எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

பரோக்ஷ் !

பரோக்ஷ் ! பார்த்ததும் அதிர்ந்தேன். ஆனால் நச் என்ற முடிவில் திகைத்தேன். இப்படியும் எடுக்க முடியுமா ஹேட்ஸ் ஆப் டு தெ டைரக்டர் கணேஷ் ஷெட்டி !.

பகிர்ந்தமைக்கு நன்றி சுசீலாம்மா !

///கர்நாடக மாநிலம் உடுப்பியருகே உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த [2015] . ஒரு மிகச்சிறிய உண்மைச்சம்பவத்தைத் துளு மொழியில் சுவாரசியமான குறும்படமாக்கியிருக்கிறது கணேஷ் ஷெட்டியின் ’’பரோக்‌ஷ்’’. தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பை ஒட்டி அதையே வாழ்வாதாரமாய்க்கொண்டு வாழும் ஒரு குடும்பம்.

சாப்பிட வாங்க – மின் புத்தகம். முன்னுரை

சாப்பிட வாங்க – மின் புத்தகம்.

THERE IS NO SINCERE LOVE THAN THE LOVE OF FOOD – GEORGE BERNARD SHAW.

ஃபிப் மாசம் அனுப்பிய மின்னூலுக்கு ஜூலை மாசம் முன்னுரை தருவது கொஞ்சம் இல்ல ரொம்பவே சோம்பேறித்தனமான செயல்தான். மன்னிச்சூ வெங்கட் சகோ. J

உணவில்லாமல் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்படலை இன்னும். உணவுதான் நம் ஊனாய், உணர்வாய் மாறி உயிர் கொடுக்குது. சாதாரணமா நாம் தினம் சாப்பிடும் சாப்பாட்ல ஏகப்பட்ட பிடிக்கும் பிடிக்காதது வைத்திருப்போம். ஆனா பேச்சிலரா வாழும் ஊரில் மற்றும் பயணம் செய்யும் ஊரில்  கிடைக்கும் உணவுகளைப் பிடித்தோ பிடிக்காமலோ சாப்பிட வேண்டி வரும். அதே பழக்கத்துல எல்லா உணவுகளையும் சாப்பிடப் பழகிடுவோம். அதுவே சிறப்புத்தான்.

மேலும் ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் சீசனல் மற்றும் ரீஜனல் பொருட்கள், காய்கனிகள்  கொண்டு தயாரிக்கப்படும் உணவுதான் அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றதா இருக்கும். அதை நான் டெல்லியில் இருந்தபோது உணர்ந்திருக்கேன். எக்ஸ்பெஷலி விண்டர்ல நிறைய காய் சீப்பா கிடைக்கும். அதை சாப்பிட்டா நல்லது. ஆனா அப்போ தமிழ்நாடு மாதிரி அதிகம் புளி சேர்த்த உணவுகள் ஜீரணமாகாது. அதைத் தவிர்க்கணும்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

குருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்

பிதாரில் 1948   இல் கட்டப்பட்ட  இந்த குருத்வாரா  சீக்கியர்களின்  சிறந்த வழிபாட்டுத்தலம். இது முதல்  குரு குருநானக்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.



குங்குமம் டாக்டரில் ஹெல்தி ரெசிபி கும்மாயம் !

கும்மாயம்/ஆடிக்கூழ்:-




கொம்புத்தேனும் குணத்தேளும்

1541.செப்டம்பர் வந்திருச்சா. :)

#ஹைபர்நேஷன்லேருந்து சீக்கிரம் முழிச்சிட்டனா :)

1542. கையைத் தொட்டுத் தொட்டுப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறது  மழை.

