எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிறுகதைப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 மே, 2021

சுவடு. போட்டிச் சிறுகதைகளுக்கு நடுவராக..


 1.பேச்சியம்மாள் சிறுகதைக்கு  19 + 19 + 19 + 19 + 17 = 93.

2.திருந்தாத ஜென்மங்களுக்கு 18 + 17 + 20 + 19 + 17 = 91.

3.கயலுக்கு 19 + 19 + 19 + 19 + 20 = 96.

4.அன்பெனும் அருமருந்துக்கு 19 + 19 + 20 + 20 + 20 = 98.

சனி, 28 செப்டம்பர், 2019

சூலாட்டுக்குட்டி.

சூலாட்டுக்குட்டி.

ல்லிகைப்பூ வாசம் மூக்கைத் துளைத்தது. அதையும் மீறி அடித்துக்கொண்டிருந்தது மூத்திர நாற்றம். மப்ளரைச் சுற்றியபடி கதவைத் திறந்து பார்த்தவர் வாக்கிங் போகும் எண்ணத்தைக் கைவிட்டு கைப்பிடியில் மாட்டியிருந்த மல்லிகைப்பூப் பையை எடுத்து அவசரமாகத் தாழ் போட்டார்.

’திரும்பவும் ஒண்ணுக்குப் போயிட்டாளா’. யோசனையாய் படுக்கை அறைக்கு வந்தவர் போர்த்திப் படுத்திருந்த மனைவியின் முகத்தில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றினார். மப்ளரைக் கழட்டி வீசினார்.

புதன், 18 செப்டம்பர், 2019

ரியாத் தமிழ்ச்சங்கப் போட்டியில் சூலாட்டுக்குட்டிக்கு ஊக்கப்பரிசு.

மகிழ்வுடன் பகிர்கிறேன். மூன்றாவது முறையாக ரியாத் தமிழ்ச் சங்கத்தால் தொடர்ந்து என் கவிதைகளும் சிறுகதையும் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வருடம் ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது கதையான “சூலாட்டுக்குட்டி “ ஊக்கப் பரிசு பெற்றிருக்கிறது.

புதன், 4 ஏப்ரல், 2018

வாடாமலர் மங்கை. (தினமணி ஊக்கப்பரிசு பெற்ற கதை).



வாடாமலர் மங்கை

"ங்க அடி மங்க இஞ்ச.. எங்கன இருக்கே அடி இங்கிட்டு வா " என்று முகப்பிலிருந்து சத்தம் போட்டார்கள் வாடாமலை ஆச்சி.

"இருங்காச்சி சோத்த வடிசிட்டு வாரேன். ஒரு வேலையும் உருப்படியாச் செய்யவிடுறதுல்ல " என்று சலித்தபடி ரெண்டாங்கட்டில் இருந்து வந்தாள் மங்கை

"அடி மகராசியா இருப்பே , அந்தப் போகணில தண்ணியைக்கொண்டா  கையக் கழுவோணும் " என கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள் வாடாமலை ஆச்சி

'இதுக்குத்தானா இப்பிடி அவசரப்பட்டீக ' என்று கேட்க நினைத்து அசட்டையாக கப்பில் தண்ணீர் கொண்டுவந்தாள் மங்கை

கையைக் கப்பில் விட்டுச் சுழற்றிக் கழுவிவிட்டுப் படுக்கையில் சாய்ந்துகொண்டார்கள்  வாடாமாலை ஆச்சி.

 "நச்சுப்பிடிச்ச வேலைன்னுதான் செட்டிய வீட்டுக்கு ஒத்துக்குறதுல்ல"என்று முனகியவாறு கப்பைக் கழுவி ஊற்றிவிட்டு செல்போனை எடுத்துக் பார்த்தாள் மங்கை

"வயசான ஆச்சி மட்டும்தான். அவுகளக் கவனிச்சிக்கினாப் போதும்",என்று சொல்லித்தான் சேர்த்துவிட்டு இருந்தார் பாண்டியக்கா.

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

தினமணி சிவசங்கரி விருது விழா.

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு (எனக்கு  ஆறுதல் பரிசு பெற்றமைக்காக) சென்னை மியூசிக் அகாடமியில் நீதிபதி திரு. வெ ராமசுப்ரமண்யன் அவர்கள் பரிசு வழங்கினார்கள்.

