எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

சுயம்புவாய் உருவான பெண் (2) ... மோகனா சோமசுந்தரம்..

சுயம்பு மூர்த்திகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சுயம்புவாய் உருவான பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா..? அவர்தான் மோகனா சோமசுந்தரம்.

ஸ்தலங்களுக்குப் பேர்போன தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையில் மாயவரம் பக்கம் சோழம்பேட்டையில் பிறந்த இவர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பம்.

கீதா ஜீவன்.. சமூக நலத்துறையின் ஜீவன்..




கீதா ஜீவன் சமுக நலத்துறை அமைச்சர் என்று சொல்வதை விட அதன் ஜீவன் என்று சொல்லலாம். தி. மு. க வின் மிகப் பெரும் தூணாயிருக்கும் பெரியசாமி அவர்களின் புதல்வி. மாநில அமைச்சர் என்ற பந்தா சிறிதும் இல்லாமல் நமது சகோதரி போல தோற்றத்திலும் எளிமையிலும் கவர்கிறார்.

வியாழன், 25 நவம்பர், 2010

ப்ரக்ஞை..

இருப்புத் துருவும்
எண்ணங்களூடே
பயணத்தில்...
இருப்பற்றுக் கிடப்பது...
எதாகவாவது..

யாதுமாய்.., அற்றதாய்..,
செவிப்பறையில்
சத்தமற்ற சத்தம்..
கண்ணுள் ஒளியற்ற ஒளி..
நாசியும்., நாவும்., மெய்யுமாய்..
வெளியற்ற வெளி..

புதன், 24 நவம்பர், 2010

அன்ன பட்சி..

பேசத்துவங்குமுன்னே
முடிவுக்கு வந்து விடுகின்றன..
நம் உரையாடல்கள்...

கடலுக்குள் மூழ்கிய கப்பல்களாய்
ஒரு கனவுக்குள் ஆழ்கிறது
உன் கண்கள்..

அவ்வப்போது கலங்கரை
விளக்காய் என் கண்
தேடியலைந்து..

திங்கள், 22 நவம்பர், 2010

மந்திரப் புன்னகை.. எனது பார்வையில்.

மந்திரப் புன்னகை.. நல்ல மர்மம் கொண்ட புன்னகைதான்... புதிதாக ஹீரோவாயிருக்கும் கரு. பழனியப்பனுக்கு.. நல்ல திராவிட நிறம் கொண்ட வெகு இயல்பான ஹீரோ.. நிச்சயம் இந்தக் கதையில் இவரால்தான் சிறப்பாக செய்ய முடியும்.. என்ன., இவர் வசனம் போல பேச்சுத்தான் பலமும்... சொற்ப இடங்களில் பலகீனமும்.

வெள்ளி, 19 நவம்பர், 2010

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்..



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

புதன், 17 நவம்பர், 2010

அந்த முன்னிரவு...



ஐப்பசி அடைமழை..
கப்பல்விடத் தோதாய்.!
அடித்தடித்து வீசும் காற்று..
ஆடியது வாசலில் வேம்பு..
ஆடுபுலி ஆட்டம்
அண்ணா சொன்னான்..
வேரோடு கோரத்தலையசைத்த
பனை தென்னை பார்த்து..

திங்கள், 15 நவம்பர், 2010

நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் மோகனா சோமசுந்தரம்., சித்ரா சாலமன்., ருக்மணி அம்மா., மனோ சாமிநாதன்., மற்றும் நான்...

மிக அருமையான ., எளிமையான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது நவராத்திரி அங்காடியில்.. எந்தவித ஆர்ப்பாட்டமும் பந்தாவும் இல்லாமல் ஒரு அமைச்சரை நீங்கள் சந்திக்க இயலுமா.. மிக நெருங்கிய தோழி போன்ற அழகிய புன்னகையுடன் வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்தான் அவர்கள்.. அசந்து விட்டோம் அனைவரும்.. அவரின் பேச்சுத்திறனும் அபாரம்..
வாழ்க.. வளர்க அவரின் சமூகப் பணி..

முகப் புத்தகத்தில் முதிர்ந்த அறிவுடைய ஒரு தோழியை சந்தித்தேன்.. அவரின் பின் எவ்வளவு பெரிய சாதனைக் கதை.. சொல்லில் வடிக்க இயலாது அவரின் போராட்டம்.. படித்துப் பாருங்கள் சுயம்புவாய் உருவான பெண்ணின் கதையை..

சனி, 13 நவம்பர், 2010

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் புதுகைத்தென்றல்., ருக்மணி அம்மா., கார்த்திக்., மரா., ராமலெக்ஷ்மி., தினேஷ்குமார்., தமிழ் உதயம்., கோபி ராமமூர்த்தி..

