எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

2013 சில சிந்தனைகள்.

கொஞ்சம் குழப்பம்.. கொஞ்சம் நெகிழ்ச்சி ரெண்டும் சேர்த்த கலவை நாம்.

////எல்லா நாளையும் போலத்தான் இந்த நாளும்..

ஆனாலும் நாம் அனைவரும் ஏதோ ஒரு நெகிழ்வோடு இருக்கிறோம்..

ஒரு வருடத்தை வழியனுப்பும் பிரிவுத் துயர்..

அனைவரையும் மன்னிக்கிறோம்..

அனைத்தையும் அரவணைத்துச் செல்ல விழைகிறோம்.

எண்களின் மாஜிக்தான் இது. டீன்களின் குழப்பம் போல.. 13 லிருந்து 14 க்கு.. ////



/////உறவுகள் மட்டுமல்ல.. நட்புகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்திய வருடம் 2013. அனைவரையும் ஒரு கூட்டில் இணைக்கச் செய்த வருடம்..

3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்..


3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்..

இந்த இடுகை என்னுடைய ”துபாய் ஷார்ஜா அபுதாபி” என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 35 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். 

பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  

அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.


திங்கள், 30 டிசம்பர், 2013

சனி, 28 டிசம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், ரவிநாக் -- 4 கேள்விகள். நச் பதில்கள்.


முக நூல் நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர் ரவி நாக். நாகராஜ ரவி என்ற பெயரை முக நூலில் சுருக்கி வைத்திருக்கிறார். சயின்சிலிருந்து சாப்பாடு வரை விலாவாரியாகவும் விலா நோகவும் சிரிக்கவைக்குமளவு எழுதுபவர். 

செவ்வாய், 24 டிசம்பர், 2013

முகுளம்.

முகுளம்.
****************
மடிப்புகள் கொண்ட
முகுளமாய்
பசியரேகைப்
பள்ளங்களோடு குளம்.

திங்கள், 23 டிசம்பர், 2013

அகநாழிகையில் அன்னபட்சி.


அகநாழிகையுடனான அறிமுகம் எனக்கு டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பட்டது. டிசம்பர் 2009 இல் வலைத்தளம் ஆரம்பித்து 6 மாதங்களில் நான் கலந்து கொண்ட முதல் புத்தக வெளியீடு அதுதான்.

சனி, 21 டிசம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், ரவி தங்கதுரை வீட்டில் சக்தியா, சிவமா .. யார் ஆட்சி.

முகநூலில் ஜாலியாக நிலைத்தகவல்களைப் பகிர்வது சகோ ரவி தங்கதுரையின் வழக்கம். ஒரு புகைப்படமும் அதை ஒட்டிய கவிதை அல்லது நகைச்சுவையான பகிர்வு நம்மைப் புன்னகைக்க வைக்கும்.. பெண்களை அதிக அளவில் கிண்டல் செய்யும் பகிர்வுகள் அவருடையவை. அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.

////உங்க வீட்ல சக்தியா சிவமா. யார் ஆட்சி. ?////

என்னோட வீட்ல சக்தியா சிவமா. யார் ஆட்சி. ?

வியாழன், 19 டிசம்பர், 2013

கருணை :-

கருணை:-
****************
காய்கறிகளைக் கழுவும்
வீட்டுக்காரி கையிலிருந்து
விடுபட்டு செம்மண்ணில்
வீழ்கிறது பொடிக்கருணை.

புதன், 18 டிசம்பர், 2013

பாரதி பணிச்செல்வர் விருதுக்கு வாழ்த்துகள்.


லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜா ராகவன் மேடம், பத்ரிக்கைத் துறையில் சிலகாலம் என்னைப் பணியாற்ற அழைத்த பேரன்புக்கு உரியவர். அவரால்தான் நான் சாதனை அரசிகள் புத்தகம் கொண்டுவர முடிந்தது. அவரும் ஒரு சாதனை அரசிதான். அவரைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். 

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மின்சாரக் கண்ணா. (சிறுகதை) தினமலரில்.

ஒரு  சாயங்கால நேரம். ”மின்சாரப் பூவே..” எனப் பாடிக்கொண்டிருந்தார் ரஜனிகாந்த் தொலைக்காட்சியில். ”மின்சாரக் கண்ணா” என்றபடி ரம்யா கிருஷ்ணன் ஒய்யாரமாக ஆடியபடி வர..  அடுத்து சீரியல் போடுவதற்குள் கிரைண்டரில் போட்ட மாவை வழிக்க எழுந்தாள்  அகல்யா.

