எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 அக்டோபர், 2011

கிராமத்துப் பெண்களைச் சாதிக்க வைத்த இருளர் இனத்தலைவி வசந்தி.(போராடி ஜெயித்த பெண் (12).

பழங்குடி மக்கள் இனங்களில் ஒன்று இருளர் இனம். மலைகளில் தேனெடுத்து வாழ்ந்துவந்த இவர்கள் இன்று எட்டிய உயரம் அவர்கள் வாழ்ந்த மலைச்சிகரங்கள் அளவு கூட இல்லை. இவர்களின் நலனுக்காக இன்னும் போராடிக்கொண்டிருக்கும் இருளர் இனத்தலைவி வசந்தியை சந்திக்க நேர்ந்தது. அவருடைய போராட்டங்களை இந்த மாதம் போராடி ஜெயித்த கதையாய்ப் பகிர்ந்தார்.


எஸ் டியில் 36 வது இனத்தில் 4 வது கேட்டகிரியை சேர்ந்தவர். இவரது தாத்தா பாட்டி பாம்புகடி., பூச்சிகடிக்கு மந்திரித்து வைத்தியம் பார்ப்பார்களாம். அவர்கள் சாமியிடம் குறி கேட்டல்., குறி சொல்லல்., பிரசவம் பார்ப்பது., மாதவிடாய்க்கு ., வெள்ளைப்படுதலுக்கு மருந்து கொடுப்பது., கூந்தல் தைலம் என தொழில் பார்த்ததாக சொன்னார்.

வசந்தியின் பூர்வீகம் காஞ்சிபுரம் ., செங்கல்பட்டை அடுத்த குளத்தாஞ்சேரி கிராமம் அம்மா ஊர். அப்பாவுக்கு வண்டலூரை அடுத்த கொலப்பாக்கத்தை அடுத்த ஊனமஞ்சேரி கிராமம். இவருக்கு 2 அம்மா 2 அப்பா. பெற்றவர்கள் கிருஷ்ணவேணி., அங்கமுத்து ஸ்ரீனிவாசன் சுப்பிரமணியன். வளர்த்தவர்கள் முனியம்மா., சுப்பிரமணியன். 6 வது குழந்தையாகப் பிறந்தவுடனே குழந்தையற்ற பெரியம்மா பெரியப்பாவுக்கு தத்து கொடுக்கப்பட்ட வசந்தி 10 வது வரை படித்து திருமணத்துக்குப்பின் எம் ஏ முடித்தார்.

சரோஜினி வரதப்பன் பள்ளியில் சர்டிஃபிகேட்டில் நாயக்கர் என சேர்த்ததால் குளத்தாஞ்சேரி நாட்டமையிடம் பேசி சர்டிஃபிகேட் வாங்கி தாசில்தார் மூலம் தன்னுடைய இனம் இருளர் இனம் என சான்றிதழ் வாங்கி இருக்கிறார். அதில் தொடங்கிய போராட்டம் இன்றுவரை தொடர்கிறது.

1990 திருமணம். கணவர் பெயர் சங்கரன். ராணி ப்ரேக் லிமிடட்டில் வேலை செய்தார். அப்போது இவர் எக்ஸ்போர்ட் கம்பெனியில் டெய்லரிங் செய்து வந்தார். சித்தாலப்பாக்கத்தில் இடம் வாங்கி வீடு கட்டி செட்டில் ஆகியுள்ளார். எப்போதும் வாடகை வீட்டில் இருக்கும் போது ஜாதி மதம் சொல்ல முடியவில்லையாம். எனவே சொந்த வீடு. மிகுந்த வேண்டுதலுக்குப்பின் பிறந்த (ஏறுகிடா., இறங்குகிடா என்ற வேண்டுதல் செய்து )இரண்டு குழந்தைகள் பெண் இந்துமதி. பையன் ராக்கேஷ்.

