எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 அக்டோபர், 2016

சாட்டர்டே போஸ்ட். கரந்தை ஜெயக்குமாரின் உயிர்காத்த நண்பன்.



எனது வலைப்பூ சகோதரர் கரந்தை ஜெயக்குமார். இவர் ஆசிரியப் பணியில் இருப்பதாலோ என்னவோ இவரின் பதிவுகள் நச்சென்று இருக்கும். மிகத் தெளிவான கருத்துகள் கொண்டதாக மிளிரும்.  வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் என்று தற்போது ஒரு தொடர் வெளியிட்டு வருகிறார். பரவலாக வலைப்பூ எழுத்தாளர்கள் பேராதரவைப் பெற்றவர். எட்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார். எழுத்து அருமையாக இருந்தால் யாவரையும் ஈர்க்கும்தானே. :) -- ( தேனம்மை நோ பொறாமை ப்ளீஸ் - எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் :) 

இவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக எழுதித் தரும்படி கேட்டேன். அவரது பதிவு அதிர வைத்தாலும் படிப்பினை கொடுத்தது. எல்லாம் தெரிந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் நாம் செயலற்று இருக்கிறோம் என்பதை அறைந்தது.  இனி அவரைப் பற்றியும் அவரது எதிர்நீச்சல் பற்றியும் படியுங்கள்.

இது அவரைப் பற்றி அவர் வலைப்பூவில் கொடுத்திருக்கும் சுயவிபரம்.


///கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்.///

 வடவாறு :-
************

முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் விடுமுறை நாள்,தஞ்சாவூர், கரந்தை, வடவாற்றின் பாலத்தின், அகன்ற கைப் பிடிச்சுவற்றில் ஏறி நிற்கின்றேன்.

வியாழன், 27 அக்டோபர், 2016

கல்கி தீபாவளி மலரில் பண்பு நிறைந்த பாத்திரங்கள்.

புராண இதிகாச நாயகி நாயகர்களின் அருங்குணங்கள்.

ண்பு நிறந்தத்ிரங்கள்.:-



தேன் பாடல்கள். - 26. குட்டிராணியும் கண்மணியும்.

351. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

மிக அழகாகச் செல்லும் காதல். அப்பாஸும் ஐஸும். ஆனா நடுவுல புகுந்து அவர் ஏதோ சுயநலமி மாதிரி கெடுத்துடுவாங்க. அப்பத்தானே அழகன் வரலாம் ஐ மீன் மம்முட்டி. :) 




352. என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா..இதை அஜீத் தபுவிடம் கேட்டபடி பாடும்போது மிக அழகாக இருக்கும். தபு கொஞ்சம் மஸ்குலைன் ஃபீமேல். அஜீத் கொஞ்சம் மென்மையான ஹீரோ. கடும் பாலைவனமும் வெய்யிலும் கூட தன்மையாக மாறிவிடும் அற்புதம். இசை சான்ஸே இல்லை. ஒருசில தமிழ்ப் பாடல்கள்  ஆல்பம் மாதிரி மாறிக் கொண்டு வருகின்றன. அதில் இதுவும் ஒன்று.

திங்கள், 24 அக்டோபர், 2016

அரசனும் ஆண்டியும்.

1061. லேடீஸ் ஸ்பெஷல்ல கொடுத்தாக.:)
#லேடீஸ்_ஸ்பெஷல்_விருது.

1062. மடல் வாழை மேல் குளிர் வாடை போல்..   :)

1063. இட்லி, மணத்தக்காளி வத்தல் குழம்பு, காரட் ஜூஸ். 

1064. பத்ரமா வீட்ல கொண்டுவந்து சேர்த்ததுக்கு நன்றி அம்மா :)

#எக்மோர்_ரயில்வே_ஸ்டேஷன்_பிள்ளையாரப்பா

சனி, 22 அக்டோபர், 2016

சாட்டர்டே போஸ்ட். வெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம். - முனைவர் ஜம்புலிங்கம்.