1543. SARVESHU KALESHU MAMANUSMAR.. ( சதா சர்வ காலமும் நாமஜெபம்..)

1544. ஸ்டேடசை லைக் பண்றத விட ஃபோட்டோவை லைக் பண்றது சிக்கல் இல்லாத வேலையா இருக்கு :)

1545. குடிக்காதே

குடிக்காதேன்னு சொன்னாலும்

கேக்க மாட்டேங்குது

சாப்பிடும்போது தண்ணி குடிக்காதேன்னா

ரெண்டு வாய் சாப்பிட்டதுமே.  விக்குறமாதிரி இருக்கே. :)

#செல்ஃப்_அட்வைஸ். :)

1546. அடிக்கடி சிஸ்டத்துல காணாம போயிடுறமே.. வீட்டுல இருக்கவங்க நம்மள கண்டுபிடிச்சு ரியல் வேர்ல்டுக்குக் கொண்டு வர வேண்டியிருக்கே.. இது.. INCEPTION AA SPY KIDS AA.. :) : )

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

குற்றங்களே நடைமுறைகளாய் – ஒரு பார்வை.




குற்றங்களே நடைமுறைகளாய் – ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

புதன், 9 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி வாழ்த்து அட்டைகள்.



பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளிக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் இருந்திருக்கு. இப்போ எல்லாம் ஈ கார்ட்தான். அதுவும் வாட்ஸப்பில் எக்கச்சக்கமாகக் குவியும்.

ஆனா போஸ்ட்மேன் கொண்டு வந்து தரும்போது அந்தக் கார்டை வாங்கி யார் அனுப்பி இருக்காங்கன்னு பார்த்து மகிழ்வதில் ஒரு சஸ்பென்ஸும் த்ரில்லும் இருந்ததை மறுக்க முடியாது. நாம் ரொம்ப ஸ்பெஷல் ஆயிட்டமாதிரி ஃபீல் பண்ண வைப்பவை இந்த பர்த்டே கார்ட்ஸ்தான். 

அதுவும் கல்லூரிப் பருவத்தில் அசெம்ப்ளியில் நம்ம பிறந்தநாளை அனௌன்ஸ் செய்து கார்ட்ஸை கலெக்ட் செய்துக்குங்கன்னு ப்ரசிடெண்ட் கத்தையா கார்ட்ஸைக் காட்டும்போது ஏற்படுற உற்சாகத்துக்கு அளவில்லை. பந்தாவாப் போய் வாங்கிட்டு அன்னிக்குப் பூரா கெத்தா அலையிறது J

ரொம்ப முன்னே எல்லாம் தீபாவளிக்கு விதம் விதமா தீபம் கார்ட்ஸும்., பொங்கலுக்குப் பொங்கல்பானை, கரும்பு, விவசாயி, சூரியன் கோலங்கள் ஆகிய கார்ட்ஸும் , புத்தாண்டு கிறிஸ்மஸ் அப்பிடின்னா கிறிஸ்மஸ் தாத்தாவும் மெழுகுவர்த்திகளும் ஸ்பெஷலா இடம் பெற்றிருக்கும்.

அதுவும் பொங்கல் தீபாவளின்னா அநேகமா சாமி பட கார்ட்ஸ்தான். முருகன் ரொம்ப கார்ட்ல இருப்பார். உள்ளே பிரிச்சா ஆறு தாமரையும் முருகனும் இதழ் இதழா எழுந்து வர்றமாதிரி கட் பண்ணி வைச்சிருப்பாங்க. அதுமாதிரி இயற்கைக்காட்சிகள்ல பறவைகள் பூக்களை கட் செய்து தத்ரூபமா நகர்றமாதிரி கட் பண்ணி இருப்பாங்க. அது ஒரு த்ரில் அனுபவம். 

அதே போல் சில மியூசிக் பர்த் டே கார்ட்ஸ திறந்தா அது ஆட்டோமேட்டிக்கா ஹாப்பி பர்த்டே பாட்டெல்லாம் பாடும். ஓராயிரம் தரம் எல்லாரையும் ஓரக்கண்ணால பார்த்துக்கிட்டே அந்தக் கார்டை மடக்கி மடக்கிப் பிரிச்சு ஹாப்பி பர்த்டே பாடலை ரசிக்கிறது உண்டு.  J
 
