எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

என் முதல் புத்தகம், “ சாதனை அரசிகள்”


என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வலைப்பதிவ சகோதரி, சகோதரர்களே..!

என்னுடைய முதல் புத்தகம் ”சாதனை அரசிகள்”.

வெளியிடுபவர்:- என் கணவர் திரு. லெட்சுமணன் அவர்கள்.

முதல் பிரதி பெற்றுக் கொள்பவர் :- நடிகர் ,எழுத்தாளர், உயர்திரு. பாரதிமணி ஐயா அவர்கள்.

பதிப்பகம்:- முத்துசபா பதிப்பகம்.

வெளியீட்டு தேதி - ஜனவரி 8 ஆம் தேதி, ஞாயிறு மாலை 6 மணிக்கு.

இடம் :- புத்தகக் கண்காட்சி டிஸ்கவரி புத்தக நிலையத்தின் 334 ஆம் அரங்கு.

விநியோக உரிமை ;- டிஸ்கவரி புத்தக நிலையம்.

விலை :- ரூபாய் 50/-

வெளீயீட்டு விழாவுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள். அன்பு அழைப்பு..!

புதன், 28 டிசம்பர், 2011

கட்டுக்கள்..:-

கட்டுக்கள்..:-
*****************

தற்காலிக கட்டுக்கள்..
கைக்கட்டோ கால்கட்டோ
நினைக்க வைத்தது
நிரந்தரமின்மையை..

காலூன்றிக்
கிளைத்திருந்த மரங்கள்
நதியோரம் கூட
சருகு தூவி
களைத்திருந்தன..

வெள்ளி, 23 டிசம்பர், 2011

செவ்வாய், 20 டிசம்பர், 2011

குறுந்தொ..கை.

குறுந்தொ...கை...
**********************

பொதி சுமந்த கழுதையாய்
திணறிய உள்டப்பியில்
வேண்டாத குறுந்தகவலெல்லாம்
விரைந்து குப்பையிலிட்ட கை..

சனி, 17 டிசம்பர், 2011

அட்சரேகை.. தீர்க்கரேகை...

அட்ச ரேகை தீர்க்க ரேகை
******************************
ஊர் ஊராய்
நகரும் வெய்யில்..
எல்லா காலத்திலும்
என்று அஷ்டமி.,
எது பௌர்ணமி...
ஹோரைகளும்
சகட யோகங்களும்
ராகுவாய் கடித்து
கேதுவாய் ஞானமூட்டி
ராஜயோகமும் விபரீதமாய்.

புதன், 14 டிசம்பர், 2011

இருக்கை..

இருக்கை..:-
**************

எனக்கென சில தானியங்கள்
சிதறிக் கிடக்கின்றன
அங்கங்கே..

குளிரிலும் இருளிலும் கூட
கதகதப்பாய் ஒரு கூடும்..

அமரும் மரங்கள் தோறும்
பழங்களோ பூக்களோ
ரசிக்க., ருசிக்க..,

திங்கள், 12 டிசம்பர், 2011

கடவுளை நேசித்தல்..ஆனந்த விகடன் சொல்வனத்தில்.

கடவுளை நேசித்தல்:-
********************************
கடவுளை ஒருபோதும்
நான் நேசித்ததேயில்லை.

பயம், துக்கம், நோய், விபத்து,
ப்ரயாணம் செய்யும்போது
அம்மாவின் முந்தானையாய்
அவரின் பேர் பிடித்துப்
பதுங்கி இருப்பேன்.

வியாழன், 8 டிசம்பர், 2011

டைட்டானிக். லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில். ( TITANIC)

டைட்டானிக். இந்தப் பேரைக் கேட்டதும் என்ன ஞாபகம் வருது உங்களுக்கு. ஒரு பிரம்மாண்டமான உல்லாசப் பயணக் கப்பலும்., அதில் சந்தோஷப் பறவைகளாய்த் திரிந்த இரண்டு காதலர்களும்தானே.. கடல் நிறைய ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கு. அதில் ஒன்று இந்த டைட்டானிக் கப்பல். நிறைய பள்ளத்தாக்குகளும்., மலைகளும்., எரிமலைகளும்., அபாயகரமான பனிப்பாறைகளும் கடலுக்குள்ளே மறைஞ்சிருக்கு. இந்தப் பனிப்பாறைகளில் மோதித்தான் டைட்டானிக் என்ற கப்பல் நிறைய பேரோட கனவுகளோட சேர்த்து வாழ்க்கையையும் மூழ்கடிச்சிருச்சு.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

நகரத்தார் திருமணங்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன.. முன்பெல்லாம் 7 நாள் நடந்த திருமணங்கள் 5 நாட்களாகி பின் 3 நாட்களாகி தற்போது இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன. அலமூஸ் குரூப்ஸ் என்று சின்னத்திரை நிகழ்சிகளுக்கு வீடியோ எக்விப்மெண்ட்ஸ் சப்ளை செய்யும் திரு வெங்கடாசலம் செட்டியாரின் இரண்டாவது மகனின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

வெள்ளி, 2 டிசம்பர், 2011

ரொமான்ஸ் மழை.. சூரியக்கதிரில்..



அலுவலகம் சென்றபின்னும்
மணத்துக் கொண்டிருந்தது
கணவனின் ஆஃப்டர்ஷேவ்
லோஷன் தடவிய முத்தம்.

மீசையில் டையிட்டுக்
காய்ந்த கணவனை
முத்தமிட்டமிட்டபோது
மனைவிக்கும் மீசை வந்தது.

