எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

அடைப்பு..

அவென்யூவின்
நாற்சதுரப் பள்ளங்களில்
அடைப்பெடுக்க
ஆள் தேடி..

இறங்கிக் கறுப்பாகி.,
இடுக்கெல்லாம் குத்தி..
மயிற்கற்றையும்.,
பஞ்சுக் குப்பையும்.,
அள்ளிப் போட்டவனுக்கு...,

திங்கள், 27 டிசம்பர், 2010

ஆஸ்டியோ போரோசிஸ்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் வேல்ராணி..



நம் நாட்டில் ஆறு கோடிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நோய் ஆஸ்டியோ போரோசிஸ்.. காரணமே இல்லாமல் கை முறிஞ்சிருக்கு என கட்டுப் போட்டிருக்கும் என் தோழி சொன்னார்.. காரணம் எலும்புத்தேய்மானம்.. ஆஸ்டியோ என்றால் க்ரீக்கில் எலும்பு. போரோஸ் என்றால் ஓட்டை உண்டாவது. ஒரு வீட்டின் மரக்கதவுகள்., நிலைச்சட்டம் இவற்றில் இருக்கும் மரம் உள்ளுக்குள்ளே கரையான் அரித்து உளுத்துப்போய் விட்டால் வலுவிழந்து விடுவது போல் மனித உடலில் எலும்புகள் கால்சியம் குறைபாட்டால் அடர்த்தி குறைந்து விடுவதால் முறிந்துவிடுவதுதான் எலும்புத்தேய்மானம் என்ற ஆஸ்டியோ போரோசிஸ்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

மன்மதன் அம்பு .. எனது பார்வையில்..

HONESTY BECOMES LUXURY.. ஆம் பொய்யர்கள் நிறைந்த உலகில் உண்மை விலை உயர்ந்ததாகிவிட்டது.. இதுதான் மெசேஜ்.. இரண்டு உண்மையாளர்கள்., (ஒத்த குணமுடையவர்கள்.,) மட்டுமே ஒத்துப் போக முடியும்.. பொய்யோடு பொய்யும்., மெய்யோடு மெய்யும்.

சனி, 25 டிசம்பர், 2010

சும்மா பறத்தலே சுகம்..

பறத்தலுக்காய்தானே சிறகுகள்...
கூடல் இன்பத்துக்காய்
அலகுகள் மருவி..

பசித்தாலும் புல் தின்னாப் புலி
புனுகுப் பூனை மருவுமோ..
வைப்பரில் ஈசல் அல்ல..

கவரி மானோ ., அன்றிலோ
யாத்ராவின் புத்தகத் தலைப்பே
செல்ல விளிப்பாய்..

செவ்வாய், 21 டிசம்பர், 2010

தேனீர் தாகம்.. முதல் பரமபதப் பாம்புகள் வரை.. எட்டு கவிதைகள்..

1. தேனீர் தாகம்..
**************************

சுப்ரபாதத்தோடு
கணவருடன் ஆறுமணிக்கு.,
பையனுடன் எட்டு மணிக்கு.,
பலகாரத்துக்குப் பின்
பத்துமணிக்கு.,

வேலைக்காரப் பெண்ணுடன்
பன்னிரெண்டு மணிக்கு.,
மாலை நாலுக்கும்.,
பின் ஆறுக்கும் கூட..

திங்கள், 20 டிசம்பர், 2010

புதிய இதயம்.. புதிய ஜீவிதம்..(3) உமாஹெப்சிபா...

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி .. இப்படித்தான் இருந்தார் உமா., நான் பார்க்கும் போது. ஆனால் அவருக்குள் ஒரு சிவகங்கைக் குளத்து துர்க்கையும் இருப்பது பின்தான் தெரிந்தது. வெளியே போராடி ஜெயித்தவர்கள் அநேகம். இவர் வெளியில் மட்டுமல்ல.. தன்னுள்ளும் போராடி ஜெயித்த மஹிஷாசுரமர்த்தினி..

வியாழன், 16 டிசம்பர், 2010

ருக்மணி அம்மாவின் புத்தகங்கள்.. ஒரு பார்வை..



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

அடுத்த வாரம் உயிர்மையில் வெளிவரப்போகும் கவிதைத் தொகுப்பிற்காய் என் அன்பிற்குரிய நண்பன் நேசனுக்கு இந்த இடுகை பரிசு.. வாழ்க மக்கா.. வெற்றி நிச்சயம்..

டிஸ்கி:- இது எனது 300 வது இடுகை.. எல்லாம் உங்க ஆதரவும் ஆசீர்வாதமும் மக்காஸ்..:))

செவ்வாய், 14 டிசம்பர், 2010

கருவேலம்., பெட்டகம்., எழுத்து வாகனம்., எச்சப்புள்ளிகள்., தினசரி...

1. கருவேலம்:-

********************

ஈரப்பதம் உறிஞ்சி
உள்துப்பும் இயந்திரங்கள்
சமையற்கட்டிலும்.,
சயனத்திட்டிலும்.,
வரவேற்பறையிலும்.,
வாகனத்திலும்..

வெந்நீர் வளையங்கள்
பொங்கித்தரும்
தொட்டில் ஜலக்ரீடை..

சனி, 11 டிசம்பர், 2010

டிஸ்கவரி புக் பேலஸும்.. நானும்..

அமெரிக்காவை கண்டு பிடித்தவர் கொலம்பஸ் என்றால் என்னைக் கண்டு பிடித்தது டிஸ்கவரி புக் பேலஸ் எனலாம்.. என் முதல் கட்டுரை புத்தக வெளியீடு பற்றி வந்தது.. மிக நீண்ட நாட்களுக்குப் பின் அதிகமாக எழுதப் பழகினேன் அதிலிருந்து எனலாம்.. இன்று சில கட்டுரைகள் எழுத அதுவே முதல் முயற்சி..