கூட்டுக் குடும்பத்தில் எல்லாரும் சீரியல் விரும்பிகளாக இருப்பதால் பிரச்சனை இல்லை. மற்றவர்கள் சீரியல் பார்க்கும் நேரத்திலாவது கணவரோடு தனிமையில் பேச டைம் கிடைக்கும் என்பதால் அவள் சீரியல்களை வரவேற்றாள் எனலாம். 

திங்கள், 16 டிசம்பர், 2013

மகளிர் மன்றங்களின் தேவைகளும், சேவைகளும். :-

மகளிர் மன்றங்களின் தேவைகளும், சேவைகளும். :-

திருப்பூரில் 20 வருடங்களாகக் கல்விச்சேவையில் ஈடுபட்டிருக்கும் ார்க் கலை அறிவியல் கல்லூரியின் மகளிர் மன்றத்தைத் துவக்கி வைக்க அக்கல்லூரியின் முதல்வரும் முகநூல் நண்பருமான திருமாறன் ஜெயராமன் அழைத்திருந்தார்.

அரசாங்கத்திலேயே இன்னும் 33 % இடங்களை நாம் பூர்த்தி செய்யவில்லை. ஆனால் பார்க் கல்லூரியில் சரிபாதியாக அங்கம் வகிப்பது அதை நிறுவிய ரவி அவர்களின் மனைவியும் மகளும். PARK  கல்லூரி  PREMA , ANUSHA, RAVI, KARTHIK, ஆகியோரின் பெயரில் முதல் எழுத்தைக் கொண்டு அமைந்துள்ளது. அதிலும் மனைவி மகளுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பார்க் கல்லூரிகளுடனான தொடர்பு எனக்கு 8 வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. என் மகன் அங்கே பொறியியல் படித்தார். மேலும் அதன் தாளாளர் அனுஷா என் முகநூல் தோழி . அந்தக் கல்லூரிகளின் ஹாஸ்பிட்டாலிட்டி குறிப்பிடத்தக்கது.  

சனி, 14 டிசம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், ஸாதிகா ஹசானாவின் அம்மா அருமை அம்மா.

வலை உலகில் என் அன்புத் தோழிகளில் ஒருவர் ஸாதிகா. எல்லாப் புகழையும் இறைவனுக்கே அர்ப்பணித்தவர். அவருக்கு அம்மா மேல் அபரிமித ப்ரியம். முன்பு லேடீஸ் ஸ்பெஷலில் ப்லாகர் கட்டுரைக்காக கேட்ட போதும் அம்மா பற்றிய பகிர்வு ஒன்றையும் அனுப்பினார். நெய் மீனை அவர் அம்மா ஊட்டி விடுவதைப் படித்த போது சுவையாய் வறுத்த மீனைத் தின்ற அனுபவம் ஏற்பட்டது. அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.

////// உங்கள் அம்மா உங்களை திட்டியது உண்டா?///

செவ்வாய், 10 டிசம்பர், 2013

படிகளும் புள்ளிகளும்.

உச்சியைப் பார்த்ததும்
திகைப்பாய்த்தானிருந்தது.
கண்குவித்து
ஒவ்வொரு படியாய்
நகரத் துவங்கியதும்
அடுத்த படியே தேடலானது.
ஒரு சில படிகளில்
ஓய்ந்து அமர்வதும்

சனி, 7 டிசம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். திருமதி நவாஸ். கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு.

வலை உலகில் அடியெடுத்த வைத்த 2009 ஆம் ஆண்டு முகநூலில் தாக்கம் அவ்வளவாக இல்லை . அப்போது எல்லாம் வலை உலகம் மட்டுமே முழு உலகமும். 

புதன், 4 டிசம்பர், 2013

சுற்றுச்சூழல் சீர்கேடும் தீர்வுகளும்:-

சுற்றுச்சூழல் சீர்கேடும் தீர்வுகளும் :-
*******************************************

மரங்கள் எல்லாம் மாளிகைக்கு
உத்தரமாய் ஆச்சு..
மிஞ்சிப்போன கிளைகள் எல்லாம்
மரக்கரியாய் ஆச்சு..
மண்ணும்  தூர்ந்து போச்சு.

ஆத்து மணலை அள்ளி அள்ளிக்
கொள்ளிடமும் போச்சு.
குடியிருப்பா ஆச்சு.
வெள்ளம் வந்தா ஆள் விழுங்கும்
கொல்லிடமும் ஆச்சு.

சனி, 30 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். சாந்தி மாரியப்பன் -- மலைத்தேனும் மாத்தேரனும்.

