எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 நவம்பர், 2011

வேரோடிக் கிடந்தவை.

மக்கிப்போன ஒரு
சினிமா ஸ்டூடியோ
அதிபரின் விசிட்டிங் கார்டு...
வியாபாரம் படுத்த ஒரு
வெளிநாட்டுத் தந்திக் காயிதம்...
நட்டமாய்ப் போன
பங்குச் சந்தை பத்திரங்கள்...
எந்தக் காலப் பிரபலங்களோ
கறுப்பு வெள்ளையில் கூட்டமாய்...

செவ்வாய், 29 நவம்பர், 2011

டாக்டர் ஆக முடியாத டாக்டர் ..ஆஸ்வின் ஸ்டான்லி ( போராடி ஜெயித்த பெண்கள்)

ஒரு பெண் படித்திருந்தால் எத்தனை டிகிரி வாங்கி இருக்கலாம். ஒன்று., அல்லது இரண்டு., அதிகபட்சம் மூன்று முதல் ஐந்து வரை இருக்கலாம்.. ஆனால் கன்யாகுமரி கரும்பாட்டூரைச் சேர்ந்த ஆஸ்வின் ஸ்டான்லி கிட்டத்தட்ட 9 டிகிரிகள் படித்திருக்கிறார்.. டாக்டராக ஆசைப்பட்டு ப்ளஸ்டூவில் சரியாக செய்யாததால் டாக்டர் படிக்க முடியாமல் இருந்தும் பி ஹெச்டி படித்து டாக்டராகி சாதனை நிகழ்த்தியுள்ளார்..

அப்பா ஸ்டான்லி சுபமணி., அம்மா அமலா பேபி., ஒரு தங்கை ஒரு தம்பி எனக் கொண்ட இவர் குடும்பம் மிகுந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவக் குடும்பம். இரவில் பைபிள் படித்து கூட்டு ஜெபம் செய்துதான் தூங்கச் செல்வார்கள். அப்பா தற்போது இல்லை. அவர் பிஸிகல் எஜுகேஷன் டீச்சராக இருந்தார். அம்மா . தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அக்கவுண்டன் சுப்பரிண்டெண்ட் ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மத நம்பிக்கை அதிகம் உள்ள குடும்பம் என்பதால் சினிமா ட்ராமா ஒன்றும் செல்வது கிடையாது.கதை புத்தகம் கூட படிப்பது கிடையாது. ஸ்ட்ரிக்ட் ரிலிஜியஸ் குடும்பம்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

சிரசாமிர்தம்...

சிரசாமிர்தம் வேண்டி
மந்தாரமலை பிடித்து

ஆதிஷேஷன்.,
வாசுகி தேடி..

கார்கோடகன்
காளிங்கன் தீண்டி

பதஞ்சலியைச்
சரணடைந்தேன்

வியாழன், 24 நவம்பர், 2011

சாயல்கள்...



ஒன்பதினாயிரம் நாட்கள்
கடந்திருக்கும்..
அவளுக்கும் அவருக்குமான உறவில்..

முதல் சந்திப்பிலேயே
அவர் முழுமையாய்
அங்கீகரித்துக் கொள்ள..
அவளுக்கு சில கேள்விகளும்
ஆசைகளும் மிச்சமிருந்தன..

புதன், 23 நவம்பர், 2011

பட்டிமன்ற நடுவர் மணிமேகலை.


போரூரில் நடந்த பட்டிமன்றத்தில் நல்ல நடுவராக தீர்ப்பு வழங்கியவர் என்று பாராட்டப்பட்டவர்., பள்ளிக்காலங்களில் கல்லூரிக் காலங்களில் பட்டி மன்றத்தைக் கலக்கியவர்., தற்போதும் அம்பத்தூரில் நடைபெற்ற கந்தர் சஷ்டி விழாவில் , ”நம் சமுதாயம் முன்னேற பெரியோரின் அனுபவம் தேவையா அல்லது ஆற்றல் மிக்க இளைஞர்கள் தேவையா” என்ற பட்டிமன்றத்தில்
பெரியோரின் அனுபவமே என பேசி முத்திரை பதித்திருப்பவர் மணிமேகலை..

செவ்வாய், 22 நவம்பர், 2011

உயிர்த்தெழும் கண்கள்..

உயிர்த்தெழும் கண்கள்..
**************************
உடைக்கப்படும் பழைய லாரிகள்.,
ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட
விட்டுச் செல்கின்றன..
போல்ட்டுகளும் நட்டுகளும்
அடுத்த உபயோகத்துக்காய்..

திங்கள், 21 நவம்பர், 2011

பதின்பருவ பி்ள்ளைகளின் அம்மா..

