீயோரை ஆதரிக்கப் பயன்படுத்தினான். அதனால் அவை செயலிழந்தன. மும்மூர்த்திகளிடம் அந்த அஸ்திரங்களைப் பெற்ற பெருமைக்குரியவன் அஸ்வத்தாமன். அவனைப் பற்றியும் அந்த அஸ்திரங்கள் பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
துரோணர் கிருபி ஆகியோரின் மைந்தர் அஸ்வத்தாமன்.  இவன் சிறுகுழந்தையாயிருந்தபோது மிகுந்த வறுமையில்தான் வளர்ந்துவந்தான். துரோணர் கௌரவர்கள் பாண்டவர்களின் ஆசியராக ஆனபின்தான் ஓரளவு செல்வச்செழிப்பை எட்ட முடிந்தது. அதிலும் துரோணர் பாண்டவர்களில் அர்ஜுனனுக்கு மட்டுமே கவனம் செலுத்தி எல்லா அஸ்திர சஸ்திரங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்.
இருந்தும் தந்தையும் தனயனும் ஒருவர் மேல் ஒருவர் மிக்க பாசத்தோடுதான் வாழ்ந்து வந்தார்கள். ஏனெனில் துரோணர் பல்லாண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்தபின் பிறந்த பிள்ளைதான் அஸ்வத்தாமன். எனவே அஸ்வத்தாமனுக்கு சிரஞ்சீவித்தன்மை வழங்கும்படி கேட்டதால் ஈசனும் அஸ்வத்தாமனுக்கு அமரத்தன்மை வழங்கினார். அதனால் அவருக்கு இறப்பு என்பதே கிடையாது.

புதன், 27 மார்ச், 2019

அகம்பாவம் தந்த அவமானம். தினமலர் சிறுவர்மலர் - 10.

அகம்பாவம் தந்த அவமானம்
மக்குக் கிடைக்கும் எந்த நன்மைக்கும் நாம் நன்றி உடையவர்களாக இருக்கவேண்டும். அதை விடுத்து நாம் பெரிய ஆள் அதனால்தான் எல்லாம் நடக்கிறது., எல்லாரும் பணிகிறார்கள், சேவகம் செய்கிறார்கள் என்று அகந்தையோடு நினைக்க கூடாது. அப்படி அகந்தையோடு நினைத்தான் ஒருவன் அதனால் அவனுக்கு அவமானம் மட்டுமல்ல உயிர் பயமும் நேர்ந்தது. அவன் யார் என்ன தவறு செய்தான் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
ஞ்சபாண்டவருள் ஒருவன் அர்ஜுனன். இவன் குந்தியின் மகன். இவனுக்குத் தருமன் என்ற அண்ணனும், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய தம்பிமாரும் உண்டு. அஸ்தினாபுர அரண்மனையின் ஆட்சி உரிமைப் போட்டியில் குருஷேத்திர யுத்தம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடைபெற்றது.
இருவருமே பெரியப்பா சித்தப்பா மக்கள்தான் என்றபோதும் கௌரவர்களுக்கு நாட்டின் இம்மி இடத்தைக் கூட பாண்டவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் யுத்தம் வந்தது. அப்போது கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருமே கண்ணனின் துணை நாடிச் சென்றார்கள். துரியோதனன் கண்ணனின் படை பலம் முழுவதையும் தனக்காகப் போரிடுமாறு கேட்க அர்ஜுனனோ கண்ணன் மட்டும் தங்கள் பக்கம் இருந்து போரிட்டால் போதுமெனக் கேட்கிறான்.
இதற்கு ஒத்துக் கொண்ட கண்ணன் குருஷேத்திர யுத்தத்தின்போது அர்ஜுனனுக்கு தேரின் சாரதியாகி கீதா உபதேசம் செய்கிறான். முடிவில் பாண்டவர்கள் ஜெயிக்கிறார்கள். இதனால் அர்ஜுனனுக்கு அகந்தை வந்தது. ’தெய்வமே எப்போதும் என் கூடவே இருக்கிறது ஆகையால் நன்றி என்று நினைத்தான் இல்லை “ “தெய்வமே எனக்குத் தேரோட்டியதே அப்படியானால் இந்த உலகிலேயே நான்தான் மிகச் சிறந்த பக்திமான். என்னைவிட கண்ணனுக்கு சிறந்த பக்திமான் யாருமே இருக்க முடியாது” என்று அகம்பாவமாக நினைத்தான்.