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி. இந்தப் பாட்டை 700 தரமாவது முணுமுணுத்திருப்பேன். என் பள்ளி நட்பிலிருந்து இன்று வரை நிறைய சாந்திகள் என்னைச் சுற்றி. இந்த சாந்தி அமைதி அதே சமயம் கொஞ்சம் கலகலப்பும் கூட. 

வலை உலக சகோதரிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சகோதரி அமைதிச்சாரல் என்ற சாந்தி மாரியப்பன். அவர் எடுக்கும் புகைப்படங்கள் மட்டுமல்ல. சிறுகதைகளும் சிறப்பானவை. அவர் எழுதும் சமையல் குறிப்புக்கள் ருசிகரமானவை. அவர்கிட்ட சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.

///உங்க கணவரோட போன ஊர்ல மறக்க முடியாத ஊர் எது.? ஏன் ?///

யக்கோவ்.. எதைச்சொல்ல எதை விட . ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு விதத்துல மறக்க முடியாததுதான்னாலும் மாத்தேரன் சம்திங் ஸ்பெஷல்.. நாலஞ்சு இடுகையாவது வர்ற அளவுக்கு எளுதுவேன். அக்கா பாவமாச்சேன்னு சுருக்கிட்டேன். ப்ளாகில் போட்டோ வேண்டாமே ப்ளீஸ்..
அன்புடன், சாந்தி மாரியப்பன்.

வியாழன், 28 நவம்பர், 2013

பாக்யாவின் “ மக்கள் மனசு “ பகுதியில்.


வரும் வார பாக்யா 'மக்கள் மனசு' பகுதிக்கான கேள்வி:
----------------------------------------------------
இந்தியாவில் வாழும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?...

செவ்வாய், 26 நவம்பர், 2013

கருவறைப் புழுக்கம்.

இமை மதகுகள் வடிக்கும் நீர்
கூந்தல் வேர்கள் தழுவிச் செல்லும்.

விழி விதைகள் விழுந்த இடம்
அன்புச் செடியோடு கோபக் களைகளும்..

வாரிச் செல்லும் காற்றில்
வாழ்க்கைக் குப்பைகளும் சுழலும்

திங்கள், 25 நவம்பர், 2013

முத்தம் முத்தத்திற்காக முத்தத்துக்கு மட்டுமே .. இதழில் எழுதிய கவிதைகள் தொகுப்புக்கான அணிந்துரை.


ஆதிமனிதனின் விலாவிலிருந்து செதுக்கப்பட்டவள் பெண். ஆப்பிளைக் கொடுத்து மனிதனுக்குள் காதலை இழைத்தவள் பெண். கர்ப்பத்தில் உதித்து கர்ப்பக்கிரகத்தில் அடைத்தாலும் கர்ப்பம் சுமந்து காத்து ரட்சிப்பவள் பெண். அம்மா, சகோதரி தோழி எனப் பல பரிமாணங்களில் இருந்தாலும் காதலியாகவும் மனைவியாகவும் கொஞ்சியும் கடிந்தும் ஊடல் செய்தும் ஆணைப் பைத்தியமாக்குபவள் பெண்.

சனி, 23 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், ஜீவா நந்தனின் நான் வரைந்த ஓவியமே...


கிட்டத்தட்ட 5 வருடங்களாக என் முகநூல் நண்பர் திரு. ஜீவாநந்தன்.  நகைச்சுவை இவரின் கூடப் பிறந்தது. திரைச்சீலை என்ற இவரது புத்தகத்துக்கு நான் விமர்சனம் எழுதியுள்ளேன்.  

இவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. 

/////நீங்க ரசிச்சு வரைஞ்ச ஓவியம் எது. ?///

செவ்வாய், 19 நவம்பர், 2013

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப் போட்டி.

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப்போட்டிக்கான அறிவிப்பை எனது மாமா லயன் வெங்கட் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள்.

திங்கள், 18 நவம்பர், 2013

பகுத்தறிவுச் சிந்தனையில் குழந்தைகள் பற்றி கருணாகரன்.

புதிய தலைமுறையின் ஆசிரியர் பெ கருணாகரன் எழுதிய “அமேசான் காடுகளும் சகாரா பாலைவனங்களும்” புத்தகம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருதும் , எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் ஜி யூ போப் விருதும் குறிப்பிடத்தக்கது.

சனி, 16 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், பத்மா இளங்கோவின் காதலுக்கு ( பெரியவங்களுக்கு ) மரியாதை.