எனது மதிப்புக்கும் பிரமிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் பௌத்தம் பற்றி எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள். இவரைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார், முனைவர், பௌத்தம், சமணம், பிறதுறைகள், விக்கிபீடியா, சிறுகதைகள் போன்றவற்றில் 800 க்கும் மேற்பட்ட அரிய பதிவுகளை எழுதியவர். பௌத்தம் பற்றிய தொல்பொருள் ஆய்வுக் கட்டுரைகளை நான் இவரது தளத்தில் விரும்பி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் கீழடி பற்றிய இவரது தொல்பொருள் ஆய்வுக் கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. 

இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம். பூமிக்கடியிலும் தேடல்கள் நிகழ்த்தி சாதித்திருக்கும் இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இவரைப் பற்றி முழுமையாக இங்கே வாசியுங்கள் :) ! . 

தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800+ பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள் 

இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக ஏதேனும் எழுதித்தரும்படிக் கேட்டபோது இன்றைய சூழலில் அதி முக்கியத் தேவையான இலக்கு நோக்கிய பயணம் என்ற கட்டுரையை அனுப்பி இருந்தார்கள். ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய கட்டுரை இது. 

வியாழன், 20 அக்டோபர், 2016

வயலட் கேபேஜ் சாலட் :- கோகுலம், GOKULAM KIDS RECIPES.

ர்ப்பிள் கேபேஜ் சாலட் :-


சிலைகள் சொல்லும் சேதி.

பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறு குன்றில் அமர்ந்திருக்கும் நிஷ்டை சிவன் :) --

சொல்லும் சேதி - மௌனம் பரமசௌக்கியம்.
நடிகர் நெப்போலியன் அவர்களின் அலுவலகத்தில் நடிகர் பார்த்திபன் பரிசளித்த சிந்தனையைத் தூண்டும் சிற்பம். -

சொல்லும்சேதி - சேவை & பொதுநலம்.
சென்னை டி நகர் பிகேஆர் ஹோட்டலின் முன்புறம் உள்ள மீனவர் சிற்பம்.

திங்கள், 17 அக்டோபர், 2016

கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-



கெட்டி மக்கள் நம் செட்டி மக்கள்.:-
****************************************************

NBIG (Nagarathar Business Initiative Group ) துபாயின் ஏற்பாட்டில்  IBCN - 2017, செயலாளரான திரு. ரமேஷ் ராமனாதன் அவர்களின் சோழபுரம் இல்லத்தில் (பங்களா ) வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் குழந்தைகளுக்கு  நம் கலாச்சாரத்தைப் பயிற்றுவிக்கும் முகம், முகாம் ஒன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பார்வையாளராகப் பங்கேற்கும் வாய்ப்புப் பெற்றேன். 

சனி, 8 அக்டோபர், 2016

திருநிலை. - தினமலர் வாரமலரில் வெளியான சிறுகதை.

திருநிலை.

டிங் டிடிங் டிங் டிடிங் என்று தொடர்ந்து ஒலித்த காலிங்பெல் திருநெலை ஆச்சியின் நெஞ்சத்துடிப்பை அதிகமாக்கியது. பூக்காரம்மா, பேப்பர்காரன், பால்காரப்பையன், தண்ணி கேன் கடைக்காரர், கூரியர் போஸ்ட், வேலை செய்யும் முத்தி யாராக இருந்தாலும் ஏன் இப்பிடி மண்டையிலடிப்பதுபோல காலிங்க்பெல்லை அடிக்கிறார்கள் என்று அவுகளுக்கு நெஞ்சப்பாரடித்தது. டிடிங் டிடிங் என்று பூட்டைத் திறக்கும்போதெல்லாம் மணியடித்தது போல் சத்தமிடும் பெரியவீட்டின் பட்டாலை முகப்புக்கதவு அவர்களின் கண்ணுக்குள் வந்து போனது.

