எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

பிடிமண்

 பிடிமண்

ரோட்டை ஒட்டிய பாலத்தின் அடியில் இருந்தது அந்தப் பெட்டிக் கடை. அந்த ரோட்டின் மேலேயே பாலத்தின் கைப்பிடிச் சுவரில் ஒரு பிள்ளையார் கோவிலும் இருந்தது. பெட்டிக்கடைக்காரரே பிள்ளையார் கோவிலையும் பூசாரி போல் பார்த்துக் கொண்டு இருந்தார். இன்னோவாவை விட்டு இறங்கிக் கடைக்கருகே சென்று விசாரித்தார் பழனி, “இங்கே ராஜநாயகம்கிறது யாரு ?” ”நாந்தான்” என்று பெட்டிக் கடை ஓலையைப் பிடித்தபடி எழுந்து சரிவான பாதையில் மேலேறி வந்தார் கடைக்காரர்.

”இங்க ஜாதகம் எல்லாம் பார்க்கிறதுன்னு சொன்னாங்களே”,ஐயத்தோடு கேட்டார் பழனி. “ஆமா நாந்தான் பார்ப்பேன். இருங்க வரேன். என்றவர் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு இவருக்கும் நீட்டினார். ”இல்லங்க வேண்டாம். ஒரு ஜாதகம் பார்க்கணும்”

சனி, 29 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6241 - 6250 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

6241.புகழ்க் கன்னி l சாமி பழனியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1IdRU7LDxN4


#புகழ்க்கன்னி, #சாமிபழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#pugalkanni, #samipalaniappan, #thenammailakshmanan, 



6242.நாளமில்லாச் சுரப்பிகளும் மரபுவழி மருத்துவ முறைகளும் l எஸ் கதீஜா நாச்சியார் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XD4Q9PjOZk8


#நாளமில்லாச்சுரப்பிகள், #மரபுவழிமருத்துவமுறை,  #கதீஜாநாச்சியார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#endocrineglands, #kathijanachiyar, #thenammailakshmanan,

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 9

 **ஒற்றைச் செடியாய்த்

தனித்திருப்பது பிடித்திருக்கிறது.
எவ்வுயிர்க்கும் வானமும்
மழையும் வெய்யிலும் ஒன்றுதானே.

 

**தேடுகிறாயா எனத்
தெரிந்துகொள்ளவே
காணாமல் அடிக்கிறேன் என்னை.

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6231 - 6240 வீடியோக்கள்.

6231.இருவாட்சி l  காதல் வனம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6rv9i5KZkSU


#இருவாட்சி, #காதல்வனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#iruvatchi, #jathalvanam, #thenammailakshmanan, 



6232.சாக்கோட்டை வீரசேகரர் உமையாம்பிகை கோயில் l  புதுவயல் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=eNKNgVb6wZE


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 26 ஆகஸ்ட், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 9

 

9

”அக்கினியாத்தா எங்கள ஏன்தா இப்பிடிச் சோதிக்கிறே. ” மனமுருகிக் கையேந்திக் கேட்டுக் கொண்டிருந்தாக ஆவுடையப்பன். உங்கிட்ட உத்தரவு வாங்கித்தானே இந்தப் புள்ளைக்குக் கலியாணம் பண்ணினேன். ஆத்தா இல்லாத புள்ள மனக்கொறை இருக்கப்புடாதுன்னு புள்ளைகிட்டயும் கேட்டுத்தானே செஞ்சோம். மாப்பிள்ளைக்கு ரத்தப் புத்தாமே. என்ன செய்வேன் ஆத்தா?”

அவுகளை விட அதிகமாகக் கலங்கிக் கொண்டிருந்தாக கருப்பஞ்செட்டி. ”எங்க ஆத்தா போல உன்னயத்தானே நம்புனோம். எங்கள ஏன் கைவிட்டே.”