குழந்தைகள் பிறந்தபின் சுண்டல் , வடை முறுக்கு செய்து விற்றல் என செய்து பின் இட்லி வியாபாரமும் செய்திருக்கிறார். அப்போது இவர் (இருளர்) இனத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் (ITWWS -- IRULAR TRIBAL WOMANS' WELFARE ASSOCIATION) ஃபீல்ட் ஆஃபீசராக இருந்த உஷாராணியை அறிமுகம் செய்ய அவர் இவரிடம் ஈவினிங் க்ளாசஸ் எடுங்க என்று சொல்லி இருக்கிறார்.

NFE -- யில் ஈவினிங் ஆசிரியராகவும். வில்லேஜ் டெவலப்மெண்ட் ஆஃபீசராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பணி செய்யும் வேகம் பார்த்து மற்றவர்களுக்கு 5 கிராமங்கள் என்றால் இவருக்கு 10 கிராமங்கள் ஒதுக்கப்பட்டதாம். இதன்படி கிராம ஆய்வு., ட்ரைபல் இருளர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்., எத்தனை குடும்பம் இருக்கிறது அதற்கெல்லாம் ஜாதி சான்றிதழ்., ரேஷன் கார்டு., வாக்காளர் அட்டை., ரோடு., தண்ணீர் வசதி.,தெரு விளக்கு வசதி., இறப்புச் சான்றிதழ்., முதியோர் பென்ஷன்., கணவர் இறந்தபின் உதவித் தொகை., படிக்கும் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப்., இவைகளை எல்லாம் கேட்டுப் பெற்றுத்தருவதோடு மட்டுமல்ல. அவர்களின் பர்சனல் பிரச்சனைகளையும் கேட்டுத் தீர்த்து வைத்திருக்கிறார். வாராவாராம் 5 ரூபாய் ., 10 ரூபாய் என சேமிக்க வைத்துப் பின் மாதாமாதம் மொத்தமாகச் சேர்த்து வங்கிக் கணக்கு திறந்து அதில் போடும்படி செய்திருக்கிறார்.

வீட்டுமனை., வீடு., வீட்டுப் பட்டா ஆகியன பெற்றுத்தருவது., வீட்டு வரி கட்டி ரசீதுகளை சேமிக்கச் சொல்வது. பத்தாவது படித்தால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது என சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவ்வாறு சேவை செய்து காஞ்சீபுரம் கலெக்டர் ஆஃபீஸில் ITWWS அமைப்பை நல்ல வளர்ச்சிக்குக் கொண்டு வந்தார். அதில் நிறைய பெண்கள் இணைந்தார்கள். இதன் திட்ட இயக்குனர் கிருஷ்ணன் நல்ல நம்பிக்கை கொடுத்ததால் நல்ல துணிச்சலோடு செயலாற்ற முடிந்ததாம். நல்ல பயிற்சியும் கிடைத்ததாம்.

அந்த அலுவலகத்திலேயே செயலாளார் ஆக ஆனார். 3 மாதம் செகரெட்டரி . மத்த நேரம் எல்லாம் ஸ்டாஃப் ஆக பணி. 96 இல் சேர்ந்து 2003 இல் பணி செய்ய முடியாமல் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டி வெளி வந்தார்.

ஊனமஞ்சேரி கிராமத்தில் கலெக்டர் இறையன்பு இருக்கும்போது மழை பெய்து கஷ்டப்பட்டதால் குடிசை மாற்று வீடாக டாப்பர் ( சதுர) வீடு கட்டித்தரப்பட்டது. தளம் போட்ட வீடு 22 வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள் . பாண்டூர் கிராமத்திலும் செல்ஃப் ஹெல்ப் குரூப் உருவக்கி 10 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இதெல்லாம் இவரின் முயற்சியினால்தான். இரவு 2 மணி வரையிலும் பெண்கள் பிரச்சனைகள் என்றாலும் இருந்து பஞ்சாயத்துப் பண்ணி வைத்திருக்கிறார். எஸ் டி வார்டு மெம்பர் கோபி என்பவர் உதவியோடு இரண்டு செல்ஃப் ஹெல்ப் குரூப் உருவானது.

