எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிவசங்கரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவசங்கரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஏப்ரல், 2018

வாடாமலர் மங்கை. (தினமணி ஊக்கப்பரிசு பெற்ற கதை).



வாடாமலர் மங்கை

"ங்க அடி மங்க இஞ்ச.. எங்கன இருக்கே அடி இங்கிட்டு வா " என்று முகப்பிலிருந்து சத்தம் போட்டார்கள் வாடாமலை ஆச்சி.

"இருங்காச்சி சோத்த வடிசிட்டு வாரேன். ஒரு வேலையும் உருப்படியாச் செய்யவிடுறதுல்ல " என்று சலித்தபடி ரெண்டாங்கட்டில் இருந்து வந்தாள் மங்கை

"அடி மகராசியா இருப்பே , அந்தப் போகணில தண்ணியைக்கொண்டா  கையக் கழுவோணும் " என கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள் வாடாமலை ஆச்சி

'இதுக்குத்தானா இப்பிடி அவசரப்பட்டீக ' என்று கேட்க நினைத்து அசட்டையாக கப்பில் தண்ணீர் கொண்டுவந்தாள் மங்கை

கையைக் கப்பில் விட்டுச் சுழற்றிக் கழுவிவிட்டுப் படுக்கையில் சாய்ந்துகொண்டார்கள்  வாடாமாலை ஆச்சி.

 "நச்சுப்பிடிச்ச வேலைன்னுதான் செட்டிய வீட்டுக்கு ஒத்துக்குறதுல்ல"என்று முனகியவாறு கப்பைக் கழுவி ஊற்றிவிட்டு செல்போனை எடுத்துக் பார்த்தாள் மங்கை

"வயசான ஆச்சி மட்டும்தான். அவுகளக் கவனிச்சிக்கினாப் போதும்",என்று சொல்லித்தான் சேர்த்துவிட்டு இருந்தார் பாண்டியக்கா.

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

தினமணி சிவசங்கரி விருது விழா.

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு (எனக்கு  ஆறுதல் பரிசு பெற்றமைக்காக) சென்னை மியூசிக் அகாடமியில் நீதிபதி திரு. வெ ராமசுப்ரமண்யன் அவர்கள் பரிசு வழங்கினார்கள்.

நமது கவிதைத் தோழி கோதை -- ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் ஜோதி லெக்ஷ்மி  - இந்நிகழ்வை அழகாகத் தொகுத்து வழங்கினார்.

சனி, 20 ஜனவரி, 2018

தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு.

தினமணி -  எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் எனது வாடாமலர் மங்கை என்ற சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
நன்றி தினமணி.  எழுத்தாளர் சிவசங்கரி & மாலன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோருக்கும் மனமார்ந்த  நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...