”சரி தம்பி கிளம்புங்க ஆறுமாசமா வைத்தியம் பார்க்குறோம். சரியாயிரும்னு நம்புவோம். வேலுவோட போய் பொங்கச்சீரைக் கொடுத்துட்டு வாங்க”.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6201 - 6210 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6201.திருமந்திரம்  - 591 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/q_ZWvQFIv6M


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6202.திருமந்திரம்  - 592 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/aOa2p8VYBRA


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

பந்த பாசங்களைச் சீர்ப்படுத்தும் ஸ்ரீதேவி மந்திரம்


உலகில் உள்ள பெண் வடிவங்கள் எல்லாம் நம் தாயின் வடிவங்களே என்று கூறும் மந்திரம் ஒன்று உள்ளது. மேலும் நம் மனக்கவலையை நீக்கவும், பந்தபாசங்களை அறுக்கவும், அதே சமயம் ஞானம் கிட்டவும் அம் மந்திரம் உதவுகிறது என்று அறியும்போது வியப்பு மேலிடுகிறதுதானே. அது என்ன மந்திரம் என்று அறிய ஆவலாய் இருக்கிறது அல்லவா!  மேலும் அந்த மந்திரம் எப்படி ஒரு மன்னனுக்கும் மனிதனுக்கும் உதவியது என்றும் பார்ப்போம்.


முன்னொரு காலத்தில் சுரதன் என்னும் அரசன் தன்னுடைய நாட்டை ஆண்டு வந்தான். திடீரென அவனுடைய அண்டை நாட்டு மன்னர்கள் அவன் மீது படையெடுத்தனர். அவனுடைய நாட்டை சூழ்ந்து வளைத்து முற்றுகையிட்டனர். எதிர்பாராத அந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மன்னன் அதற்குத் தயாராக தன்னுடைய படையை வைத்து இல்லாததால் தோல்வி அடைந்தான். எனவே நாட்டை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. மனம் நொந்து அவன் காட்டை அடைந்தான். மரங்கள் சூழ்ந்த அந்த அடர்வனத்துக்குள் மனம் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6191 - 6200 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6191.திருமந்திரம்  - 581 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/nTxAa8VGlUk


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6192.திருமந்திரம்  - 582 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/_oXjNT2Zs2E


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 22 ஆகஸ்ட், 2026

மக்கள் திலகம் எம்ஜிஆர்

 மக்கள் திலகம் எம்ஜிஆர்


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.. உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்.. கடமை அது கடமை.. எத்தனை எத்தனையோ நூறு பாடல்கள் இருந்தும் இப்பாடல்தான் மக்கள் திலகம் எம்ஜியாரை மக்கள் தலைவனாக வடிவமைத்த பாடல். நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் என்பதோடு முதன்மையாகத் தாயைத் தெய்வமாகப் போற்றியவர், மக்களிடம் பரிவு கொண்டவர், மனிதாபிமானம் மிக்கவர், விருந்தோம்பல் மற்றும் கொடைக்குணம் கொண்டவர் எம்ஜியார்.

கொடுத்துச் சிவந்த கரம்,  கலியுகக் கடவுள்,  பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர்,  இதய தெய்வம்,  வாத்தியார்,  இதயக்கனி என்றெல்லாம் புகழப்படும் திரு எம் ஜி ராமச்சந்திரன் தமிழகத் திரைப்பட உலகையும் தமிழக அரசியலையும் ஒருசேரக் கலக்கியவர். இவருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் திரு.தமிழ்வாணன் அவர்கள் வழங்கிய மக்கள் திலகம் என்ற பட்டமே மிகப் பொருத்தமானதாக தோன்றுகிறது. நடிகர்களில் ஆலயம் கட்டப்பட்டது என்றால் அது முதலில் எம்ஜிஆருக்கு என்றே சொல்ல வேண்டும். இன்றும் இருக்கும் அந்த ஆலயம் திருநின்றவூர் நத்தம்மேடு கிராமத்தில் உள்ளது. கலைவாணன் சாந்தி தம்பதியினர் எம்ஜிஆருக்காகக் கோவிலை அமைத்துக் கும்பாபிஷேகம் செய்து உள்ளார்கள்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6161 - 6170 வீடியோக்கள்.

6161.ஸ்ரீ மாதா புவனேஸ்வரி துதி l ஸ்ரீ தேவி பாகவதம் l தேனம்மை லட்சுமணன்

https://www.youtube.com/shorts/pBconIAO5wI


#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,



6162.திருப்பரங்குன்றம் முருகன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/y8l2gYT1S3o


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

ரெவே பார்க்கிங்கும் மேகக் கரடியும்

233.