வியாழன், 1 டிசம்பர், 2011

பெண்களுக்கு மட்டுமே வரும் நோய். யூராலஜி டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் பேட்டி.. லேடீஸ் ஸ்பெஷலில்

பெண்களுக்கு மட்டுமே என்று ஏற்படக்கூடிய உடற்கூறு சம்பந்தமான ப்ரத்யேகப் ப்ரச்சனைகள் பலவுண்டு. பூப்படைதல்., பின் மாதவிடாய்., பிள்ளைப்பேறு. கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள்., கர்ப்பப்பை கான்சர்., மார்பகக் கான்சர் என்று. அதில் முக்கியமானது சிறுநீர்க் கசிவு. இந்த சிறுநீர்க்கசிவு சிலருக்கு பலமான பிரச்சனையாக அமைந்து நிம்மதியைக் குலைத்துவிடும். இது சம்பந்தமாக ராயப்பேட்டை பொதுமருத்துவமனையில் சிகிச்சையளித்துவரும் டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் அவர்களை சந்தித்து நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்கு தீர்வுகள் வழங்குமாறு கேட்டோம். சென்னையிலேயே இந்தத்துறையில் சிகிச்சையளித்து வரும் பெண் மருத்துவர் இருவர்தான். அதில் இவர் முக்கியமானவர். ஒரு அறுவை சிகிச்சை முடிந்து அப்போதுதான் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்திருந்தார்.

புதன், 30 நவம்பர், 2011

வேரோடிக் கிடந்தவை.

மக்கிப்போன ஒரு
சினிமா ஸ்டூடியோ
அதிபரின் விசிட்டிங் கார்டு...
வியாபாரம் படுத்த ஒரு
வெளிநாட்டுத் தந்திக் காயிதம்...
நட்டமாய்ப் போன
பங்குச் சந்தை பத்திரங்கள்...
எந்தக் காலப் பிரபலங்களோ
கறுப்பு வெள்ளையில் கூட்டமாய்...

செவ்வாய், 29 நவம்பர், 2011

டாக்டர் ஆக முடியாத டாக்டர் ..ஆஸ்வின் ஸ்டான்லி ( போராடி ஜெயித்த பெண்கள்)

ஒரு பெண் படித்திருந்தால் எத்தனை டிகிரி வாங்கி இருக்கலாம். ஒன்று., அல்லது இரண்டு., அதிகபட்சம் மூன்று முதல் ஐந்து வரை இருக்கலாம்.. ஆனால் கன்யாகுமரி கரும்பாட்டூரைச் சேர்ந்த ஆஸ்வின் ஸ்டான்லி கிட்டத்தட்ட 9 டிகிரிகள் படித்திருக்கிறார்.. டாக்டராக ஆசைப்பட்டு ப்ளஸ்டூவில் சரியாக செய்யாததால் டாக்டர் படிக்க முடியாமல் இருந்தும் பி ஹெச்டி படித்து டாக்டராகி சாதனை நிகழ்த்தியுள்ளார்..

அப்பா ஸ்டான்லி சுபமணி., அம்மா அமலா பேபி., ஒரு தங்கை ஒரு தம்பி எனக் கொண்ட இவர் குடும்பம் மிகுந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவக் குடும்பம். இரவில் பைபிள் படித்து கூட்டு ஜெபம் செய்துதான் தூங்கச் செல்வார்கள். அப்பா தற்போது இல்லை. அவர் பிஸிகல் எஜுகேஷன் டீச்சராக இருந்தார். அம்மா . தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அக்கவுண்டன் சுப்பரிண்டெண்ட் ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மத நம்பிக்கை அதிகம் உள்ள குடும்பம் என்பதால் சினிமா ட்ராமா ஒன்றும் செல்வது கிடையாது.கதை புத்தகம் கூட படிப்பது கிடையாது. ஸ்ட்ரிக்ட் ரிலிஜியஸ் குடும்பம்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

சிரசாமிர்தம்...

சிரசாமிர்தம் வேண்டி
மந்தாரமலை பிடித்து

ஆதிஷேஷன்.,
வாசுகி தேடி..

கார்கோடகன்
காளிங்கன் தீண்டி

பதஞ்சலியைச்
சரணடைந்தேன்

வியாழன், 24 நவம்பர், 2011

சாயல்கள்...



ஒன்பதினாயிரம் நாட்கள்
கடந்திருக்கும்..
அவளுக்கும் அவருக்குமான உறவில்..

முதல் சந்திப்பிலேயே
அவர் முழுமையாய்
அங்கீகரித்துக் கொள்ள..
அவளுக்கு சில கேள்விகளும்
ஆசைகளும் மிச்சமிருந்தன..

புதன், 23 நவம்பர், 2011

பட்டிமன்ற நடுவர் மணிமேகலை.


போரூரில் நடந்த பட்டிமன்றத்தில் நல்ல நடுவராக தீர்ப்பு வழங்கியவர் என்று பாராட்டப்பட்டவர்., பள்ளிக்காலங்களில் கல்லூரிக் காலங்களில் பட்டி மன்றத்தைக் கலக்கியவர்., தற்போதும் அம்பத்தூரில் நடைபெற்ற கந்தர் சஷ்டி விழாவில் , ”நம் சமுதாயம் முன்னேற பெரியோரின் அனுபவம் தேவையா அல்லது ஆற்றல் மிக்க இளைஞர்கள் தேவையா” என்ற பட்டிமன்றத்தில்
பெரியோரின் அனுபவமே என பேசி முத்திரை பதித்திருப்பவர் மணிமேகலை..

செவ்வாய், 22 நவம்பர், 2011

உயிர்த்தெழும் கண்கள்..

உயிர்த்தெழும் கண்கள்..
**************************
உடைக்கப்படும் பழைய லாரிகள்.,
ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட
விட்டுச் செல்கின்றன..
போல்ட்டுகளும் நட்டுகளும்
அடுத்த உபயோகத்துக்காய்..

திங்கள், 21 நவம்பர், 2011

பதின்பருவ பி்ள்ளைகளின் அம்மா..

அற்புதம்தான்..
வளரும் பிள்ளைகளின்
அம்மாவாய் இருப்பது..!

கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் பொய்
கொஞ்சம் உரைத்தல்
கொஞ்சம் மறைத்தல்

சனி, 19 நவம்பர், 2011

ரஞ்சனா கிருஷ்ணனின் கல்யாண கலாட்டா. கீழே விழுந்த மாப்பிள்ளை..