ஐப்பசியில் தீபாவளி ...அடைமழை.. பட்டாசு., பட்சணம்., புது உடை எல்லாம்.. இந்த வருடம் ரொம்ப ஸ்பெஷல்.. நிறைய ப்லாக்கர்களின் படைப்புக்கள் .. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரிலும்., நவம்பர் மாத இதழிலும்.. அவசரத்தில் தீபாவளி மலரில் என்னுடையது விட்டுப் போய்விட்டது .. அதற்கென்ன மக்காஸ்.. பொங்கல் இதழில் எழுதுவோம்.. நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழிலும்., திண்ணையிலும் தேவதையிலும் வந்திருக்கிறது..
இது நம்ம புதுகைத்தென்றல் ஸ்பெஷல்.. திரும்பி வந்த அம்பு ..நல்ல நச் சிறுகதை.. வாழ்த்துக்கள் கலா ஸ்ரீராம்..:))

வெள்ளி, 12 நவம்பர், 2010

வெளிச்சம்..

கோவையில் ஈச்சனாரி பிள்ளையார் கோயில் தாண்டியது.. கை அனிச்சைச் செயலாய் வணங்கியது..அம்மாவும் அப்பாவும் காத்திருப்பார்கள்..மெல்ல வீசிய காற்றில் பவளமல்லி வாசம்..தூங்கும் கணவரின் தோளில் சாய்ந்தாள்.. அம்மாவின் ஆயாவும் வந்து இருக்கிறார்களாம்.. பேத்தி மகளின் தலை தீபாவளிக்கு.. தலைமுறை தாண்டிய உறவுகள்..

ஜூன் மாதம் திருமணம். அடுத்த ஐந்து மாதங்களில் தீபாவளி. தாய்வீடு செல்லும் மகிழ்ச்சியோடு புகுந்த வீட்டினரை விட்டுச் செல்லும் சிறிய பிரிவுத்துயரும் இருந்தது. மாமியார் தாய்க்கும் மேலே அன்பு செலுத்துவதாலோ என்னவோ..

எப்போது எழுந்தாலும் எழுந்து கொள்ளும் முன்னரே மாமியார் எழுந்து சுறுசுறுப்பாய் வேலை செய்வது ஆச்சர்யம்தான் அவளுக்கு. எத்தனையோ முறை மு்யன்று விட்டாள். இந்த விஷயத்தில் மட்டும் வெல்ல முடியவில்லை. காபியைக் கலந்து கையில் கொடுக்கும் அன்பு வேறு. தன் பிள்ளைகளைப் போல நடத்துவதும்., எதையும் செய் என்று சொல்லாததுமான வித்யாசமான மாமியார்தான்.

புதன், 10 நவம்பர், 2010

நம்பிக்கை..

திரையரங்கோ., கோயிலோ.,
முன்னேற்பாடுகளுடன்
பெரும்பாடாய்..
திட்டமிட்டேதான் நடக்கிறது..
சந்திக்கச் செல்வதற்கான முஸ்தீபும்.,
பழகிப் போன இதே போன்றதான
ஏமாற்றமும்..

விருந்து மண்டபமோ.,
பிறந்தநாள் விழாவோ.,
புகைப்படச் சிரிப்புக்களில்
இல்லாத தன்னை உணர்ந்து
கரைந்து போவதாய்க் கனக்கிறது..

ஞாயிறு, 7 நவம்பர், 2010

சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்...











தீஞ்சுவைப் பாலெடுத்து நறுஞ்சுவைத் தேன் கலந்து பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் புளிக்குதென்பேன்.. தமிழ்த்தாயிடம் மதலை நான் தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்.. அன்னையவள் பரிவு கொண்டு என்னை வளர்த்த காரணத்தால்.. தமிழ் அன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்..

வியாழன், 4 நவம்பர், 2010

திண்ணைகள் வைத்த வீடு...

வலப்புறமும் இடப்புறமும்
திண்ணைகள் வைத்து
சிமெண்ட்டால் இழைத்த வீடு..

முதுகு சாய மேடும்
விளக்கு வைக்க மாடமும்
வாசலில் த்வாரபாலகராய்..

தி ஜ ர., லா ச ரா கதைகள்.,
மன்னார்குடியின் ஒற்றைத்தெரு.,
முதல் தெரு., இரண்டாம்தெரு.,
மூன்றாம் தெரு எல்லாவற்றிலும்

திங்கள், 1 நவம்பர், 2010

தைர்ய லெக்ஷ்மி... (1) .. ரம்யா தேவி..



ஃபீனிக்ஸ் பறவை பார்த்து இருக்கிறீர்களா..? தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டும் என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்... இரும்பு மனுஷி., மலை அரக்கி என்றெல்லாம் தன் நண்பர்களால் செல்லமாக அழைக்கப் பெறும் ரம்யா என்றைக்கும் சந்தோஷப் பந்து..


இன்றைக்கு ஒரு சிங்கப்பூர் பேஸ்டு கம்பெனியில்., சாஃப்ட்வேர் டிவிஷனில் ப்ராஜெக்ட் மானேஜராக இருக்கிறார். இதன் பின்னே நெடிய உழைப்பு இருக்கிறது. அசாதாரணமான உழைப்பு. பெண்கள் முன்னேற்றம் என்பது இப்போதும் கடினமாக இருக்கக் கூடிய சூழலில் தன் உபாதைகளையும் மீறி மீண்டெழுந்து புதிய பரிமாணங்களில் பரிணமிக்கிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...