4641.புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியின் தாளாளர்கள் கவிதா, சுப்ரமணியன் ஆகியோரின் புதல்வன் ரகு மருமகள் அழகு ஆகியோரின் பேபி ஷவர் நிகழ்ச்சி எஸ் ஆர் மஹாலில் நடைபெற்றது.  அப்போது  தேனம்மை லெக்ஷ்மணனின்," கருப்பை நம் உயிர்ப்பை, காப்பியக் கதைகள், ஆழ்வார்களின் கதைகள்" ஆகிய மூன்று நூல்களையும் முன்னாள் அமைச்சர் திருமிகு ரகுபதி அவர்கள் வெளியிட்டார்கள்.


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

பதிமூன்றாம் அத்யாயம் எட்டாவது ஸ்லோகம்

பதிமூன்றாம் அத்யாயம் எட்டாவது ஸ்லோகம்


    ராஞி தர்மிணி தர்மிஷ்டா:

பாபே பாபா: ஸமே ஸமா: l

    ராஜானம் அனுவர்(த்)தன்தே

யதா ராஜா ததா ப்ரஜா: ll

சனி, 15 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6151 - 6160 வீடியோக்கள்.

6151.நாச்சியாரம்மன் l  ரெ.முத்துக்கணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/il04qgiQCAI


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



6152.நிலாவின் ஒளி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/L80qvthmOrs


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

புதன், 12 ஆகஸ்ட், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 8

 

8

கல்யாணப் படைப்பு படைக்க வேண்டிக்கொண்டு அக்கினியாத்தா வீட்டில் படைச்சிக்கினு இருந்தாக ஆவுடையப்பன் குடும்பத்தார். ”இது கோழிப்படைப்புன்ன. ராத்திரி வெகு நேரமாகும். இந்த ரொட்டியத் தின்னுட்டு நீ போய் ஒறங்கப்பச்சி. சாமி கும்பிடும்போது எழுப்பிவிடுறேன்” என்று சாஞ்சாடிக் கொண்டிருந்த பேரனைச் சீராட்டிக் கொண்டிருந்தாக பங்காளி வீட்டு வள்ளியாச்சி.

சிவகாமிக்கும் சொக்கலிங்கத்துக்கும் கல்யாணமாகி மறுவீடு, மூணாம் வீடு வந்து போய் ஒருவாரம் கழிச்சு வீட்டுப் படைப்பு. எடயில பால்பழம் வைச்சுக் கும்பிடவும் பால்பழம் சாப்பிடவும் ஆத்தாவீடு வந்து போனாக. ”பாட்டையா பாட்டியாயா ஆத்தா எல்லாரையும் நெனைச்சுக் கும்பிட்டுக்காத்தா.” கல்கண்டுபோட்டுப் பாலைக்காய்ச்சி வெள்ளைப் பணியாரம் சுட்டு வைத்திருந்தார் கருப்பையாண்ணன்.  கருப்பஞ்செட்டி வகைப்பழங்களும் பூமாலைகளும் பூச்சரமும் வாங்கி வைத்து இருந்தாக. புதுமணத் தம்பதிகள் பேழையின் முன் விழுந்து வணங்கி ஆவுடையப்பன், கருப்பஞ்செட்டி கையால் விபூதி பூசிக்கினாக.

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சக்கரவர்த்தினி ரஸியா சுல்தானா.. மக்களின் ராணி

சக்கரவர்த்தினி ரஸியா சுல்தானா.. மக்களின் ராணி

கிபி 1206 – 1290 வரை இந்தியா துருக்கியிலிருந்து வந்த அடிமை வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. அடிமை வம்சத்தின் முதல் அரசர் குத்புதீன் ஐபக். இவர் டெல்லியில் சுல்தானகத்தை நிறுவினார். அவருக்குப் பின் அவரது மருமகன் இல்துமிஷ் பதவி ஏற்றார். அடுத்துப் பதவி ஏற்ற ரசியா இல்துமிஷின் மகளாவார்.

