-- நன்றி திருமலை சார் & நமது மண்வாசம்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 17 பிப்ரவரி, 2020
மஞ்சளும் குங்குமமும் - 300 மாணவிகளும்.
-- நன்றி திருமலை சார் & நமது மண்வாசம்.
திங்கள், 10 ஜூன், 2019
வெள்ளி, 4 ஜனவரி, 2019
அஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.
“தஞ்சாவூரு மண்ணு எடுத்துத் தாமிரபரணித் தண்ணியவிட்டு சேர்த்து சேர்த்து
செய்ததிந்தப் பொம்மை” என்ற பாடலைக் கேட்டிருக்கலாம். பெண்ணைக் குறித்துப்
பாடப்பட்ட பாடலானாலும் பானை வகைகள் டெல்டா போன்ற பகுதிகளில் இருக்கும் களிமண்
கொண்டு ஆற்று நீரால் பிசையப்பட்டு வனையப்படுவதை இப்பாடல் அழகாக விவரிக்கின்றது.
அதே போல் திருமணமானதும் தம்பதியர் வாழ்வு செல்வச் செழிப்போடு சிறந்தோங்கினால் ’பானை
பிடித்தவள் பாக்கியசாலி’ என்று சொல்வதும் உண்டு.
வியாழன், 6 செப்டம்பர், 2018
செவ்வாய், 10 ஜூலை, 2018
ஞாயிறு, 10 ஜூன், 2018
ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018
நீராவியில் நீடிக்கும் ஆரோக்கியம். - பர்ஸுக்கும் பாதகமில்லை. உடலுக்கும் உபத்திரவமில்லை.
வெள்ளி, 5 ஜனவரி, 2018
வெள்ளி, 8 டிசம்பர், 2017
செவ்வாய், 3 அக்டோபர், 2017
சாணத்தை இனி போஸ்டர்ல போடாதீங்க கம்போஸ்ட்டா போடுங்க.
எங்காவது பிடிக்காத போஸ்டரைப் பார்த்தா உடனே சாணியை எடுத்து வீசாதீங்க. நீங்க கோபப்பட்டு சாணியை வீசுற அளவுக்குக் கூட அவங்க லாயக்கானவங்க இல்லீங்க . அந்த மதிப்பு மிக்க சாணிய உரக்குழியில் போடுங்க. அவ்வளவும் இயற்கை உரம்க.
கென்யாவில் இயற்கைத் தொழு உரத்துக்கு மதிப்பு அதிகமாயிருக்கு. ஏன்னா இரசாயன உரம் விலை அதிகம் என்பதோடு நிலத்தையும் நீரையும் கெடுக்கும் தன்மை வாய்ந்தது. எனவே அவங்க இயற்கை த்தொழு உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்றாங்க. தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுகள்ல வெட்டப்பட்ட குழிகளில் மக்கிய இலை தழைகள், வீட்டின் காய்கறிக் கழிவுகள், கரும்புச் சக்கைகள், மிருகங்களின் கழிவுகள் முக்கியமா மாட்டுச்சாணம் ஆகியவற்றைக் கொட்டி மண்ணைப் போட்டு மூடி நான்கைந்து மாதங்களுக்கு மக்கச்செய்றாங்க. அதில் மைக்ரோ ஆர்கனிஸம்ஸ் எனப்படும் நுண்ணுயிரிகளும் பாக்டீரியாக்களும் காளான்களும் வளர்ந்து அவற்றை நுண்துகள்களாக உடைக்கின்றன. இதை உரமாப் பயன்படுத்துறாங்க.
வியாழன், 3 ஆகஸ்ட், 2017
செவ்வாய், 13 ஜூன், 2017
திங்கள், 22 மே, 2017
மரபும் அறிவியலும் :- முளைப்பாரி.
முளைப்பாரி
உழவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது
கிராமங்களும் சிறு நகரங்களும் இன்றும் பண்பாடும் பழமையும் மாறாமல் கொண்டாடும்
திருவிழாக்களில் முளைப்பாரியும் மதுக்குடமும் பெரும்பங்கு வகிக்கின்றன. வேளாண்
தொழில் செழித்து வளரவும் பயிர்பச்சைகள் பல்கிப் பரவவும் முளைப்பாரி எடுத்தல்
பெரும் பங்கு வகிக்கிறது.
பெரும்பாலும் கோடைகாலத்திலேயே – மே மாதத்தில் - முளைப்பாரி எடுப்பது நிகழ்கிறது. கோடைத்திருவிழாக்களில் அம்மன் கோயில்களுக்கு நேர்ச்சை செய்துகொண்டு முளைப்பாரி, பாளை, மதுக்குடம் எடுத்துவந்து கோயிலில் சேர்ப்பித்து சாமி கும்பிடுவார்கள். சிலர் நவராத்திரி போன்ற வைபவங்களிலும் கொலுவுக்கு முன் பாத்திரத்தில் முளைவிட்ட பயறுவகைகளை வைத்து பூஜை செய்வார்கள்.

















