யூரோப் டூரில் ஒரு நாள் இத்தாலிக்குச் சென்றபோது வாடிகனுக்கும் சென்றோம். வாடிகன் சர்ச்சிலும் மாபெரும் ஓவியங்களும் சிற்பங்களும் காட்சி அளித்தன.
ரோமில் பெயர் பெற்ற ஓவியர் மற்றும் சிற்பியான ( கட்டிடக் கலைஞர் & கவிஞர் ) மைக்கலாஞ்சலோவின் கலைப் படைப்புக்களைக் கண்டு களிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவரது படைப்புகள் சிருஷ்டியின் உன்னதத்தை விளக்கும் வகையில் ஆன்மநிர்வாணத்தோடு காட்சி அளிப்பவை.இவர் பதினான்காம் நூற்றாண்டில் பிறந்தவர். 1475 இல் டஸ்கனியில் பிறந்து 89 ஆண்டுகள் வாழ்ந்து 1564 இல் மறைந்தார். இவரது படைப்புகளில் பியட்டா ( ஏசுவைத் தாங்கி நிற்கும் மரியன்னை ) , தாவீது ஆகிய சிலைகள் சிறப்பானவை என்று போற்றப்படுகின்றன. சிஸ்டைன் தேவாலயத்தில் உள்ள கடைசித் தீர்ப்பு என்னும் ஓவியம் இவருக்குப் பேர் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இன்னமும்.
நிர்வாணச் சிற்பங்கள் இவரது ஸ்பெஷல். கோலியாத்தும் தாவீதும் பற்றி அறிந்திருப்போம். அதில் கோலியாத்தைத் தோற்கடித்த தாவீதை மிக அழகான சிற்பமாக்கி இருக்கிறார் இவர். வலிமையான கைகள், கூர்மையான பார்வை, கால்களை முன்னெடுத்து நிற்கும் நிலையில் தாவீதின் சிற்பம் ஃப்ளோரன்ஸில் உள்ள கேலேரியா டெல் அகாடமியா என்ற அரங்கில் 1873 இல் வடித்து வைக்கப்பட்டுள்ளது.
இவரது படைப்புகள் 13 ஆம் நூற்றாண்டுக்கும் 17 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்தவை.
ரோமில் பெயர் பெற்ற ஓவியர் மற்றும் சிற்பியான ( கட்டிடக் கலைஞர் & கவிஞர் ) மைக்கலாஞ்சலோவின் கலைப் படைப்புக்களைக் கண்டு களிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவரது படைப்புகள் சிருஷ்டியின் உன்னதத்தை விளக்கும் வகையில் ஆன்மநிர்வாணத்தோடு காட்சி அளிப்பவை.இவர் பதினான்காம் நூற்றாண்டில் பிறந்தவர். 1475 இல் டஸ்கனியில் பிறந்து 89 ஆண்டுகள் வாழ்ந்து 1564 இல் மறைந்தார். இவரது படைப்புகளில் பியட்டா ( ஏசுவைத் தாங்கி நிற்கும் மரியன்னை ) , தாவீது ஆகிய சிலைகள் சிறப்பானவை என்று போற்றப்படுகின்றன. சிஸ்டைன் தேவாலயத்தில் உள்ள கடைசித் தீர்ப்பு என்னும் ஓவியம் இவருக்குப் பேர் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இன்னமும்.
நிர்வாணச் சிற்பங்கள் இவரது ஸ்பெஷல். கோலியாத்தும் தாவீதும் பற்றி அறிந்திருப்போம். அதில் கோலியாத்தைத் தோற்கடித்த தாவீதை மிக அழகான சிற்பமாக்கி இருக்கிறார் இவர். வலிமையான கைகள், கூர்மையான பார்வை, கால்களை முன்னெடுத்து நிற்கும் நிலையில் தாவீதின் சிற்பம் ஃப்ளோரன்ஸில் உள்ள கேலேரியா டெல் அகாடமியா என்ற அரங்கில் 1873 இல் வடித்து வைக்கப்பட்டுள்ளது.
இவரது படைப்புகள் 13 ஆம் நூற்றாண்டுக்கும் 17 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்தவை.


