”நான் இருக்கேன் புள்ள” – சாந்தி மாரியப்பன்
அமைதிக்குப் பெயர்தான் சாந்தி. இந்தப் பாட்டை 700 தரமாவது முணுமுணுத்திருப்பேன். என் பள்ளி நட்பிலிருந்து இன்று வரை நிறைய சாந்திகள் என்னைச் சுற்றி. இந்த சாந்தி அமைதி அதே சமயம் கொஞ்சம் கலகலப்பும் கூட. சக எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் அமைதிச்சாரல் என்ற சாந்தி மாரியப்பன். அவர் எடுக்கும் புகைப்படங்கள் மட்டுமல்ல. சிறுகதைகளும் சிறப்பானவை. அவர் எழுதும் சமையல் குறிப்புக்கள் ருசிகரமானவை. சிறகு விரிந்தது என்றொரு கவிதை நூலுக்குச் சொந்தக்காரர்.