ஒரு ஜர்னலிஸ்டாக ஆகவேண்டும் என்ற ஆவல் இருந்தது.. விகடன் மாணவப் பத்ரிக்கையாளர் திட்டம் முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது கல்லூரியில் மூன்றாமாண்டு வேதியல் படித்துக் கொண்டிருந்தேன்.. இரண்டாமாண்டு மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்..என்றிருந்தது.. என்ன செய்வது.. ஓரளவு லேடீஸ் ஸ்பெஷல் மூலம் அந்த எண்ணம் நிறைவேறியது எனலாம்.. இன்னும் உழைத்தால்., இன்னும் முயன்றால் இன்னும் அதிக உயரங்களைத் தொடமுடியும் என்ற நம்பிக்கையை விளைத்தது.., இந்த மாதிரி கட்டுரை ., கவிதை., கதை எழுதும் முயற்சிகளே..

வியாழன், 9 டிசம்பர், 2010

கவிதை என்பது என்ன..?

”I THINK POETRY COMES TO U WHEN U R RESTLESS., UNEASY ., DEPRESSED..... ” -- DHARMENDRA.. --IN HINDU ..

IS IT SO ALWAYS..DHARAM.. ??

கவிதை என்பது இருப்பு கொள்ளாத நிலையிலோ., சரியில்லாத சூழலிலோ., மனச்சோர்வுற்ற போதோ வருவதுதானா.. தரம் தியோல்..

ஏன் காதல்., இன்பம் ., அமைதி., போர்., எல்லாம் இல்லையா..

புதன், 8 டிசம்பர், 2010

டிசம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் புவனேஸ்வரி ராமனாதன்., உமா ஹெப்சிபா., டாக்டர் வேல்ராணி. ருக்மணி அம்மா...

டிசம்பர் மாதம் மழை., சங்கீதக் கச்சேரி மாதிரி களை கட்டி இருக்கு., நம்ம லேடீஸ் ஸ்பெஷலும்.. பிள்ளையார் நோன்பு., ராப்பத்து., பகல் பத்து., வைகுண்ட ஏகாதசி., மொஹரம்., கிறிஸ்த்மஸ்., புத்தாண்டுன்னு அடுத்தடுத்து வருது.. நம்ம ப்லாகர்களோட படைப்புகள் மாதிரி..

திங்கள், 6 டிசம்பர், 2010

தீட்டு., மழை., கல்யாண முருங்கை., நசிகேதன் அக்னி..

தீட்டு:-
***********
பாத்ரூம் போனால்
காவலாய் சத்தகம்..
படுக்கை பக்கம்
தடுப்பாய் உலக்கை..

தலைக்குக் குளித்தாலும்
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு., தனி டம்ளர்..

தனி நாடு கேக்காத
எனக்குத் தனியிடம்..
துண்டு நிலம்...
தோல் தலையணை..

சனி, 4 டிசம்பர், 2010

கடவுளும்., நானும்..

நெல்லிமரத்துப் பிள்ளையாரப்பா.,பிள்ளையார்பட்டி பிள்ளையாரப்பா., குன்றக்குடி முருகா., ஊனையூர் கருப்பா., மாத்தூர் மகிழமரத்தடி முனிஸ்வரா.. ............. என்ன பார்க்குறீங்க.. எல்லா நல்ல கார்யம் ஆரம்பிக்கும் போதும் தெய்வத்துணையை நாடுவது நம்ம பழக்கமாச்சே..

நம்ம தமிழ் உதயமும்., தங்கமணியும் என்னை லாங் லாங் அகோ., சோ லாங் அகோ.... ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.. அதை முடிச்சே ஆகணும் .. ஏன்னா நம்ம ஸாதிகா அடுத்த கானாமிர்தம் பதிவுக்கு அழைச்சிட்டாங்க.. இப்ப அசைன்மெண்ட்ஸ் அதிகமா போச்சா.. முடிக்காட்டி டிஸொபிடியண்ட் ஆகிருவோம்.. சோ சுறுசுறுப்பு..

புதன், 1 டிசம்பர், 2010

தேனமுதபாஷிணி..


உன் குரல் கேட்டதில்லை நான்.. எழுத்திலேயே எல்லாம்.. !!! மிக மென்மையானதாகவும்., சமயங்களில் வலிமையானதாகவும் இருக்கும்..

வார்த்தைகளின் சாகசக்காரி நீ.. சூத்திரதாரி நீ ...உன் வார்த்தைச்சரங்களில் தோல்பாவையாய் ஆடிக்கொண்டிருக்கிறேன் நான் நிகழ்வேதும் அறியாமல்.. அன்பால் நீ ஆட்டுவிப்பதும் பின் காணாமல் போவதுமாய் கண்ணாமுச்சியில்.. ஜென்மம் தோறுமோ., யுகங்கள் தோறுமோ ..

விட்டுப் போனவை.., வெறுப்பு., கனவு...


1. விட்டுப் போனவை:-
**************************
ஒரு கோப்பைக்குள் பாதரசமாய்
ஏந்தி இருந்தாய் உன் கனவை..
காலம் தீர்ந்த அவகாசத்தில்
கையளித்துச் சென்றாய் என்னிடம் ..
குழியாடிக் குவியாடிக்
கண்களாடிக் கலந்தேன்..
நகரும் வெள்ளிக் கண்ணாடியில்..
அதிகமசைந்து
தங்கம் துளைந்தாடியது அது..
Related Posts Plugin for WordPress, Blogger...