மத்த நாட்கள்ல அதிகம் பேசாத அல்லது லெட்டர் காண்டாக்ட் இல்லாத  உறவு முறைகள் கூட இந்த விசேஷ தினங்கள்ல ஒண்ணு கூடி கார்ட் அனுப்பிருவாங்க. ’உங்கள நாங்க மறக்கல’ங்கிறமாதிரி.
அப்பிடி வந்த பல கார்டுகள சேமிக்கல.. இது ஏதோ மிச்சம் மீதி இருந்தத எடுத்துப் போட்டிருக்கேன். J

ஒன்றிரண்டு இதுல திருமண மற்றும் திருமணநாள் வாழ்த்தும், பரிட்சைக்கு வாழ்த்தும், முதல் தரத்தில் வெற்றிபெற்றதுக்காகவும் அனுப்பப்பட்டிருக்கு. 

அதுவும் வசந்திக்கா, சுசீலாம்மான்னு என் மனசுக்குப் பிடிச்சவங்க அனுப்புன கார்டைப் பார்த்ததும் ரொம்ப நெகிழ்ந்து போயிட்டேன். சுசீலாம்மாவோட பல கடிதங்கள் வேற இன்னிக்குப் படிச்சேன். இந்தக் கடிதப் போக்குவரத்து எல்லாம் எப்ப நின்னுச்சுன்னு நினைச்சா திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகள்ல குறைஞ்சிருக்குன்னு தோணுது. 1998 லேருந்துதான் செல்ஃபோனே உபயோகிக்கிறேன்..அதிலும் 2016 லேருந்துதான் செல்ஃபோனில் இண்டர்நெட் பார்க்கிறேன். இப்போ ஒரு செகண்ட்தான். எல்லாரையும் ரீச் பண்ணிடலாம். ஆனா அப்போ எல்லாமே லெட்டர்தான். J






இந்தப் ஸ்பெஷல் அக்கேஷனல் வாழ்த்துக்களை என் நாத்தனார்கள், கொழுந்தனார்கள் & அவர்கள் குடும்பத்தினர், மாமனார், மாமியார், தோழிகள் ( மீனா, மீனாக்ஷி, உமாமகேஸ் ( பிரபல எழுத்தாளர் ) , சுசீலாம்மா, வசந்திக்கா, எனது மாமா ( மலேஷியாவிலிருந்து மற்றும் உறவினர்கள் அனுப்பி இருக்கிறார்கள். !

உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-


காரைக்குடி வீடுகளில் சுவரில் 801*வரந்தை ஓவியங்கள் பார்த்திருக்கிறேன். ஜன்னல்களில் ஓவியங்கள் பார்த்திருக்கிறேன். 802*ரவிவர்மா ஓவியப்படங்கள் 803*தஞ்சாவூர் ஓவியங்கள் ஃப்ரேமிடப்பட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஒரு வீட்டில் 804*உத்தரத்தில் ஓவியத்தைப் பார்த்தேன்


நடுவில் இருக்கும் சாண்ட்லியரும் மத்த ஓவிய வேலைப்பாடுகளும் அருமையாக இருந்தன. எனாமல் பெயிண்டிங்கா தெரியவில்லை.



வீடுகளின் 805*மேங்கோப்புக்களை ( சீலிங் ) தேக்கு மரத்தால் அமைத்திருப்பார்கள். அந்த மேங்கோப்புகளுக்கு சப்போர்ட்டாக மர உத்தரங்கள் இருக்கும். இந்த உத்தரங்களில் நான்கு ஓவியங்களை மட்டும் ஒரு இல்லத்தில் பார்த்தேன். இன்னும் கூட இருக்கலாம்.


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

பொண்ணுக பெஞ்ச்.

பொண்ணுக பெஞ்ச்.

பள்ளிகளில், கல்லூரிகளில் மெக்காலே கல்வித் திட்டம் தேவையில்லை, ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை, தாய்மொழிக் கல்விதான் தேவை என்று அவ்வப்போது சர்ச்சை எழுந்து கொண்டிருக்கிறது.