முகநூலில் சில நட்புக்களில்  கணவன் மனைவி இருவருமே  எனக்கு நல்ல நண்பர்களாக வாய்ப்பதுண்டு.அவர்களில் ஒரு ஜோடிதான் இளங்கோ & பத்மா இவர்கள். இவர்களை இன்னும் சில பத்ரிக்கைகளில் பேட்டி எடுத்தும் போட்டிருக்கேன். என் புத்தக வெளியீட்டுக்கு தம்பதி சமேதரா வந்து வாழ்த்தினாங்க. என் இரண்டாவது புத்தகத்தைப் படிச்சு அதுக்கும் பத்மா அழகா விமர்சனம் செய்ததை இளங்கோ அனுப்பி இருந்தார். எங்கே இருந்தாலும் ஏதோ ஒரு கணம் போன் செய்து இருவரும் நலம் விசாரிப்பாங்க. ஹ்ம்ம் இம்மாதிரி சில நட்புக்கள் கிடைக்க நாமும் தவம் செய்திருக்கிறோம்தான். அவங்ககிட்ட சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஒரு கேள்வி.

 ////உங்க மனைவியை எங்க சந்திச்சீங்க. அந்தத் தருணம் எப்படி இருந்தது. ?/////

வியாழன், 14 நவம்பர், 2013

புஜ்ஜியும் பொம்மைகளும். :-

1. அட்டைப்பெட்டியில் நீ
விளையாடிய பொம்மைகளை
அடுக்குகிறேன்..
நீ எழுந்ததும் உயிர்பெறும்
ஆசையில் காத்திருக்கின்றன அவை..

புதன், 13 நவம்பர், 2013

பரிசில்கள்.

வெளிநாட்டில் வசிக்கும் முகநூல் நண்பர்கள், சகோதரிகள் , சகோதரர்கள் நம் அன்பாலும் பண்பாலும் எழுத்தாலும் கவரப்பட்டு சந்திக்க அனுப்பிய பரிசுகள் மற்றும் விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும்போது அளிக்கப்பட்ட பரிசுகள் வீட்டில் நிரம்பிக் கிடக்கின்றன அவர்களின் அன்பைப்போல.

அவற்றில் சில இங்கே.

அமீரகம் சென்றிருந்தபோது என் அன்பு சகோ எழுத்தாளர் கவிமதி இந்தக் குவளையையும் ஒரு நகைப்பெட்டியையும் பரிசளித்தார்.

செவ்வாய், 12 நவம்பர், 2013

புதிய தலைமுறையில் பெண்கள் டைரிக்காக.

கல்லூரியில் படிக்கும்போது  எடுத்த பாடம் வேதியலாக இருந்தாலும் எனக்குப் பிடித்த பாடம் தமிழ்தான். தமிழம்மா அனைவருமே என் பாசத்திற்குரியவர்கள். ஃபாத்திமா மிஸ், பாலாம்பா மிஸ் ஆகியோருடன் நான் இன்றும் அதிகம் நேசிப்பது என்னுடைய சுசீலாம்மாவையே.

சனி, 2 நவம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். சித்ராசாலமனின் வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா..

கொஞ்சம் வெட்டிப் பேச்சு சித்ராசாலமனை வலைப்பதிவர்கள் யாரும் மறக்கவே முடியாது. என் ப்லாகர் தங்கையான இவரைப் பற்றி சித்ராயணம் என்று என் ப்லாகில் எழுதி இருக்கிறேன்.ஒரு காலத்தில் சூப்பர்மேனை விட அதிகமாகப் பறந்து பறந்து பின்னூட்டமிட்டவர். ஏதோ ஒரு அந்நியநாட்டு சதியால் ப்லாக் பக்கமே ரொம்ப வராம இருக்கார். அவரிடம் நம்ம சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.

வியாழன், 31 அக்டோபர், 2013

டைனிங் டேபிள் மேட்டுகளும் டெலிஃபோன் மேட்டுகளும்.

க்ரோஷா வேலைப்பாடுகள் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.

உல்லனிலும், க்ரோஷா ஒயர்களிலும், க்ரோஷா நூலிலும்  செய்யப்படும் இந்த வேலைப்பாடுகள் மிகுந்த அழகானவை.இது கட்டையில் ஆணி அடித்து அதில் உல்லன் நூலைச் சுற்றிக் கோர்த்துச் செய்யப்பட்டது.

புதன், 30 அக்டோபர், 2013

சங்கிலித்தொடர்..:-

 சங்கிலித்தொடர்..:-
*****************************
தாய் தந்தையுடன்
விடுமுறைக்கு உறவு வீடுகளுக்கு
வரும் குழந்தை அடம் பிடிக்கிறது.,
நினைத்ததைச் செய்ய.