நமது கவிதைத் தோழி கோதை -- ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் ஜோதி லெக்ஷ்மி  - இந்நிகழ்வை அழகாகத் தொகுத்து வழங்கினார்.

சனி, 20 ஜனவரி, 2018

தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு.

தினமணி -  எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் எனது வாடாமலர் மங்கை என்ற சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
நன்றி தினமணி.  எழுத்தாளர் சிவசங்கரி & மாலன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோருக்கும் மனமார்ந்த  நன்றி.

சனி, 8 அக்டோபர், 2016

திருநிலை. - தினமலர் வாரமலரில் வெளியான சிறுகதை.

திருநிலை.

டிங் டிடிங் டிங் டிடிங் என்று தொடர்ந்து ஒலித்த காலிங்பெல் திருநெலை ஆச்சியின் நெஞ்சத்துடிப்பை அதிகமாக்கியது. பூக்காரம்மா, பேப்பர்காரன், பால்காரப்பையன், தண்ணி கேன் கடைக்காரர், கூரியர் போஸ்ட், வேலை செய்யும் முத்தி யாராக இருந்தாலும் ஏன் இப்பிடி மண்டையிலடிப்பதுபோல காலிங்க்பெல்லை அடிக்கிறார்கள் என்று அவுகளுக்கு நெஞ்சப்பாரடித்தது. டிடிங் டிடிங் என்று பூட்டைத் திறக்கும்போதெல்லாம் மணியடித்தது போல் சத்தமிடும் பெரியவீட்டின் பட்டாலை முகப்புக்கதவு அவர்களின் கண்ணுக்குள் வந்து போனது.

எழுபத்தியைந்து வயதைச் சுமந்த உடம்பை அசைத்துச் சென்று கதவைத் திறந்தால் பேரமிண்டியும் பேரனும் நின்றிருந்தார்கள். வாசப்படி நிலையில் நிக்கமுடியாமல் யார் இப்பிடிக் காலிங்பெல்லை உடைக்கிறது என்று கோபமாகக் கேட்க நினைத்தவர் மௌனமாகத் திரும்பி வந்து தன்னுடைய திண்டில் அமர்ந்தார். அப்பத்தா வீட்டு ஐயாவின் பெயரிட்டுக் கொண்ட அவுக பிரியத்துக்குரிய பேரன் ஐயப்பனைக் கோச்சுக்க முடியுமா. புள்ளகூட்டியே வந்த வீட்டில் மொதமொதலாப் பொறந்த பேரன். அவனுக்காகத்தானே எல்லாம். கேட்ட விளையாட்டுச் சாமானை எல்லாம் வாங்கிக் கொடுத்தமாதிரி இப்ப கேட்ட பூர்வீக வீட்டையும் உடைக்கக் கொடுத்திருக்கிறாக.

புதன், 24 ஆகஸ்ட், 2016

சூலம். .( திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை. )


குலதெய்வம் கோயிலில் புரவி எடுப்பில் செல்லும் குதிரைகளைப் பார்த்தபடி நின்றிருந்த மேகலா அதிர்ந்த கைபேசியை எடுத்துப் பேசி அதிர்ச்சியானாள். அவளது அப்பா மாரியப்பன் யாரும் இல்லாத வீட்டில் முதல் நாள் இரவு இறந்த செய்தியை, இறந்த விதத்தை அதிர்ச்சியோடு பகிர்ந்திருந்தாள் அவளது அத்தை மோகனா.

பக்கத்தில் நின்றிருந்த தனது அம்மா தேவியைப் பதட்டத்தோடு பார்த்த மேகலா , ”அம்மா ஒரே கூட்டமா இருக்கு. சீக்கிரம் போகலாம் வா, போகலாம் ” என்றாள். ”இருடி சாமி உள்ளே போன பின்னாடி அருச்சனை பண்ணிட்டுப் போகலாம் “ என்றாள். 