சிமெண்ட் ரோடு., பிள்ளைகள் பள்ளிக்கூடம்., தண்ணீர் டாங்க்., ரேஷன் கடைக்கான இடம்., சமுதாயக்கூடம் ஆகியன கட்டப்பட்டன. மேடவாக்கத்தில் ரெங்கநாதபுரம் ஏரிக்கரையில் குடியிருந்த பெண்களுக்கு 500 , 1000 சேமிக்கச் சொல்லிக் கொடுத்தது., மேலும் பாட்டு நடனம் ஆகியன கற்றுக் கொடுத்தது எல்லாம் தன்னுடைய சேவைகளாக சொல்கிறார்.

மலைசாதி என்பதற்காக 17 பிள்ளைகளுக்கு இருளர் இனச்சான்றிதழ் வாங்கியது., சிட்லப்பாக்கத்தில் பாலம் .,ரோடு லைட் ., தண்ணீர் டாங்க் என கிடைக்கப் போராடி இருக்கிறார்.

இப்போது பள்ளிக்கரணை மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெண்கள் எல்லாருக்கும் சேர்த்து வானவில் பெண்கள் நலச்சங்கம் என ஒன்றை உருவாக்கி சேவை செய்து வந்தார். மேலும் எஸ்டி., இருளர் இனப் பெண்களைச் சேர்த்து (1) தலித் பெண்கள் கூட்டமைப்பு ., (2) இருளர் பெண்கள் கூட்டமைப்பு, ( 3) பஞ்சாயத்தளவில் ஒருங்கிணைந்த பெண்கள் கூட்டமைப்பு என 3 கூட்டமைப்புக்கள் உருவாக்கினார்.

50 சுய உதவிக்குழுக்கள் இருந்தன. பெண்கள் சுழல் நிதி உருவாக்கப்பட்டது. இந்தியன் வங்கியில் 1 லட்சம் வரை லோன் கிடைத்தது. இதன் மூலம் பொம்மை ( 15 விதமான) செய்தல்., டெய்லரிங் எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டன. அதில் படித்து சர்டிஃபிகேட் வாங்கி சில பிள்ளைகள் வேலை செய்து பணம் சம்பாதித்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். இதுபோல 45 சர்டிஃபிகேட்டுகள் வாங்கி கொடுத்திருக்கிறார்.

சிட்லப்பாக்கத்தில் .,”அகில உலக பெண்கள் தின விழா “ நடத்தி 2000 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். BDO OFFFICE இல் இருந்து RWO . வரை மற்றும் பஞ்சாயத்துத்தலைவர்., கவுன்சிலர்., நாட்டாமை ., வார்டு உறுப்பினர்., மகளிர் குழுத்தலைவிகள்., கல்விக்குழு மெம்பர்கள்., ஸ்கூல் டீச்சர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள் , 3 வருடம் சிறப்பாக நடந்தது இது.

வானவில் பெண்கள் அமைப்பு மூலம் ரேஷன் கடை., முதியோர் பெஷன்., சமுதாயக்கூடம்., செல்ஃப் ஹெல்ப் குரூப் கட்டிடம்., பொதுக்கழிப்பிடம் என கட்டித்தர செய்திருக்கிறார். நம்பிக்கை பெண்கள் அமைப்பையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 5000 பெண்கள் சங்கரா மருத்துவமனையில் மெம்பராகி இருக்கிறார்கள். இவர்களுக்கு சுகர் செக்., கண் பார்வை சோதனை., கிட்னி ஸ்டொன்., ஜெனரல் செக்கப் எல்லாம் செய்து பெண்களுக்கு உதவி இருக்கிறார்.

இதில் 2005 இல் ஒரு அவார்டு சுகாதாரத்துக்கு என கொடுத்து இருக்கிறார்கள். எழுத்தாளர் மாநாட்டில் ஆஷா நிவாஸ்., சிவகாமி ஐஏஎஸ்., கிறிஸ்டியா சாமி ஆகியோர் இவர் இருளர் பெண்களுக்காக எப்படி போராடினார் என விளக்கி சிறப்பித்து கூறினார்கள். மதுரையில் தமுக்கம் மைதானத்தில் இரவு கலைவிழாவில் பெண்கள் முன்னணி என்ற பேரில் சாதனைப் பெண்மணி என்ற அவார்டு வழங்கப்பட்டது. டெல்லி., சூரத்., அஸ்ஸாம்., எல்லா இடமும் ட்ரைபல் வெல்ஃபேருக்காக போய் வந்திருக்கிறார்.

