எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தேவதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 செப்டம்பர், 2012

இரை தேடி.. தேவதையில்..

அலுவலகங்கள் மாறுவதும்
வேலைகள் மாறுவதும்
ஊர்கள் மாறுவதும்
புதிதல்ல அவளுக்கு.

அங்கி., காவி அணியாமல்
சிலுவை சூலம்
சுமப்பதைக் காண்பிக்க
விரும்பாதவள் அவள்.

புதன், 17 நவம்பர், 2010

அந்த முன்னிரவு...



ஐப்பசி அடைமழை..
கப்பல்விடத் தோதாய்.!
அடித்தடித்து வீசும் காற்று..
ஆடியது வாசலில் வேம்பு..
ஆடுபுலி ஆட்டம்
அண்ணா சொன்னான்..
வேரோடு கோரத்தலையசைத்த
பனை தென்னை பார்த்து..

வியாழன், 24 ஜூன், 2010

கண்ணதாசனும் பதிப்பகங்களும்

கண்ணதாசனின் வனவாசம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதல்ல எப்படி வாழக்கூடாது என்பதற்கான வழிகாட்டி...

உண்மைகளை நிர்வாணமாகவும் துயரங்களைத் தாழ்வு கருதாமலும்., மேன்மைகள் என்று கருதியவற்றை பயத்துடனும்..செய்து வாழ்ந்த ஒரு மகா கவிஞனின் உள்ளீடு இது..

சமுதாயம் நம்மைத்தூக்கி எறிந்தாலும்.. மீண்டும் சமுதாயத்திற்குள் ஓடித்தான் இடம் பிடிக்க வேண்டும் என்பார் கண்ணதாசன்.. கடலில் நண்டு அலை வீசி எறிந்தாலும் திரும்பக் கடலுக்குள் ஓடுவது போல...

காலூன்றாத நண்டு போல் அலை மோதாமல் உயர்ந்த இடத்தில் காலூன்றி விடவேண்டும்,, என்பார்..

சனி, 12 டிசம்பர், 2009

அம்மா அப்பாவுக்கு சமர்ப்பணம்

இது என் நூறாவது இடுகை..
15.11.84 இல் கல்லூரி விடுதியில் எழுதியது..

அப்பா

மனதில் கிடங்குள் புதைத்திருக்கும்
பாசத்தை எப்படி வெளிப்படுத்துவது
எனத் தெரியாமல் எல்லா வழிகளிலும்
புலப்படுத்திய அருமை அப்பா...
பிரியத்தை வெற்றுச் சொற்களால்
அலங்கரிக்க விரும்பாமல் செயல்களில்
தன்னை வெளிப்படுத்திக்கொள்வீர்கள்...

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

வரம்

ஒளிவட்டம் சுழல
இறகை உதிர்த்து
தேவதை பிறந்தாள்
பூங்கொத்துச் சிரிப்புடன்...

ரோஜாப் பாதம்
பஞ்சு இளம் மேனி
நஞ்சில் உதித்த
பாற்குட தேவதை....

பளிங்குக் கண்கள் மிளிர
ஒளிரும் கறுப்பு நிலவுகள்
மினுமினுப்பாய்...
மாதுளம் பூக்கள் கன்னத்தில்...
Related Posts Plugin for WordPress, Blogger...