அது சொல்பேச்சு கேக்க
கையைப்பிடித்தபடி
தாயோ, தந்தையோ,பின்புயத்தில் 
லேசாய் நிமிண்டுகிறார்கள்.

திங்கள், 28 அக்டோபர், 2013

கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.

கைபேசியும் ,இணையமும், பெற்றோருடன் இணைக்கிறதா.

கண்போன போக்கிலே கால் போகலாமா.. என்றொரு பாட்டு உண்டு. அதில் மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்று ஒரு வார்த்தை வரும். இன்று மனம் போன போக்கில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மேலும் பிள்ளைகளையும் வளர்த்துகிறார்கள்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

ராகுல்.. ஒரு நாயகன் உதயமாகிறான்.


/////ஹாய்,எனக்கு தெரிஞ்ச என் குடும்பத்தில் ஒருவர் அதற்கு மேல சொன்னா என் பையன்..ராகுல் என்பவரை பற்றி ஒரு சிறு அறிமுகம்..

தன்னம்பிக்கை,விடாமுயற்சி,அயராத உழைப்பு வெற்றிக்கான இலக்கை தொட..இந்த வார்த்தைகளை நினைத்தாலே என் மனதில் தோன்றும் முகம் ராகுல் தான்..

சனி, 26 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். டெய்சி எட்வின் டாடி செல்லமா, மம்மி செல்லமா..

டெய்சி எட்வின் இவர் என் முகநூல் செல்லத் தங்கைகளில் ஒருவர். இவர் லண்டன் வானொலியில் ANCHOR AND RJ.  இவரது காதலா காதலா என்ற தலைப்பில் வரும் கவிதைகளும் குறும்பு கொப்பளிக்கும் ஸ்டேடஸ்களும் சோ ஸ்வீட். இவரிடம் நம்ம வலைப்பதிவின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. 

டெய்சி நீங்க அப்பா செல்லமா.. அம்மா செல்லமா. 

வியாழன், 24 அக்டோபர், 2013

அக்கா வனம் புதிய தரிசனத்தில்..

பட்டாம்பூச்சிகளாய்ப்
பறந்து திரிந்தோம்
அக்கா வனத்தில்.

இறக்கைகள் தடவி
காற்றாய்ப் பின் தொடர்ந்து
சிரிப்பாள் அக்காளும்.

அவள் கலகலத்துக்
கொத்துக் கொத்தாய்ச்
சிரிப்பதைப் பூக்கள் என்பார்கள்,

புதன், 23 அக்டோபர், 2013

மஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.

கீழா நெல்லி
மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூறு உட்புகுந்திருக்கிறது என்பதன் அறிகுறியே அது. கணையம், பித்தநீர் நாளம், புற்று, பித்தக் கற்கள், கல்லீரல் அட்டைப் புழுக்கள் , அழற்சி, நீர்க்கட்டிகள் ஆகியனவும் இன்னும் பலவும்  காரணமாகும்.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

எல்லாப் பிறப்பும் புதிய தரிசனத்தில்.

எல்லாப் பிறப்பும்..:-
**************

வாஸ்துவுக்காய்
வைத்திருக்கும் தொட்டியில்
அழகு மீன்கள்
சுவாசிக்கமுடியாமல்
மரிக்கின்றன.

இலைகள் விழுகின்றன என
என் வீட்டு மரத்தின்
கிளைகளைக் கோபமாய்
வெட்டுகிறார்கள்
அண்டை வீட்டார்,

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஒளி காட்டும் வழி.

ஒளி காட்டும் வழி.
********************
 கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்து
கிட்டாதோரையும் களிப்பாக்கிச் செல்வதே
மனிதமெனும் ஒளி காட்டும் வழி.

உயிர் வாழும் நாளெல்லாம் உண்டி கொடுத்து
உயிரற்றபோது உடலுறுப்பைத் தானம் கொடுப்பதே
இன்னொருவர் வாழ்வின் ஒளி காட்டும் வழி.

நேயமிக்க உறவு மட்டுமல்ல
பிரபஞ்சம் முழுமைக்கும் அன்பு செலுத்துவதே
படைத்தவனின் பேரருள் பெறும் ஒளி காட்டும் வழி .

சனி, 19 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். ராமலெக்ஷ்மி ராஜனின் காமிரா காதலும் பள்ளிக்கூட நட்பும்.