தமிழக ஆதிவாசிக் கூட்டமைப்பில் தமிழ்நாடு ஈரோடு பாலன் மாநிலத்தலைவர்.இவர் துணைத்தலைவர். பொதுச்செயலாளர் இருளாண்டி. செல்வகுமார். இன்னொருவர் சுடரொளி சுந்தரம். இது 2007 முதல் 2010 வரை தொடர்ந்தது. திருவள்ளூரில் ஆரணி., பொன்னேரி மீஞ்சூர் போன்ற 15 ஊர்களுக்கு ஆய்வு செய்ய செல்வார். இதில் வரதராசன் தலைவர். இவர் மெம்பர். “திருவள்ளூர் ஆதிவாசி இருளர் நலச்சங்கம்” என அறிவித்து மாதவரத்தில் ஆஃபீஸ் போட்டு செயலாற்றி வந்தார்.

நிறைய பிள்ளைகளின் படிப்புக்கு உதவி செய்து., ஸ்காலர்ஷிப் கிடைக்கச் செய்து., திருமணம் செய்தும் வைத்திருக்கிறார். பிபிஏ., டீச்சார் ட்ரெயினிங்., எல்லாம் படித்து பணிபுரிந்துதன் குடும்பத்தை மேலேற்றிச் செல்கிறார்கள் உதவி பெற்ற மாணவர்கள்.

இப்போதும் “ தோழமை ஆதிவாசிக் கழகம்” மூலம் நெட்வொர்க்கில் இருக்கிறார்.பாலன்தான் தலைவர். அப்புறம் முக்கியமான் விஷயம் இவர் சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எம் ஏ., சோஷியாலஜியில் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பிறந்தபின்பும் படித்துப் பட்டம் பெற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இன்னும் எம் எஸ் டபிள்யூவும் ( மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்) படிக்கப் போகிறார். இன்னும் என்ன வேண்டும். ஒரு பெண் எப்போதும் தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கும் போது அவர்முன் எதிர்ப்படும் பிரச்சனைகள் எல்லாம் தூசாகாதோ..

டிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் வசந்தி பற்றிய இந்தக் கட்டுரை ஜூலை 2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.:)

13 கருத்துகள்:

  1. சக்திக்கு முன் சிவமே நிற்க முடியாது. பின்தங்கிய இனமாக இருந்தால் என்ன... முன்னேறத் துடிப்பவரை மூடிபோட்டுத் தடுத்துவிட முடியாது என்பதை உணர்த்தியதுடன் பலருக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இவரது வாழ்க்கை அமைந்துள்ளது. படித்தது அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. வசந்திக்கு வாழ்த்துக்கள் !



    உண்மைவிரும்பி.
    மும்பை.

    பதிலளிநீக்கு
  3. போராடி ஜெயித்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். பிறருக்கும் பயன் படும் மிக நல்லதோர் பதிவு. vgk

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு சமூகத்திற்கும் இப்படி ஒருவராவது வேண்டும்..
    சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சாதனைப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்! தேடிப் பதிவிடும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. போராடி ஜெயித்த பெண்ணிற்கும்,அதனை வெளிப்படுத்திய பெண்ணிற்கும்ம் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. இருளர் இனப்பெண்ணின் வெற்றிக் கதை அருமை அம்மா.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  8. பாராட்டுக்குரிய பெண்மணி. அவரைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  9. நன்றி கணேஷ்

    நன்றி எனது கவிதைகள்

    நன்றி கோபால் சார்

    நன்றி மகேந்திரன்

    நன்றி ராஜா

    நன்றி மாதவி

    நன்றி ஸாதிகா

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  11. Why Ladies like her don't run for office (town counselor or MLA)?
    People like her should become MLA's.
    They will serve for the whole community.

    பதிலளிநீக்கு
  12. அவரிடம் தெரிவிக்கிறேன் வலைஞானி. நன்றி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...