தேனியிலிருந்து காஞ்சிபுரம் வந்தார்கள் மாப்பிள்ளை வீட்டினர். மிக நீண்ட பிரயாணத்தின் காரணமாய் மிகவும் சோர்வாகவே காணப்பட்டார் அவர். மண்டபத்தின் வாயில் படியேறும்போதே தடுக்கி விட்டது. என் தோழிகள் அனைவரும் ஏய் என்னப்பா இப்பவே அவர "பிளாட்" ஆக்கிட்ட என கிண்டல் அடிக்கத் தொடங்கினர்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

பத்மா இளங்கோவின் கல்யாண கலாட்டா..ஹவுஸ்ஃபுல் கார்.

பத்மா இளங்கோ..:-

எங்க திருமணத்தில் முதல் நாள் ஜானவாசத்தில் பெண்ணை அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக திருமணமண்டபத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அப்போ அந்த கார் முழுக்க குழந்தை குட்டிகள் எல்லாம் ஏறி உக்கார்ந்துகிட்டாங்க..

வியாழன், 17 நவம்பர், 2011

ரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.

ஒரு பெண்ணைப் பெற்றவர்களே அவளின் திருமணத்தைப் பற்றி பலவாறு சிந்திக்கையில் நான் இரண்டு பெண்களைப் பெற்றவள். மூத்த பெண்ணின் திருமணத்திற்கு தயார் ஆக நீண்ட காலம் இருந்தது. அவள் திருமணம் முடித்து திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த பெண் திருமணத்திற்கு தயாராக.
தங்கத்தில் செய்த முதலீடு அபாரமானது. சிறுக சிறுக நகைகள் சேர்த்து வைத்திருந்ததால் தங்கத்தின் இமய விலை என்னை மிரட்டவில்லை.

புதன், 16 நவம்பர், 2011

இன்சைட் க்ளோபல் க்ரூப்பின் இலவச ஆன்லைன் கல்வி ( INSIGHT GLOBAL GROUP -- FREE ONLINE EDUCATION)

கல்வியாளர்கள்., மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு.... புத்தக மூட்டைக்கு பை பை.. இனி பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் பொதி சுமக்க வேண்டாம்.இந்த சிறுவர் தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அழகிய திட்டம் ஆன்லைன் கல்வி. இதை அறிமுகப்படுத்தியுள்ளவர் எனது முகப்புத்தக நண்பர் திரு நாகராஜன் ரவி அவர்கள். இதற்கான அவருடைய உழைப்பு பிரமாண்டமானது., பரந்து விரிந்த அவருடைய கனவுகளைப் போல்.

செவ்வாய், 15 நவம்பர், 2011

எல் கேயின் கல்யாண கலாட்டா . செப் இவள் புதியவளில்.



திருமணங்களில் கலட்டாக்களுக்குக் குறைவிருக்காது. என் திருமணத்தில் நடந்த சிறு சுவாரஸ்யமான சம்பவம். கல்யாணத்திற்கு முதல்நாள் நிச்சயதார்த்தம் நடக்கும். அப்பொழுது மாப்பிள்ளைக்கு மோதிரமோ இல்லை கைக்கடிகாரமோ மச்சினன் போடுவான். இது வழக்கம். எனது திருமணத்தில் எனது மாமனார் மோதிரமும், மச்சினன் கடிகாரமும் போடுவதாக இருந்தனர்.

திங்கள், 14 நவம்பர், 2011

டின் டின்..!!! (THE ADVENTURES OF TINTIN: THE SECRET OF UNICORN (2011)ENGLISH.

அப்பாடா...! ரெண்டாவது நாளே எஸ்கேப்பில் டின்டினை பார்த்தாச்சு.!! அம்புலிமாமா., பாப்பா மலர்., பால மித்ரா., அணில் காமிக்ஸ்., ரத்னமாலா., பூந்தளிர்., கோகுலம் மட்டுமே படிச்சிகிட்டு இருந்த நான் திருமணமானதும் கணவரோட சேர்ந்து டின்டின், ஆஸ்ட்ரிக்ஸ்., டெனிஸ் த மெனேஸ் எல்லாம் படிச்சி ரசிகையாயிட்டேன். தமிழ்ல ராமு சோமு., டிங்குவைப் போல ஒரு பிள்ளை இருந்தால்( இது விளம்பரம்), ப்ளாண்டி., புதிர்பூமா., குட்டிக் குரங்கு கபீஷ்., அப்புறம் முக்கியமா வேதாளர் ( ஃபாண்டம் -- ஜானி வாக்கர் )., டயானா., மாண்ரெக்., லோதார்., இரும்புக்கை மாயாவி., சிஸ்கோ., பாஞ்சோ., ரிச்சி ரிச்., ரிப்கெர்பி., டெஸ்மாண்ட்ன்னு தீவிர காமிக் ரசிகை. டெக்ஸ்டர்., ஹாரி பாட்டர்., அட்வென்சர்ஸ் ஆஃப் ஜாக்கிஜான்.,மெர்மெயிட்., பாப்பாய்., ஹன்னா மோண்டனா., ப்ளாசம்., ஸ்மால் வொண்டர் .,பிகாச்சு., ஹீ மேன்., ஸ்பைடர் மேன்., பாட் மேன்., சூப்பர் மேன்., போகே மான்., பெண்டென்., எல்லாம் அதன் பின் வந்த செல்லங்கள்..

சனி, 12 நவம்பர், 2011

ஐந்தொகை.. (5).

1. மெல்ல திறந்த கதவிடுக்கில்
பாம்பாய் நெளிந்து வந்து
காலைக் கடிக்கிறது குளிர்..

2. கற்கள் நரகல் எல்லாம்
எச்சரிக்கையாய் தாண்டி.,
உனை தேடி வந்து
சொற்களால் மிதிபட்டு..

வெள்ளி, 11 நவம்பர், 2011

பங்கேற்பு..

பங்கேற்பு.:-
*******************
பின்புறமிருத்தல்
சௌகர்யமாய் இருக்கிறது
மஞ்சள் வெளிச்சங்கள்
ஆக்கிரமிக்காத
மெல்லிய இருட்டு.
இருக்கிறோம்
ஆனால் இல்லை..

எல்லா ஆட்டங்களிலும்
பங்கேற்பாளராக
பரிசுக் கோப்பையை
நூலிழையில்
தவறவிட்டு.