பெண் பதிவர்களில் முக்கியமானவர், புகைப்படப் பதிவுகளுக்காக சிறப்பாக அறியப்பட்டவர் என்னுடைய தோழி ராமலெக்ஷ்மி ராஜன். கவிதை, கதை, கட்டுரைகள்ல அசத்தினாலும் இவரோட புகைப்படங்கள் ஒவ்வொண்ணும் கல்லில் வடித்த சிற்பங்கள் மாதிரி. பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருப்பார். இவர்கிட்ட நம்ம குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் கேக்கமுடியாது . அதே சமயம் நம்ம டாபிக்கை தொடவும் வேணும். எனவே இப்பிடி ஒரு கேள்வி கேட்டு பதிலை வாங்கினேன். :)
காமிராவை எப்போலேருந்து காதலிக்க ஆரம்பிச்சீங்க.. இது நடக்கும்னு நினைச்சீங்களா..?


வீட்டில பெரியவங்க பலரும் படமெடுப்பதில் ஆர்வமுள்ளவங்களா இருந்ததால இயல்பாவே எனக்கும் அந்த ஆர்வம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அவங்கல்லாம் எடுத்த படங்களே எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது. +1 படிக்கும் போது யாஷிகா-D-யில் படமெடுக்க ஆரம்பிச்சேன். 120 ரோல் ஃப்லிமில் 12 படமே எடுக்க முடியும். அதுல ஒவ்வொரு படமும் எடுத்து முடிச்சதும் அடுத்த படம் எடுக்க ரோலை திருப்பணும். ஆரம்பத்துல அதுல தப்பு விட்டே 12-ல 4 கதை கந்தலாயிடும்:)!  

சனி, 12 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். சதீஷ் சங்கவியின் காதலா காதலா.

”இதழில் எழுதிய கவிதைகள் ” அப்பிடின்னு தில்லா புத்தகம் போட்டவர் நம்ம வலை உலக சகோ சதீஷ் சங்கவி.  ( மனைவி விமலா ரொம்ப ரொம்ப நல்லவங்க .. ) சங்கவிகிட்ட  உங்க முதல் காதல் எதுன்னு  கேள்வி கேட்டு பதில் வாங்கிப் போட்டுருக்கேன். என்ன அக்குறும்புன்னா புள்ளயோட அப்பிராணி மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கிற சங்கவி ஒரு புள்ளய சுத்திச் சுத்திக் காதலிச்சுருக்காரு. இப்ப இல்ல.. அட அது சின்ன வயசுலப்பா..

வெள்ளி, 11 அக்டோபர், 2013

நடுவீட்டுக் கோலமும் பூக்களும் எம்பிராய்டரியில்.

வாசலில் போடும் பொடிக் கோலங்களையும் மாக்கோலங்களையும் துணியில் போட்டால் எவ்வளவு அழகாக இருக்கும். இதை என் மாமா மகள் வள்ளிக்கண்ணு செயல்படுத்தி இருக்கிறார். அவரது ஒவ்வொரு புடவையும் டிசைனர்வேர்தான். அவரே டிசைன் செய்தது.

அவர் அணிந்து வரும் புடவைகளையும் ரவிக்கைகளையும் பார்த்து வியந்ததுண்டு. விதம் விதமான எம்பிராய்டரிகளில் அசத்தி இருக்கிறார்.

சனி, 5 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். திருமதி நாஞ்சில் மனோவின் மனம் விரும்புதே உன்னை..


நாஞ்சில் மனோ. ப்லாக் உலகில் ப்ரபலமான பெயர். என் வலை உலக சகோதரர். இவர்கிட்ட நம்ம ப்லாகுக்காக ஒரு கேள்வி கேட்டேன் மனுஷன் ஆடிப் போயிட்டார். எங்கே வீட்டுல திருப்பாச்சி அருவாளைத் தீட்டிடுவாங்களோன்னு. கொழுமோர் காய்ச்சிக் கொடுக்காத குறையா சமாதானப்படுத்தி பதில் வாங்குறதுக்குள்ள உஸ்ஸ்ஸ் அப்பாடா. ( ஆமா மிஸஸ் மனோ நீங்கன்னா அவருக்கு அவ்ளோ டெரர் ஆ :)

வெள்ளி, 4 அக்டோபர், 2013

என் சமையலறையில் உப்பும் சர்க்கரையும்.:-

என் சமையலறையில் உப்பும் சர்க்கரையும்.:-

1. எந்த ஜூஸ் கலந்தாலும் இரண்டு ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் சுவை அதிகம்.

2. காரக்குழம்பு புளிக்குழம்பு வத்தக்குழம்பு வைக்கும்போது வறுக்கும் சமயம் ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து வறுத்து குழம்பு வைத்தால் ருசியும் கூட. குறைந்த அளவு எண்ணெய் போதும். எண்ணெயும் சீக்கிரம் பிரிந்து விடும்.