எழுபத்தியைந்து வயதைச் சுமந்த உடம்பை அசைத்துச் சென்று கதவைத் திறந்தால் பேரமிண்டியும் பேரனும் நின்றிருந்தார்கள். வாசப்படி நிலையில் நிக்கமுடியாமல் யார் இப்பிடிக் காலிங்பெல்லை உடைக்கிறது என்று கோபமாகக் கேட்க நினைத்தவர் மௌனமாகத் திரும்பி வந்து தன்னுடைய திண்டில் அமர்ந்தார். அப்பத்தா வீட்டு ஐயாவின் பெயரிட்டுக் கொண்ட அவுக பிரியத்துக்குரிய பேரன் ஐயப்பனைக் கோச்சுக்க முடியுமா. புள்ளகூட்டியே வந்த வீட்டில் மொதமொதலாப் பொறந்த பேரன். அவனுக்காகத்தானே எல்லாம். கேட்ட விளையாட்டுச் சாமானை எல்லாம் வாங்கிக் கொடுத்தமாதிரி இப்ப கேட்ட பூர்வீக வீட்டையும் உடைக்கக் கொடுத்திருக்கிறாக.

சாட்டர்டே ஜாலி கார்னர். பத்மா வந்த பஸ்ஸைக் காணோம்.. ??!!

என் அன்புத் தங்கை புவனா மூலம் அறிமுகமான அன்புத் தோழி இளமதி பத்மாவிடம் இந்த வார சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எதுவும் எழுதித் தரும்படி கேட்டிருந்தேன்.

பத்மா மிக அன்பானவர், குழந்தை உள்ளம், வெள்ளந்தி, நேர்மறை சிந்தனைகள் கொண்டவர். காதல் பொங்கும் சிறு சிறு கவிதைகள் மூலம் என்னைக் கவர்ந்தவர், பத்ரிக்கைத் துறையில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

எனது சிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியீட்டிலும், அதன் மதிப்புரைக் கூட்டத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர். அவர் எழுதிய அனுப்பிய ஜாலி  பதிவு இதோ உங்களுக்காக.

/////சுற்றுலா பிடிக்காதவர் எவரேனும் உண்டா அதுவும் பள்ளியில் படிக்கும் போது... மதுரையிலிருந்து தூத்துக்குடி கன்யாகுமரி திருச்செந்தூர் காலையில் புறப்பட்டு மாலையில் திரும்புவது என பள்ளியில் சொல்ல ஆர்வம் அதிகமானது! அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நான் ( அம்மம்மா) செல்லம் என்பதால் பாட்டியை ராஜா செய்தால் போதும் என்றிருந்தேன்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

SUMO வும் சவாரியும்.

1041. இரும்பை இணைக்கிறது இதயம்.
இரும்புக்குத் தெரிவதில்லை அது இதயமென்று..

1042. ஒருவாரம் முன்னாடி ..

முனியம்மா :- இதென்ன ரவா உப்புமா.. நீ கடலைப்பருப்பு, பட்டாணி, வேர்க்கடலை தாளிக்கமாட்டியா.

நான் :- அதெல்லாம் போட்டா கிச்சடி . இது உப்புமா.

முனியம்மா:- நாங்க இன்னும் கொடமொளகாய், காரட்டு, பீன்ஸ் எல்லாம் உப்புமால போடுவோம். எண்ணெய் தொட்டா கையில ஒட்டும்.

நான். :- எண்ணெய் அதிகம் சேர்த்தா ஹார்ட்டுக்கு நல்லதில்ல.

இன்னிக்கி:-

முனியம்மா :- என்னா தயிர் சாதம் இது. கடலைப் பருப்பு தாளிக்க மாட்டியா...

நான் :- தயிர்சாதத்துல கடலைப் பருப்பா ?