வியாழன், 10 நவம்பர், 2011

புதிய புத்தகம் பேசுது.. ஒரு பார்வை..

இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.


செவ்வாய், 8 நவம்பர், 2011

ஒளிந்து பிடித்தல்...

ஒற்றைச் சாரளம் வழி
வெண்துண்டாய் விழும் நிலவை
உண்டபடி பிரயாணிக்கும் கண்கள்..

கீற்றாய்ப் பிரிக்கும்
ஜன்னல் கம்பிகளிலிருந்து
மீனாய் உருவுகிறது நிலவை.

வெள்ளி, 4 நவம்பர், 2011

அடையாளக் குறிப்பு.

தாலி., மெட்டி
மோதிரம்., குங்குமம்.
திருமணத்தின்
அடையாளக்குறிப்பாய்
நான் மட்டும் சுமந்து..

வியாழன், 3 நவம்பர், 2011

போருக்குப் பின் அமைதி.

சாரட்டா., ஜட்காவா.,
ரிக்‌ஷாவா., ஜெட்டா.,
எல்லா சக்கரமும் ஒண்ணுதான்..
நீ கூட அமர்ந்து வந்தால்..

பறந்து கூட்டிச் செல்கிறாயா..
நடந்து கூட்டிச் செல்கிறாயா என்பதல்ல..
கூட இருந்து கூட்டிச் செல்கிறாயா..

செவ்வாய், 1 நவம்பர், 2011

கலைமகளில் சிறுகதைப் போட்டி.. ( முதல் பரிசு ரூ. 50,000/-)

கலைமகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.நூற்றாண்டு விழாவை ஒட்டி சிறுகதைப் போட்டியை அவரது குடும்பத்தினர் நடத்த உள்ளனர். பரிசு பெற்ற சிறுகதைகள் ஜூன் ஜூலை 2012 ஆம் இதழ்களில் பிரசுரிக்கப்படுமாம். முதல் பரிசு ரூ. 50,000/-. இரண்டாம் பரிசு ரூ.25,000/-. பிரபலமானவர்கள், புதியவர்கள் கலந்து கொள்ளலாமாம். 6 பக்கங்கள் ., ஒரு பக்கம் மட்டுமே வரும்படி எழுதி அனுப்ப வேண்டுமாம். டைப் பண்ணி அனுப்பினால் நலம். ஆனா ஈ மெயில் ஐடி கொடுக்கலை. போஸ்டல் மூலமாதான் அனுப்பனும். கடைசி தேதி 31, ஜனவரி 2012.

திங்கள், 31 அக்டோபர், 2011

கிராமத்துப் பெண்களைச் சாதிக்க வைத்த இருளர் இனத்தலைவி வசந்தி.(போராடி ஜெயித்த பெண் (12).

பழங்குடி மக்கள் இனங்களில் ஒன்று இருளர் இனம். மலைகளில் தேனெடுத்து வாழ்ந்துவந்த இவர்கள் இன்று எட்டிய உயரம் அவர்கள் வாழ்ந்த மலைச்சிகரங்கள் அளவு கூட இல்லை. இவர்களின் நலனுக்காக இன்னும் போராடிக்கொண்டிருக்கும் இருளர் இனத்தலைவி வசந்தியை சந்திக்க நேர்ந்தது. அவருடைய போராட்டங்களை இந்த மாதம் போராடி ஜெயித்த கதையாய்ப் பகிர்ந்தார்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மண்சட்டிகளும் ஆடுகளும்...

இக்கரையில் நான் மண்சட்டிகளுடனும்..
அக்கரையில் நீ உன் ஆடுகளோடும்..
அவரவர் சந்தைக்கு..

என் பின் கொசுவச் சேலை படபடக்க..
தார்பாய்ச்சிய வேட்டி.,
துரட்டியுடன் நீ..

கெண்டை கெளுத்தி.,
வாவல்., வவ்வா., சிறா
சிணுங்கித் திரிய..

வெள்ளி, 28 அக்டோபர், 2011

சார்பு நிலை..

சிரசு பலவானாலும்
அங்குசமற்ற மூளைகளோடு..

வெட்ட வெட்ட மகிஷாய்
கிளைக்கும் தலைகளோடு..

நாலாவதைக் கிள்ளி
எறிந்தாலும் எள்ளலோடு..

வியாழன், 27 அக்டோபர், 2011

சேமிப்பாளர்களுக்கு மட்டுமே..

முதலீடு சம்பந்தமான என் கட்டுரைகள் அனைத்தும் சிறிய நடுத்தர அளவில் முதலீடு செய்ய விரும்பும் மக்களுக்கான ஆலோசனைகள் மட்டுமே. அஞ்சலக முதலீடு., இன்சூரன்ஸ்., வங்கி டெப்பாசிட்டுகள்., பாண்டுகள்., தங்கம்., இதுபோன்றதே என்னுடைய ம்யூச்சுவல் ஃபண்ட் பற்றிய கட்டுரைகளும், பங்குச் சந்தை முதலீடு பற்றிய கட்டுரைகளும், ஏற்றுமதி பற்றிய கட்டுரைகளும். யாரையும் கட்டாயமாக பங்குச் சந்தையில் ட்ரேட் செய்யுங்கள் என கான்வாஸ் செய்யவில்லை. நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள் என நான் ஒரு கட்டுரையும் எழுதியதில்லை.

நம்பகத்தன்மை வாய்ந்த செபியின் பரிந்துரைப்படியான A++ கம்பெனிகளின் நம்பிக்கையான ஷேர்களையே., முதலீட்டில் ஒரு பாகமாக மட்டுமே செய்யும்படி ஆலோசனை மட்டுமே பகிர்கிறேன். இது யாருக்கும் கட்டாயமானதல்ல. தேவை ஏற்படின் உங்கள் பணத்தை முதலீடு செய்ய மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது. ஏற்ற இறக்கங்கள் குறித்தான சிந்தனைகள் முதலீட்டாளர்களுக்கு அவசியம்.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளிக்குத் தங்கம். நம்தோழியில்.

