முதலாம் அத்யாயம் மூன்றாம் ஸ்லோகம்
தத் அஹம் ஸம்ப்ரவக்ஷ்யாமி
லோகானாம்
ஹிதகாம்யயா l
யேன விக்ஞாத மாத்ரேண
ஸர்வ ஞானத்வம் ப்ரபத்யதே ll
பொருள்:-
தத் அஹம் = நான் சுயமாக இதைப்பற்றி
ஸம்ப்ரவக்ஷ்யாமி = முழுமையாக விவரிக்கிறேன்.
லோகானாம் = உலக மக்கள்
ஹிதகாம்யயா = நற்கதி பெற வேண்டி ( க்ஷேமத்துக்காக, நன்மைக்காக
)
யேன = இதன்படி
விக்ஞாத மாத்ரேண = அரசியலின் இரகசிய தந்திரங்களைத் தெரிந்துகொண்டால்
மட்டுமே
ஸர்வ ஞானத்வம் = சகல ஞானமும்
த்வம் ப்ரபத்யதே = தானே கைவரப்பெறும்/தானே ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.
விளக்கம்:- உலக மக்கள் நன்மை பெற வேண்டி அரசியலின் இரகசிய தந்திரங்களை
நான் முழுமையாக விவரிக்கிறேன். இதன்படி இந்த இரகசிய தந்திரங்களைப் பற்றிய முழுமையான
அறிவு பெற்றாலே போதும், அவர்களுக்குச் சகல ஞானமும் தானே கைவரப் பெற்று ஒளிவிட்டுப்
பிரகாசிப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)