எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கலைமகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைமகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 டிசம்பர், 2023

கலைமகளில் “நான் சென்று வந்த இந்து திருத்தலம்”.

கலைமகள் அறிவித்திருந்த “நான் சென்று வந்த இந்து திருத்தலம்” என்ற போட்டிக்கு எனது  இந்தக் கட்டுரையை அனுப்பி இருந்தேன். அதற்கு மூன்றாம் பரிசும் 2,000/- ரூபாய் பரிசுப் பணமும் கிடைத்துள்ளது.  நன்றி கலைமகள். இதை எனக்கு அறியத்தந்த மங்கையர் சோலை குழுவில் உள்ள சகோதரி திருமதி கல்யாணி ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி :)


ஸ்ரீ நரியங்குடி கருங்குளம் பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக் கருப்பர் கோயில்


குலதெய்வம் என்பது மனிதகுலத்தைக் காக்கும் தெய்வம் என்பதால் நாட்டாரும் நகரத்தாரும் சேர்ந்து வழிபடும் அய்யனார், கருப்பர் கோயில்கள் சிவகங்கைப் பகுதியில் அதிகம். வலசை வந்த நகரத்தார் தாம் வந்து தங்கியிருந்த ஊர்களில் கழனிகளையும் கம்மாய்களையும் காக்கும் ஊர்க்காவல் தெய்வமாக நாட்டார்கள் வழிபட்ட அய்யனாரையே தம் தலைமாடு காக்கும் குலதெய்வமாகக் கொண்டனர்.

பட்டமங்கலத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நரியங்குடி.. ஊர் எல்லையில் கம்மாய்க்கரையில் கம்பீரமாகப் புது மணத்தோடும் வண்ண வண்ண நிறத்தோடும் காத்திருந்தார்கள் கையில் அரிவாளோடு சிங்கப்பற்களுடன் இரண்டு பூதங்களும் பாரிவேட்டைக்குத் தயாரான நிலையில் இரண்டு புரவிகளும். ஏனெனில் 31.5.23 அன்று அங்கே புரவி எடுப்பு.. 

திங்கள், 30 ஜனவரி, 2012

வலைப்பதிவர்கள் கவனத்திற்கு...( கலைமகள்., தினமணி போட்டிகள் )

வலைப்பதிவ தோழமைகளுக்கு,

இன்று கலைமகள், தினமணி போட்டிகளுக்கு சிறுகதை அனுப்ப கடைசி நாள். 31. 1. 2012 உடன் முடிகிறது. இன்று உங்களிடம் கைவசமுள்ள கதைகளை தினமணி ( 3 பக்கத்துக்கு மிகாமல்) , கலைமகள் ( 6 பக்கத்துக்கு மிகாமல்) முடிந்தவரை இன்று கூரியர் சர்வீசிலாவது அனுப்பி விடுங்கள். பரிசுத் தொகை அதிகம். கலைமகள் 50,000/- மற்றும் தினமணி முதல் பரிசு 5,000, இரண்டாம் பரிசு 3,000, மூன்றாம் பரிசு 2,000.

இந்த நினைவுறுத்தலை ஜனவரி மத்தியில் ஒரு முறை செய்ய எண்ணி இருந்தேன். என் வேலைப் பளுக்களாலும், புத்தக வெளியீட்டிலும், ப்ரயாணங்களாலும் தகுந்த சமயத்தில் நினைவுறுத்த இயலாமல் போயிற்று.

கலைமகள் போட்டி விவரம்.:-
*******************************

கலைமகளில் சிறுகதைப் போட்டி ( ரூபாய் 50,000/-)

செவ்வாய், 1 நவம்பர், 2011

கலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,000/-)

கலைமகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.நூற்றாண்டு விழாவை ஒட்டி சிறுகதைப் போட்டியை அவரது குடும்பத்தினர் நடத்த உள்ளனர். பரிசு பெற்ற சிறுகதைகள் ஜூன் ஜூலை 2012 ஆம் இதழ்களில் பிரசுரிக்கப்படுமாம். முதல் பரிசு ரூ. 50,000/-. இரண்டாம் பரிசு ரூ.25,000/-. பிரபலமானவர்கள், புதியவர்கள் கலந்து கொள்ளலாமாம். 6 பக்கங்கள் ., ஒரு பக்கம் மட்டுமே வரும்படி எழுதி அனுப்ப வேண்டுமாம். டைப் பண்ணி அனுப்பினால் நலம். ஆனா ஈ மெயில் ஐடி கொடுக்கலை. போஸ்டல் மூலமாதான் அனுப்பனும். கடைசி தேதி 31, ஜனவரி 2012.

Related Posts Plugin for WordPress, Blogger...