இன்றைய நிலைமையில் தங்கத்தோட விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய விலை ஏறினாலும் நகைக் கடைகளில் கூட்டம் இருந்துகிட்டுத்தான் இருக்கு. இது முதலீடுன்னும் ., இல்லை வேஸ்ட்ன்னும் சொல்றவங்க இருக்காங்க. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் கரன்சியையும் தீர்மானிக்கிற விஷயமா தங்கம் இருந்துகிட்டு இருக்கு. அரசாங்கத்தின் தங்கத்தின் இருப்பைப் பொறுத்து அந்த நாட்டின் கரன்சி மதிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் எவ்வளவு ஏறினாலும் தங்கத்தை வாங்குவோம். அது சிறந்த முதலீடுன்னு சொல்ற இருவரையும் ., இது முதலீடு இல்லைன்னும் சொல்றவங்க கிட்ட கருத்து கேட்டோம். முதலில்.,

திங்கள், 24 அக்டோபர், 2011

ஆனந்தவிகடன், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்கள்.

26.10.2011 விகடனில் கடவுளை நேசித்தல் என்ற என் கவிதை.. :)


லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் நிறைய ப்ரபலங்கள் எழுதி இருக்காங்க.. சாந்தா தத்.,திருப்பூர் கிருஷ்ணன், பாக்கியம் ராமசாமி,விமலா ரமணி, சாருகேசி, காந்தலெக்ஷ்மி சந்த்ரமௌலி, புஷ்பா தங்கதுரை, இரண்டு நாளில் 25 கோயில்கள் என்று ம. நித்யானந்தம், மனைவி கணவன் மகிழ்விப்பது எப்படி என்று டாக்டர் பாலசாண்டில்யன் இவங்களோட நம்ம வலையுலகப் பிரபல பெண் பதிவர்கள் ஹுசைனம்மாவும் அமைதிச்சாரலும் எழுதி இருக்காங்க. மிக அழகான குழலூதும் கண்ணனோட அருமையா வந்துள்ளது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர். எல்லாருடைய படைப்புக்கும் இடம் கொடுத்துட்டு மிகச் சின்னச் சிறுகதையா ஜ்வாலா எழுதின பாட்டியின் தீபாவளி எனக்கு ரொம்ப பிடிச்சுது. ஜ்வாலா வேறு யாரும் இல்லிங்க. நம்ம கிரிஜா ராகவன் மேடம்தான். மிக அருமையான கதை வாழ்த்துக்கள் மேடம். பெருநகரங்களில் தீபாவளி ஒரு விடுமுறைநாள் . அவ்வளவே .

வியாழன், 20 அக்டோபர், 2011

அதீதத்தில் வேதாளம்..

சந்தேகச் சுக்கான்கள்
கைப்பிடிக்குள் அடக்கி
காற்றுனக்கு சாதகமாக
பாய்மரப்படகு விரித்த
படுதாக்களைச் சுருட்டி
நினைத்த திசைக்கு
இழுத்துச் செல்கிறாய்

ஒற்றை வார்த்தை
துடுப்பா., தடுப்பா
அலமலங்க வைக்கிறது
எதிர்பாரா தத்தளிப்பில்.
லயமற்ற இசையில்.
ஆட்டத்தில் நீயும் நானும்
நமது வாழ்வும்..

புதன், 19 அக்டோபர், 2011

தேவதை அனுப்பிய தேவந்தி.

என் தாய்மொழியெனும் தேவதை தேவந்தியாய் கிடைத்தது கைகளில். தேனுண்ணும் வண்டுகள் முரல்வதுபோல ஒரு மயக்கத்தோடு தொடங்கியது அந்தப் பூவுக்கு அருகிலான பயணம். தேனை சேமித்து சேமித்து கெட்டிப்பட்ட கல்பூவாய் ஆகியிருந்தது அந்தப் பூ. சுற்றிச் சுற்றிவந்த வண்டு தாபத்தோடு மயங்கத் தொடங்கியது, பூவைச் சுற்றி..

செவ்வாய், 18 அக்டோபர், 2011

விக்னேஷ்வராவில் (துணை)விருந்தினராக..

ஜூன் 25 ஆம் தேதி ருக்கு அம்மாவுடன் விக்னேஷ்வரா லேடீஸ் க்ளப்பின் ஒரு விழாவுக்கு செல்ல நேர்ந்தது. அது போரூர் கவர்ன்மெண்ட் பள்ளியில் ப்ளஸ்டூ படித்து நல்லமார்க் வாங்கி தேறிய குழந்தைகளுக்குப் பணப்பரிசும், 18 குழந்தைகளுக்கு சீருடையும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கும் விழா. அந்த க்ளப்பை சேர்ந்த பத்மா மணி மேடம் சிறப்பு விருந்தினராக ருக்கு அம்மாவை அழைத்திருந்தார்கள். ருக்கு அம்மாவுடன் துணைக்கு சென்ற என்னையும் துணை விருந்தினராக அமரவைத்துவிட்டார்கள். லேடீஸ் ஸ்பெஷல் வாசகியர் அவர்கள் அனைவரும் என்பதும் என்னை ஓரளவு தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதும் மகிழ்ச்சியாய் இருந்தது. (நன்றி கிரிஜாம்மாவுக்கு) .

சனி, 15 அக்டோபர், 2011

போடுரா ஷட்டரை..

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி..டாஸ்மாக்குக்குஎல்லாம் 5 நாள் ஷட்டர். ப்ளாக்குல கூட கிடைக்கலியாம்.. வீக் எண்டானா எஞ்சாய் பண்ணனும்னு நினைக்கிற வீக் எண்ட் ப்ரியர்களே.. பார், பஃப், கிளப்., நம்ம ஜனத்த எல்லாம் வாழவச்சிகிட்டு இருக்குற டாஸ்மாக்குல கூட கறுப்பு, வெள்ளை, நீலம் அப்பிடின்னு எந்தக் கலர்லயும் கிடைக்கலியாம்.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஜெயிக்கப்போவது யாரு.?

சென்னை மேயர் மா. சுப்பிரமணியன் அவர்களின் சாதனைப் பட்டியல்.


முகப்புத்தகத்தில் இருந்து எடுத்து போட்டுள்ளேன். இந்த முறை சைதை தொகுதியில் போட்டி இடுகிறார்.