அற்புதம்தான்..
வளரும் பிள்ளைகளின்
அம்மாவாய் இருப்பது..!

கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் பொய்
கொஞ்சம் உரைத்தல்
கொஞ்சம் மறைத்தல்

சனி, 19 நவம்பர், 2011

ரஞ்சனா கிருஷ்ணனின் கல்யாண கலாட்டா. கீழே விழுந்த மாப்பிள்ளை..



தேனியிலிருந்து காஞ்சிபுரம் வந்தார்கள் மாப்பிள்ளை வீட்டினர். மிக நீண்ட பிரயாணத்தின் காரணமாய் மிகவும் சோர்வாகவே காணப்பட்டார் அவர். மண்டபத்தின் வாயில் படியேறும்போதே தடுக்கி விட்டது. என் தோழிகள் அனைவரும் ஏய் என்னப்பா இப்பவே அவர "பிளாட்" ஆக்கிட்ட என கிண்டல் அடிக்கத் தொடங்கினர்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

பத்மா இளங்கோவின் கல்யாண கலாட்டா..ஹவுஸ்ஃபுல் கார்.

பத்மா இளங்கோ..:-

எங்க திருமணத்தில் முதல் நாள் ஜானவாசத்தில் பெண்ணை அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக திருமணமண்டபத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அப்போ அந்த கார் முழுக்க குழந்தை குட்டிகள் எல்லாம் ஏறி உக்கார்ந்துகிட்டாங்க..

வியாழன், 17 நவம்பர், 2011

ரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.

ஒரு பெண்ணைப் பெற்றவர்களே அவளின் திருமணத்தைப் பற்றி பலவாறு சிந்திக்கையில் நான் இரண்டு பெண்களைப் பெற்றவள். மூத்த பெண்ணின் திருமணத்திற்கு தயார் ஆக நீண்ட காலம் இருந்தது. அவள் திருமணம் முடித்து திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த பெண் திருமணத்திற்கு தயாராக.
தங்கத்தில் செய்த முதலீடு அபாரமானது. சிறுக சிறுக நகைகள் சேர்த்து வைத்திருந்ததால் தங்கத்தின் இமய விலை என்னை மிரட்டவில்லை.

புதன், 16 நவம்பர், 2011

இன்சைட் க்ளோபல் க்ரூப்பின் இலவச ஆன்லைன் கல்வி ( INSIGHT GLOBAL GROUP -- FREE ONLINE EDUCATION)

கல்வியாளர்கள்., மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு.... புத்தக மூட்டைக்கு பை பை.. இனி பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் பொதி சுமக்க வேண்டாம்.இந்த சிறுவர் தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அழகிய திட்டம் ஆன்லைன் கல்வி. இதை அறிமுகப்படுத்தியுள்ளவர் எனது முகப்புத்தக நண்பர் திரு நாகராஜன் ரவி அவர்கள். இதற்கான அவருடைய உழைப்பு பிரமாண்டமானது., பரந்து விரிந்த அவருடைய கனவுகளைப் போல்.

செவ்வாய், 15 நவம்பர், 2011

எல் கேயின் கல்யாண கலாட்டா . செப் இவள் புதியவளில்.



திருமணங்களில் கலட்டாக்களுக்குக் குறைவிருக்காது. என் திருமணத்தில் நடந்த சிறு சுவாரஸ்யமான சம்பவம். கல்யாணத்திற்கு முதல்நாள் நிச்சயதார்த்தம் நடக்கும். அப்பொழுது மாப்பிள்ளைக்கு மோதிரமோ இல்லை கைக்கடிகாரமோ மச்சினன் போடுவான். இது வழக்கம். எனது திருமணத்தில் எனது மாமனார் மோதிரமும், மச்சினன் கடிகாரமும் போடுவதாக இருந்தனர்.

திங்கள், 14 நவம்பர், 2011

டின் டின்..!!! (THE ADVENTURES OF TINTIN: THE SECRET OF UNICORN (2011)ENGLISH.