3. ஊறுகாய்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தினால் மிகக்குறைந்த அளவு  உப்பு போட்டாலே போதும். ( காய்கறிப் பொரியல்களுக்குப் போடுவது போல)

4. உப்பு அதிகமானால் ரத்தக் கொதிப்பு வரும்.  குறைவாக போட்டால் தசை இயக்கத்துக்கும் காரணம் அதுவே என்பதால் சோர்வை உண்டாக்கும். அளவான உப்பு வளம் சேர்க்கும்.

5. இனிப்பு வகைககளை விட காஃபி டீயினால்தான் அதிகமாக சீனி உடம்பில் சேருகிறது. குறைந்த அளவு சீனி சேர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.

6. குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் ஒரு டம்ளர் காய்ச்சி ஆற்றிய தண்ணீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு சிட்டிகை உப்பும் கலந்து கொடுக்கவேண்டும். இது டாக்டரிடம் செல்லும் வரை  உடம்பில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கும். வாந்தியையும் வயிற்றோட்டத்தையும் நிறுத்தும்.

7. ப்யூட்டி பார்லர் செல்ல இயலாத சமயம் பார்ட்டி, விருந்து விசேஷங்களுக்குச்  செல்லும் சமயம் ஒரு ஸ்பூன் சீனியை முகத்திலும் கழுத்து கைகளிலும்  லேசாக ஸ்க்ரப் செய்து  தேய்த்துக் கழுவினால் மென்மையாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

8. அரிவாள்மனை. பித்தளை விளக்கு ஆகியவற்றை சுத்தம் செய்யும்போது புளியுடன் உப்பையும் சேர்த்துத் தேய்த்தால் பளிச்சென்று இருக்கும்.

                      
    ************************************************************

1. அகத்திக் கீரை அல்லது சுக்குடிக் கீரை ( மணத்தக்காளிக் கீரை) யை ஒரு ஸ்பூன் எண்ணெயில் சின்ன சீரகம் ஒரு ஸ்பூன், சின்ன வெங்காயம் 10 உரித்துப் போட்டு வதக்கி அரிசி களைந்த திக்கான தண்ணீர் விட்டு வேகவைத்து கால் கப் தேங்காய்ப் பால் ஊற்றி  சாப்பிட வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆறும்.

2. கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினாவை வெங்காயத்தை வதக்கி உப்பு, புளி ,மிளகாயோடு அடிக்கடி துவையல் செய்து சாப்பிட்டால் இரும்புச் சத்து. முடியும் செழித்து வளரும்.

3. ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை அனைத்துப் பொருட்களையும் வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். மாவு., தயிர் போன்றவற்றை அவ்வப்போது சிறிய பாத்திரங்களில் போட்டு டைட்டாக மூடினால் ஃப்ரிட்ஜில் புளித்த வாசம் வராது. ஒரு கப்பில் கடுகும் தண்ணீரும் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்தால் கெட்ட வாடை இருக்காது.

டிஸ்கி :-

 முதல் டிப்ஸ் இங்கே.

இரண்டாம் டிப்ஸ் இங்கே

மூன்றாம் டிப்ஸ் இங்கே.

வியாழன், 3 அக்டோபர், 2013

7 ஆம் அறிவும், நான் அறிந்து கொண்டதும்..

Fifth element, The Sixth Sense, இதுபோல ரிதமிக்கா இருக்கு 7 ஆம் அறிவு.

முதல்ல என் அறிவுக்குப் புரிஞ்சது கொஞ்சம்..:)

1. போதிதர்மரின் இன்னொரு பெயர் தாமு

2. சீனர்களுக்கு குங்ஃபூவைக் கத்துக் கொடுத்தவர் போதி தர்மர்.

3. சர்க்கஸ்ல வேலை பார்க்கிறவங்களுக்கு எல்லாம் குங்ஃபூ தெரியும்.

நன்றி வாழ்த்துக்களுக்கும் புகைப்படங்களுக்கும்..


Nesamithran Mithra

தாழ் பயிரின் நிறைகனம் எப்போதுமிருக்கும் செல்வத்து பாரம் ,
நாள் சுடர்த்தும் கதிர் போல் ஒளி கூடிய நல்லாயுள் பல்கிப் 
பெருகட்டும் . எந்த கோளும் இணங்கிச் சுழல்க !