**************************************************************


சைதை சா துரைசாமி அவர்கள் நிறைய ஐஏஎஸ்களை உருவாக்கியவர். தமிழகத்தை பெருமையுறச் செய்தவர். சைதை சா. துரைசாமி குளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முகப்புத்தகத்தில் என்னுடைய நண்பரான அவருடைய தேர்தல் வாக்குறுதியை முகப்புத்தகத்தில் இருந்து எடுத்து போட்டுள்ளேன்.

வியாழன், 13 அக்டோபர், 2011

புதன், 12 அக்டோபர், 2011

ஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.

வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி? பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேகங்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன் அவர்களின் நூல்கள். முதலீடு சம்பந்தமாக ஏகப்பட்ட ஆலோசனைகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.. ஆனால் ஏற்றுமதி சம்பந்தமான ஒரு வலைப்பூவை இவர் நடத்துகிறார் என்பது ஆச்சர்யமாய் இருந்தது. ஏற்றுமதியும் இறக்குமதியும் நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கின்றன.

இவர் செட்டிநாட்டின் நெற்குப்பையை சேர்ந்தவர். வெளிநாட்டு வங்கியொன்றின் இந்தியப் பொது மேலாளராகமும்பையில் பணியாற்றுகிறார். மிக அருமையான தகவல்கள் இவர் வலைப்பூவில் கொட்டிக் கிடக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களின் கேள்விகளுக்கும் இவர் பதில் அளிக்கிறார்.

இறக்குமதி பற்றிக் கூறும் போது,

செவ்வாய், 11 அக்டோபர், 2011

யாதுமானவள்.. SHE .. THE END AND THE BEGINNING.



யாதுமானவள். அப்பா என்ற சொல்லுக்கு எத்தனை பதம் பிரிக்க முடியும். தோழன், வழிகாட்டி, தந்தை. , இன்னும் இறைவன் என்றும் சொல்லலாம். இன்றும் கூட போனில் நான் சிறிது அப்செட் ஆக இருந்தால் அப்பா அன்று இரண்டு மூன்று முறை கூட பேசுவார்.. அப்பாவுக்கு மகள் என்பது அவ்வளவு பொக்கிஷமான உறவு. அது இந்த குறும்படத்தில் இன்னும் பலமாய் ஒலித்திருக்கிறது. அப்பாவுக்கு மகளைப் பிடிக்கும். அம்மாவுக்கு மகனைப் பிடிக்கும் என்பது இயற்கை.

திங்கள், 10 அக்டோபர், 2011

விஜய் டிவியின் நீ்யா நானாவில் நாங்கள்.

ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டுக்கான ஸ்பெஷல் நீயா நானாவில் பங்கேற்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அது சம்பந்தமாக ஃபோனில் சுதா பேசியபோது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின் டிவியில் தொடர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார். நான் தொடர்களே பார்ப்பதில்லை என்பதால் அது பற்றிய சில கருத்துக்களைச் சொன்னேன். மெயினாக அதுக்கு அடிக்ட் ஆனவங்க பலபேரை பார்த்ததினால் அது பற்றியும் சொன்னேன். இந்தக் கருத்துக்களை நீயா நானா நிகழ்ச்சியில் சொல்ல முடியுமா, கலந்து கொள்ள விருப்பமா என கேட்டார். ஒப்புக் கொண்டேன். ( தொலைக்காட்சி சீரியல் கில்லர்களைப் பற்றி தெளிவுறுத்துவது என் கடமை என்பது போல:))

சனி, 8 அக்டோபர், 2011

காமமும் லஞ்சமும்..

தண்டவாளக்
கழிவறைகளைப் போல்
எங்கெங்கும் சிதறிக்
கிடக்கிறது காமமும் லஞ்சமும்..

அகலக்கால் வைத்து
தாண்டிச் செல்கின்றன
பெட்டிகளும் எஞ்சினும்..

வியாழன், 6 அக்டோபர், 2011

சதுரங்கம். எனது பார்வையில்.




செஸ் விளையாட்டில் எங்கெங்கெல்லாம் ராஜாவுக்கு செக் வர சாத்யக்கூறுகள் உண்டு. எதிர்பார்க்கும் இடத்தைத்தவிர மறைந்திருக்கும் எதிரிகளும் இருப்பார்கள். பலமுனைத்தாக்குதல்கள் இருக்கும். ராணி, குதிரை, யானை, தேர் என எல்லாம் இருக்கும். இது மூளை விளையாட்டு என்பதால் எல்லாப்பக்கமும கவனமாக விளையாட வேண்டும். இந்த மூளை விளையாட்டில் யார் யாரையெல்லாம் காவு கொடுத்தும் கடைசியில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை. பொதுவா ராணி எல்லாப்பக்கமும் சுழன்று ராஜாவைக் காப்பாற்றுவது சதுரங்கம். இந்தச் சதுரங்கத்தில் ராஜா எல்லாப் பக்கமும் சுற்றிச் சுழன்று ராணியைக் காப்பாற்றுகிறார்.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

சகுந்தலை துஷ்யந்தனும் பின்ன கென்னும் பார்பிகளும்.

சென்ற வருடம் போல் இந்த வருடமும் நண்பர் அருண்குமார் வீட்டில் கொலு. அவரது அம்மா தான் கையாலேயே செய்த நெட்டி பொம்மைகள் கொலுவை விவரித்தார்.

திங்கள், 3 அக்டோபர், 2011

தென்னக ரயில்வேயில் ( ஒரு நாற்றம் பிடித்த) பயணம்.

இந்தத்தலைப்பைப் பார்த்ததும் தென்னக ரயிலில் பாத்ரூமுக்குப் பக்கத்தில் 72 ஆம் நம்பர் சீட்டில் அமர்ந்து பயணித்தது என எண்ணி இருப்பீர்கள். இல்லை இல்லை இது தட்காலில் ஏசி கோச்சில் புக் செய்து ( டிக்கட் விலை 705 ரூபாய்) அனுபவித்த கொடுமை இது.