ஆனால் ஜாலியா இருக்க விடாம படி படின்னு  வீட்டை விட்டுத் தொரத்துறாய்ங்க., நம்மள எல்லாம் பள்ளிக்கூடத்துக்கும் காலேஜுக்கும் அனுப்பிட்டாய்ங்களே என்று கஷ்டப்பட்டுப் படிப்பதுபோல் ரெண்டு புக்கைக் கையில் வைத்து பாவ்லா காட்டிக் கொண்டு நண்பர்களுடன் ஊர்சுற்றிக்கொண்டு அரட்டை அடிக்கும் பசங்க பொதுவாக அமரத் தேர்ந்தெடுப்பது வகுப்பறையின் கடைசி பெஞ்ச்தான். அதுனால அந்த பெஞ்சுக்கு மாப்பிள்ளை பெஞ்ச்னு பேரு. 

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

வாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.


வாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

பீரங்கிக்கும் அஞ்சாத வீரன் அழகுமுத்துக்கோன்

பீரங்கிக்கும் அஞ்சாத வீரன் அழகுமுத்துக்கோன்

.

.



புதன், 2 ஆகஸ்ட், 2017

தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள் :- காற்றுவெளி.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ்வளர்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதில் 21-ம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் நடக்கப் போகும் கருத்தரங்கத்துக்கு பின்வரும் 21 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை அனுப்ப விழைபவர்கள் அனுப்பலாம்.

தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் – பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2017. https://honeylaksh.blogspot.com/2017/07/2017.html

இக்கட்டுரை ஆய்வுக்காக நான் தேர்ந்தெடுத்த தலைப்பு மின்னிதழ்கள் பற்றியது.

"தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். "

எனவே மின்னிதழ்கள், இணைய இதழ்கள் பற்றி முழுமையான விபரம் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் மின்னிதழ் ஆரம்பிக்கப்பட்டது எப்போது ? ஆரம்பித்தது யார், எந்த வருடம், எதை முக்கியத்துவப்படுத்தி இது செயல்படுகிறது , இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியில் இதன் பங்கு, இதுவரை இதன் ஆசிரியராக, நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் யார், மின்னிதழ் நடத்துவதில் மேற்கொண்ட சங்கடங்கள், இடையூறுகள், அவற்றை எப்படிக் களைந்தீர்கள்,  இம்மின்னிதழ் மூலம் அடைந்த சாதனைகள், விருதுகள், சிறப்புத் தகவல்களை, சிறப்பிதழ்கள், பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்

/////திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், வல்லமை,அதீதம், முத்துக் கமலம்,  வலைச்சரம்,  சுவடு, பூவரசி, தகிதா, புதிய” , அவள் பக்கம்தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல், கவிசூரியன்.////

ஏ 4 தாளில் நான்கு பக்கமே வரும் கட்டுரை என்பதால் சுருக்கி அனுப்பவேண்டும். ஆனால் என் வலைத்தளத்தில் ஒவ்வொரு மின்னிதழ் பற்றியும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விரிவான தகவல்கள் வெளியாகும்.

எனவே உங்கள் மின்னிதழ்கள் பற்றிய விரிவான தகவல்களை எனக்கு honeylaksh@gmail.com என்ற ஈமெயில் ஐடிக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன். வேறு மின்னிதழ்கள் பற்றியும் தெரிந்தால் அதன் ஈமெயில் ஐடி , விபரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

எல்லா மின்னிதழ்கள் பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பாகஇது அமையவேண்டும் என்பது எனது பேரவா.

வரும் ஜூலை 15 க்குள் அனுப்ப வேண்டும் என்பதால் ஜூலை 10 ஆம் தேதிக்குள் உங்கள் மின்னிதழ் விபரங்கள் எனக்குக் கிடைத்தால் நலம்.

அன்பும் நன்றியும்,

தேனம்மைலெக்ஷ்மணன். 


என எல்லா மின்னிதழ்களுக்கும் நான் மின்னஞ்சல் அனுப்பியும் நான்கைந்து மின்னிதழ்களில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தன. எனவே அவற்றை வைத்து என் ஆய்வை முடிக்கமுடியாது என்பதால் என் வலைத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.


