எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆறுதல் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறுதல் பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 17 ஆகஸ்ட், 2016
திங்கள், 23 ஜூன், 2014
பாசங்கள் பலவிதம் (அ) பகைவனுக்கருள்வாய்..
பாசங்கள் பலவிதம் (அ) பகைவனுக்கருள்வாய்..
************************************************************ ******************* ( பகவான் மகாவீர் அகிம்சா சங்கத்தின் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. )
கருணாமூர்த்தி துடித்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் கண்ணீரும் கம்பலையுமாக அவன் மனைவி சாந்தி. அவர்களது செல்வக் குழந்தை – மூன்று மாதமே நிரம்பிய அருணை அந்தப் பெரிய ஆண்குரங்கு தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வேலைக்காரர்களுக்குக் கையும் காலும் செயல்படவில்லை. கருணாமூர்த்தியின் அப்பா குமரேசனோ புலம்பிக் கொண்டிருந்தார்.
பண்ணையாரான குமரேசன் தன் மகனுக்குக் கருணாமூர்த்தி என்று ஏந்தான் பெயர் வைத்தாரோ..சின்னப் பிள்ளையிலிருந்து அவனிடம் வளர்ந்ததெல்லாம் முரட்டுத்தனமும் விலங்குகளைச் சித்திரவதைப்படுத்துவதும்தானே தவிர கருணை அல்ல. தந்தையின் கண்டிப்பில் வாழ்ந்த அவனுக்குத் தாயின் அரவணைப்புக் கிட்டாததுதானோ என்னவோ..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