மைண்ட் வாய்ஸ் :- டூ மச் முனியம்மா . என் புருஷன் பிள்ளைங்களே நான் சமைச்சத கொற சொல்லாம சாப்பிடுவாங்க. என் பொறுமைக்கும் எல்லை இருக்கு. --

மனசாட்சி :- வெயிட் வெயிட் ..பொறுமை பொறுமை யுவர் ஹானர். ஆ .. ஊன்னு சவுண்டு விட்டீங்கன்னா அவ வராம போயிடுவா. அப்புறம் யார் பாத்திரம் எல்லாம் தினம் தேய்ப்பா.

1043. Appada.. thank god. �vayithula puliya karaicha vishayam sambara mariduchu

1044. இதனால் என் தோழமைகளுக்கு அனுப்பும் தகவல் " நான் யாருக்கும் எந்த விதமான வீடியோ தகவல் ஏதும் அனுப்பவில்லை" இருந்தாலும் நான் அனுப்பியதாக அவரவர் பெயர் போட்டு வந்தாலும் திறக்காமல் டெலீட் செய்துவிடுங்கள்...நன்றி

1045. Kavirikkaga kavalapaduratha , kovaikkaga kavalapaduratha..

#Nalla velai nanga thappuchomkiranga pasanga :P

1046. photo edukkarathu easy. Bt orutharukku pidicha innoruthavungalukku pudikirathulla athan kavalaya ukarnthuruken ���

#sunday_sundai �

வியாழன், 6 அக்டோபர், 2016

சிவப்புப் பட்டுக் கயிறு.- விஜிகே சாரின் நூல் மதிப்புரை.


எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு விஜிகே சார் அவர்கள் எனது  ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு என்னும் சிறுகதைத் தொகுதிக்கு மிகச் சிறப்பாக ஆறுபாகங்களாக மதிப்புரை வழங்கி இருக்கின்றார்கள்.

நாமெல்லாம் ஒரு போஸ்டாக போடுவோம். ஆனால் அவர் ஆறு போஸ்டுகளாகப் போட்டு அசத்தி இருக்கிறார். இதில் ஒவ்வொரு போஸ்டிலும் கிட்டத்தட்ட 100 க்கும் குறையாமல் பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன . என்னுடைய வலைத்தளத்தில் எந்தப் போஸ்டுக்கும் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்ததே இல்லை.  ( நான் பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பதில் கால தாமதத்தையும் கடைப்பிடிக்கிறேன்.என்று லேசாக குட்டிக் கொண்டேன். ஹ்ம்ம் முகநூல் மொக்கைகளில் ஆழ்ந்து ஒரு மூணு மாசத்துக்கொருதரம்தான் ப்லாக் போஸ்டுகளுக்கு மொத்தமாக நன்றி சொல்கிறேன்.  அனைவருமே மன்னிக்க வேண்டுகிறேன் :)

புதன், 5 அக்டோபர், 2016

யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா!

நண்பர் மு இளங்கோவன் அனுப்பிய இவ்வழைப்பிதழை  முதுவை ஹிதாயத் சகோ அனுப்பி இருந்தார்கள்.  நானும் அதைப் பகிர்ந்திருக்கிறேன்.

///அன்புடையீர், வணக்கம்.

இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளாரின் பன்முக ஆற்றலை விளக்கும் ஆவணப் படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நிரலை இணைத்துள்ளேன்.

தங்கள் இணைய இதழில் வெளியிட்டு உதவுங்கள்.

தங்கள் நண்பர்களின் பார்வைக்கு வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி///

திங்கள், 3 அக்டோபர், 2016

கவிஞர் ஆத்மாநாம் விருது.

விருதுக்கு வாழ்த்துகள்  நண்பர் மோகனரங்கன், 

விழா சிறக்க வாழ்த்துகள் ஆத்மாநாம் ட்ரஸ்ட், & காப்ஸ் உணவகம். 