வருஞ்சிறப்பும் செல்லும் துயரும் சலனிக்காதிருக்கட்டும் திண்மனதை

துணிந்தே எண்ணுவதும் எண்ணித்துணிவதும் நல்விளைவே
 தந்துவக்கட்டும்

வாழிய பல்லாண்டு ! பிறந்த நாள் நல் வாழ்த்துகள் !
Kumaresan Asak 

புதன், 2 அக்டோபர், 2013

கல்யாணத்திலே இத்தனை சடங்கா.. ?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

 நகரத்தார் திருமணம்.

செட்டிநாட்டுத் திருமணங்களில் சில சிறப்புகள் உண்டு. சீர்வரிசை சாமான்கள், செட்டிநாட்டு சமையல் போன்றவை ஸ்பெஷல் . இதில் மாப்பிள்ளை சாமான், பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் பரப்பும் சாமான், மாமியார் சாமான், பெண்ணுக்குத் தாய்வீட்டில் செய்யும் சீர்வரிசை சாமான் என நிறைய உண்டு. அதேபோல்  காலை, மதியம், மாலை, இரவு என வகைவகையான வண்ணமயமான ருசியான உணவுகள் உண்டு. பொதுவாக பெண்ணுக்குத் தாய் வீடு கொடுக்கும் சீர் வரிசையில் ( வசதிக்கேற்றபடி ) குண்டூசியில் இருந்து கப்பல் வரை வைப்பார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

எந்தன் முதல் கவிதை.. காவிரி மைந்தனுக்காக..

காவிரி மைந்தன் கண்ணதாசனின் தாசர்.. அவர் என் சகோதரனுக்கும் நண்பர். கண்ணதாசனைப் பற்றிப் பக்கம் பக்கமாக சொற்சுவையோடும் பொருட்சுவையோடும் பொருத்தி சிலாகித்து எழுதவும் பேசவும் ஆர்வமுள்ளவர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க என் முதல் கவிதையை அனுப்பினேன்.

என் முதல் கவிதை கிட்டத்தட்ட 12 வயதில் எழுதி இருப்பேன். அது என் அப்பாவின் பிறந்த நாளுக்கான ஒரு வாழ்த்துப்பா.. அது எங்கள் பெரிய வீட்டின் சாமி அறையில் ஃப்ரேம் செய்து மாட்டப்பட்டிருக்கு. அதன் வார்த்தைகள் சரிவர ஞாபகமில்லாததால் இதை அனுப்பினேன்..

திங்கள், 30 செப்டம்பர், 2013

உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய். :-

உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய். :-

டிஸ்கவரி சானலின் ட்ராவல் அண்ட் லிவிங் சேனலில் நான் முன்பு இவரின் சமையல் நிகழ்ச்சியைத் தவறவிட்டதேயில்லை.. “நைஜெல்லாஸ் ஃபீஸ்ட். “ மிக அழகாக சமைத்து மிக அழகாக டிஸ்ப்ளே செய்வார். போற போக்கில் சமைப்பது போல் இருக்கும். முட்டையை உடைப்பதானாலும் சரி, பச்சை எலுமிச்சங்காயின் தோலைத் துருவி சமையலில் சேர்த்து ரொம்ப ஃப்ளேவரா இருக்கு என்று சொல்லும்போதும் சரி,  சாக்லேட் ஃபட்ஜை செய்து சுவைத்து மயங்குவதிலும் சரி, இமைக்காமல் அவர் செய்வதையே பார்த்து அவர் சமையலிலும் அழகிலும் பேச்சிலும் அசந்திருக்கிறேன்.

சனி, 28 செப்டம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர் . லலிதா முரளியின் ஊட்டி வரை உறவு.

லலிதா முரளியைத் தெரியாதவங்க ஃபேஸ்புக்கில இருக்க முடியாது.

தெரியாதவங்களுக்கு.. சூரியக் கதிர், இவள் புதியவள், புதிய தலைமுறை ஆகியவற்றில் இவங்களோட கட்டுரைகளும், குங்குமம் தோழியில் முக நூல் ஸ்டேடஸ்களும் வெளியாகி இருக்கின்றன. என்னோட செல்லத் தங்கையில் இவரும் ஒருவர்.

அவங்ககிட்ட ஒரு கேள்வி.

உங்களுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது யார். எப்போ?

புதன், 25 செப்டம்பர், 2013

கருமுத்துக் கண்ணன்..

கருமுத்து வழிவந்த
திரு முத்து கண்ணன்..
பெருமுத்தாய் விளைந்திருக்கும்
அரு முத்து மன்னன்.

தக்காரைத் தக்காராய்க்
கொண்டாள் மீனாக்ஷி.
தக்கபடி பணிபுரிவார்
கரு முத்து மாட்சி..

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்..



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்த விமர்சனம் ஃபிப். 3. 2013 திண்ணையில் வெளிவந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...