எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 ஜூன், 2011

கவி மதியும் கவிமதியும்...





கவி மதியும் கவிமதியும்.:-
****************************************
இசுலாமிய நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் எழுத்துக்களில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள் ., வாசிக்கப்படவேண்டியவர்கள் என என்னிடம் ஒரு லிஸ்ட் உண்டு.. மிக அருமையான., நேர்த்தியான பகிர்வுகளுக்குச் சொந்தக்காரர்கள். கவிமதி., ஜமாலன்., ஆபிதீன்., ஆசாத்ஜி. ஆசிஃப் மீரான். இதில் ஸ்டார்ஜனும்., அக்பரும்., இப்படிக்கு நிஜாம்., ஜமால்., நவாஸ்., ஜெய்லானியும் உண்டு.

புதன், 22 ஜூன், 2011

மனிதராய்த் தொடங்கினோம் வாழ்வை..

மனிதராய்த் தொடங்கினோம் வாழ்வை..:-
=====================================
எல்லோரும் வைத்திருந்தோம்.,
வசனங்களும்., வாசகங்களும்.,
வேதமொழிகளும் நிரம்பிய
தடித்தடியான புத்தகங்களை..

பின்பற்றினோமோ இல்லையோ..
அவரவர் தோதுக்கு
சொல்லிக் கொண்டோம்.,
இது சிறப்பு அது சிறப்பென்று..

செவ்வாய், 21 ஜூன், 2011

கர்ப்பத்துக்கு முன்னும் செக்கப்...டாக்டர் மாதினி பேட்டி..



தற்காலத்தில் கருத்தரிப்புக்கு முன்னும் டாக்டர்களை கன்சல்ட் செய்யும் ஆலோசனை முறை பின்பற்றப்படவேண்டியுள்ளது.. பொதுவாக கர்ப்பகால பாதுகாப்பு மட்டும்தான் கவனத்தில் கொள்ளப்படும்.. ஆனால் கர்ப்பம் தரிக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய செக்கப்புகள் பற்றி அரசு மருத்துவமனையில் பணி செய்து ஓய்வுபெற்ற டாக்டர் மாதினி .. கைனகாலஜிஸ்ட்..( தற்போதும் மந்தைவெளியில் ப்ராக்டீஸ் செய்து வருகிறார்) அவர்களிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக கர்ப்பத்துக்கு முன்னும் ., கர்ப்பகாலத்தின் போதும் மேற்கொள்ள வேண்டிய செக்கப்புக்கள்., பாதுகாப்பு முறைகள்., மருத்துவம்., உணவு., பயிற்சிகள் பற்றி விழிப்புணர்வுத்தகவல்கள் தந்துதவுமாறு கேட்டேன்.. அவர் கூறிய தகவல்களைத் தொகுத்துள்ளேன்..

திங்கள், 20 ஜூன், 2011

தாயுமானவர் ஓம் ப்ரகாஷ்..

ஒருநாள் ஒரு நண்பர் மற்றும் தங்கை வீட்டில் விருந்து. விருந்தென்றால் செம விருந்து.. விருந்தளிக்கவே பிறந்தவர்கள் நண்பரும் தங்கையும். கனிவான புன்னகையோடு அவர்களிடம் உரையாடவே இன்பமாய் இருக்கும். அப்போது அவர்கள் வீட்டில் தங்கைக்கு உதவியாக ஒரு ஆண் வேலை செய்து கொண்டிருந்தார். எல்லார் வீட்டிலும் இருப்பது போன்ற வேலைக்காரர் தோற்றமும் இல்லை. நன்கு நீட்டாக உடை உடுத்தி 5 ஸ்டார் ஹோட்டல் ஊழியர் போல பளிச்சென்று இருந்தார். நண்பர் வீட்டின் விஷேஷம் என்னவென்றால் கணவன் மனைவி மட்டுமல்ல . அவர்களுக்கு பணிபுரிபவரும் தங்களில் ஒருவராக நடத்தப்படுவதே என்னைக் கவர்ந்தது.

சனி, 18 ஜூன், 2011

வோட்டுப் போடும் வேள்வி..

வோட்டுப்போடும் வேள்வி:-
***************************************

போட்ட ஓட்டுக்கு
அவிர்ப்பாகம் வாங்கிய
கட்சிதேவதைகள்
அட்வான்ஸ்டு வரமாய்..

மக்கள்...

மக்கள்..
***************
எத்தனை முறை ஏமாந்தாலும்
விலகி விடப் போவதில்லை

வெள்ளி, 17 ஜூன், 2011

சத்தம்...

சத்தம்..:-
*********************

ஒரு பழைய மிதிவண்டி
அல்லது ஒரு தையல் எந்திரம்
உண்டுபண்ணும் சத்தம்..

