எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மஹாபாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஹாபாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஜனவரி, 2023

வில்லுக்கு விஜயன் என்ற பெயர் வந்தது எப்படி?

 வில்லுக்கு விஜயன் என்ற பெயர் வந்தது எப்படி?


பரசு என்ற ஆயுதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் நமக்குப் பரசுராமர் நினைவில் வருவார்.  வேலைப் பார்த்தால் நமக்கு வேலாயுதனான அழகன் முருகன் ஞாபகம் வருவார். அதேபோல் எத்தனையோ ராஜாதி ராஜாக்கள் வீராதி வீரர்கள் சூரர்கள் வில் சுமந்து நிற்பதைப் பார்த்திருந்தாலும் நமக்கு அர்ஜுனன் மட்டுமே நினைவில் நிற்பது ஏன்? அதிலும் வில்லுக்கு விஜயன் என்ற பெயர் அவனுக்கு வந்தது எப்படி என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.

அஸ்தினாபுர அரண்மனையில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கிருபாசாரியாரும் துரோணாசாரியாரும் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது மன்னர் திருதராஷ்டிரன் முன்னிலையில் இளவரசர்களுக்கான போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அப்படிப் போட்டிகள் நடைபெறும்போதெல்லாம் மல்யுத்தத்தில் பீமனும் வில் யுத்தத்தில் விஜயனும் ஜெயிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். இதைக்கண்டு கௌரவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் தந்தையான மன்னன் திருதராஷ்டிரனுக்குமே பொறாமை கொழுந்துவிட்டு எரிந்தது.


ஒருமுறை இவ்வாறு விஜயன் விற்போட்டிகளில் ஜெயித்தபோது திருதராஷ்டிரன் துரோணரைத் தனியே அழைத்துக் கேட்டே விட்டார். “ அனைத்து இளவரசர்களுக்கும் ஒன்றாகத்தானே அஸ்திர சஸ்திர பயிற்சி அளிக்கிறீர்கள். ஆனால் விஜயன் மட்டுமே வில் வித்தையில் சிறந்து விளங்குவது எப்படி?

வியாழன், 22 டிசம்பர், 2022

கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம்

 கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம்


ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேரும்போது அதைச் சமாளிக்கமுடியாவிட்டால் யாருக்குமே கோபம் வருவது இயல்பு. அப்படி ஒருவருக்குக் கோபம் அதிகரிக்க அதிகரிக்கப் பிரச்சனைகளும் பூதாகாரமாகும். அதேபோல் சிந்தித்துக் கையாண்டால் அதே பிரச்சனைகளே புழுப்போலச் சிறுத்துப் போய்விடும் என்பதற்கு உதாரணமாக கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

ஒருமுறை கிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் ஒரு கானகத்தைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. மாலை முடிந்து இரவும் தொடங்கியது. சில்வண்டுகளின் கீச் கீச் சத்தங்களும் விஷப் பூச்சிகளின் ரீங்காரங்களும் கொடிய வனவிலங்குகளின் உறுமல்களும் பிளிறல்களும் வனத்தை அதிரடித்துக் கொண்டிருந்தன.

நாலாபக்கமும் பார்த்தபடி சென்ற அவர்கள் இரவு சூழ்ந்ததும் அக்கானகத்திலேயே உறங்கி மறுநாள் காலை பயணத்தைத் தொடர நினைத்தனர். இத்தனை விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் மத்தியில் மூவரும் எப்படி நிம்மதியாக உறங்க முடியும். அதனால் மூன்று ஜாமங்களிலும் மூவரில் ஒருவர் விழித்திருந்து மற்ற இருவரைக் காவல் காக்க முடிவு செய்தனர்.

திங்கள், 19 டிசம்பர், 2022

பீஷ்மர் பிறந்த கதை

பீஷ்மர் பிறந்த கதை


மகாபாரதத்தில் புரூ வம்சத்தில் மூத்த புதல்வனாய்ப் பிறந்து தன் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை இளவரசர்கள் வரை வளர்த்தெடுத்த பீஷ்மர் பிறந்த கதை மட்டுமல்ல. அவர் பிழைத்து வாழ்ந்த கதையும் வித்யாசமானது. அது என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள் குழந்தைகளே.

மன்னன் பிரதிபனுக்கு இரு மகன்கள். மூத்தவன் தேவபிக்கு உடற்குறை இருந்ததால் அவனுக்கு இளையவனான சந்தனு முடிசூட்டப்பட்டான். அவனுக்கு முடி சூட்டியதும் மன்னன் பிரதிபன் துறவறம் மேற்கொண்டு காட்டிற்குச் சென்றார். அங்கே ஒரு முறை தன் தந்தையைக் காணச் சென்ற சந்தனு கங்கையை எதிர்பாராத விதமாகச் சந்தித்தார்.

பார்த்ததுமே அவள் ரூபசௌந்தர்யத்தில் மயங்கித் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். ஆனால் கங்கையோ ஒரு நிபந்தனை விதித்தாள். திருமணத்துக்குப் பின் நான் என்ன செய்தாலும் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கவோ தடுக்கவோ கூடாது. இந்த நிபந்தனையை மீறினால் உங்களை விட்டுப் பிரிந்து போய் விடுவேன்” என எச்சரித்தாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...