புதன், 19 செப்டம்பர், 2018

கோவர்த்தன வில்லை ஒடித்த விதுரர். தினமலர் சிறுவர்மலர் - 35.


கோவர்த்தன வில்லை ஒடித்த விதுரர். :-

சீதையை மணக்க ராமபிரான் வில்லை ஒடித்தது தெரியும். ஆனால் மகாபாரதத்தில் விதுரர் வில்லை ஒடித்தார். அது எதற்கென்று தெரியுமா.? அதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள் குழந்தைகளே.

ஸ்தினாபுர அரண்மனை. அரசிளங்குமரிகளான அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் புத்திரர்கள் திருதராஷ்டிரனும் பாண்டுவும் ஆவார்கள். அவர்களின் தம்பி விதுரன். ஆனால் அவரது தாயார் ஒரு பணிப்பெண். அதனால் அவருக்கு நாடாளும் யோகம் கிட்டவில்லை. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சித்தப்பாவான அவர் தான் வகுத்த விதுரநீதியைக் கூறி அவர்களை நெறிப்படுத்தி வந்தார்.

விதுரர் சிறந்த வில்வித்தை வீரர். சிறந்த விஷ்ணு பக்தரான விதுரருக்கு விஷ்ணு கோவர்த்தன் என்ற வில்லைப் பரிசாகக் கொடுத்தார். அந்த வில் அர்ஜுனனின் காண்டீபம் என்னும் வில்லை விட வலிமை வாய்ந்தது. அதற்கு இணையான சக்தி கொண்ட வில் எதுவுமே கிடையாது.  விதுரர் நேர்மை தவறாதவர். வாக்கும் தவறமாட்டார். பொறுமையும் பண்பும் மிக்கவர்.

பாண்டுவின் புத்திரர்களான பாண்டவர்களுக்கு அரசாளும் உரிமையை மறுத்தார்கள் திருதராஷ்டிரனும் கௌரவர்களும். அவர்களுக்காகப் பரிந்து பேசிவந்தார் விதுரர்.

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

ஸ்யமந்தகமணி படுத்திய பாடு. தினமலர். சிறுவர்மலர் - 32.


ஸ்யமந்தகமணி படுத்திய பாடு.

ண்டவனைக் கூட அபவாதத்தில் ஆழ்த்திய பொருள் என்றால் அது ஸ்யமந்தகமணி என்றொரு ரத்னஹாரம்தான். அதற்கு என்ன சிறப்பு அது என்ன அபவாதத்தைக் கொண்டு வந்தது என்று பார்ப்போம் குழந்தைகளே.

துவாரகையில் சத்ராஜித் என்பவர் வசித்துவந்தார். அவருடைய பக்தியைப் பாராட்டி சூரியபகவான் கொடுத்ததுதான் ஸ்யமந்தகமணி என்றொரு ஹாரம். அது சாதாரண ஹாரம் மட்டுமல்ல. அது இருக்கும் இடம் மங்கலம் பொங்கும். ஆரோக்கியம் அளிக்கும் அது மட்டுமல்ல தினமும் எட்டு தோலா தங்கமும் கொடுக்கும்.

இப்பிடியாகப்பட்ட பொருள் ஒரு சாதாரண மனிதனிடம் இருப்பதை விட துவாரகையின் ராஜாவான உக்ரசேனரிடம் இருந்தால் தேச நலனுக்கும் நாட்டு மக்களின் செழிப்புக்கும் உதவுமே என்று கிருஷ்ணர் நினைத்தார். அதனால் அதை ராஜா உக்ரசேனருக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் சத்ராஜித்துக்கு அதைக் கொடுக்க விருப்பம் இல்லை. அந்த ஸ்யமந்தகமணியை அணிந்துகொண்டு அவனது தம்பி ப்ரசேனன் என்பவன் வேட்டைக்குச் சென்றான். அங்கு அவன் மிருகங்களைத் துன்புறுத்தியதால் ஸ்யமந்தகமணியின் புனிதம் குறைந்தது. ஒரு சிங்கம் அவனை வேட்டையாடி அந்த மணியை வாயில் கவ்விச் சென்றது.
Related Posts Plugin for WordPress, Blogger...