அப்பாடா...! ரெண்டாவது நாளே எஸ்கேப்பில் டின்டினை பார்த்தாச்சு.!! அம்புலிமாமா., பாப்பா மலர்., பால மித்ரா., அணில் காமிக்ஸ்., ரத்னமாலா., பூந்தளிர்., கோகுலம் மட்டுமே படிச்சிகிட்டு இருந்த நான் திருமணமானதும் கணவரோட சேர்ந்து டின்டின், ஆஸ்ட்ரிக்ஸ்., டெனிஸ் த மெனேஸ் எல்லாம் படிச்சி ரசிகையாயிட்டேன். தமிழ்ல ராமு சோமு., டிங்குவைப் போல ஒரு பிள்ளை இருந்தால்( இது விளம்பரம்), ப்ளாண்டி., புதிர்பூமா., குட்டிக் குரங்கு கபீஷ்., அப்புறம் முக்கியமா வேதாளர் ( ஃபாண்டம் -- ஜானி வாக்கர் )., டயானா., மாண்ரெக்., லோதார்., இரும்புக்கை மாயாவி., சிஸ்கோ., பாஞ்சோ., ரிச்சி ரிச்., ரிப்கெர்பி., டெஸ்மாண்ட்ன்னு தீவிர காமிக் ரசிகை. டெக்ஸ்டர்., ஹாரி பாட்டர்., அட்வென்சர்ஸ் ஆஃப் ஜாக்கிஜான்.,மெர்மெயிட்., பாப்பாய்., ஹன்னா மோண்டனா., ப்ளாசம்., ஸ்மால் வொண்டர் .,பிகாச்சு., ஹீ மேன்., ஸ்பைடர் மேன்., பாட் மேன்., சூப்பர் மேன்., போகே மான்., பெண்டென்., எல்லாம் அதன் பின் வந்த செல்லங்கள்..

சனி, 12 நவம்பர், 2011

ஐந்தொகை.. (5).

1. மெல்ல திறந்த கதவிடுக்கில்
பாம்பாய் நெளிந்து வந்து
காலைக் கடிக்கிறது குளிர்..

2. கற்கள் நரகல் எல்லாம்
எச்சரிக்கையாய் தாண்டி.,
உனை தேடி வந்து
சொற்களால் மிதிபட்டு..

வெள்ளி, 11 நவம்பர், 2011

பங்கேற்பு..

பங்கேற்பு.:-
*******************
பின்புறமிருத்தல்
சௌகர்யமாய் இருக்கிறது
மஞ்சள் வெளிச்சங்கள்
ஆக்கிரமிக்காத
மெல்லிய இருட்டு.
இருக்கிறோம்
ஆனால் இல்லை..

எல்லா ஆட்டங்களிலும்
பங்கேற்பாளராக
பரிசுக் கோப்பையை
நூலிழையில்
தவறவிட்டு.

வியாழன், 10 நவம்பர், 2011

புதிய புத்தகம் பேசுது.. ஒரு பார்வை..

இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.


செவ்வாய், 8 நவம்பர், 2011

ஒளிந்து பிடித்தல்...

ஒற்றைச் சாரளம் வழி
வெண்துண்டாய் விழும் நிலவை
உண்டபடி பிரயாணிக்கும் கண்கள்..

கீற்றாய்ப் பிரிக்கும்
ஜன்னல் கம்பிகளிலிருந்து
மீனாய் உருவுகிறது நிலவை.

வெள்ளி, 4 நவம்பர், 2011

அடையாளக் குறிப்பு.

தாலி., மெட்டி
மோதிரம்., குங்குமம்.
திருமணத்தின்
அடையாளக்குறிப்பாய்
நான் மட்டும் சுமந்து..

வியாழன், 3 நவம்பர், 2011

போருக்குப் பின் அமைதி.

சாரட்டா., ஜட்காவா.,
ரிக்‌ஷாவா., ஜெட்டா.,
எல்லா சக்கரமும் ஒண்ணுதான்..
நீ கூட அமர்ந்து வந்தால்..

பறந்து கூட்டிச் செல்கிறாயா..
நடந்து கூட்டிச் செல்கிறாயா என்பதல்ல..
கூட இருந்து கூட்டிச் செல்கிறாயா..

செவ்வாய், 1 நவம்பர், 2011

கலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,000/-)

கலைமகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.நூற்றாண்டு விழாவை ஒட்டி சிறுகதைப் போட்டியை அவரது குடும்பத்தினர் நடத்த உள்ளனர். பரிசு பெற்ற சிறுகதைகள் ஜூன் ஜூலை 2012 ஆம் இதழ்களில் பிரசுரிக்கப்படுமாம். முதல் பரிசு ரூ. 50,000/-. இரண்டாம் பரிசு ரூ.25,000/-. பிரபலமானவர்கள், புதியவர்கள் கலந்து கொள்ளலாமாம். 6 பக்கங்கள் ., ஒரு பக்கம் மட்டுமே வரும்படி எழுதி அனுப்ப வேண்டுமாம். டைப் பண்ணி அனுப்பினால் நலம். ஆனா ஈ மெயில் ஐடி கொடுக்கலை. போஸ்டல் மூலமாதான் அனுப்பனும். கடைசி தேதி 31, ஜனவரி 2012.

Related Posts Plugin for WordPress, Blogger...