நார்மல் டிக்கெட் செகண்ட் க்ளாஸில் புக் செய்தால் வீட்டில் இருந்து ஏர் பில்லோ., ப்ளாங்கெட் எல்லாம் தூக்கி வருவோம். இது ஏசி என்பதால் இதை எல்லாம் எடுக்காமல் வந்தேன். ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸில் த்ரீடயர் ஏசியில் பதினொன்னரை மணி வண்டிக்கு இடம் கிடைத்தது. தட்காலில் புக் செய்பவர்களுக்கென்றே அப்பர் பர்த் வைத்திருக்கிறார்கள். மிகுந்த கஷ்டப்பட்டு ஏறினால் ஒரு தலையணை ஒரு போர்வை ஒரு பெட் ஸ்ப்ரெட் இருந்தது. கம்பளி இல்லை.கம்பளி இல்லாமல் எப்படி ஏசியில் இருப்பது. அப்போது கீழே இரு குழந்தைகள் கம்பளி போட்டு போர்வை போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளின் அம்மா எதிர் சைட் பர்த்தில் அமர்ந்து என் சீட்டைக் கைகாட்டி அது என்னுடையது என வாதிட்டார்கள். இல்லையம்மா இது என்னுடையது உங்களுடையது 38 அடுத்தது என சொல்லி விளங்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தியானம் என்பது..


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வியாழன், 29 செப்டம்பர், 2011

செந்தீ..

செந்தீ..:-
**************
கானகம் அழிந்தது.,
வனப்புலிகளோடு.
புள்ளிமான்களும் சிதைந்தன
அமைதி தேடி.
காட்டாறு பெருகியது
வாய்க்கால் அழித்து.
செங்கொடி செந்தீயானாள்
செங்கோட்டை எட்ட..

புதன், 28 செப்டம்பர், 2011

மழையாய் இருந்தபோது..

எங்கு பெய்கிறோம்
என்ற கணக்கெல்லாம் இல்லாமல்
பெய்யத்தோன்றும் போதெல்லாம்..

அடைமழையோ.,
தொறுதொறுப்போ.,
முணுமுணுப்போ.,

எங்கிருந்தோ சேர்ந்த அன்பை
சுமக்க முடியாமல் அலைந்து
எங்கேயோ வழிய ஊற்றி

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சிலையாய் நீ. பூவரசியில்.

சிலையாய் நீ..
*************************

காகங்கள் எச்சமிட
கழுகுகள் உன் தோளமர
தனியனாய்
சாலை ஓரமெல்லாம்
கை நீட்டியபடி நீ

வெய்யிலோ
மழையோ
கைதட்டி., காலில் விழுந்த
எந்தத் தொண்டனும்
குடைபிடிக்காமல்

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஒற்றை ஆள்.. தயாபாய். சமூகப் புரட்சியாளர். OTTAYAL. DAYABAI SOCIAL ACTIVIST.




ஒத்தை ஆள்.. என்னவெல்லாம் செய்ய முடியும்.. எல்லாம் முடியும் என்கிறார் தயாபாய். உலகையே புரட்டிப் போட முடியும். நீதி, நியாயம், நேர்மை, உழைப்பு, எளிமை, சமூகப் போராட்டம் என பல பரிமாணங்கள் உண்டு 60 வயது தயாபாய்க்கு. இவரது வாழ்வை ஆவணப் படமாக எடுத்திருக்கிறார் ஷைனி ஜேக்கப் பெஞ்சமின்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

பங்குச் சந்தையில் கலக்கும் திருமதி முத்துசபாரெத்தினம் ஆச்சி அவர்கள் பேட்டி.

”அந்த பேங்க் என்ன ஆச்சு? இன்னிக்கு ஏறுமா.. வச்சுக்குவோமா, வித்திருவோமா?”


இந்த ஷேர் மார்க்கெட் குரலுக்குச் சொந்தக்காரர் 65 வயதான முத்துக்கருப்பாயி ஆச்சி. ஆண்களே அஞ்சி ஒதுங்கும் பங்குச் சந்தையில் அநாயாசமாக விளையாடிக் கொண்டிருக்கிறார் ஆச்சி.

புதன், 21 செப்டம்பர், 2011

குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

குமுதம் .. எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத பெயர். வங்கிகள்., பல்கலைக்கழகங்கள்., கோயில் திருப்பணிகள்., தமிழிசைச் சங்கம்., சினிமா., எனப் பல துறைகளிலும் வேரோடிய நகரத்தார் பதிப்பங்களிலும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். நிறைய புத்தக நிறுவனங்கள் ( வானதிபதிப்பகம்., மணிமேகலை., மணிவாசகர்., செல்வி ) என பதிப்பங்களுக்கு நடுவில் தேவி ப்ரஸ் என்பதும் குமுதம் ஆதிகாலத்தில் வெளியிடப்பட்ட ஒரு இடமாகும். இன்றைய குமுதம் அலுவலகம் இருக்கும் இடத்தில்தான் தேவி ப்ரஸ் இருந்திருக்கிறது.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ராஜ குடும்பத்தில் ஒரு மாண்புமிகு மத்திய மந்திரி ப. சிதம்பரம் அவர்கள். ..

செட்டிநாட்டு அரச குடும்பத்தில் பெண் வழிப் பேரனாக லெட்சுமி ஆச்சி., பழனியப்ப செட்டியார் அவர்களுக்கு மைந்தனாக செப். 16 .,1945 இல் பிறந்தவர் நம் மத்திய உள்துறை அமைச்சர்., திரு ப . சிதம்பரம் அவர்கள். இவர் மனைவி நளினி., மகன் கார்த்திக். மருமகள் ஸ்ரீநிதி. ஸ்ரீநிதி ஒரு மருத்துவராகவும் டான்சராகவும் பரிணமிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.



செட்டிநாடு என அழைக்கப்படும் கானாடுகாத்தானில் செட்டிநாட்டு அரசரின் அரண்மனை இருக்கிறது. எங்கள் சொந்த ஊரான செட்டிநாட்டில் ஒவ்வொரு விஷேஷத்துக்கும் ( அனுவலுக்கும்) வரும் உறவினர்கள், நண்பர்களின் கட்டாய விசிட்டிங் ஸ்பாட் அது. ஹெரிட்டேஜ் வீடுகள் அருகி வரும் இந்தக் காலத்தில் செட்டிநாட்டுப் பகுதியில் அந்தக் காலப் பாரம்பரியத்தோடு இன்னும் பாதுகாக்கப்பட்டு விசிட்டர்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் அரண்மனை இது.