ஞாபகப் படுத்துகிறது
பால்யத்தில் பள்ளியில்
கொண்டு விட்ட அப்பாவையும்

வியாழன், 16 ஜூன், 2011

சாயம்...

சாயம்..
***************
கட்சியின் பெயராலோ
சாதி., இனம்., மொழி
மதத்தின் பெயராலோ

கறுப்போ., சிவப்போ.,
காவியோ., பச்சையோ
பூசப்படும் உங்கள் மீது..

குன்றிப்போய் விடாமல்
ஹோலியாய்க் கொண்டாடுங்கள்..
வர்ணங்கள் நிறைந்தது வாழ்வு..

புதன், 15 ஜூன், 2011

மாயை....

மாயை.
**************

எப்போதிலிருந்து என
தெரியவில்லை..
கற்பெனப்படுவது
பெண் உடல் மட்டும்
சம்பந்தப்பட்டதாக
நிறுவப்பட்டது என்பது

செவ்வாய், 14 ஜூன், 2011

ஆத்திகம்..? நாத்திகம்..?




ஆத்திகம்.. ? நாத்திகம்..?
****************************************
கோபுரங்களைப் பார்த்தால் மட்டும்
கன்னத்தில் போட்டுக் கொள்வது.

மார்கழி செங்காவி., சாணி., பூசணிப்பூவுக்கு
மாற்றாய் டைல்ஸில் ஸ்டிக்கர் கோலம்

வியாழன், 9 ஜூன், 2011

கல்கியில் என் மெழுகின் முணுமுணுப்பு...

மெழுகின் முணுமுணுப்பு..:-
**************************************
சட்டென்று மின்சாரம்
செல்லும் வேளைகளில்
ஒளியூட்டப்படுகிறது
ஒற்றை மெழுகுவர்த்தி..

புதன், 8 ஜூன், 2011

ஜூன் லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் லேடி(டீஸ்)...ஜெயாம்மா., ஈழவாணி., லூர்துராணி மற்றும் பெண்பதிவர்கள்

ஜூன் மாத லேடீஸ் ஸ்பெஷல் அட்டைப்படத்தில் ஜெ அம்மா அவர்களின் அழகான புகைப்படம். இந்த ஸ்பெஷல் லேடிக்கு பெண் வலைப்பதிவர்கள் சார்பா வாழ்த்துக்கள்மா. மக்களின் தேவைகளை நிறைவேற்றி தன்னிறைவு அடைய செய்யும் உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையட்டும்.

செவ்வாய், 7 ஜூன், 2011

வேலிக் கொடிகள்..



வேலிக் கொடிகள்
************************
வளர்ந்து முதிர்ந்தாலும்
பனியின் இழைகளாய்
வெறுமை எதையும்
பிரதிபலிப்பதில்லை..
பிரதிநிதித்துவமாயும்..

திங்கள், 6 ஜூன், 2011

நிஜம்..

நிஜம்..
*************
பதின்மத்திலேயே
நின்றுவிட்டது என் வயது
அதன் பிறகு
நான் வளரவேயில்லை
வளர விரும்பவும் இல்லை

வியாழன், 2 ஜூன், 2011

குண்டூஸ் ஃபார் எவர்.. இவள் புதியவளில்..




கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா .. இல்ல ஓடிப் போயி கல்யாணந்தான் கட்டிக்கிடலாமான்னு என் கணவர் பாட முடியாது.. காரணம் ஏற்கனவே அவர் என்னை கல்யாணம் கட்டிக்கிட்டதுனால இல்ல.. என்னால ஓடி வர முடியாது .. அதுதான் காரணம்..

புதன், 1 ஜூன், 2011

ஃபாத்திமாபாபு பேட்டி..கான்வெண்டில் படிக்கும் பெண்களுக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வருவதில்லை..

சந்தனக் குரல் கேள்விப்பட்டிருப்பீர்கள் .. சந்தனம்., ஜவ்வாது ., பன்னீர் எல்லாம் கலந்து மணக்கும் உன்னதமான குரலுக்குச் சொந்தக்காரர் கிட்டத்தட்ட 24 வருடங்களாக தொலைக்காட்சி செய்திகள்., நாடகங்கள்., தொகுப்புகள்., திரைப்படங்கள் என எல்லாவற்றிலும் முத்திரையைப் பதிக்கும் மல்கோவா மாமி ..பிரபல செய்தி வாசிப்பாளர் . ஃபாத்திமா பாபுவை நம் பத்ரிக்கைக்காக தொடர்பு கொண்டோம்..

Related Posts Plugin for WordPress, Blogger...