பதிமூன்றாம் நூற்றாண்டிலேயே ஆளும் தகுதிபெற்ற சகோதரர்கள் இருக்கும்போது அடிமை வம்ச சக்கரவர்த்தியான தனது தந்தை சம்சுதீன் இல்துமிஷிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்றாள். 1236 முதல் 1240 வரை நான்கே ஆண்டுகள்தான் ஆட்சி செய்தார். ஆனால் டெல்லியை ஆண்ட ஒரே பெண் சுல்தான் என்ற வரலாற்றைப் படைத்துச் சென்றார்.

சனி, 8 ஆகஸ்ட், 2026

வசந்த மாளிகை வாணிஸ்ரீ

வசந்த மாளிகை வாணிஸ்ரீ


"இனியவளே என்று பாடி வந்தேன், மயக்கம் என்ன மௌனம் என்ன, பால் போலவே வான்மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்,கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம், முல்லைப்பூ பல்லக்குப் போவதெங்கே, ஓ மைனா ஓ மைனா,  ஜனகனின் மகளை மணமகளாக, மேளதாளம் கேட்கும் காலம், என் ராஜாவின் ரோஜா முகம்" இப்பாடல்களில் நடித்த வாணிஸ்ரீக்கு 77 வயதாகிவிட்டதாம். இத்தனைக்கும் தமிழில் 39 படங்களே நடித்திருக்கிறாராம்.

அழகு பொழியும் முக லாவண்யம், ஓங்குதாங்கான உருவம் , பளிச்சென்று பெரிய கண்கள், வில் போன்ற புருவங்கள், தீர்க்கமான நாசி, பளபள கன்னங்கள், மலர்ச்சியான புன்சிரிப்பு, உயரத் தூக்கிப் போட்ட பன் கொண்டை, லிப் க்ளாஸ் போட்ட ரோஜா உதடுகள், மாடர்ன் உடைகளிலும் புடவையிலும் கூடக் கவர்ச்சிகரமாக இருப்பார், பரிபூரண அழகி. சிவாஜியின் ஜோடிகளில் மிகப் பொருத்தமானவர். இவர் நடித்ததில் எனக்கு பிடித்த படங்கள் சிவகாமியின் செல்வன், வாணி ராணி, வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன்.

புதன், 5 ஆகஸ்ட், 2026

சிம்மவர்மன் இரண்யவர்மன் ஆன கதை

 சிம்மவர்மன்  இரண்யவர்மன் ஆன கதை



எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் இறைவனின் கருணை இருந்தால் அது சூரியனைக் கண்ட பனி போல விலகி விடும் என்பதற்குச் சிம்மவர்மன்  என்ற மன்னனின் கதையே எடுத்துக்காட்டு.

முன்னொரு காலத்தில் கௌட தேசம் என்ற ஒரு தேசம் இருந்தது. அதை அரசாண்ட மன்னனின் மூத்த குமாரனின் பெயர் சிம்மவர்மன். பெயர்தான் கம்பீரமாக சிம்மவர்மன் என்று இருந்ததே தவிர அவன் உடல் முழுதும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தது. ஆகையால் அவன் தன் நாட்டில் இருக்க விருப்பமின்றி, முடிசூட்டி அதை ஆளும் எண்ணமும் இன்றி ராஜ்யத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பினான்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 8

 **வாழ்ந்திருந்தது ஒரு காலம்

வாழ்ந்ததை நினைத்திருப்பது ஒரு காலம்
காலங்கள் மாறுகின்றன நினைவுகள் மாறுவதில்லை.


**நிலவுடன்  உருண்டு
இருளுடன் இணையுமுன்
பெருநெருப்பொன்று
உரசி எழுகிறது தினசரி..
சூரியனாம்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6141 - 6150 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6141.திருமந்திரம்  - 571 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/wMFT0dPgUwI


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6142.திருமந்திரம்  - 572 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/53wbdy18Qyk


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 1 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6121 - 6130 வீடியோக்கள்.

6121.அருளார் அமுதே l ராமலிங்க அடிகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/_qM3m0o3PFo


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,



6122.மதுரை மீனாக்ஷி l  ரெ.முத்துக்கணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/JKbUQgC_nQc


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...