சனி, 17 செப்டம்பர், 2011

கழுமரம்.

கழுமரம்.:-
**************

பிரம்புகளும் சாக்பீசுகளும்
கரும்பலகைகளும்
ஓய்ந்து ஒதுங்கி

முட்டியிடுதலும்
பென்ச் மேலேறலும்
கிரவுண்டில் ஓடுதலும்

வாய் பேசி இம்போசிஷனும்
வகுப்பு வெளியே நிற்றலும்

வியாழன், 15 செப்டம்பர், 2011

முகஸ்துதி..

முகஸ்துதி..
*********************
வரிசையில் வரலாம்..
கருத்து அல்லது
விமர்சனம் சொல்ல..
அது முகஸ்துதியை
ஒட்டி இருத்தல் நலம்..

என் சபைக்கு வந்து
பல்லாண்டு பாடிச்
சென்றால் உங்கள்
சபைக்கும் வருவேன்
புகழ்பாட பாணனாகவோ
கேளிக்கை வழங்கும்
நர்த்தகியாகவோ..

புதன், 14 செப்டம்பர், 2011

வழிகாட்டும் ஒலி.. அவள் விகடனின்.. முதலீடு..

முதலீடு பற்றி நிறைய எழுதி வருகிறோம். நாட்டின் மற்றும் வீட்டின் செழிப்புக்கு காரணம் நல்ல வருமானம் மட்டுமல்ல., நல்ல சேமிப்பும் கூட அவசியம். நிறைய சம்பாதிப்பாங்க ஆனா சின்ன சின்னதாக கூட சேமிக்க மாட்டாங்க.. அதுக்கு நம்ம அவள் விகடனில் வழிகாட்டும் ஒலி வழிகாட்டுது.

போன மாதம் பங்குச்சந்தையில் வெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு பற்றி நான் பங்குச் சந்தை இயக்குனர் திரு நாகப்பனிடம் கேட்டு எழுதி இவள் புதியவளில் வெளியான கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் எளிமையான சேமிப்பு முறைகள் பற்றியும் நிறைய பேர் கேட்டு இருந்தாங்க. அவங்களுக்காக இது..

திங்கள், 12 செப்டம்பர், 2011

வலைத்தளங்களின் வரலாறு...

நம்மில் பெரும்பாலோர் கூகுளின் உதவியுடன் ப்லாகுகள்., வேர்ட் ப்ரஸ்., ஆகியவற்றில் எழுதி வருகிறோம். வலைத்தளங்களுக்கு என்று ஒரு வரலாறு எழுதப்படவேண்டும் என நினைக்கிறேன். இது சாமான்யர்களையும் சிருஷ்டிகர்த்தாக்களாக உலவ விட்டிருக்கிறது.

முன்பு பத்ரிக்கைகளுக்கு அனுப்பி பல மாதம் காத்திருந்து பின் வெளிவந்தபின்தான் எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். இப்போது ஃபேஸ் புக் நோட்ஸிலோ., எஸ் எம் எஸ் களிலோ மெயினாக ப்லாகுகளிலோ நாம் நினைத்ததைப் பகிர முடிகிறது. அதன் எதிர் வினைகளையும் உடனடியாக உணர முடிகிறது.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சாஸ்த்ரிபவனில் மகளிர் தினத்தில்.




INTERNATIONAL WOMEN’S DAY CENTENARY 1911-2011
CENTRAL GOVERNMENT WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION

Equal access to education, training and science and technology:
Pathway to decent work for women

19 th - TUESDAY APRIL 2011

CONFERENE HALL- I (A- WING) DURING : 3 TO 5.30 PM
SHASTRI BHAVAN CHENNAI

WELCOME ADDRESS : MANIMEGALAI - PRESIDENT
SECRETARY REPORT : SREE KUMARI - SECRETARY.
SPECIAL ADDRESS : JAYA SHREE - JT SECRETARY.
ANNUAL REPORT : PRABHAVATHY - ORG. SECRETARY,
CULTURAL PROGRAMME ; CHILDREN AND MEMBERS.


CHIEF GUEST : SMT. KAMALA SELVARAJ . MD.DGO. PHD.
OBSTETRICIAN AND GYNECOLOGIST
A PIONEER IN INFERTILLITY TREATMENT
GG HOSPITAL -CHENNAI

TOPIC :WOMEN GYNAC PROBLEMS

FELICITATION AND PRIZE DISTRIBUTION:
SMT. THENAMMAI
JOURNALIST . FREELANCER FOR 3 TAMIL MAGAZINES.

DR. SATHYA. CGHS . DISPENSARY
SHASRTI BHAVAN

SHRI.N.V.NAGARAJAN I.I.S.
JOINT DIRECTOR
DIRECTORATE OF FIELDPUBLICIY
SHASTRIBHAVAN

VOTE OF THANKS.:

PUSHPA DEVI- Treasurer

சாஸ்த்ரி பவனில் CGWEWA வுக்காக 19 ஏப்ரல் அன்று மகளிர் தினம் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்க அழைத்திருந்தார் யூனியன் லீடர் மணிமேகலை அவர்கள். அன்புத் தங்கை கீதாவின் மூலம் போராடி ஜெயித்த பெண்ணாக அறிமுகமான மணிமேகலை சிறந்த தோழியாகி விட்டார். டாக்டர் கமலா செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அந்த விழாவில் என் கருத்துக்களை மகளிரிடம் பகிர்ந்து கொள்ளவும் வெற்றி பெற்றவர்க்குப் பரிசுகளை வழங்கவும் அழைக்கப்பட்டிருந்தேன். அதற்கு சிறப்பு ப்ரஸ் கவரேஜாக தினமலர் நிருபரும், தீக்கதிரின் நிருபர் தங்கமும் அழைக்கப்பட்டிருந்தார்கள் .
Related Posts Plugin for WordPress, Blogger...