////கவிஞர் ஆத்மாநாம் விருது விழா - 2016

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை ஆண்டுதோறும் 'கவிஞர் ஆத்மாநாம்' பெயரிலான விருதைத் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு வழங்கி சிறப்பித்து வருகிறது.

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் விருது அங்கீகாரம்.

இருபதாம் ஆண்டு ஆரம்பத்தை ஒட்டி லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் லேடி விருது கிடைத்தது. ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடந்த நிகழ்வில் மிகப் பிரபலங்கள் மேடையிலும் பக்கத்திலும் வீற்றிருக்க ஸ்பெஷல்  விருது வாங்கியது மறக்கமுடியாத அனுபவம்.

சனி, 1 அக்டோபர், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர் :- கல்யாண்குமாரின் வீக் எண்டும் ”வேல்” வார்த்தையும்.



எனது முகநூல் தோழன் கல்யாண். கல்யாண்குமார். அவ்வப்போது போடும் டைரிக் கிறுக்கல்கள் கவிதைகளைப் படித்து ஒரு கமெண்ட் போடுவார். ஒரு நாள் பரிட்சை பூதம் என்ற கவிதை போட்ட போது நீங்க
எங்கேயோ இருக்க வேண்டிய ஆள் என்று எழுதி இருந்தார்
 
(*ஒரு பூதம்
என்னைப் பயம் காட்டுகிறது.

*கேள்விகளென்னும்
பற்களை நீட்டிக்
காகிதங்களில்
தன்முகம் தனைப் புகுத்தி
வினாக்குறிகளாய்
நகங்களை விரித்து
ஒரு தேர்வுப் பூதம்
என்னை வேர்க்க வைக்கிறது.

*கேள்விப் புழுக்களைத்
தூண்டிலில் மாட்டி
மீனாய் என்னைச் சிக்கவைக்கும்.
கேள்விக் கருவாடு பூட்டி
வண்டியில் நாயாய்
என்னை ஓட்டும்
ஒரு பரிட்சைப் பூதம்
என்னைப் பயம் காட்டுகிறது. )

இவரது முகநூல் பக்கத்தில் நான் படித்து இப்படியும் உண்டுமா என யோசித்த வாசகம் “விழுவதும் எழுவதும்  தொடர்கதையாய் இருக்கையில் விலாசம் சொல்வது வெட்கக் கேடு தானே. ” 87 ஆம் வருடத்தில் இருந்து திரைப்பட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.  
 
எனக்கு ரொம்பப் பிடித்த இந்தப் படங்களை இவர் பக்கத்தில் பார்த்ததும் மகிழ்ச்சியாய் இருந்தது. ”அயன் மேன், பேட்மேன், ஸ்பைடர் மேன், மென் இன் ப்ளாக், த டார்க் நைட், மம்மி, ஷ்ரெக், ஹெல்பாய், எக்ஸ் மேன், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்,  நைட் அட் த ம்யூசியம், கராத்தே கிட், குங்ஃபூ பாண்டா, டெர்மினேட்டர், கோஸ்ட் ரைடர், அவதார், டைட்டானிக்,

இவர் டைரக்டரா இருப்பதால இவரிடம் நமது சாட்டர்டே ஜாலி கார்னருக்காக வீக் எண்ட் நிகழ்வு பத்தி எழுதித் தரச் சொல்லிக் கேட்டேன். அவரது பதில் இங்கே

சும்மா.. சாட்டர்டே ஜாலி கார்னர்!! இது கண்டிப்பா எனக்கான களம் அல்ல.. ஆனாலும் ஏன் ? அப்படின் னா!! தெரியாம மாட்டிக்கிட்டேன்னு ஒத்துக்கிறது தான் சத்தியம்! அப்புறம் ஏண்டா நாயே எழுதறேன்னு கேட்டா!!! ஒரே பதில்: தேனம்மா !

Related Posts Plugin for WordPress, Blogger...