இதை அவரது சுயவிவரத்தில் இருந்து எடுத்தேன். நன்றி முல்லை அமுதன் சார்.




முல்லைஅமுதன் எனும் பெயரில் 80களில் இருந்து எழுதி வரும் மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.  

தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். - வலைச்சரம்...



காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ்வளர்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதில் 21-ம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் நடக்கப் போகும் கருத்தரங்கத்துக்கு பின்வரும் 21 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை அனுப்ப விழைபவர்கள் அனுப்பலாம்.

தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் – பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2017. https://honeylaksh.blogspot.com/2017/07/2017.html

இக்கட்டுரை ஆய்வுக்காக நான் தேர்ந்தெடுத்த தலைப்பு மின்னிதழ்கள் பற்றியது.

"தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். "

எனவே மின்னிதழ்கள், இணைய இதழ்கள் பற்றி முழுமையான விபரம் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் மின்னிதழ் ஆரம்பிக்கப்பட்டது எப்போது ? ஆரம்பித்தது யார், எந்த வருடம், எதை முக்கியத்துவப்படுத்தி இது செயல்படுகிறது , இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியில் இதன் பங்கு, இதுவரை இதன் ஆசிரியராக, நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் யார், மின்னிதழ் நடத்துவதில் மேற்கொண்ட சங்கடங்கள், இடையூறுகள், அவற்றை எப்படிக் களைந்தீர்கள்,  இம்மின்னிதழ் மூலம் அடைந்த சாதனைகள், விருதுகள், சிறப்புத் தகவல்களை, சிறப்பிதழ்கள், பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்

/////திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், வல்லமை,அதீதம், முத்துக் கமலம்,  வலைச்சரம்,  சுவடு, பூவரசி, தகிதா, புதிய” , அவள் பக்கம்தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல், கவிசூரியன்.////

ஏ 4 தாளில் நான்கு பக்கமே வரும் கட்டுரை என்பதால் சுருக்கி அனுப்பவேண்டும். ஆனால் என் வலைத்தளத்தில் ஒவ்வொரு மின்னிதழ் பற்றியும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விரிவான தகவல்கள் வெளியாகும்.

எனவே உங்கள் மின்னிதழ்கள் பற்றிய விரிவான தகவல்களை எனக்கு honeylaksh@gmail.com என்ற ஈமெயில் ஐடிக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன். வேறு மின்னிதழ்கள் பற்றியும் தெரிந்தால் அதன் ஈமெயில் ஐடி , விபரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

எல்லா மின்னிதழ்கள் பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பாகஇது அமையவேண்டும் என்பது எனது பேரவா.

வரும் ஜூலை 15 க்குள் அனுப்ப வேண்டும் என்பதால் ஜூலை 10 ஆம் தேதிக்குள் உங்கள் மின்னிதழ் விபரங்கள் எனக்குக் கிடைத்தால் நலம்.

அன்பும் நன்றியும்,

தேனம்மைலெக்ஷ்மணன். 


என எல்லா மின்னிதழ்களுக்கும் நான் மின்னஞ்சல் அனுப்பியும் நான்கைந்து மின்னிதழ்களில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தன. எனவே அவற்றை வைத்து என் ஆய்வை முடிக்கமுடியாது என்பதால் என் வலைத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்கிறேன். 


வலைச்சரம் குறித்து அனுப்பிய சகோ தமிழ்வாசி ப்ரகாஷ் அவர்களுக்கு நன்றிகள்.


தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள்.

வலைச்சரம்...
26.02.2007ல் வலைச்சரம் சிந்தாநதி எனும் மூத்த பதிவரால் ஆரம்பிக்கப்பட்டு  பதிவர் பொன்ஸ் அவர்கள் முதல் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 30-04-2007-இல் பதிவர் முத்துலட்சுமி அவர்களும், 04/05/2008-இல் இருந்து சீனா ஐயா அவர்களும், பொறுப்பாசிரியராக இருக்கிறார்கள்வலைச்சரக் குழுவில் சீனா ஐயாவுடன் இணைந்து கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக  உள்ளேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...