”இல்லம்மா பின்னாடி கூட்டம் சாஸ்தியாயிடும் இன்னொருநாள் வரலாம். வா” என்றாள். “அடி இவளே. வெளக்கு வைக்கும்போது உருண்டிருச்சு , அதுனால தீவம் பார்த்துட்டுத்தான் போகணும் “ என அம்மா பிடிவாதம் பிடிக்க, ”இல்லம்மா அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லையாம் அதான் அத்த போன் பண்ணிச்சு , உடனே போவோம்மா என அவளைக் கிளப்புவதிலேயே குறியாயிருந்தாள் மேகலா. ஐஸ் வண்டிகளும், மாங்காய் பத்தைகளும் எலந்தை வடைகளும் மணம் கிளப்பிக் கொண்டிருக்க பலூனைப் பிடித்தபடி குழந்தைகளும் முறைப்பெண்களைச் சுற்றியபடி இளவட்டங்களுமாக கலகலப்பாக இருந்தது முத்துப்பிடாரி அம்மன் கோயில் புரவி எடுப்பு. சாமியாட்டத்தோடு கொடிகளும் குடைகளும் சூழ ஆரம்பித்திருந்தது திருவிழா.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

திருக்குறள் சிறுகதைப் போட்டி. ( பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் )

மதிப்பிற்குரிய முகநூல் சகோதரர் திரு. கந்தையா முருகதாசன் அவர்கள் பக்கத்தில் பகிர்ந்திருந்த இந்தப் போட்டியை என் வலைத்தளத்தில் பகிர்வதில் பெருமையுறுகிறேன். பங்கு பெறுங்க. பாங்கா எழுதுங்க. பரிசை வெல்லுங்க. வாழ்த்துகள் மக்காஸ் :)


////அன்புடன் படைப்பாளிகளே முகநூல் நண்பர்களே
அனைவருக்கும் பணிவன்பான வணக்கம்.
நேற்றைய தினம் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் வெகுவிரைவைில் திருவள்ளுவர் விழாவினையும் அதனையொட்டி இடம்பெறவிருக்கின்ற திருக்குறளை முன்னிறுத்தி நடத்தவிருக்கும் சிறுகதைப் போட்டி பற்றிய விபரத்தையும் புகைப்படப் பிரதியாக கீழே பதிவு செய்திருந்தோம். அந்த விபரம் சிறு எழுத்திலிருப்பதால் அவற்றை வாசித்து அறிந்து கொள்வதில் உள்ள சிரமத்தை உணர்ந்து பெரிய எழுத்திலும் ஒரே முறையில் வாசித்தறிவதற்காகவும் மீண்டும; பதிவு செய்து உள்ளோம்.

திருக்குறள் சிறுகதைப் போட்டி
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாம் ஒழுங்கு செய்துள்ள திருவள்ளுவர் விழாவினை முன்னிட்டு சிறுகதைப் போட்டி ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

திங்கள், 23 ஜூன், 2014

பாசங்கள் பலவிதம் (அ) பகைவனுக்கருள்வாய்..

பாசங்கள் பலவிதம் (அ) பகைவனுக்கருள்வாய்..
*******************************************************************************
( பகவான் மகாவீர் அகிம்சா சங்கத்தின் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. )

கருணாமூர்த்தி துடித்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் கண்ணீரும் கம்பலையுமாக அவன் மனைவி சாந்தி. அவர்களது செல்வக் குழந்தை – மூன்று மாதமே நிரம்பிய அருணை அந்தப் பெரிய ஆண்குரங்கு தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வேலைக்காரர்களுக்குக் கையும் காலும் செயல்படவில்லை. கருணாமூர்த்தியின் அப்பா குமரேசனோ புலம்பிக் கொண்டிருந்தார்.


பண்ணையாரான குமரேசன் தன் மகனுக்குக் கருணாமூர்த்தி என்று ஏந்தான் பெயர் வைத்தாரோ..சின்னப் பிள்ளையிலிருந்து அவனிடம் வளர்ந்ததெல்லாம் முரட்டுத்தனமும் விலங்குகளைச் சித்திரவதைப்படுத்துவதும்தானே தவிர கருணை அல்ல. தந்தையின் கண்டிப்பில் வாழ்ந்த அவனுக்குத் தாயின் அரவணைப்புக் கிட்டாததுதானோ என்னவோ..

Related Posts Plugin for WordPress, Blogger...